தூத்துக்குடி அ.தி.மு.க.வில் கிளம்பியிருக்கும் சர்ச்சை எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் இருக்கிறது. அதனாலேயே, இந்தப் பஞ்சாயத்து கட்சித் தலைமை வரைக்கும் சென்றிருக்கிறது.
தூத்துக்குடி தெற்கு அ.தி.மு.க.வின் மா.செ.வும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதன், ""தூத்துக்குடி நகரின் 60 வார்டுகளில் 42 வார்டு செயலாளர்களான கட்சியின் சீனியர் புள்ளிகளைத் தூக்கிவிட்டு, கட்சிக்குத் தொடர்பில்லாத, கிரிமினல் பின்னணி உள்ளவர்களை அதில் நியமித்திருப்பதுதான் இந்தப் பொருமலுக்குக் காரணம். அம்மா ஜெ காரணம் இல்லாமல் யார் பதவியும் பறிக்க மாட்டார். அவர் இருந்தவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சண்முகநாதனோ மாவட்டத்தில் நானே கட்சி என்ற சர்வாதிகாரப் போக்கிலிருக்கிறார்'' என்று கொதிக்கிறார்கள் ர.ர.க்கள்.
இதுபற்றி விலாவாரியாக நம்மிடம் பேசிய அவர்கள், “""வணிகத்தில் முக்கியமான தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியில், கட்சியின் சீனியர்கள், விசுவாசிகளையே நியமிப்பார்கள். ஆனால், சண்முகநாதனோ, தனக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் சுதாகர் என்பவரை வங்கியின் தலைவர் ஆக்கியிருக்கிறார். சுதாகர் மீளவிட்டான் கூட்டுறவு சொசைட்டியில் பணிபுரியும் அரசு ஊழியர் என்பதோடு, அரசை எதிர்த்தே போராட்டம் நடத்தியவர். கட்சிக்கும் தொடர்பில்லாதவர்.
ஸ்ரீவைகுண்டம
தூத்துக்குடி அ.தி.மு.க.வில் கிளம்பியிருக்கும் சர்ச்சை எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் இருக்கிறது. அதனாலேயே, இந்தப் பஞ்சாயத்து கட்சித் தலைமை வரைக்கும் சென்றிருக்கிறது.
தூத்துக்குடி தெற்கு அ.தி.மு.க.வின் மா.செ.வும், ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சண்முகநாதன், ""தூத்துக்குடி நகரின் 60 வார்டுகளில் 42 வார்டு செயலாளர்களான கட்சியின் சீனியர் புள்ளிகளைத் தூக்கிவிட்டு, கட்சிக்குத் தொடர்பில்லாத, கிரிமினல் பின்னணி உள்ளவர்களை அதில் நியமித்திருப்பதுதான் இந்தப் பொருமலுக்குக் காரணம். அம்மா ஜெ காரணம் இல்லாமல் யார் பதவியும் பறிக்க மாட்டார். அவர் இருந்தவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சண்முகநாதனோ மாவட்டத்தில் நானே கட்சி என்ற சர்வாதிகாரப் போக்கிலிருக்கிறார்'' என்று கொதிக்கிறார்கள் ர.ர.க்கள்.
இதுபற்றி விலாவாரியாக நம்மிடம் பேசிய அவர்கள், “""வணிகத்தில் முக்கியமான தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் பதவியில், கட்சியின் சீனியர்கள், விசுவாசிகளையே நியமிப்பார்கள். ஆனால், சண்முகநாதனோ, தனக்கு ஆதாயம் கிடைக்கும் வகையில் சுதாகர் என்பவரை வங்கியின் தலைவர் ஆக்கியிருக்கிறார். சுதாகர் மீளவிட்டான் கூட்டுறவு சொசைட்டியில் பணிபுரியும் அரசு ஊழியர் என்பதோடு, அரசை எதிர்த்தே போராட்டம் நடத்தியவர். கட்சிக்கும் தொடர்பில்லாதவர்.
ஸ்ரீவைகுண்டம் ஒ.செ.வான ஆறுமுகநயினார் எம்.ஜி.ஆர். காலத்துக் கட்சிக்காரர். மா.செ.சண்முகநாதனுக்கும் சீனியர். அவரது ஒ.செ. பதவியைப் பறித்துவிட்டு, கட்சிக்குத் தொடர்பில்லாத காண்ட்ராக்டர் காசிராஜன் என்பவரை அதில் அமர்த்திவிட்டார். அதேபோல், உடன்குடி ஒ.செ. மகாராஜனைக் கடாசிவிட்டு தனக்குச் சாதகமானவரை பொறுப்பில் வைத்துவிட்டார். மாவட்டம் முழுக்க அறிமுகமான கட்சி சீனியரான செல்லத்துரையின் பொறுப்பைப் பிடுங்கிவிட்டார்.
கோவையில் மிக்சர் வியாபாரம் செய்தபடி, தட்டார்மடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் திருமணவேலுக்கு, மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. கட்சிக்கு சம்மந்தமில்லாத திருமணவேல், தட்டார்மடம் செல்வன் கொலையிலும் தொடர்புடையவர்.
ஆறுமுகநேரி பகுதியின் ராதாகிருஷ்ணன், இரண்டு மாதங்களுக்கு முன்பு மா.செ. சண்முகநாதனைச் சந்தித்து இரண்டரை லட்சம் ரூபாய் நோட்டுகளால் தொடுக்கப் பட்ட மாலையை போட்டிருக்கிறார். விவகாரமான அவருக்கு தூத்துக்குடி தெற்கு அம்மா பேரவை மா.செ. பொறுப்பு கொடுத்திருக்கிறார் அண்ணாச்சி. ராதாகிருஷ் ணனின் தொழிலுக்கு அந்தப் பதவி பயன்படுகிறது. இதேபோல், தூத்துக்குடி நகரில் மசால்பொடி தயாரிப்பு விற்பனையிலிருக்கும் நட்டார் முத்து, பகுதிச் செயலாள ராகிவிட்டார். ச.ம.க.விலிருந்து வந்த பிரபாகரன் மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் மற்றும் வெயிலுமுத்து அதன் இணைச் செயலர். கட்சிப் பக்கமே திரும்பிப் பார்க்காத செரினா பாக்யராஜ், கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர். கட்சியின் சீனியர்கள், விசுவாசிகளை தூக்கி எறிந்துவிட்டு, கட்சிக்கு தொடர்பில்லாத புள்ளிகளை, வெயிட்டான தொகையின் அடிப்படையில் சண்முகநாதன் நியமித்திருக்கிறார்'' என்று பொருமுகிறார்கள் ர.ர.க்கள்.
இது ஒருபுறமிருக்க, மா.செ. சண்முகநாதனின் உதவியாளர் சாம்ராஜும், ந.செ. ஏசாதுரையும் நகரின் வட்டச் செயலாளர்களின் பதவிகளை சகட்டுமேனிக்கு பறித்து, கட்சிக்கு சம்மந்தமில்லாத பலரை நியமித்துள் ளார்கள். குறிப்பாக விஜயன், அன்புலிங்கம், திருமணி, மாரியப்பன், கே.என்.எஸ்., பொன்ராஜ், பெருமாள் உள்ளிட்ட வட்டச் செயலாளர்கள் கட்சியின் முன் னோடிகளாக இருந்தவர்கள். சுயேட்சை யாக போட்டியிட்டால் கூட வெல்லு மளவுக்கு செல்வாக்குள்ளவர்கள்.
இதில் 39வது வார்டு செயலாளராக ஏசாதுரையால் பொறுப்பு கிடைத்த முரளிதாஸ் காந்தி, கஞ்சா பொட்டல விற்பனையில் அமோக பெயரெடுத்தவர். தனது இட்லி கடையில் பொட்டலம் விற்றதோடு, எம்.ஜி.ஆர்., ஜெய லலிதா, அ.தி.மு.க. கொடி படங்களை வரைந்த ஆட்டோவில், தைரியமாக கஞ்சா விற்று போலீஸில் கைதாகி நெகட்டிவ் பிரபலம் பெற்றவர்.
பதவி கொடுப்பதில் நடந்த இதுபோன்ற குதறல்களால், கட்சியில் அதிருப்தியாளர்களின் எண்ணிக்கையே உயர்ந்திருக்கிறது. இதனால், மா.செ. சண்முகநாதனுக்கு எதிரான கொதிப்பாளர்கள் மாவட்டத்தில் தனி அணியாக திரண்டிருக் கிறார்கள். இந்த அணியில் நகரின் எக்ஸ் அமைச்சரும், தற்போது அமைப்புச் செயலாளருமான செல்லப்பாண்டியன், சின்னதுரை, அமிர்தகணேசன், ஜோதி மணி உள்ளிட்டவர்கள், சண்முகநாதன் மீது விசாரணை கோரி தலைமைக் கழகத்திற்கு புகார் அனுப்பியிருக்கிறார்கள்.
பதவி பறிக்கப்பட்ட 5வது வார்டு செயலாளர் திருமணி, ஜெ.வால் நியமிக்கப்பட்டவர். அவரோ, “அம்மா காலத்துல குற்றப்பின்னணி உள்ளவங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்படலை. இதைவிட கொடுமை என்னன்னா, 43வது வார்டுல இறந்து ஒன்றரை வருஷமான சுப்பையாவுக்கு அவைத்தலைவர் பதவி உட்பட, இறந்த 13 பேருக்கு பதவி கொடுத்திருப்பதுதான்'' என்கிறார் வருத்தத்துடன். 21வது வார்டு அன்புலிங்கமோ, ""இந்த மா.செ. வார்டுகள்ல கட்சிய வளர்த்த கட்சிக்காரங்களைத் தூக்கியிருக்காரு. வர்ற தேர்தல்ல பாருங்க மா.செ.வால, தேர்தல் வேலை பார்க்காம ஒதுங்கிருவாங்க'' என்று கொதித்தார்.
மா.செ. சண்முகநாதனுக்கு எதிராக கிளம்பிய அணியின் புகாரில் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில்தான், செல்லப்பாண்டியன், சின்னத்துரை உள்ளிட்ட கட்சியினர் ராமநாதபுரத்தில் கொரோனா ஆய்வு முடித்துக் கிளம்பிய முதல்வர் எடப்பாடியை வழிமறித்தனர். அவரிடம் தூத்துக்குடியில் கட்சி பிளவுபட்டுக் கிடப்பதைச் சொன்னதோடு, கட்சியின் சீனியர்கள் தொண்டர்களின் கொதிப்பையும் எடுத்துச் சொன்னார்கள். மேலும், இந்த நிலையே தொடர்ந்தால் தேர்தலில் கோட்டை விடவேண்டி இருக்கும். கட்சியினர் பெருங்கூட்டமா மாற்றுக்கட்சிக்கு செல்வாங்க’என்று தீவிரத்தை உணர்த்தி, மனு கொடுத்திருக்கிறார்கள். இதன்பிறகே, எடப்பாடியாரும், தூத்துக்குடியில் கட்சி மட்டத்தில் நடந்தவைகளை விசாரிப்பதற்காக கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம், வேலுமணி, தங்கமணி ஆகியாரின் தலைமையில் விசாரணைக் கமிட்டியை அமைத்திருக்கிறார்.
தொடர் முயற் சிக்குப் பிறகு லைனில் கிடைத்த சண்முகநாதனிடம் இந்த விவகாரம் குறித்து விசாரித்தபோது, ""யாரும் ரவுடித்தனம் பண்ணலை, திருமணவேல் விஷயத்தில் சம்பவம் நடந்தது தற்செயலானது. முரளி முன்னமே வட்டச் செயலாளர்தான். ராதாகிருஷ்ணனைக் கட்சியில் சேர்த்ததே செல்லப்பாண்டியன்தான். பதவிக்காகப் பணம் வாங்கலை. அது செல்லப் பாண்டியனோட பழக்கம். பலபேர் அ.ம.ம.மு.க.வுக்குப் போயிட்டாங்க. அதனால அவங்களை பொறுப்பிலிருந்து நீக்கினோம். தலைமைக் கழக ஒப்புதல் பெற்றுத்தான் எல்லாமும் செய்யப்பட்டது. விசாரணைக் கமிட்டியைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது. இது உட்கட்சிப் பிரச்சனை'' என்பதோடு முடித்துக் கொண்டார்.
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தூத்துக்குடி ர.ர.க்கள் பொருமல் எரிமலையின் டெம்பரேச்சரை கட்டுப்படுத்துவாரா எடப்பாடி.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்