கொடநாடு வழக்கு! புதிய வியூகத்தில் முன்னேறும் விசாரணை! பயத்தில் எடப்பாடி! பதுங்கும் மாஜிக்கள்!

dd

நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த கொடநாடு கொலை வழக்கை நிரூபிக்க, தற்பொழுது கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்படும் என சொல்கிறார்கள், கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.

dd

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே ஒரு டெக்னிக்கலான விஷயத்தைத்தான் நம்பியிருந்தார்கள். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த சமயத்தில் உபயோ கப்படுத்தப்பட்ட செல்போன் ரெக்கார்டுகளை எடுக்க முடியாது. முக்கிய குற்றவாளியான கனகராஜ் உபயோகித்த செல்போனில் எடப்பாடி பழனிச்சாமியே பேசியிருந்தாலும், எடப்பாடி கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும்போது கனகராஜிடம் பேசினார் என்கிற எலக்ட் ரானிக் தரவுகளை செல் போன் நிறுவனங்கள் தராது. அந்த நிறுவனங்களி டம் ஒரு வருட அளவுக் கான தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய வசதி கள்தான் இருக் கிறது. ஒரு வருடத்திற்கு மேல் என்றால் எங்களிடம் அந்த தரவுகள் இல்லை என அந்த நிறுவனங்கள் கைவிரிக்கும் என பல புலனாய்வு நிபுணர்கள் பேசிவந்தார்கள்.

konadcase

ஆனால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரது செல்போன் பதிவுகளையும் வழக்கை விசாரிக்கும் போலீசார் எடுத்துவிட்டனர் என்கிற அதிர்ச்சித் தகவலை குற்றவாளிகள் தரப்பினர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். இந்தத் தகவல் எடப்பாடி பழனிச்சாமியையும் எட்டியிருக்கிறது. அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கொடநாடு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம் எதையும் விட்டுவிடத் தயாராக இல்லை. அவர்கள் கனகராஜின் சகோதரர்களான ரமேஷையும் தனபாலையும் 11 நாட்கள் போல

நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த கொடநாடு கொலை வழக்கை நிரூபிக்க, தற்பொழுது கிடைக்கும் தகவல் தொழில்நுட்பம் பயன்படும் என சொல்கிறார்கள், கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் படையைச் சேர்ந்தவர்கள்.

dd

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே ஒரு டெக்னிக்கலான விஷயத்தைத்தான் நம்பியிருந்தார்கள். சம்பவம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. சம்பவம் நடந்த சமயத்தில் உபயோ கப்படுத்தப்பட்ட செல்போன் ரெக்கார்டுகளை எடுக்க முடியாது. முக்கிய குற்றவாளியான கனகராஜ் உபயோகித்த செல்போனில் எடப்பாடி பழனிச்சாமியே பேசியிருந்தாலும், எடப்பாடி கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடக்கும்போது கனகராஜிடம் பேசினார் என்கிற எலக்ட் ரானிக் தரவுகளை செல் போன் நிறுவனங்கள் தராது. அந்த நிறுவனங்களி டம் ஒரு வருட அளவுக் கான தரவுகளை சேமித்து வைக்கக்கூடிய வசதி கள்தான் இருக் கிறது. ஒரு வருடத்திற்கு மேல் என்றால் எங்களிடம் அந்த தரவுகள் இல்லை என அந்த நிறுவனங்கள் கைவிரிக்கும் என பல புலனாய்வு நிபுணர்கள் பேசிவந்தார்கள்.

konadcase

ஆனால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரது செல்போன் பதிவுகளையும் வழக்கை விசாரிக்கும் போலீசார் எடுத்துவிட்டனர் என்கிற அதிர்ச்சித் தகவலை குற்றவாளிகள் தரப்பினர் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர். இந்தத் தகவல் எடப்பாடி பழனிச்சாமியையும் எட்டியிருக்கிறது. அவர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

கொடநாடு வழக்கை விசாரிக்கும் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான டீம் எதையும் விட்டுவிடத் தயாராக இல்லை. அவர்கள் கனகராஜின் சகோதரர்களான ரமேஷையும் தனபாலையும் 11 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரித்திருக்கிறார்கள்.

அதில் தனபாலும் ரமேஷும் ஏற்கனவே ஒப்புக்கொண்ட, போலீசுக்குத் தெரிந்த தகவல்களை மட்டுமே கூறினார்கள். எடப் பாடி பழனிச்சாமியைப் பற்றியும் அவருக்கு இந்த கனகராஜ் மரணத்தில் உள்ள தொடர்பு பற்றியும் புதிதாக எதையும் அவர் களாகச் சொல்ல வில்லை. "அவர்கள் இதைத்தான் சொல்வார் கள், இப்படித்தான் பேசுவார்கள் என அவர் களைக் கைது செய்வ தற்கு முன்பே எங்களுக் குத் தெரியும். அவர் களை கைது செய்வதற்கு முன்பே நாங்கள், அவர்கள் எப்படிப் பேசு வார்கள் என பலரையும் விசாரித்து தெரிந்துகொண்டோம். அவர் களைக் குற்றவாளிகள் என வெளியுலகிற்கு காட்டவே அவர்களது காவலை நீட்டித்து வாங்கினோம். மற்றபடி அவர்களிடம் புதிதாக எதையும் கறக்க முடியாது என்பதால்தான் எங்களது புலனாய்வை வேறு வழியில் செலுத்திவருகிறோம்'' என்கிறார்கள் போலீசார்.

kk

போலீசார் கடந்த வாரம் விசாரித்ததில், முதன்முதலில் எடப்பாடிக்கு தொடர்பு இருக்கிறது என சொன்ன சயானை, "நீ என்ன சொன்னாய்? எப்படி எடப்பாடிக்கும் கனகராஜுக்கும் தொடர்பு இருக்கிறது என நம்பினாய் என்கிற கேள்விக்கு சயான், எடப்பாடிக் கும் கனகராஜுக்கும் தொடர்பு இருக்கிறது என கனகராஜ் பொய் சொன்னான் என நான் சந்தேகப்பட்டேன். அப்போது சென்னைக்கு சென்ற கனகராஜ், எடப்பாடியுடன் போட்டோ எடுத்து எனக்கு காட்டினான் எனச் சொன்னான். எடப்பாடியுடன் யார் வேண்டுமென்றாலும் போட்டோ எடுத்துக்கொள்ளலாம், அதெல்லாம் ஒரு விஷயத்தில் எடப்பாடிக்கும் அவனுக்கும் தொடர்பிருக்கிறது என்பதற்கான ஆதாரமா, எனக் கேட்ட போலீசாரிடம், கொடநாடு கொள்ளையின்போது எடப்பாடி என்னென்ன சொன்னார் என கனகராஜ் சொன்னது எல்லாம் நடந்தது. மின்சாரம் தடைப்பட்டது, சி.சி.டி.வி. காட்சிகள் பதிவாகவில்லை. நான் கனகராஜுடன் இருக்கும்போது கூடலூரில் கொடநாட்டில் கொள்ளையடித்த குற்றவாளிகள் போலீசாரிடம் சிக்கிய பிறகு சஜீவனின் சகோதரர் விடுவித்தார். இதெல்லாம் கனகராஜ் சொல்லி, எடப்பாடி செய்த விஷயங்கள் என சயான் சொல்லியிருக்கிறார்.

கனகராஜ், எடப்பாடியுடன் எடுத்த புகைப்படத்தை அழிக்கத் தான் கனகராஜின் செல்போனை தனபால் அழித்தார். அதையெல் லாம் நாங்கள் கம்ப்யூட்டர் உதவியுடன் மீட்டெடுத்துவிட்டோம். எங்கள் புலனாய்வே எலக்ட்ரானிக் தகவல்கள் அடிப்படையில்தான் நடந்தது ooஎன சொல்லிவிட்டுச் சென்றுள்ளனர் விசாரணை செய்த போலீசார். போலீசாரிடம் என்ன ஆதாரங்கள் இருக்கிறது என அவர்கள் விசாரிக்கும் குற்றவாளிகளிடம் கூட சொல்வதில்லை. கொடநாடு கொலை வழக்கு, கனகராஜின் கொலை வழக்கு என இரண்டு ddவழக்குகளாக இந்த வழக்கை விசாரிக்கும் போலீசாரின் இந்த மூவ் எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்குள் ளாக்கியிருக்கிறது. கனகராஜின் கொலை வழக்கில் தன் பங்களிப்பு பற்றிய விவரங்கள் வெளிப்படையாக வரும் என எடப்பாடி பயந்து போயுள்ளார் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

சமீபத்தில் கோவை மாவட்ட மந்திரி யான எஸ்.பி.வேலுமணியின் ஆட்கள் தி.மு.க.வின் இரண்டு மந்திரிகளை சந்தித்துப் பேசினார்கள். வேலுமணியை வழக்கிலிருந்து காப்பாற்ற நடந்த அந்த சந்திப்பு தி.மு.க. தலைமைக்குத் தெரியவந்ததும் அந்த இரண்டு மந்திரிகளும் எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். வேலுமணியை காப்பாற்ற முடியாது என தெளிவான எச்சரிக் கையை அந்த அமைச்சர்கள் பெற்றனர்.

என்ன செய்தாலும் நடக்காது என சொல்லப்பட்ட அந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து கோவை மாவட்ட மாநகராட்சி -நகராட்சித் தேர்தல் பொறுப்பாளர்கள் தி.மு.க.வில் நியமிக்கப்பட்டார்கள். அந்தப் பேச்சுவார்த்தையின்போது மந்திரிகள் பகிர்ந்துகொண்ட கொடநாடு கொலை வழக்கு பற்றிய தகவல்கள், எஸ்.பி.வேலுமணி யின் அரசியலையே மாற்றிவிட்டது. வேலுமணி, எடப்பாடி ஆதரவாளர் என்கிற நிலையிலிருந்து ஓ.பி.எஸ். ஆதரவு நிலையை எடுத்து விட்டார். கிட்டத்தட்ட தங்கமணியும், வேலுமணியைப் பின்தொடர்ந்து ஓ.பி.எஸ். நிலைக்கு மாறிவிட்டார். முதல்வராக இருந்த பொழுது எடப்பாடியை நிழலாக சுற்றிக் கொண்டிருந் தவர்களெல்லாம் நிலை மாறுவதும், பதுங்குவதும் எடப்பாடியை தடுமாற வைத்துள்ளது. அதனால்தான் எடப்பாடி ஒரு அறிக்கை தருகிறார், ஓ.பி.எஸ். வேறு சப்ஜெக்டை அறிக்கையாகத் தருகிறார். இதற்கிடையே அ.தி.மு.க. உள்கட்சித் தேர் தலை எப்படி தமிழகம் முழுவதும் நடத்துவது என்கிற தடுமாற்றம் தெரிகிறது. தமிழகம் முழுவதும் சசி மற்றும் ஓ.பி.எஸ். ஆதரவாளர் கள் தேர்தலில் ஜெயித்துவிட் டால் என்ன செய்வது? என்கிற பயம் எடப்பாடி முகத்தில் ஒட்டிக்கொண்டி ருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

கொடநாடு கொலை வழக்கில் விரைவில் எடப்பாடி கைதாகக்கூடும் என ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினரும் நம்புகிறார்கள். ஜெ.வின் வீட்டில் கொள்ளையடித்தவர் அ.தி.மு.க. தலைவரா என்கிற கேள்வியை எடப்பாடி கைதாகும்போது எழுப்ப சசி தரப்பு காத்துக்கொண்டிருக் கிறது. கொடநாடு வழக்கின் முன்னேற்றத்தைப் பொறுத்துதான், அ.தி.மு.க.வின் தலைமையில் நடக்கும் குழப்பங்கள் தீரும் என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள்.

______________________

கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட டாக்குமெண்டுகள் எல்லாம் எப்படி மாறியது என்பது போலீசாரின் புலனாய்வில் kkமுக்கியமான ஒன்று. அதில், அவையனைத்தும் சேலத்திலிருந்துதான் அமைச்சர்கள் ஐந்து பேருக்கு மாறியுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டி ருக்கிறது. பத்திரப்பதிவுத்துறை அதிகாரி ஒருவரின் கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து லாக்இன் உத்தரவு பெறப்பட்டு, அந்தப் பதிவுகள் நடைபெற்றிருக்கிறது. பதிவுத்துறை அதிகாரியாக எடப்பாடிக்கு நெருக்கமாக இருந்த செல்வகுமாரின் உதவியுடன்தான் நடைபெற்றது என்பது போலீசாரின் சந்தேகம். கொடநாடு மேனேஜரான நடராஜனுக்கு நெருக்க மான செல்வகுமார் மூலம்தான் எடப்பாடி, கொடநாட்டில் கொள்ளை யடித்த டாக்குமெண்டுகளை மாற்றி யுள்ளார். அதை கண்டுபிடிக்க பதிவுத் துறையிலேயே ஒரு அதிகாரியை நியமித்து புலன்விசாரணை செய்து கொண்டிருக்கிறார்கள் போலீசார். இந்த வியூகம் மூலம் ஆவணங்கள் கிடைத்தால் கூட எடப்பாடி சிக்குவார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

கொடநாடு கொலை கொள்ளைக்குப் பின்பு கனகராஜ் புதிய சிம்கார்டு வாங்கியிருக்கிறார். அதைப் பயன்படுத்தித்தான் தனது மனைவி மற்றும் எடப்பாடிக்கு நெருக்கமானவர்களுக்குப் பேசியுள்ளார். சாவதற்கு முன்பு தனபால்தான் அந்த செல்போனை வாங்கிக் கொடுத்திருக்கிறான். அந்த எண்ணின் விபரங்களை போலீசார் எடுத்து விட்டனர். சாவதற்கு முன்பு கனகராஜிடம் பேசியவர்கள் யார், அவன் யாரிடம் கொடநாட்டில் கொள்ளையடித்ததை ஒப்படைத்தான் போன்ற விபரங்கள் அதில் உள்ளது. அதுதான் போலீசாரின் முக்கிய துருப்புச் சீட்டு. அந்த விபரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தும் என்கிறார்கள் போலீசார்.

nkn101121
இதையும் படியுங்கள்
Subscribe