"ஹலோ தலைவரே, தி.மு.க. கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயற்சிக்கிறார்னு காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மீது புகார் கிளம்பியிருக்கு.''”
"ஆமாம்பா, அந்த பிறந்த நாள் போஸ்டர் விவகாரத்தைச் சொல்றியா?''”
"சரியா யூகிச்சிட்டீங்க தலைவரே, காங்கிரஸ் சீனியர் லீடரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளை அவர் ஆதரவாளர்கள் கடந்த 16ஆம் தேதி கொண்டாடினார்கள். இதற்காக அவர் ஆதரவாளர்களான தி.நகர் ஸ்ரீராம், ரவிராஜ் ஆகியோர் அடித்த போஸ்டரில், கார்த்தி சிதம்பரத்தை "தமிழகத்தின் நாளைய முதல்வரே'ன்னு குறிப்பிட்டிருந்தார்கள். தி.மு.க. தரப்புக்கு டென்ஷனை ஏற்படுத்துகிற மாதிரி, வேண்டுமென்றே அந்தப் போஸ்டர்களை, அமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி தொகுதியில் வளைத்து வளைத்து ஒட்டியிருந்தார்களாம். இது அவர்கள் எதிர்பார்த் தது போலவே தி.மு.க. தரப்பை எரிச்சலாக்க, ஆவேசமான தி.மு.க. இளைஞரணியினர் திரண்டு சென்று, அந்தப் போஸ்டர்களைக் கிழித்தெறிந் தனர். இதையறிந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியே, "எதற்கு இப்படி போஸ்டர் ஒட்டவேண்டும்?' என்று கடுப்பாக, அவர் ஆதரவாளர்களோ, ’தி.மு.க. கூட்டணிக்குள் குழப் பத்தை உண்டாக்கவே கார்த்தி சிதம்பரம் தரப்பு இப்படி திட்டமிட்டு போஸ் டர் ஒட்டியிருக்கிறது என்று ராகுல்காந்திக்கு புகார்களை அனுப்பியிருக்கிது. இந்த போஸ்டர் விவகாரம் இருதரப்புக்கும் இடையில் புகைகிறது.''”
"குண்டர் சட்டத்தில் கைதான 6 விவசாயி களை முதல்வர் ஸ்டாலினே தலையிட்டு விடுவித்திருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் முயற்சி நடந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அதிரடி யாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்த நிலையில், அவர்களில் பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகி யோரை, அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கை யை ஏற்று விடுவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவர்களில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருள் என்பவர் மட்டும் விடுவிக்கப்படவில்லை.இந்த நிலையில் விவசாயிகள் தரப்போ,’போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி முக்கிய புள்ளி ஒருவர்தான் சொல்லியிருக்கிறார். இதற்கு முதல்வர் அலுவ
"ஹலோ தலைவரே, தி.மு.க. கூட்டணியில் குழப்பம் உண்டாக்க முயற்சிக்கிறார்னு காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் மீது புகார் கிளம்பியிருக்கு.''”
"ஆமாம்பா, அந்த பிறந்த நாள் போஸ்டர் விவகாரத்தைச் சொல்றியா?''”
"சரியா யூகிச்சிட்டீங்க தலைவரே, காங்கிரஸ் சீனியர் லீடரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பிறந்தநாளை அவர் ஆதரவாளர்கள் கடந்த 16ஆம் தேதி கொண்டாடினார்கள். இதற்காக அவர் ஆதரவாளர்களான தி.நகர் ஸ்ரீராம், ரவிராஜ் ஆகியோர் அடித்த போஸ்டரில், கார்த்தி சிதம்பரத்தை "தமிழகத்தின் நாளைய முதல்வரே'ன்னு குறிப்பிட்டிருந்தார்கள். தி.மு.க. தரப்புக்கு டென்ஷனை ஏற்படுத்துகிற மாதிரி, வேண்டுமென்றே அந்தப் போஸ்டர்களை, அமைச்சர் உதயநிதியின் சேப்பாக்கம்- திருவல்லிக் கேணி தொகுதியில் வளைத்து வளைத்து ஒட்டியிருந்தார்களாம். இது அவர்கள் எதிர்பார்த் தது போலவே தி.மு.க. தரப்பை எரிச்சலாக்க, ஆவேசமான தி.மு.க. இளைஞரணியினர் திரண்டு சென்று, அந்தப் போஸ்டர்களைக் கிழித்தெறிந் தனர். இதையறிந்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியே, "எதற்கு இப்படி போஸ்டர் ஒட்டவேண்டும்?' என்று கடுப்பாக, அவர் ஆதரவாளர்களோ, ’தி.மு.க. கூட்டணிக்குள் குழப் பத்தை உண்டாக்கவே கார்த்தி சிதம்பரம் தரப்பு இப்படி திட்டமிட்டு போஸ் டர் ஒட்டியிருக்கிறது என்று ராகுல்காந்திக்கு புகார்களை அனுப்பியிருக்கிது. இந்த போஸ்டர் விவகாரம் இருதரப்புக்கும் இடையில் புகைகிறது.''”
"குண்டர் சட்டத்தில் கைதான 6 விவசாயி களை முதல்வர் ஸ்டாலினே தலையிட்டு விடுவித்திருக்கிறாரே?''”
"உண்மைதாங்க தலைவரே, திருவண்ணா மலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பூங்கா விரிவாக்கத்திற்காக நிலம் எடுக்கும் முயற்சி நடந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் அதிரடி யாகக் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் காவல்துறை கைது செய்த நிலையில், அவர்களில் பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகி யோரை, அவர்களின் குடும்பத்தினரின் கோரிக்கை யை ஏற்று விடுவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அவர்களில் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அருள் என்பவர் மட்டும் விடுவிக்கப்படவில்லை.இந்த நிலையில் விவசாயிகள் தரப்போ,’போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யும்படி முக்கிய புள்ளி ஒருவர்தான் சொல்லியிருக்கிறார். இதற்கு முதல்வர் அலுவலகத்தின் ஒப்புதலைப் பெற்றுவிட்டதாக அவர் சொன்னதால்தான், காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவியது. விவசாயிகளின் அரசு என சொல்லிக்கொள்ளும் தி.மு.க. அரசு, இப்படி விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படலாமா?’ என்று கொதிப்பாய்க் கேட்கிறார்கள். இந்த விவகாரம் விவசாயிகள் மத்தியில் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.''”
"சேலம் நிதி மோசடி விவகாரத்தில் இருந்து தப்பிக்க, பா.ஜ.க. பிரமுகர்கள் மேற்கொண்ட சமாதான முயற்சி பலிக்கவில்லையே?''
"சேலத்தில் போலி நிறுவனமான எம்.எஸ். எம்.இ. அமைப்பின் மூலம் சிறு,குறு தொழில் களுக்கு ஒன்றிய அரசின் ஸ்கீமில் கடன்பெற்றுத் தருவதாகக் கூறி, பலரிடமிருந்தும் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில், முத்துராமன் என் பவர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருக் கிறார்கள். இந்த விவகாரத்தில் பல பா.ஜ.க. பிர முகர்கள் சம்மந்தப்பட்டிருக்கும் நிலையில், அவர் களில் நடிகை நமீதாவையும் அவர் கணவரையும் விசாரணைக்கு ஆஜராகச் சொல்லி, காவல் துறை அனுப்பியிருக்கிறது. அவர்கள், 15 நாட்கள் அவகாசம் கேட்டிருக்கிறார்கள். இந்த நிலையில்,இந்த விவகாரத்தில் கோடிக்கணக்கில் கமிஷன் பெற்றதாகச் சொல்லப்படும் பா.ஜ.க. அண்ணாமலை உள்ளிட்ட பலருக்கும் பெரும் நெருக்கடி ஏற்பட்டிருப்பதால், புகார் கொடுத்த கோபால்சாமி என்பவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் பா.ஜ.க.வினர் இறங்கினர். இதைத் தொடர்ந்து அவரும், இந்தப் புகாரை வாபஸ் பெறுவதாக மனுகொடுத்தார். ஆனால் இதை வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஏற்கவில்லை. அதனால் இந்த வழக்கு இப்போது தீவிரம் பெற்றிருக் கிறது. இதைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாக பா.ஜ.க. பிரமுகர்களான கருப்பு முருகானந் தம், ரெங்கநாயலு ஆகியோரைக் கைதுசெய்ய விசா ரணை டீம், வியூகம் வகுத்து வருகிறது என்கிறார்கள்.''
"அமலாக்கத்துறையால் குறிவைக்கப்பட்ட மணல் மாஃபியாக்களுக்கு காவல்துறை அதிகாரி களின் சப்போர்ட் அதிகம் என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, மணல் பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் மும்மூர்த்திகளான புதுக் கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் அண்மையில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டை நடத்தியது. மீண்டும் இவர்கள் தரப்பை குறி வைத்து ரெய்டு நடத்த அமலாக்கத்துறை வியூகம் வகுத்துவரும் நிலையில், கரிகாலனின் மனைவி சத்யா, சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத் தில் சென்றிருக்கிறார். அவர் வீட்டில் இருந்து கிளம்பி, சென்னை விமான நிலையம் போய்ச்சேரும் வரை அவருக்கு பாதுகாப்பாக லோகநாதன் என்கிற காவல்துறை எஸ்.ஐ. சென்றாராம். அதிலும் விமான நிலையத்தில் சத்யாவின் லக்கேஜ்களைத் தானே கரிசனமாய் அந்த காவல்துறை அதிகாரி சுமந்து சென்றிருக்கிறார். விமான நிலையத்தின் அனைத்து செக்-அப்புகளையும் உடனிருந்து முடித்துக்கொடுத்து, அவரே விமானத்தில் வழியனுப்பி வைத்துவிட்டுதான் கிளம்பினாராம். இதைச் சொல்லிச் சொல்லி காவல்துறையினரே தலையில் அடித்துக்கொள்கிறார்கள்.”
"அமலாக்கத்துறையினர் நீர்வளத்துறை அதிகாரிகளையும் துருவித்துருவி விசாரித்திருக் கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, மணல் மாஃபியாக் களை அமலாக்கத்துறை கண்காணித்து வரும் அதே வேளையில் நீர் வளத்துறையில் உள்ள தலைமைப் பொறியாளர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள் என பலரையும் சமீபத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது தலை மை பொறியாளர்கள், பல ரகசியத் தகவல்களை கக்கியிருக்கிறார்கள். குறிப்பாக, மாவட்ட ஆட்சியர்களின் துணையுடன் மணல் விற்பனையில் எப்படியெல்லாம் ஊழல்கள் நடந்தன என்பதையும், ஜி.எஸ்.டி. தொகையைக் கூட கட்டாமல் வரி ஏய்ப்பு நடத்தப்பட்டு வருவதையும் சொன்னவர் கள், மணல் தொழிலதிபர்களான மும்மூர்த்திகள், அதிகாரிகளுக்குக் கொடுத்த லஞ்சப் பட்டியலையும் ஒப்பித்திருக்கிறார்களாம். இதன் அடிப்படையில், 10-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் தீவிரமாக விசாரிக்க அமலாக்கத்துறை முடிவெடுத்திருக்கிறது என்கிறார்கள். ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் ஜெயலலிதா மரணம் விவகாரம் தொடர்பான விவகாரங்களில் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மணல் குவாரி விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிக்கியிருப்பது கோட்டைத் தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே, தலைமைப் பொறியாளர் முத்தையா அமலாக்கத்துறையினரிடம் திங்கட் கிழமை ஆஜராகி வாக்குமூலம் கொடுக்க... சென்னையில் திடீரென்று மத்திய பாதுகாப்பு படையினரின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மணல் குவாரிகள் விவகாரத்தில் மீண்டும் ஒரு அதிரடிக்கு அமலாக்கத்துறையினர் திட்டமிடுவதாக தகவல்கள் கசிந்தன.''”
"அமைச்சர் உதயநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் அதிக கெடுபிடி காட்டுவதாக சர்ச்சை எழுந்திருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, 19ஆம் தேதி ஆமதா பாத்தில் நடந்த இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அமைச்சர் உதயநிதி திட்டமிட்டார். அவருக்காக இண்டோ பசிபிக் எனும் தனி ப்ளைட் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவருடன் அவர் தரப்பைச் சேர்ந்த கார்த்திகேயன், ரதேஷ்ராஜ், ஆகாஸ் பாஸ்கரன், கார்த்திக், ரமேஷ், ஆகியோரும் புறப்படத் தயாரானார்கள். காலை 9 மணிக்கு வர வேண்டிய அந்த விமானம், தாமதமாக 12 மணிக்குத்தான் மீனம்பாக்கம் வந்தது. எனவே, அவருக்காக காத்திருந்த பெரும்பாலான ஊடகத்தினரும், பத்திரிகையாளர்களும் ஏர் போர்ட்டிலிருந்து, பயணம் ரத்தாகி இருக்கலாம் என்று கிளம்பிய நிலையில், 11.30 மணிக்கு ஏர்போர்ட் வந்தார் உதயநிதி. அப்போது அங்கி ருந்த சில புகைப்படக்காரர்கள் அவரைப் படம் பிடித்தபோது, எதற்கு படம் எடுக்கிறீர்கள்? என்று பாதுகாப்பு போலீசார் அவர்களிடம் ஏகத்துக்கும் கெடுபிடி காட்டினார்களாம். இது பத்திரிகை யாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.''”
"திருச்செந்தூர் முருகன் கோவிலில் தரிசனக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதா வதந்தி பரப்பப்பட்டிருப்பதற்கு எதிரா இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மறுப்பு தெரிவிச்சிருக்காரே...''…”
"ஆமாம்பா, பாரிமுனை கந்த கோட்டம் வருகை தந்திருந்த அமைச்சர் சேகர்பாபு, திருச்செந் தூர் முருகன் கோவிலில் கட்ட ணங்கள் உயர்த்தப்பட்டிருப்ப தாகக் கிளம்பிய வதந்திக்கு சுடச்சுட பதிலளித்தார். பா.ஜ.க. வுடன் கூட்டணி வைத்திருந்த அ.தி.மு.க.தான் கடந்த ஆட்சிக் காலத்தில் விஸ்வரூப தரிசனக் கட்டணத்தை 2000 ரூபாயாவும், அபிஷேகக் கட்டணத்தை 3000 ரூபாயாவும் உயர்த்தியது. தற் போதைய நிலையில் பொது மக்களிடம் கருத்துக் கேட்டபின், சிறப்பு தரிசனக் கட்டணம் மட்டும் 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இப்போதும் பொது தரிசனமும், 100 ரூபாய் சிறப்பு தரிசனமும் தொடர்கிறது எனச் சொல்லி வதந்தி கிளப்புபவர்களின் வாயை அடைச்சிருக்கார்.''”
"நானும் ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். வசதியான அ.தி.மு.க. பிரமுகர்கள் யாரைப் பார்த்தாலும், ’"நாடாளுமன்றத் தேர்தலில் சீட் தருகிறேன். அதனால் கட்சிக்கு 20 கோடி ரூபாயை உடனடியாகக் கொடுங்கள். அப்படிக் கொடுத்தால், தேர்தல் நேரத்தில் 50 கோடி ரூபாயாக தேர்தல் செலவுக்கு பணம் திருப்பித் தரப்படும்' என்று எடப்பாடி கேட்கிறாராம். இந்தமுறை அ.தி.மு.க. தனித்து நின்றாலும் கடைசி நேரத்தில் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து நின்றாலும், தேர்தலில் வெற்றிபெற வாய்ப்பு இருக்குமா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அப்படியிருக்க, 50 கோடியாக திருப்பிக் கொடுக்க முடியும் என்றால் எதற்காக, எடப்பாடி இப்போது 20 கோடியை கேட்கிறார்? அதை வைத்து ஏதேனும் ரொட்டேசன் செய்யப்போகிறாரா? என்றெல் லாம் தங்களுக்குள் விவாதிக்கும் சம்பந்தப்பட்ட அ.தி.மு.க. பிரமுகர்கள், எடப்பாடியின் 20 கோடி டார்கெட்டால், அவரைக் கண்டாலே தலைதெறிக்க ஓடு கிறார்களாம்.''’
________________
இறுதிச் சுற்று!
தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த திட்டங்கள் பலவற்றை திங்கட்கிழமை (20-11-2023) துவக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 453.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,272 புதிய குடி யிருப்புகளைத் திறந்து வைத்தார். மேலும், பயனாளிகள் தாமாக வீடு கட் டும் திட்டத்தின் கீழ் 4,680 பயனாளிகளுக்கு 98.28 கோடி மதிப்பீட்டி லான பணி ஆணைகள் மற்றும் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன் னிட்டு, 100 மாற்றுத் திறனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும் வழங்கினார். அதேபோல கூட்டுறவுத் துறை சார்பில் 23.35 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கிடங்குகள், ஏல களங்கள், ஆய்வுக் கூடம், சங்க கட்டடங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
செந்தில்பாலாஜி ஜாமீன் மனுவை திங்களன்று விசாரித்தது உச்சநீதிமன்றம். அவரது மெடிக்கல் ரிப்போர்ட்டுகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை இம்மாதம் 28-க்கு தள்ளிவைத்துள்ளது.
ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (20-11-23) வந்தது. இதனையடுத்து பேசிய நீதிபதிகள், "மூன்று ஆண்டுகளாக கவர்னர் என்ன செய்துகொண்டிருந்தார்? எந்த முடிவும் எடுக்காமல் மசோதாக்களை எப்படி நிலுவையில் அவர் வைத்திருக்க முடியும்? உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பின் மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஏன்? மசோதாக்கள் தொடர்பாக கவர்னர் திருப்பி அனுப்பிய ஆவணங்கள் எங்கே?'' என்றெல்லாம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியதோடு, வழக்கின் விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.
-இளையர்
_______
விளக்கம்
2023, நவம்பர் 18-21 இதழில் “"தமிழர்களை வஞ்சிக்கும் டெண்டர்! -விளையாட்டுத் துறை அமைச்சர் தலையிடுவாரா?'’கட்டுரைக்கு பதிலளித்திருக்கும் அனிதா டெக்ஸ்காட் நிறுவனம், தெலுங்கானா டெண்டரில் அம்மாநில அரசு பொருட் களை வாங்கவில்லை என்பது உண்மையில்லை. அதன் விற்பனை நிலுவைத் தொகை வரை வந்து கொண்டிருப்பதாகவும், டெண்டர் அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்துக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது என்ற தகவல் உண்மையில்லை என விளக்கமளித்துள்ளது. (ஆர்)