ராங்கால் கொடநாடு குற்றவாளிகள்! ஸ்டாலினிடம் ஆறுகுட்டி வாக்குமூலம்! ஜெ.தீபாவுக்கு என்னாச்சு?

ss

"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் பற்றி முழுசாத் தெரிஞ்ச ஒருத்தர், தி.மு.க.வில் இணைஞ்சி, எடப்பாடியை திகிலில் ஆழ்த்தியிருக்கார்''”

"அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியத்தானே சொல்றே?''”

dd

“"ஆமாங்க தலை வரே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் குறித்த முழு உண்மையும் தெரிந்தவரான ஆறு குட்டி, அண்மை யில் பொள்ளாச்சி சென்ற முதல்வர் ஸ்டாலின் தலை மையில், தி.மு.க.வில் ஐக்கியமானதோடு, அவருடன் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது கொடநாடு விவகாரத்தில் என்ன வெல்லாம் நடந்தது? rrஅதில் எடப்பாடிக்கு என்ன ரோல்? என்பதை எல்லாம் முதல்வரிடம் விவரித்ததோடு, எடப்பாடிக்கு அந்தரங்க மான உதவிகள் பலவற்றையும் நான் செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை ஓரம்கட்டிவிட்டு மாஜி வேலுமணிக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை என்றும் சொன்னாராம்.''”

"எதனால் வேலுமணிக்கு எடப்பாடி அதிக முக்கியத்துவம் கொடுக்கறாராம்?''”

"இதே கேள்வியை ஆறுகுட்டியிடம் ஸ்டாலினும் கேட்டிருக்கிறாராம். அதுக்கு ஆறுகுட்டி, மாஜி மந்திரிகளான வேலுமணி, தங்கமணி இருவரையும் தூக்கி எறியக்கூட எடப்பாடி சம்மதிப்பார். ஆனால் அவரது பெரும் முதலீடுகள் இந்த இருவரிடமும் மாட்டிக் கொண்டு இருப்பதால்தான் அவர் திணறுகிறார். அதேபோல் இந்த இருவரும் தலா பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கையில் வைத்திருப்பதாலும் எடப்பாடியால் அவர்களிடம் முண்ட முடியவில்லை யாம். இதையெல்லாம் ஸ்டாலினிடம் அப்படியே ஒப்பித்திருக்கிறாராம் ஆறுகுட்டி. இவர் கொடுத்த தகவலின் படி, நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரை, கொடநாடு விசாரணை டீம் அழைத்துத் துருவிக்கொண்டு இருக்கிறதாம். ஸ்டாலினிடம் ஆறுகுட்டி சொன்ன தகவல்களை எல்லாம் சரிபார்க்கிற மாதிரியே, அந்த விசாரணை இருக்கிறது என்கிறார்கள். அதனால் கொடநாடு விவகாரம் மேலும் சூடு பிடித்திருக்கிறது.''”

ff

"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் பற்றி முழுசாத் தெரிஞ்ச ஒருத்தர், தி.மு.க.வில் இணைஞ்சி, எடப்பாடியை திகிலில் ஆழ்த்தியிருக்கார்''”

"அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டியத்தானே சொல்றே?''”

dd

“"ஆமாங்க தலை வரே, கொடநாடு கொலை கொள்ளை விவகாரம் குறித்த முழு உண்மையும் தெரிந்தவரான ஆறு குட்டி, அண்மை யில் பொள்ளாச்சி சென்ற முதல்வர் ஸ்டாலின் தலை மையில், தி.மு.க.வில் ஐக்கியமானதோடு, அவருடன் முக்கால் மணி நேரத்திற்கும் மேலாக பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது கொடநாடு விவகாரத்தில் என்ன வெல்லாம் நடந்தது? rrஅதில் எடப்பாடிக்கு என்ன ரோல்? என்பதை எல்லாம் முதல்வரிடம் விவரித்ததோடு, எடப்பாடிக்கு அந்தரங்க மான உதவிகள் பலவற்றையும் நான் செய்திருக்கிறேன். அப்படிப்பட்ட என்னை ஓரம்கட்டிவிட்டு மாஜி வேலுமணிக்கு அவர் அதிக முக்கியத்துவம் கொடுத்தார். அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை என்றும் சொன்னாராம்.''”

"எதனால் வேலுமணிக்கு எடப்பாடி அதிக முக்கியத்துவம் கொடுக்கறாராம்?''”

"இதே கேள்வியை ஆறுகுட்டியிடம் ஸ்டாலினும் கேட்டிருக்கிறாராம். அதுக்கு ஆறுகுட்டி, மாஜி மந்திரிகளான வேலுமணி, தங்கமணி இருவரையும் தூக்கி எறியக்கூட எடப்பாடி சம்மதிப்பார். ஆனால் அவரது பெரும் முதலீடுகள் இந்த இருவரிடமும் மாட்டிக் கொண்டு இருப்பதால்தான் அவர் திணறுகிறார். அதேபோல் இந்த இருவரும் தலா பத்துக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களைக் கையில் வைத்திருப்பதாலும் எடப்பாடியால் அவர்களிடம் முண்ட முடியவில்லை யாம். இதையெல்லாம் ஸ்டாலினிடம் அப்படியே ஒப்பித்திருக்கிறாராம் ஆறுகுட்டி. இவர் கொடுத்த தகவலின் படி, நாமக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில் என்பவரை, கொடநாடு விசாரணை டீம் அழைத்துத் துருவிக்கொண்டு இருக்கிறதாம். ஸ்டாலினிடம் ஆறுகுட்டி சொன்ன தகவல்களை எல்லாம் சரிபார்க்கிற மாதிரியே, அந்த விசாரணை இருக்கிறது என்கிறார்கள். அதனால் கொடநாடு விவகாரம் மேலும் சூடு பிடித்திருக்கிறது.''”

ff

"ஜெ,வின் அண்ணன் மகள் தீபா தற்கொலைக்கு முயன்றதாக ஒரு செய்தி பரபரப்பா அடிபடுதே?''”

"தீபா பொரு ளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கிறாராம். அவருக்கு சசிகலாவிடம் இருந்து வந்துகொண் டிருந்த பணம் நிறுத் தப்பட்டுவிட்டதாம். அதனால் ஜெ.வின் போயஸ்கார்டன் இல்லத்தை விற்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆனால் பலரும் அதில் சிக்கல் வரலாம் என்று பயந்து ஒதுங்கினார் களாம். இப்ப அந்த இல்லத்தைப் பராமரிக்கவே தீபா சிரமப்படுகிறாராம். இந்த நிலையில் நெருக்கடி முற்றியதால் தீபாவுக்கும் அவர் கணவர் மாதவனுக்கும், சகோதரன் தீபக்கிற்கும் இடையே கடுமையான தகராறு ஏற்பட்டதாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தீபா, போதைப் பொருட்களை அதிகம் எடுத்துக்கொண்டு மயங்கி விழுந்துவிட்டாராம். இந்த நிலையில் தான் தற்கொலைக்கு முயன்றதாக தீபாவே தகவல் பரப்புகிறாராம். இதெல்லாம் அவர்கள் தரப்பில் இருந்தே வருகிற தகவல்.''”

"பா.ஜ.க. தலைமை இப்பவே 2024 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி பற்றி ஒரு கணக்கு போட்டிருக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, ஏற்கனவே எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி தினகரன் என அனைவரும் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.தான் தேர்தல் கூட்டணிக்கு வேண்டும் என்று பா.ஜ.க. தலைமை, அதற்கான முயற்சிகளில் இறங்கிவந்தது. இதெல்லாம் சரிவராததால் இப்போது தன் கணக்கை மாற்றிக்கொண்டிருக்கிறதாம். அதாவது அ.தி.மு.க.வின் இந்த நான்குrr தரப்பும், தனித்தனியே இருந்து அதனதன் பலத்தை வளர்த்துக் கொள்ளட்டும். இவற்றோடு, விஜயகாந்தின் தே.மு.தி.க. வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகளையும் இணைத் துக்கொண்டு ஒரு மெஹா கூட்டணி என்ற இமேஜை ஏற்படுத்திக்கொண்டு, 2024 தேர்தலைச் சந்திக்கலாம் என்கிற மன நிலைக்கு பா.ஜ.க. தலைமை வந்திருக்குதாம்.''”

"சரிப்பா, முதல்வர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திச்சிருக்காரே?''”

"ஆமாங்க தலைவரே, அறிவாலயத்தில் 30 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினை, கே.எஸ். அழகிரி தலைமையில் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள் சந்திச் சாங்க. ராகுல் காந்தியின் பாதயாத்திரையை நீங்கதான் தொடங்கி வைக்கனும்ன்னு அவருக்கு அழைப்பு விடுத்தாங்க. ஸ்டாலினோ, பார்க்கிறேன்னு சொல்லி இருக்கார். அதோட அழகிரி, அந்த நிகழ்ச்சிக்கு கட்சித் தொண்டர்களை தமிழகம் முழுக்க இருந்தும் திரட்டப்போறோம். அதுக்கு அரசுப் பேருந்துகளை இலவசமாகக் கொடுத்து உதவனும் என்றும் கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு திகைத்துப் போன ஸ்டாலின், சிரித்துக்கொண்டே அவர்களுக்கு விடை கொடுத்தாராம். இதைப் பக்கத்தில் இருந்து பார்த்த தி.மு.க. சீனியர்கள், நமட்டுச் சிரிப்பு சிரிச்சிருக்காங்க.''”

"சென்னையில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான நடவடிக்கைகள் தீவிரமாகி பிறகு புஸ்வாணம் ஆகியிருக்கே?''”

"சென்னையை மையமாகக் கொண்டு, போதைப் பொருள் மாஃபியாக்கள் தீவிரமாக இயங்கி வருவது பற்றி நாம் ஏற்கனவே பேசி இருக்கோம். அதோட இதுகுறித்து நம் நக்கீரனின் அட்டைப்படக் கட்டுரையும் தனியா வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்துச்சு. இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதற்காக வட சென்னை காவல்துறை உதவி ஆணையர் ஒருவர் தலைமையில் நார்க்கோடிக் குழு ஒன்றை, காவல்துறை அமைத்தது. அந்தக் குழு அதிரடியாகக் களமிறங்கி, போதைப் பொருள்களை விற்பனை செய்யும் நெட்வொர்க்கையும், அது சென்னையிலிருந்து எங்கெல்லாம் போதைப் பொருட்களைக் கடத்துகிறது என்பது பற்றியும் முழுதாகக் கண்டுபிடித்திருக்கிறது.''”

"அப்புறம்?''”

"அந்த டீமை அடியோடு மடக்குவதற்கான அதிரடி ஆக்ஷனுக்கும் அந்த டீம் ரெடியாகி இருக்கு. இதை போலீஸில் இருக்கும் தங்கள் ஆட்கள் மூலம் தெரிஞ்சிக் கிட்ட அந்த மாஃபியாக் கும்பல், எப்படி அந்த தனிப்படையிடமிருந்து தப்பிக்கலாம்ன்னு பதிலுக்கு ரூட் போட ஆரம்பிச்சிது. உடனே, தனிப்படை டீமில் இருக்கும் ஒருவர் எங்களிடம் 18 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்கிறார். கொடுத்துவிட்டால், போதைப் பொருள் கடத்தலைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுவதாகப் பேரம் பேசுகிறார்ன்னு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபுவுக்கு ஒரு புகாரை அந்தக் கும்பலே தட்டிவிட்டது. உளவுத்துறையினரும் அந்தப் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டு உண்மைதான்னு டி.ஜி.பி.க்கு ரிப்போர்ட் கொடுத்தது. இதைத் தொடர்ந்து அந்த நார்கோடிக் டீம் கலைக் கப்பட்டுவிட்டது. இதில் கொடுமை என்னன்னா? டி.ஜி.பி.க்கு இப்படி போதைக் கும்பலை புகார் அனுப்பச் சொன்னதே இங்குள்ள உளவுப் பிரிவினர்தானாம்.''”

"மின்வாரியத் தரப்பில் பரபரப்பு தெரியுதே?''”

"உண்மைதாங்க தலைவரே, திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் 24 மணிநேரமும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதல் மற்றும் இரண்டாவது யூனிட்டில் மொத்தமாக 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுது. சென்னை மற்றும் பக்கத்து மாவட்டங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் செயல்பட்டு வரும் இந்த அனல் மின் நிலையத்தில், இப்ப பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. அதனால் மின் நிலைய தலைமைப் பொறியாளரான ஈஸ்வரமூர்த்தியை சந்திக்க, ஒப்பந்ததாரர்களும் மின்சார வாரிய அதிகாரிகளும் வந்து போவது வழக்கம். அப்படி வருபவர்களிடம், ஈஸ்வரமூர்த்தியின் நேர்முக உதவியாளரான சுமதி என்பவர் அதிகக் கெடுபிடி காட்டுகிறாராம். இது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்திவருது. அதோட...''”

"ம்... அதோட?''

"அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நெருக்கமானவர் என்றும், தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் இவர் அதிகாரிகளையே மிரட்டுகிறாராம். அதுமட்டு மல்லாமல், அங்குள்ளவர்கள் யாராவது பணி ஓய்வு பெற்றால், அவருக்கு வழியனுப்பு விழா நடத்த வேண்டும்ன்னு சொல்லி, ஒப்பந்த தாரர்கள், மின்வாரிய பொறியாளர்கள்ன்னு எல்லோரிடமும் அவர் கணிசமாக நன்கொடை திரட்டுவதாகவும், அதில் பலமுறை முறைகேடு நடைபெறுதுன்னும் அங்குள்ளவர்கள் புலம்பறாங்க. அந்த மின் நிலையத்தில் இவர் அனுமதி இல்லாமல் தலைமைப் பொறியாளரை யாரும் சந்திக்க முடியாதுன்னும், அப்படி சந்திக்க வருகிறவர்களையும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றபடி சுமதி மணிக்கணக்கில் காக்க வைத்து, மகிழ்வதாகவும் சொல்கிறார்கள்.''”

"தி.மு.க. மா.செ.க்கள் பற்றி விதவிதமா செய்தி அடிபடுதே?''”

"ஆமாங்க தலைவரே, தி.மு.க.வின் உள்கட்சித் தேர்தல் 85 சதவீதம் முடிந்து, அடுத்ததா மா.செ.க்களுக்கான தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இதுவரை நடந்த தேர்தலில் ஏகப்பட்ட குழறுபடிகள் நடந்திருப்பதால் கட்சித் தலைவரான ஸ்டாலினே மா.செ.க்கள் மீது கடும் அதிருப்தியில் இருக் கிறாராம். அதனால் இப்ப இருக்கும் மா.செ.க்களில் ஏறத்தாழ 15 பேர் மீண்டும் மா.செ. பதவி யில் உட்கார்ந்துவிடக் கூடாதுன்னு அவர் நினைக்கிறாராம். ஆனாலும் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டவர்கள், தங்களுக்குப் பிடித்தவர்களே மா.செ.க்களாகத் தொடரனும்ன்னு நினைக்கிறாங்களாம். குறிப்பாக, கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கோவையில் இருக்கும் 5 மா.செ.க்களின் எண்ணிக்கையை 3 ஆக குறைத்து, அந்த 3 மா.செ.க்கள் பதவியிலும் தனது ஆதர வாளர்களைக் கொண்டு வர முயற்சிப்பதாக அறிவாலய வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுது. அதேபோல, சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரான நேருவும் இதே எண்ணத்தில் இருக்கிறாராம்.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். புகழ்பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலின் அறங்காவலர்களாக, நீண்ட இழுபறிக்குப் பின் தூத்துக்குடியை சேர்ந்த செந்தில்முருகன், அனிதாகுமரன், ராமதாஸ், கணேசன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அருள்முருகன் ஆகியோரை நியமித் திருக்கிறது அறநிலையத்துறை. இவர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகளாகும். இவர்கள் 30 நாட்களுக்குள் தங்களுக்குள் ஒருவரை, ட்ரஸ்டி சேர்மனாகத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அதனால், சேர்மன் பதவியைக் கைப்பற்ற இவர்களுக்குள் கடும் போட்டி நடந்த நிலையில்... அருள்முருகன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.''”

nkn030922
இதையும் படியுங்கள்
Subscribe