கேரளாவிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் சின்னக்கானல் பகுதியில் மலையாளிகளோடு தமிழர்களும் பெரும்பான்மையாக வசித்து வருகிறார்கள். இப்படி வசிக்கக்கூடிய பகுதியில் அரிகொம்பன் என்ற காட்டு யானை, அப்பகுதியிலுள்ள கடைகளிலும், வீடுகளுக்குள்ளும் புகுந்து அரிசியை மட்டும் தின்றுவிட்டு பொருட்களை சேதப்படுத்தி வந்தது. அதோடு 14 அப்பாவி பொதுமக்களையும் இது அடித்துக் கொன்றிருக்கிறது. அதைக்கண்டு அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான பாபு, பொதுமக்களை அச்சுறுத்தும் அந்த யானை யைப் பிடித்து கேரளாவிலுள்ள வேறு வனப்பகுதியில் விட வேண்டுமென்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில் தான் அரிகொம்பன் என்ற அரிக் கொம்பனைப் பிடித்து கேரளாவி லுள்ள பாலக்காடு -பரப்பிகுளம் -ஆழியாறு வனப்பகுதியில் விடு மாறு கேரள வனத்துறைக்கு கோர்ட் உத்தரவிட்டது.

ee

அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி சின்னக்கானல் பகுதியில் திரிந்த அரிகொம்பனை பிடித்த கேரள வனத் துறையினர், "ரேடியோ காலர்' ஒன்றை அதன் கழுத்தில் மாட்டிவிட்டு, கோர்ட்டு உத்தரவையும் மீறி குமுளி, தேக்கடி பகுதி யில் உள்ள முல்லைப் பெரி யாறு வனப்பகுதியில் விட்டனர். ஆனால் மறுநாளே தமிழக வனப் பகுதியான மேகமலை பகுதியில் உள்ள மணலாறு பகுதிகளில் நுழைந்து கடைகளை சேதப் படுத்திவிட்டு மீண்டும் தேக்கடி வனப் பகுதிக்குள் நுழைந்தது. அதைக் கண்ட கேரள வனத்துறையினர், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் மிரண்டு போன அரி கொம்பன், தமிழக எல்லையான லோயர்கேம்ப் வழியாக கம்பம் நகருக்குள் கடந்த 27ஆம் தேதி புகுந்து மக்களை பதட்டத்துக்குள்ளாக்கியது.

கூலி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய பால்ராஜை அரிகொம்பன் தாக்கியதில், சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து, வனத்துறை மற்றும் காவல்துறை இரண்டும் இணைந்து அரிகொம்பனைப் பிடிக்க களமிறங்கியும் பிடிக்க முடியவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமி, அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் கம்பத்தி லுள்ள திருமண மண்டபத்தில்வைத்து ஆலோசனை நடத்தினார். அப்பொழுது திருமண மண்டபத்திற்கு பின்னால் அரிகொம்பன் இருப்பதாகத் தகவல்வர, அதைப் பிடிக்க முயன்றனர். அதுவோ, சுருளிமலை பகுதிக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. முன்னாள் எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வ னுக்கு சொந்தமான தென்னந்தோப்புக் குள் புகுந்து தென்னைமரங்களை சேதப்படுத்தியது. வனத்துறை அமைச்சர் மதிவேந்தனும் அதிகாரிகளோடு ஆலோ சனை நடத்திவிட்டு, அரிகொம்பனை பிடிக்க மூன்று கும்கி யானைகளோடு 150க்கும் மேற்பட்ட வனத்துறையினர் களமிறங்கியும் தற்போதுவரை பிடிக்க முடியவில்லை.

கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டதால் மக்கள் வெளியேறவும், விவசாயத்தை கவனிக்கவும் முடியாமல் வீட்டினுள் முடங்கினர். அரிகொம்பனை பிடித்து பாதுகாப்பான வனப்பகுதியில் விடப்படு மென்றும், உயிரிழந்த பால்ராஜ் குடும் பத்திற்கு நிவாரண உதவி வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் அறிவித் தார். அதைத்தொடர்ந்து, அமைச்சர் ஐ.பெரியசாமி, பாதிக்கப்பட்ட குடும்பத் திற்கு 5 லட்ச ரூபாயை வழங்கியுள்ளார்.

Advertisment

ee

கேரளா கோர்ட் உத்தரவிட்ட ஆறு மணி நேரத்திலேயே சின்னகானல் பகுதியிலிருந்த அரிகொம்பனை வனத் துறையினர் பிடித்தனர். ஆனால் இவ்வ ளவு நாட்களில் தமிழக வனத்துறையால் பிடிக்க முடியவில்லை. அந்தளவுக்கு திட்டமிடலில் குளறுபடியாக இருக் கிறது. யானையின் கழுத்திலுள்ள ரேடியோ காலர் மூலமாக யானை எங்கிருக்கிறது என்பதை கேரள வனத்துறையால் கண்டறிய இயலும். எனவே கேரள வனத்துறைக்குள் அரி கொம்பன் வந்தாலே வெடி போட்டு தமிழகப் பகுதிக்குள் திட்டமிட்டு விரட்டுகிறார்கள். இதனால் இன்னும் பல தமிழர்களின் உயிர் பறிபோகுமோ என அச்சப்படுகிறார்கள்.

Advertisment

அந்த அளவுக்கு தமிழ்நாட்டுக்கு எதிராக கேரள வனத்துறையினர் திட்டமிட்டு சதி செய்து வருகிறார்கள். அது தெரியாமல் தமிழக வனத்துறை செயல்படுவதுதான் வேதனையாக இருக்கிறது. ஏற்கெனவே முல்லைப் பெரியாறு அணை பழுதடைந்து விட்டது என்று ஒரு பொய்யான புரளியை கிளப்பிவிடும் மலையாளிகள், தற்போது அரிகொம்பனிடமிருந்து தங்களது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அரிகொம்பனை அவர்களின் எல்லையிலிருந்து தமிழ்நாட்டுக்குள் விரட்டிவிடுகிறார்கள். இதனை முறியடிக்க தமிழ்நாடு அரசும் அதிரடியாக களம் இறங்கி அரிகொம்பனை பிடிக்க வேண்டும். அதோடு, கேரள வனப்பகுதியான ஆழியாறு வனப்பகுதிக்குள் விடுவதற்கான நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டும்'' என்கிறார் பெரியார் வைகை பாசன விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான அன்வர் பாலசிங்கம்.

இது சம்பந்தமாக மாவட்ட கலெக்டர் ஷஜீவனா விடம் கேட்டபோது, "அந்த அரிகொம்பனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கூடிய விரைவில் பிடித்து விடுவோம். அதுவரை பொதுமக்க ளின் பாதுகாப்புக்காக தொடர்ந்து 144 தடை உத்தரவு நீடிக்கும்" என்றார் உறுதியாக. அரிகொம்பனை கூடிய விரைவில் பிடித்து, வீட்டினுள் முடங்கியுள்ள தமிழ்நாடு மக்கள், வீட்டிலிருந்து வெளியேறி வேலைக்கும் விவசாயத் துக்கும் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.