ரு பெண்களிடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனையால், கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநர் மூன்று மாதத்திலேயே பணியைத்துறந் திருக்கின்றார். எனினும், பெண் ஓட்டுநரின் முடிவுற்ற பயணத்துக்கு உயிர் கொடுத்திருக்கின்றார் எம்.பி. கனிமொழி.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, காந்திபுரம் முதல் சோமனூர் செல்லும் வி.வி. எனும் தனியார் பேருந்தில் கோவை மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுநராக அனைவரும் மெச்சும் படி பணியைத் துவங்கியிருக் கின்றார் வடவள்ளியை சேர்ந்த மகேஷ், ஹேமா தம்பதியின் மகளான 24 வயது ஷர்மிளா. "பார்மசி டிப்ளமோ படித்துள்ள எனக்கு என்னுடைய தந்தையைப் போல் சிறுவயதில் இருந்தே ஓட்டுநர் தொழில் மீது ஈர்ப்பு இருந்தது. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வந்த நிலையில் தனியார் பேருந்தின் ஓட்டுநராக வாய்ப்பு கிடைத்தது'' என்றார் அவர். பேருந்து இயக்கிய நாள் முதலே பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்துகளையும் பாராட்டுக் களையும் தெரிவித்தனர். இதே வேளையில் இதையறிந்திருந்த தி.மு.க.வின் எம்.பி. கனிமொழி, முந்தைய நாட்களில் டுவிட்டரில் ஷர்மிளாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல், "கோவை வரும் போது அவசியம் சந்திக்கின்றேன்' எனவும் தெரிவித்திருந்தார்.

sharmila

Advertisment

இந்நிலையில், வெள்ளிக்கிழமையன்று சர்தார் வல்லபாய் பட்டேல் கல்லூரி நிகழ்ச்சிக்காக கோவைக்கு வந்த கனிமொழி எம்.பி., முன்னர் கூறியது போல் ஷர்மிளாவின் பேருந்தில் பயணம் செய்ய விருப்பம் தெரிவித்தார். அதனின் தொடர்ச்சியாக காலையில், ஷர்மிளாவை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்துகளைத் தெரிவித்து அந்த பேருந்திலேயே பயணத்தை மேற்கொண்டார் அவர். பயண முடிவில் ஷர்மிளாவிற்கு கைக்கடி காரத்தை பரிசளித்து கட்டியணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். காலையில் இந்த பயணம் நிறைவுபெற்ற நிலையில் மதிய வாக்கில், தான் ராஜினாமா செய்துவிட்டதாகவும், இனி ஆட்டோ ஓட்டிப் பிழைத்துக்கொள்வ தாகவும் ஊடக வெளிச்சத்தில் அறிவித்தார் ஷர்மிளா.

நடந்தது என்ன.?

"கனிமொழி டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். என்னுடன் வேலை பார்க்கும் நடத்துநர் அன்னத்தாய், கனிமொழியை அவமதிக்கும் வகையில் "எத்தனை பேர் வந்தீங்க.? எங்க போறீங்க?' என புண்படும்படி பேசினார். மரியாதை யாக பேசுமாறு கண்டக்டர் பெண்ணிடம் அறிவுறுத்தினேன். அவர் "அப்படித்தான் பேசுவேன்' எனக்கூறினார். மதியம் டூட்டி முடிந்ததும் இது குறித்து முதலாளியிடம் கூறினேன். அவரும் "யார் வந்தாலும் அப் படித்தான் பேசுவோம். நீங்க பிரபலமாவ தற்கு என்ன வேணாலும் செய்வீங்களா..?' எனக்கேட்டார். கனிமொழியை மரியாதைக் குறைவாக பேசியதைப் பற்றி நிர்வாகத் தரப்பில் பேசியதால் என்னை நிறுத்திவிட்டனர். கனிமொழி வருவது தொடர்பாக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்திருந்தேன். ஆனால் நிர்வாகத்தினர் நான் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்'' என செய்தியாளர் களிடம் ssதெரிவித்தார் ஷர்மிளா.

Advertisment

பெண் நடத்துநர் அன்னத்தாயோ, "எனது கடமையைத் தான் செய்தேன். டிக்கெட் கேட்டேன். கனிமொழி எம்.பி.யோ என்னுடைய உதவியாளர்கள் டிக்கெட் எடுத்துவிட்டனர் என்றார். அவர் கூறியது போலவே அவருடைய உதவியாளர் ரூ.120 கொடுத்து 6 பேருக்கு டிக்கெட் எடுத்துவிட்டார். அதன்பின் என்னிடம் கனிமொழி எம்.பி. சாதாரணமாக சிரித்துப் பேசிக் கொண்டு தான் வந்தார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக்கொண்டு ஷர்மிளா தான் என்னிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்'' என்றார் அவர்.

"ஷர்மிளாவை பணியை விட்டு நான் விலகச் சொல்லவில்லை. ஷர்மிளா என்னிடம் பெண் நடத்துநர் தொடர்பாக புகார் அளித்தார். அப் போது "நான் விசாரிக்கிறேன்' என்றேன். பெண் நடத்துநரை வரச் சொல்லியிருந்தேன். ஆனால் ஷர்மிளா வேலையை விட்டு நிற்பதாக தானாக தெரிவித்து சென்றார். மேலும் கனிமொழி எம்.பி. வருவது தொடர்பாக என்னிடம் ஷர்மிளா தெரிவிக்கவில்லை. முன்னமே தெரிந்திருந்தால் இது போன்ற பிரச்சனைகள் வராதவாறு ஏற்பாடு செய்திருப்பேன்'' என்றார் தனியார் பேருந்து உரிமையாளரான துரைக்கண்ணு.

பயணத்தின் போது, பெண் நடத்துநர் கனிமொழி எம்.பி.யிடம் பேருந்து பயணத்திற்கான பயணச் சீட்டு கேட்டதாலேயே ஓட்டுநர் பணியிலிருந்து ஷர்மிளா நீக்கப் பட்டார் எனவும், அரசு வேலைக் காக அடிப்போடுகின்றார் ஷர்மிளா எனவும் வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. இதனையறிந்த கனிமொழியோ, மாற்று வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்த நிலையில், அவருடைய வேண்டு கோளை ஏற்று இடையர்பாளை யத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் தனது 77 எண் பேருந்து (உக்கடம் டூ இடையர்பாளையம்) வழித்தடத்தில் பேருந்து ஓட்டுனராக பணியமர்த்த உடனடியாக தயாராக உள்ளதாக அறிவித்தார்.

"இரு பெண்களிடையே உள்ள ஈகோ பிரச்சனை இது.! நான்கு நாட்களுக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்திருந்தார் நடத்துநர் அன்னத்தாய். அவர் கனிமொழியிடம் கேட்டது உண்மை தான். இது கனிமொழியிடம் அவர் பேசுவதற்காக எடுத்துக்கொண்ட ஒரு யுக்தி. நம்மைப் பார்க்க வந்தவர் அவரிடம் பேசுகிறாரே எனும் சாதாரண ஈகோதான் இப்படி வெடித்திருக்கின்றது. எனினும் மீண்டும் ஷர்மிளாவிற்கு பணி வாங்கித் தந்த கனிமொழியை பாராட்டியே ஆகவேண்டும்'' என்கிறனர் இந்த பிரச்சனையின் பின்புலம் அறிந்தவர்கள்.