முட்டி போட்டு... தவழ்ந்து... ஊர்ந்து... காலைப் பிடித்து... முதலமைச்சராகவில்லை...! காங்கிரஸுக்கு ஒரு லட்சத்துக்குமேல் வாக்குகள் கிடைக்கும்! -செந்தில்பாலாஜி அதிரடி!

ss

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வியூகம் எப்படியிருக்கும் என்பதுதான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அவரது தேர்தல் பணிகளுக்கிடையே நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

ந்தத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்து கூட்டத்தினர் வரவழைக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் இந்த அணுகுமுறையை எப்படிப் பார்க்கறீங்க?

எங்கள் பகுதியில், குறிப்பாக 16, 17, 23 ஆகிய மூன்று வார்டுகளை நாங்கள் பார்க்கிறோம். எடப்பாடியின் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களிடம் எங்களுடைய பொறுப்பாளர்கள் கேள்வி கேட்டு பதிவு பண்ணியதில், எங்கிருந்து வர்றீங்கன்னு கேட்கும்போது, நாங்க பவானியிலருந்து வந்திருக்கோம்கறாங்க. எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டபோது, கூட்டத்துக்காக வந்திருக்கோம்னு சொல்லியிருக்காங்க. ஈரோட்டில் மட்டுமல்லாமல், குமாரபாளையம், சுற்றியிருக்கும் திருப்பூர் மாவட்டங்கள், கோவை மாவட்டங்களிலிருந்து அந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்துக்கு கூட்டத்தைக் காட்ட வேண்டுமென்று இப்படிச் செய்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை வாக்காளர்கள் முழுவதுமாக தளபதி ஸ்டாலின் பக்கம் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பேசும்போது வழக்கத்துக்கு மாறாக டென்சனாகப் பேசுகிறார். மீசை வச்ச ஆம்பளையா இருந்தா... வேஷ்டி கட்டுன ஆம்பளையா இருந்தா... வாக்காளர்களை அடைத்துவைக்கக் கூடாதுன்னு, ஆண்மையைப் பத்தியும், பெண்மையை இழிவுபடுத்தியும் டென்சனா பேசுற அளவுக்கு வாக்காளர்களை நீங்க அடைச்சு வச்சிருக்கீங்களா?

யாராவது ஒரு வாக்காளர், ஒரு பூத்துலருந்து, எங்களை அடைச்சு வச்சிருக்காங்கன்னு தேர்தல் ஆணையத்துக்கு எதாவது புகார் போயிருக்கா சார்? வாக்காளரா புகார் பண்ணியிருக்காங்களா? காவல் நிலையத்துக்கு எதாவது புகார் போயிருக்கா? தேர்தல் நடத்தும் அலுவலருக்கு எதாவது புகார் போயிருக்கா? சரி, எடப்பாடி சொல்லக்கூடிய வகையில் ஒருநாள் வேணா நாங்க அமர வச்சிருக்கலாம். அடுத்த நாள்... அதற்கடுத்த நாள் எப்படி நடக்கும்? எங்களுடைய தேர்தல் பணிமனையில் எங்கள் நிர்வாகிகள், பொதுமக்கள், வாக்கு சேகரிக்கிறதுக்காக இங்கு வந்து, இங்கிருந்து வாக்காளர்களின் இல்லந்தோறும் சென்று வருகிறார்கள். இதில் என்ன

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களத்தில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வியூகம் எப்படியிருக்கும் என்பதுதான் பரபரப்பான பேச்சாக இருக்கிறது. அவரது தேர்தல் பணிகளுக்கிடையே நக்கீரனுக்கு அவர் அளித்த பேட்டியிலிருந்து...

ந்தத் தேர்தலில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்திற்கு ஈரோடு மேற்கு தொகுதியிலிருந்து கூட்டத்தினர் வரவழைக்கப் பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அ.தி.மு.க.வின் இந்த அணுகுமுறையை எப்படிப் பார்க்கறீங்க?

எங்கள் பகுதியில், குறிப்பாக 16, 17, 23 ஆகிய மூன்று வார்டுகளை நாங்கள் பார்க்கிறோம். எடப்பாடியின் கூட்டத்துக்கு வந்திருந்த பொதுமக்களிடம் எங்களுடைய பொறுப்பாளர்கள் கேள்வி கேட்டு பதிவு பண்ணியதில், எங்கிருந்து வர்றீங்கன்னு கேட்கும்போது, நாங்க பவானியிலருந்து வந்திருக்கோம்கறாங்க. எதுக்காக வந்திருக்கீங்கன்னு கேட்டபோது, கூட்டத்துக்காக வந்திருக்கோம்னு சொல்லியிருக்காங்க. ஈரோட்டில் மட்டுமல்லாமல், குமாரபாளையம், சுற்றியிருக்கும் திருப்பூர் மாவட்டங்கள், கோவை மாவட்டங்களிலிருந்து அந்த மாவட்டப் பொறுப்பாளர்கள், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்துக்கு கூட்டத்தைக் காட்ட வேண்டுமென்று இப்படிச் செய்கிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை வாக்காளர்கள் முழுவதுமாக தளபதி ஸ்டாலின் பக்கம் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி பேசும்போது வழக்கத்துக்கு மாறாக டென்சனாகப் பேசுகிறார். மீசை வச்ச ஆம்பளையா இருந்தா... வேஷ்டி கட்டுன ஆம்பளையா இருந்தா... வாக்காளர்களை அடைத்துவைக்கக் கூடாதுன்னு, ஆண்மையைப் பத்தியும், பெண்மையை இழிவுபடுத்தியும் டென்சனா பேசுற அளவுக்கு வாக்காளர்களை நீங்க அடைச்சு வச்சிருக்கீங்களா?

யாராவது ஒரு வாக்காளர், ஒரு பூத்துலருந்து, எங்களை அடைச்சு வச்சிருக்காங்கன்னு தேர்தல் ஆணையத்துக்கு எதாவது புகார் போயிருக்கா சார்? வாக்காளரா புகார் பண்ணியிருக்காங்களா? காவல் நிலையத்துக்கு எதாவது புகார் போயிருக்கா? தேர்தல் நடத்தும் அலுவலருக்கு எதாவது புகார் போயிருக்கா? சரி, எடப்பாடி சொல்லக்கூடிய வகையில் ஒருநாள் வேணா நாங்க அமர வச்சிருக்கலாம். அடுத்த நாள்... அதற்கடுத்த நாள் எப்படி நடக்கும்? எங்களுடைய தேர்தல் பணிமனையில் எங்கள் நிர்வாகிகள், பொதுமக்கள், வாக்கு சேகரிக்கிறதுக்காக இங்கு வந்து, இங்கிருந்து வாக்காளர்களின் இல்லந்தோறும் சென்று வருகிறார்கள். இதில் என்ன இருக்கிறது?

பெண்மையை இழிவுபடுத்துவது பற்றி சொன்னீங்க. அவர் எந்தக்காலத்தில் சரியாகப் பேசியிருக்கார்? தேர்தல் களத்தின் நிலவரம் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக இருக்கு. அதனுடைய விரக்தி தான் இதுபோன்ற பேச்சுக்கள். எங்க ளுடைய தலைவரை... முதலமைச்சரைப் பார்த்து தகாத வார்த்தைகளை உதிர்த்த எடப்பாடி பழனிசாமி, தைரியமும், முதுகெலும்பும், ஆண்மையும் உள்ள தலைவராக இருந்திருந்தால், பா.ஜ.க.விடம் சென்று மண்டியிட வேண்டிய தில்லை. இவங்க அறிவிச்ச வேட்பாளர், வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு, பா.ஜ.க.வின் உத்தரவைப் பெறுவதற்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்களுடைய முதலமைச்சர், வாக்காளர்களைச் சந்தித்து, மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்டு முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து மக்களுக்கான திட்டங்களைச் செய்கிறார். இவரைப் போன்று முட்டி போட்டோ, தவழ்ந்தோ, ஊர்ந்து சென்று காலைப் பிடித்தோ முதலமைச்சராகவில்லை.

முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க. மெஜாரிட்டியாக வென்றிருப்பதால், கொங்கு மண்டலத்தோட தலைவர் எடப்பாடி தான்னு அ.தி.மு.க.வினர் சொல்றாங்களே?

கோவை என்ற ஒரு மாவட்டத்தில் எடப்பாடிக்குக் கிடைத்த வெற்றியை மட்டுமே வைத்து கொங்கு மண்டலமே எடப்பாடிக்கு ஆதர வானதாக எப்படிச் சொல்ல முடியும்? அவர் ஆட்சி யில் இருக்கும்போதே பாராளுமன்றத் தேர்தலில் ஜெயித்தோம். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாவட்டத்தில் 7 நகராட்சி இருக்கிறது. 7க்கு 7-லும் தி.மு.க. தான் ஜெயித்தது. 33 பேரூராட்சிகளில் 31 பேரூராட்சிகளில் தி.மு.க. ஜெயித்துள்ளது. 100 வார்டுகள் இருக்கிறது, அதில் 97 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி ஜெயித்தது. ஏன் நீங்கள் சொல்லக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் சக்தி அங்கே எடுபட வில்லை? மக்கள், ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் முதல்வர் தளபதி மீது நம்பிக்கை வைத்து, வெற்றியைத் தொடர்ந்து வழங்கிட்டு இருக்காங்க.

ஜெயக்குமார் உட்பட அ.தி.மு.க.வினர், இங்கே பண விநியோகம் அதிகமாக இருக்கிறது, ஆர்.கே. நகர் தேர்தலைப்போல பணம் கொடுத்து வாக்காளர்கள் விலை பேசப்படுகிறார்கள்னு சொல்லியிருக்காங்க. இந்த மாதிரி விமர்சனத்தை எப்படிப் பார்க்கறீங்க?

கடந்த 9ஆம் தேதி அ.தி.மு.க.வின் செயலர் கூட்டம் நடந்தது. அந்த மேடைக்கு முன்பாக ஏறத்தாழ 70-80 விழுக்காடு காலி இருக்கை கள்தான் இருந்தது. இதில் 45 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்காரு. அந்த கூட்டத்துக்குப் போன மக்களுக்கு எவ்வளவு குடுத்தாங்கன்னு கேட்டுப் பாருங்க. இப்ப நீங்க ஈரோடு மேற்கிலிருந்து வந்திருக்காங்கன்னு சொன்னீங்கல்ல... அவங்ககிட்ட எவ்வளவு குடுத்திருக் காங்கன்னு கேட்டீங்கன்னா 1000 ரூபாய் பணம் குடுத்ததச் சொல்லியிருப்பாங்க.

ss

அப்போ தி.மு.க. தரப்பிலிருந்து கூட்டங்களுக்கு ஆட்களுக்கு பணமே குடுக்கலைன்னு சொல் றீங்களா?

அவங்க சொன்ன குற்றச் சாட்டுக்கு நான் பதிலாக இதைச் சொல்றேன். எங்களைப் பொறுத்தவரை 238 பூத்துக்கும் பூத் கமிட்டி அமைச் சிருக்கோம். மிகத் தெளிவாகக் களத்தில் நின்று பணியாற்று கிறோம். அதேபோல் வாக்காளப் பெரு மக்களிடம் வாக்கு சேகரிக்க பூத் கமிட்டி மெம்பர்கள் ஒருங்கிணைக்கிறாங்க. அ.தி.மு.க.வோ, பூத் கமிட்டிக்கே ஆட்கள் இல்லாத நிலைக்கு இன்றைக்கு தள்ளப்பட்டிருக்கு, அதுக்குக் காரணம் எடப்பாடி பழனிசாமி.

அ.தி.மு.க., அதற்கென வாக்காளர்கள் இல்லாத கட்சியாகவா இருக்கு? எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே செங்கோட்டையன், முத்துச்சாமி போன்றவர்கள் இங்கே அ.தி.மு.க.வுக்கென வாக்குவங்கியை உருவாக்கி யிருக்காங்களே?

ஒரு கட்சி கடந்த காலங்களில் இருந்ததென்பதற்காக இப்போதும் அதே செல்வாக்கோட இருக்கும்னு எப்படி எதிர்பார்க்க முடியும்? ஒரு கட்சியை வழிநடத்தக்கூடிய தலைவரின் தலைமைப்பண்பைப் பொறுத்துதான் சார் ஒரு கட்சியின் செல்வாக்கு இருக்கும். அவர் எந்த அளவுக்கு மக்களைக் கவரக்கூடியவராக இருக்கிறாரோ, அந்த அடிப்படையில்தான் அக்கட்சியின் செல்வாக்கு நிலைத்து நிற்கும். நீங்க சொல்லக்கூடிய எடப்பாடி பழனிசாமி விபத்தினால் முதல்வரானவர். அந்த கட்சியில் ஏற்கெனவே ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் இருப்பதாகச் சொல்லக்கூடிய சூழல் இருந்தது. இப்போது உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவென்று சொல்லச்சொல்லுங்க!

இந்த ஒன்றரை ஆண்டு காலங்களில் தி.மு.க.வின் செல்வாக்கு கூடியிருக்கும்னு சொல்றீங்களா?

se

உறுதியாகக் கூடியிருக்கு சார். முதலமைச்சருடைய நடவடிக் கைகள்... செயல்படுத்தக்கூடிய திட்டங்கள்... சட்டமன்றத்துல ஒரு நிகழ்ச்சி நடந்தது... ஆளுநர் உரையில்... விரும்பத்தகாத சம்பவங் களை ஆளுநர் நடத்தினார். அப்போது முதுகெலும்புள்ள முதலமைச்சராக தமிழ் நாட்டின் உரிமையைப் பாதுகாக்கக்கூடிய முதலமைச்சராக, நொடிப்பொழுதில் முடிவெடுத்து அதற் கான நடவடிக்கையை முதலமைச்சர் எடுத்தார். இதெல்லாம் கட்சிக்கான செல்வாக்கை உயர்த்தி யிருக்கு.

ஆல் இந்தியா லெவலில் பா.ஜ.க.வோடு மிகவும் ஒத்துப்போவதாக அ.தி.மு.க. இருக்கிறது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. உறவு எப்படி இருக்கிறது?

கட்சியினுடைய பெயர் இரண்டு... அ.தி.மு.க., பா.ஜ.க. சின்னங்கள் இரண்டு... இரண்டு கட்சிகளுக்கும் சேர்த்து தலைவர் ஒருவர் தான்... அவர் மோடிதான். பா.ஜ.க.வைக் கேட்காமல் எடப்பாடி பழனிசாமி கடுகளவுகூட எந்தச் செயலையும் செய்யமாட்டார். சொத்து வரி, மின் கட்டண உயர்வு பற்றி மேடைக்கு மேடை பேசக்கூடியவருக்கு, இந்த இரண்டின் உயர்வுக்கும், ஒன்றிய அரசு கொடுத்த அழுத்தம், ஒழுங்குமுறை ஆணையம் கொடுத்த உத்தரவுதான் காரண மென்று தெரியும். அதே அ.தி.மு.க. ஆட்சியில் 84% மின் கட்டணத்தை உயர்த்தியிருந்தார்கள். இப் போது 31%தான் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், 410 ரூபாய்க்கு காங்கிரஸ் ஆட்சியில் இருந்த சிலிண்டர் விலை, இப்போது 1200 ரூபாய்க்கு உயர்த்தப்பட்டிருக்கிறது... பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது... டீசல் விலை உயர்ந்திருக்கு... அனைத்துக்கும் சேர்த்து போராட்டத்தை நடத்தணும்ல?

senthilbalaji

ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே ஒருங்கிணைப்பு எப்படி இருக்கு?

தேர்தல் தலைமை பணிமனை அமைச்சாங்க. பா.ஜ.க. தலைவர்களின் படம் எதுவும் வைக்கல. வேட்பு மனுத்தாக்கலுக்கும் யாரையும் அழைக்கவில்லை. வேட்பாளரே சென்று பா.ஜ.க. அலுவலகத்தில் அவர்களைச் சந்தித்தார். இன்றைக்கு வரைக்கும் அ.தி.மு.க.வின் பிரச்சார வாகனங்களில் பா.ஜ.க.வின் கொடிகள் இல்லை. பா.ஜ.க. ஒருபக்கம் பா.ஜ.க.வின் கொடியைப் பிடித்துக்கொண்டு போய்ட்டு இருக்காங்க. அதனால ரயில் தண்டவாளம் மாதிரி இணை யாமல் போய்ட்டு இருக்காங்க. அ.தி.மு.க.வை விட்டால் பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்றத் தேர்த லில் வேற கதியே இல்லை. அதனால அ,தி.மு.க.வை மிரட்டி கையில் வச்சிருக்காங்க. இதுதான் இன்றைய சூழல்.

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்காளர்களில் விசைத்தறித் தொழிலாளர்கள் அதிகமிருக் கிறார்கள். இவர்களுக்கான மின்கட்டணச் சலுகையை தேர்தல் விதிமுறைகளை மீறி அறிவிச்சீங்கன்னு பேச்சு எழுகிறதே?

மின் கட்டண உயர்வின்போது, இந்த விலை உயர்வு அதிகமென்று ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்துக்கேட்புக் கூட்டத்தில் புகார் மனுவாகக் கொடுத்திருக்கிறார்கள். இருந்தாலும்கூட ஒழுங்குமுறை ஆணையம் அக்கடிதத்தை ஏற்றுக்கொள்ளாமல், என்ன நிர்ணயித்தார்களோ அதையே நடைமுறைக்குக் கொண்டுவந்தது. தமிழ்நாட்டு முதலமைச்சரை அவர்கள் சந்தித்து உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டுமென்று வலியுறுத்தினார்கள். உடனடியாக அதுகுறித்து முதல்வர் ஆலோசித்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை எவ்வளவு குறைக்க வேண்டுமென்று கருதுகிறார்களோ, அவ்வளவு குறைத்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தை அரசு மானியமாகத் தருவதற்கு உத்தர விட்டார். இலவச மின்சாரத்தை 750 யூனிட்டிலிருந்து 1000 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படுமென்று தேர்தல் அறிக்கையில் சுட்டிக்காட்டியதைக் குறிப்பிட்டு, அதையும் மானியமாக வழங்க உத்தரவிட்டார். அதேபோல், கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கவும் உத்தர விட்டார். அதற்கான கணக்கீடுகள் செய்யப்பட்டு, ஒவ்வொரு அதிகாரியும் சரிபார்த்து ஃபைல்களில் கையொப்பமிட வேண்டும். அதன்பின் நானும், நிதியமைச்சரும், முதலமைச்சரும் கையொப்பமிட வேண்டும். இவ்வளவு நிலைகளைக் கடந்து முதலமைச்சர் அரசாணையை வெளியிடவிருக்கும் சூழலில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தச் சலுகை வெறும் ஈரோட்டுக்கு மட்டுமான சலுகை அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கான அறிவிப்பு என்பதால் அரசின் மூலமாக தேர்தல் ஆணையத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. தற்போது, தேர்தல் முடியும்வரை அதனை அமல்படுத்த வேண்டாமென்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது..

senthilbalaji

அனுமதியில்லாமல் திறக்கப்பட்டதாகக் கூறி தி.மு.க. பணிமனையில் 10, அ.தி.மு.க. பணிமனையில் 4 மூடப்பட்டிருக்கிறது. ஒரு வேளை தேர்தல் நிறுத்தப்பட்டால் மீண்டும் தி.மு.க. கூட்டணி வெற்றி காண முடியுமா?

தேர்தல் நிறுத்தப்படுமா என்ற கேள்வியே வேண்டாம். தேர்தல் பணிமனைக்காக முறையாக அவர்களிடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி கொடுக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அலுவலர்தான். தேர்தல் விதிமுறையை மீறி எந்த இடத்திலும் நாங்கள் செயல்படவில்லை. தேர்தல் வழிகாட்டு நெறிமுறைப்படிதான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். எனவே இன்னொரு தேர்தல் என்பதற்கான வாய்ப்புகளே இல்லை. தேர்தல் நேர்மையாக, நியாயமாக நடைபெறும்.

senthilbalaji

எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றிபெறுவீர்கள்னு எதிர்பார்க் கறீங்க?

அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் வாங்கும் வாக்குகளைவிட, வாக்கு வித்தியாசம் கூடுதலாக இருக்கும். இந்தத் தேர்தலில் கை சின்னத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேலான வாக்குகள் கிடைக்கக்கூடும்.

படங்கள் : ஸ்டாலின், விவேக்

nkn220223
இதையும் படியுங்கள்
Subscribe