"கோட்சேவின் வாரிசுகளுக்கும் அவர்களது தீய எண்ணங்களுக்கும் நம் இந்திய மண்ணில் இடமில்லை என சூளுரைப்போம்'' என மகாத்மா காந்தி நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்துப் பதிவிட்ட நிலையில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையில் கோவை அதிகாரிகளே கோட்சேவுக்காக வரிந்துகட்டி நின்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய கு.ராமகிருஷ் ணன், "கோவை மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பு சார்பில் ஜன.30-ஆம் தேதி காந்தியார் படுகொலை நாளில் மதவெறி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு 5 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த முறை அனுமதி கேட்ட தற்கு, தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் அதிகாரிகளிடம் கேளுங் கள் என்றனர் போலீசார். தேர்தல் விதிக்குள் இந்த நிகழ்வு வராது ஆகையால் அனுமதி தேவை யில்லை என தேர்தல் அதிகாரிகள் சொன்னதையடுத்து மா.கம்யூ னிஸ்ட் தோழர் ஜி.ராமகிருஷ்ணன், வி.சி.க., த.பெ.தி.க. கழகத்தினர் சேர்ந்து நிகழ்ச்சியை நடத்தி னோம். காந்தியார் படத்திற்கு கீழே இந்து மதவெறியர் களால் மகாத்மாகாந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நாளிலே மத ஒற்றுமையை, மத வெறியை எதிர்த்து உறுதி ஏற்போம் என்ற வாசகங் களை வைத்திருந் தோம். அப்போது வந்த போலீசார் தேர்தல் நேரம் என்பதால் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்றனர். நாங்கள் கடுமையாக வாதாடினோம்.
பின்னர் வந்த உதவி ஆணையர் சுகுமாறன், இந்து மதவெறி என்ற வாசகத்தை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் இந்து என்ற வார்த்தையை காகிதத்தால் மறைத்துவிட்டு நிகழ்ச்சி யை தொடங்கினோம். அப்போது ஜி.ஆர், உறுதி மொழியை வாசித்தார். ஆர்.எஸ்.எஸ்.ஸை சேர்ந்த கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட மகாத்மா காந்தி என்ற வாசகம் வந்தவுடனே உதவி ஆணையர் சுகுமாறன், "இந்த வாசகம் ஆட்சேபனைக்குரியது. ஆர்.எஸ்.எஸ். என்று சொன்னாலே அது மதக்குறியீடு. கோட்சே என்று சொன்னாலும் ஒரு மதக் குறியீடு. அந்த வாசகங்களைச் சொல்லக் கூடாது' என ஆட்சேபித்தார்.
"காந்தியார் சுட்டுக்கொல்லப்பட்டாரா, கொரோனாவால் செத்துப்போனாரா?' என்று கேட் டோம். கோட்சேவினால்தானே சுட்டுக் கொல்லப் பட்டார். அப்படியென்றால் ஏன் கோட்சே என்று சொல்லக்கூடாது? கோட்சே, ஆர்.எஸ்.எஸ். என்ற வார்த்தைகள் இந்த அளவுக்கு வளர்ந்து காவல் துறையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதன் விளைவுதான் அந்த அதிகாரி இந்த வார்த்தைகளை சொல்லக் கூடாது என புரிதல் இல்லாமல் சொல் கிறார். கோட்சே எதற்காக சுட்டார், ஆர்.எஸ்.எஸ். எதற்காக துணை போனது, காந்தி சுட்டுக்கொல்லப் பட்டதற்கு காரணமே அனைத்து மதத்தினரையும் இணைத்தார் என்ற காரணத்துக்காகத்தான். ஆகவே அந்த மதநல்லிணக்கத்தை காட்டுகின்ற வகையில், ஒற்றுமைப்படுத்துகின்ற வகையில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது என்று சொல்லி நிகழ்ச்சியை முடித்தோம். எங்கள் மீது வழக்கு போடுவதாக சொல்லிவிட்டுப் போனார்கள்.
அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோது கோட் சேவுக்கு சிலை வைக்க வேண்டும், கோட்சேவின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என இங்கே இருக்கிற ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப் பினர் தூக்கிப்பிடிக்க தொடங்கிவிட்டார்கள். கோவையில் இருக்கின்ற காவல்துறையினர் அவர்களுக்கு துணைபோகின்ற வகையில் இருக்கின்றனர்'' என்றவரிடம்... "இடதுசாரிகளும், உங்களைப்போன்ற பகுத்தறிவாளர்களும் உங்கள் கொள்கைகளை சரியான வகையில் மக்களிடம் கொண்டு செல்லவில்லையா...?'' என்றோம்.
பெரியாரிஸ்டுகளாகிய நாங்கள் மத எதிர்ப்பு, இந்துத்துவா எதிர்ப்பு என்பதில் சரியாகத்தான் இருக்கின்றோம். ஆனால் அரசியல் சூழல் அவர்களை வளர்த்தெடுக்கிறது. ஒவ்வொரு முறையும் திராவிட இயக்கங்களோடு கூட்டணி வைத்துக்கொண்டு அவர்கள் தயவில் வளர்ந்து வரும் நிலை இருக்கிறது. பெரியாருடைய கருத்துக்களை பரப்புவதற்கு காவல்துறையினர் இடம்தருவதில்லை. தடுக்கிறார்கள். காந்தி பெயரை வைத்தால்கூட அனுமதி இல்லை என்ற நிலைதான் இருக்கிறது. இதே ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளுக்கு கூட்டம் நடத்த அனுமதி அளித்துவிட்டு பின்னர் அவர்களிடத்திலே கெஞ்சி வழக்கு போடும் நிலையில் உள்ளனர். அவர்களுக்கென்று தனி இடம் கோவையில் இருந்துகொண்டுதான் இருக்கிறது.
கோவை, திருப்பூர் மாவட்ட காவல்நிலை யங்களில் ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவாவுடைய ஊடுருவல் மிக அதிகமாக இருக்கிறது. எல்லா காவல்நிலையங்களிலும் இரண்டு, மூன்று ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவாவை சேர்ந்தவர்களை பார்க்க முடியும். அவர்கள் காவல்நிலைய அதிகாரிகளுக்கு எல்லா வேலைகளையும் பார்க்கின்றனர். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் தேவையில்லாமல் இருப்பவர்கள் யார் என்று அங்கு உள்ள சி.சி.டி.வி.யை ஆய்வு செய்தால் புரியும்'' என்றார் விளக்கமாக.
நம்மிடம் பேசிய ஜி.ஆர்., "கோட்சேவால் சுட்டுக்கொல்லப்பட்ட காந்தி என்று உறுதிமொழி வாசகத்தைச் சொன்னவுடன் உதவி ஆணையர் சுகுமாறனும், இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணாவும் வந்து தடுக்கின்றனர். கோட்சேதான் காந்தியை சுட்டது என்று தூக்குலேயே போட்டாங்களே. நீங்க ஏன் கோட்சே பெயரை சொல்லக்கூடாது என்று சொல்கிறீர்கள் என்று கேட்டேன். இப்படி வாக்குவாதம் செய்துதான் நிகழ்ச்சியை நடத்தி முடித்தோம். முதல்வர் சரியாக சொல்லியிருக்கிறார். சரியான ஸ்டேட்மெண்ட்டை கொடுத்திருக்கிறார். ஆனால் காவல்துறையில் அனைத்து இடங்களிலும் அரசின் கொள்கைகளை பின்பற்றக்கூடியவர்கள் இல்லை. நாங்கள் செய்தது தவறு என்றால் எங்கள் மீது வழக்கு போடலாம். ஆனால் அனுமதி பெற்று நடந்த அந்த நிகழ்ச்சியை தடுக்கக்கூடாது.