போதையால் பாதை மாறி பைத்தியம் பிடித்த ஒரு இளைஞர், போதை ஏற்றப் பணம் இல்லாமல் கொலை யாளியாக மாறிய கொடூரம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது. ஈரோடு மாவட்டம் அவல் பூந்துறை என்ற கிராமத்தில் பாரதி வீதியைச் சேர்ந்தவர்கள் முத்துசாமி, இவரது மனைவி ஜெல்லின்மேரி. இவர்களுக்கு பாரதிவெண்ணிலா என்ற மகளும் பூவிழிசெல்வன் என்னும் மகனும் உள்ளனர். மகள் பாரதிவெண்ணிலாவுக்குத் திருமணமாகி அடுத்த வீதியில் வாடகைக்கு ஒரு வீட்டில் தனது கணவருடன் வசித்து வருகிறார். பூவிழிசெல்வனுக்கு ஷர்மிளா என்ற மனைவியும் அக்ஷிதா என்ற குழந்தையும் உள்ளனர்.

m

போதைக்கு அடிமையான பூவிழிசெல்வன் முறையாக வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தினரிடம் குடிப்பதற்கு பணம்கேட்டு தொடர்ந்து பிரச் சினையில் ஈடுபட்டு வந்துள் ளார். ஒருகட்டத்தில் குடிவெறி யில் மனநலம் பாதிக்கப்படவே... அரசு மருத்துவ மனையில் தொடர் சிகிச்சையில் இருந் துள்ளார். மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்த பிறகும் குடிப்பதற்கு பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்ய... சில தினங்களுக்கு முன்பு அவரது மனைவி ஷர்மிளா குழந்தையுடன் கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இதைத் தொடர்ந்து 12-ந் தேதி பூவிழிசெல்வன், கோவையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு மது போதையில் சென்றுள்ளார். அங்கு மாமனார், மாமியார் மற்றும் மனைவியுடன் சண்டைபோட... அவர்கள் பூவிழிசெல்வனை அடித்து அங்கிருந்து விரட்டிவிட்டனர். பிறகு கோவையிலிருந்து ஈரோடு வந்து அவல் பூந்துறையில் உள்ள தனது வீட்டிற்கு நள்ளிரவு வந்துள்ளார். அங்கு வீட்டில் இருந்த தனது தாய் ஜெல்லின்மேரியிடம் குடித்தே தீரவேண் டும் பணம் கொடு என தொடர்ந்து டார்ச்சர் செய்ய பணம் தர மறுத்த அவரது தாய், திடீரென வீட்டை விட்டு வெளியே போய்விட்டார். இதனால் செய்வதறியாது கடும் ஆத்திரமடைந்த பூவிழிசெல் வன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 95 வயதான தனது பாட்டி காளியம்மாளை எழுப்பி பணம் கேட்டுள்ளார். அந்த வயதான பாட்டி பேசக்கூட முடியாமல் சைகையால் இல்லையென்று கூறியிருக்கிறார்.

குடிவெறியில் மிருகமான செல்வன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துவந்து, வயதான பாட்டி என்றும் பாராமல் வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பாட்டி காளியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கொடூரச்செயல் அக்கம்பக்கத்தினருக்கு தெரிய வர, போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். அரச்சலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த காளியம்மாளின் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போதையில் அங்கேயே இருந்த பூவிழிசெல்வனை கைது செய்தனர்.

பாதைக்கு அடிமை யான மனிதமிருகம் எப்படிப்பட்ட கொடூரச் செயலையும் செய்யும் என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம்.

-ஜீவாதங்கவேல்