"வேலியே பயிரை மேய்ந் தது' என்ற பழமொழிக்கேற்ப, போலீஸ் ஒருவரே கொள்ளைச் சம்பவத்தை பின்னின்று இயக்கி வந்த நிலையில், தற்போது பிடி பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் பெருந்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு வீட்டில் திருடிய வழக்கில், செந்தில்குமார், கருப்புசாமி, பாலசுப்ரமணி ஆகிய மூவரையும் பெருந்துறை போலீ சார் கைது செய்தனர். அவர்களி டம் துருவித் துருவி நடத்திய விசாரணையில், இந்த திருட்டு சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டு திட்டங்களை வகுத்துக் கொடுத்தது ஈரோடு மாவட்ட ஆயுதப்படைப் பிரிவில் பணியாற்றும் போலீஸ்காரர் ராஜீவ்காந்திதான் எனத் தெரிய வந்து அதிர்ந்தனர் பெருந்துறை போலீசார்.

police

இந்தத் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் செந்தில்குமார், 2021ஆம் ஆண்டு மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட போது, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் போலீஸ்காரர் ராஜீவ் காந்தி ஈடுபடுத்தப்பட் டார். அப்போது செந்தில்குமாருடன் நட்பை ஏற்படுத்திய ராஜீவ்காந்தி, செந்தில்குமாரின் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தவுடன் தன்னைச் சந்திக்குமாறும், போலீசில் சிக்காமல் திருட்டு வழிப்பறியில் ஈடுபடுவதற்கு திட்டம் வகுத்துத் தருவதாகவும் கூறியுள்ளார்.

police

அதன்படி ஜாமீனில் வெளிவந்த செந்தில்குமார், தனது கூட்டாளிகளுடன் சென்று போலீஸ்காரர் ராஜீவ்காந்தியை சந்தித்துள்ளார். போலீஸ்காரர் ராஜீவ்காந்தி, பெருந்துறையில் அவருக்கு சொந்தமான மளிகைக் கடையில் செந்தில்குமாரையும், அவரது கூட்டாளிகளையும் வேலைக்குச் சேர்ப்பதுபோல் சேர்த்துவிட்டு, திருடுவதற்கு திட் டம் வகுத்துக் கொடுத்துள்ளார். அதன்படி செந்தில்குமாரும் கூட்டாளிகளும், சித்தோடு, பெருந்துறை, திருப்பூரிலுள்ள பல்வேறு வீடுகளில் கை வரிசையைக் காட்டியுள்ளனர். பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பதுபோல, திருட்டுச் சம்பவங்களுக்கு பிதா மகனான போலீஸ்காரர் ராஜீவ் காந்தி தற்போது பிடிபட் டுள்ளார்.

அவர்மீது ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் துறைரீதி யான நடவடிக்கை எடுத்து, சஸ்பெண்ட் செய் துள்ளார். தற்போது ராஜீவ் காந்தி, கோபி மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டுள் ளார்.

இந்த ராஜீவ்காந்தி ஏற்கெனவே திருப்பூரில் பல் வேறு போலீஸ் நிலையங்களில் பணியாற்றி, குற்றச்சாட்டுகள் காரணமாகத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு மாற்றப் பட்டுள்ளார். பெருந்துறை போலீஸ் நிலையத்தில் குற்றப் பிரிவு முதன்மைக் காவலராகப் பணிபுரிந்தார்.

பின்னர் ஈரோடு ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். திருப்பூரில் அவிநாசி சப்-டிவிஷனில் பெருமாநல்லூர், குன்னத் தூர், அவிநாசி, ஈரோட்டில் சித்தோடு, பெருந்துறை என மொத்தம் ஏழு இடங்களில் நடந்த திருட்டு வழக்குகளில் ராஜீவ்காந்திக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. சிறை யிலுள்ள ராஜீவ்காந்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அந்த விசாரணையில், மேலும் பல திருட்டு சம்பவங்களில் இவரது ஸ்கெட்ச் விவரங்கள் தெரியவருமென்று அதிர்ச்சி யோடு கூறுகிறார்கள் ஈரோடு மாவட்ட போலீசார்.

Advertisment