"கொடநாடு வழக்கு விசாரணையில் புதிய திருப்பமாக எடப்பாடிக்கும் சசிகலாவிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது' என்கிறார்கள் வழக்கு விசாரணையை மேற்கொள்ளும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

dd

கொடநாடு வழக்கில் இன்று வரை, என்ன கொள்ளையடிக்கப்பட்டது? என்பதை காவல்துறையால் தெளிவாகக் கண்டுபிடிக்க முடிய வில்லை. எந்தக் கொள்ளை நடந்தாலும் அதில் தொடர்புடைய பொருட்களை காவல்துறை கைப் பற்றும். குறிப்பிட்ட கொள்ளையைச் செய்தவர்களை நாங்கள் கண்டு பிடித்துவிட்டோம் என்பதற்கான ஆதாரமாக, போலீசார் கொள்ளையர் களிடமிருந்து கைப்பற்றி, அதை பத்திரிகையாளர் கள் முன்பு காட்சிப் பொருளாக்குவார்கள். அப்படி கொடநாடு வழக்கில் போலீசார் கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றியது ஒரு கரடி பொம்மையும் நான்கு ஜெ. படம் போட்ட வாட்ச்சுகளையும்தான். அந்த கரடி பொம்மை யையும் போலீசாரின் வார்த்தைகளில் கிறிஸ்டல் கரடி பொம்மை யாகவும், கொள்ளையர்கள் வார்த்தைகளில் பிளாட்டினம் கரடி பொம்மையாகவும் வழக்கு விசாரணையின்போது வெளிப்பட்டது. மறுவிசாரணைக்கு வந்த கொடநாடு வழக்கில் அந்த விசாரணையை மேற்கொண்ட போலீஸ் டீம், கொடநாட்டில் கொள்ளை யடிக்கப்பட்டது என்ன என் பதைக் கண்டுபிடிக்க முயன்றது. அதைச் சொல்லவேண்டிய கொடநாட்டை நிர்வகித்து வரும் சசிகலாவின் நிர்வாகத் தில் இடம்பெறும் கொடநாடு மேனேஜர் நடராஜனை விசாரணைக்கு அழைத்தார்கள்.

"கொடநாடு கொள்ளை நடக்கும்போது நான் என் வீட் டில் இருந்தேன். கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெ., சசி அறையில் என்ன வைத்திருக் கிறார்கள் என எனக்குத் தெரியாது. கொடநாட்டில் கொள்ளையடிக்கும்போது எப்படி விளக்குகள் அணைந் தன என்பது பற்றி எனக்குத் தெரியாது. சி.சி.டி.வி. ஆபரேட் டர் தினேஷ் தற்கொலைக்கு என்ன காரணம் என எனக்குத் தெரியாது'' என்றார் நடராஜன்.

இதில் கொடநாடு கொள்ளை நடந்த நள்ளிரவில் நடராஜன் அவரது வீட்டில்தான் இருந்தார் என்பதை மட்டும் போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள். ஜெ., சசி அறையில் என்ன இருந்தது என்பதையும், அங்கிருந்து ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதையும் உறுதி செய்திருக்கிறார்கள். கொள்ளை நடந்தவுடன் அப்பொழுது வெளிவந்த தினசரிப் பத்திரிகையின் ஊட்டி பகுதி நிருபர் ஒருவர், அதைப்பற்றி விரிவாக எழுதினார்.

Advertisment

sasi

சசி, ஜெயிலுக்குப் போன பிறகு மட்டுமல்ல, தினகரன் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப் பட்ட மறுநாள்தான் கொடநாட்டில் கொள்ளை நடந்தது. ஆவணங்களை திருடுவதுதான் கொள்ளையின் நோக்கம். அதில் கூடலூரைச் சேர்ந்த சஜீவன் முக்கிய பங்கு வகித்தார். சஜீவன், கொடநாடு மேனேஜர் நடராஜன் கூட்டணிதான் கொள்ளையடித்தது என எழுதினார். அவர் கொடநாடு கொள்ளை நடந்த சில மாதங்களில் ஒரு விபத்தில் சிக்கினார். அந்த விபத்திற்கு காரணம் சஜீவன்தான் என பேசப்பட்டது. அந்த நிருபரையும் சஜீவனையும் காவல்துறை தனது விசாரணை வளையத்தில் கொண்டுவந்துள்ளது.

கொடநாடு வழக்கைப் பொறுத்தவரை, அந்த வழக்கில் தொடர்புடைய பலரை எடப்பாடி காசு கொடுத்து விலைக்கு வாங்கியிருந்தார். அவர்களில் பலர் எடப்பாடியின் பிடியிலிருந்து விலகிவிட்டார்கள். ஒரு அரசு வழக்கறிஞர் மூலம் எடப்பாடி இந்த விலைபேசல் வைபவத்தை நடத்திவந்தார். அப்படிப்பட்டவர்களில் பலர் இப்போது எடப்பாடியை விட்டு விலகிவிட்டார்கள். அதில் முக்கியமானவர் கொடநாடு வழக்கை மறு விசாரணை செய்ய தி.மு.க. அரசு முடிவெடுத்ததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்த சாட்சியான அனுபவ் ரவி. திருட்டு நகைகளை வாங்கி ஆபரணக் கடை நடத்திவரும் ரவிக்கு, எடப்பாடிக்கு நெருக்கமான காவல்துறை அதிகாரிகள் சம்மன் கொடுத்தனர். அதை எதிர்த்து அனுபவ் ரவி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப்போட வைத்தார். அனுபவ் ரவி, சமீபத்தில் தி.மு.க. தரப்புக்கு தூது அனுப்பினார்.

ஆறுகுட்டி, சஜீவன், கனகராஜ், எடப்பாடி... என அனைவரிடமும் தொடர்பு வைத்திருந்த அனுபவ் ரவி, முக்கியமான அப்ரூவர் ஆக மாறுவார் என போலீஸார் கணித்திருந்தார்கள். கிட்டத்தட்ட கொடநாடு வழக்கே முடிந்துவிட்டது என்கிற போலீசாரின் எதிர்பார்ப்பை மீறி அனுபவ் ரவி, "நான் என்ன சொல்லவேண்டும் என நீங்கள் சொல்லுங்கள்'' எனக் கேட்க, வெறுத்துப்போன போலீசார், சீ... போ என அனுபவ் ரவியை விட்டுவிட்டார்கள்.

அனுபவ் ரவி மட்டுமல்ல, அவரைப்போல, பல எடப்பாடி ஆதரவாளர்கள் ஆடிப்போயிருக் கிறார்கள். ஆட்சி இருந்தவரை அவர்களை பராமரித்து வந்த எடப்பாடியால் இப்போது பராமரிக்க முடியவில்லை. அதனால் உண்மைகள் வருகின்றன என்கிறார்கள் போலீசார்.

இதற்கிடையே கொடநாடு மேனேஜர் நடராஜன், போலீசாரின் விசாரணையில் பயந்துபோயுள்ளார். அவர் சொல்லும் பொய்கள் பற்றிதான் இளவரசி மகனிடம் விசாரித்தோம். பயந்துபோன நடராஜன், தனக்கு சிறை உறுதி என போலீஸ் சொல்வதால், சசிகலாவிடம் அழுது புலம்பியுள்ளார். விவேக்கை அடுத்து சசிகலாவை விசாரிக்க போலீசார் திட்டமிட்டிருந்தனர். இத னால் டென்ஷனான சசிகலா, போன் செய்துள்ளார்.

"என்னை அ.தி.மு.க.வில் சேர்க்க வில்லையென்றால், கொடநாட்டில் நீ கொள்ளை யடித்ததை சஜீவனும் நடராஜனும் விவேக்கும் சொல்லிவிட்டார்கள். அதை நான் போலீஸ் விசாரணையில் சொல்லிவிடுவேன்'' என எடப்பாடிக்கு நெருக்கமானவர்களிடம் சசி சொல்ல, அதைக் கேட்ட எடப்பாடி, பஞ்சாயத்தை பா.ஜ.க. வசம் கொண்டு போயிருந்தார். "எது, எப்படியோ இன்னும் நான்கு மாதத்தில் வழக்கை முடித்து விடுவோம்' என நம்பிக் கையுடன் சொல் கிறார்கள் காவல்துறை யைச் சேர்ந்தவர்கள்.

Advertisment

படங்கள் : ஸ்டாலின், அசோக்