ஸ்ரீமதி வழக் கில் முக்கியத் திருப்பமாக பிரபல பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். 11-ஆம் தேதி காலை 11:00 மணிக்கு சென்னை அடையார் பகுதியில் உள்ள தனது வீட்டில் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த சாவித் திரி கண்ணனை நான்கு போலீஸார் சாதாரண உடையில் வந்து அழைத் தார்கள். அவர்களிடம் பேசச்சென்ற சாவித்திரி கண்ணன் கையில் இருந்த செல்போனை பிடுங்கிவிட்டு, தரதரவென முதல் மாடியிலிருந்து கீழே இறக்கி, இருபதடி தூரம் இழுத்துச் சென்றார்கள். அதைப் பார்த்து அதிர்ந்துபோன அவரது மகன் கூடவே சென்றார்.
தெரு முனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் வலுக்கட்டாயமாக சாவித்திரி கண்ணனை ஏற்றியபோது, “"என் அப்பாவை என்ன செய் கிறீர்கள்?''’என கேள்வி கேட்டார் அவரது மகன். “"உன்னையும் பிடிச்சு உள்ளே தள்ளு வோம்'’என அவரது மகனை மிரட்டிய காவல்துறையினர், சாவித்திரி கண்ணனை சாஸ்திரி நகர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றார் கள். அங்கே இருந்த ஒரு உயர்அதிகாரி அந்த வண்டியில் ஏறிக்கொண்டார். வண்டி கிழக்குக் கடற்கரைச் சாலையில் வேகமெடுத்துப் பறந்தது. அந்த வண்டியை பாலவாக் கம் வரை பின் தொடர்ந்த அவரது மகனின் கண்களை மறைக்கும் வகையில் அதிவேகமாக அந்த வண்டி சென்று மறைந்தது.
சாவித்திரி கண்ணனின் மனைவி, தனது கணவர் கைது செய்யப்பட்டதை பத் திரிகையாளர்களுக்கு தெரிவித்தார். அந்த விபரம் தெரிந்தவுடன் முதல்வர் அலுவலகம், காவல்துறை உயர் மட்ட அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என அனைவரையும் தொடர்பு கொண்டார்கள் பத்திரிகையாளர்கள். வேனில் அமர்ந்திருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு பல இடங்களில் இருந்தும் தொலைபேசிகள் வர ஆரம்பித்தன.
அதுவரை பல ‘யூ டியூப்’ சேனல்களின் பேரைச் சொல்லி இவர்கள் எல்லாம் கள்ளக் குறிச்சி சம்பவத்தில் போலீஸ் நடவடிக்கைகளை விமர்சிக்கிறார்கள். இவர்களை எல்லாம் கைது செய்ய வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்த போலீஸார், தொடர்ச்சியாக வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில்சொல்லிய பின் அமைதியானார்கள்.
கள்ளக்குறிச்சி கலவர வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவரும் டி.ஐ.ஜி.யு மான பிரவீன்குமார் அபினவ் உத்தரவின் பேரிலேயே சாவித்திரி கண்ணன் கைது செய்யப் பட்டார். கைதுக்குப் பிறகு அவரைக் கள்ளக் குறிச்சிக்குக் கொண்டு செல்லாமல் திண்டிவனம் பக்கத்தில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்கள்.
அதுவரை அவர் மீது எந்த வழக்கும் போடப்படவில்லை. அங்கு கொண்டு சென்ற பிறகு 153, 153/ஆ, 504, 505, தகவல் தொழில் நுட்பச் சட்டம் 2000 ஆகிய சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வழக்கு போடப்பட்டுள்ளதாக அங்கிருந்த காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி என் பவர் தெரிவித்தார். அத்துடன், சாவித்திரி கண்ணன் நடத்தும் "அறம்'’என்கிற இணையதள பத்திரிகையில் அவர் எழுதிய கட்டுரை ஒன்றை எடுத்து வரிக்கு வரி படித்து விளக்கம் கேட்டார்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் போலீஸார் எடுத்துவரும் நட வடிக்கைகளை மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்தார் சாவித்திரி கண்ணன். ஸ்ரீமதி எழுதி யதாக சொல்லப்படும் தற்கொலைக் கடிதத்தில் இடம்பெற்றுள்ள கையெழுத்து ஸ்ரீமதியின் கையெழுத்து அல்ல என்று அதை ஆராய்ந்த தடயவியல் துறை அதிகாரிகள் கோர்ட்டுக்கு சீலிட்ட கவரில் அறிக்கை கொடுத்திருப்பதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அது எப்படி தெரியும்? என போலீஸார் விசாரித்தார்கள். அதற்குள் கள்ளக்குறிச்சியை சேர்ந்த சுரேஷ்குமார் என்கிற வழக்கறிஞர் ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு வந்துசேர்ந்தார்.
அதன்பிறகு சி.பி.எம். வழக்கறிஞரான கோதண்டராமன் மற்றும் திருஞானசம்பந்தம், ஏ.எல்.ரவி என ஒரு வழக்கறிஞர் படையே ஒலக்கூர் காவல் நிலையத்தில் சாவித்திரி கண்ணனை பார்க்க வந்துசேர்ந்தார்கள். பல தரப்பிலிருந்து வந்த அழுத்தத்தைத் தொடர்ந்து சாவித்திரி கண்ண னிடம், “"உங்களை விசாரணைக்குத்தான் அழைத்து வந்துள்ளோம். வழக்கறிஞரின் உறுதி மொழியின் அடிப்படையில் உங்களை விடுவிக்கிறோம். நாங்கள் விசாரணைக்கு அழைக்கும் போது நீங்கள் வரவேண்டும்''’என்று திருஞானசம்பந்தம் என்கிற வழக்கறிஞரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டு, அன்று மாலை சாவித்திரி கண்ணனை போலீஸார் விடுதலை செய்தனர்.
இது பற்றி சாவித்திரி கண்ணன் கூறுகையில், "என் வீட்டுக்கு வந்த போலீஸார் என்னிடம் எதையும் முறையாக விசாரிக்கவில்லை. என்னை தரதரவென இழுத்துக்கொண்டு நடுத்தெருவில் ஒரு குற்றவாளியை இழுத்துச் செல்வதுபோல û ககளைப் பிடித்து இழுத்துச் சென்றார்கள். எனது குடும்பத்தினரிடமும் பேச விடவில்லை'' என மிகுந்த மன வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
சாவித்திரி கண்ணன் கைதை எதிர்த்து நக்கீரன் போன்ற ஊடகங்கள், மாற்றத்துக்கான ஊடக வியலாளர்கள் மையம் மற்றும் பத்திரிகை யாளர் சங்க அமைப்புக்கள் செய்திகளையும் கண்டனங்களையும் தெரிவித்தன. சமூக ஊடகங்கள் முழுக்க இந்த கைதைப் பற்றி உரத்துப் பேசின. கடைசியில் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார். “
அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் அவரது வீட்டிலேயே வைத்து விசாரித்திருக்கலாம். அவரது வீட்டிலிருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒலக்கூர் காவல் நிலையத்துக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும்’என பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்வி இதுவரை விடை தெரியாத கேள்வியாகவே இருக்கிறது.
இந்நிலையில், பெரியநசலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீமதியின் வீட்டுக்கு கோகுல்ராஜ் கொலை வழக்கில் உண்மைகளை வெளிக்கொண்டு வந்த வழக்கறிஞர் ப.பா.மோகன், கண்ணகி- முருகேசன் படுகொலை வழக்கில் உண்மைகளை வெளிக் கொண்டு வந்த வழக்கறிஞர் ரத்தினம் ஆகியோர் வந்து ஸ்ரீமதி அம்மாவுக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு சென்றி ருக்கிறார்கள். இதற்கிடையே ஸ்ரீமதி மரண மடைந்த அன்று ஒரு பெர்த் டே பார்ட்டி கனியாமூர் சக்தி பள்ளியில் நடந்தது என சொல்லப்பட்டது. அந்த பெர்த் டே பார்ட்டி யாருக்கு என்ற தகவல்கள் வெளியானது. அவர் மெட்ரிக்குலேசன் பள்ளி பிரின்சிபால். அன்றைய தினம் சி.பி.எஸ்.சி. பள்ளியின் பிரின்சிபாலான பாலதண்டாயுதபாணியின் பிறந்தநாள்தான் கொண்டாடப்பட்டது. அவருக்கு ஸ்ரீமதியின் மரணம் நடந்த மறுநாள்தான் பிறந்தநாள். பனிரெண்டாம் தேதி நள்ளிரவு அந்தப் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்கள். அதற்காக கனியாமூர் மற்றும் சின்ன சேலம் பகுதிகளில் உள்ள பேக்கரிகளில் கேக்குகள் வாங்கி இருக்கிறார்கள். இந்த பாலதண்டாயுதபாணியை வழக்கு விசாரணையின் வரம்பிற்குள் இதுவரை போலீஸார் கொண்டுவரவில்லை.
அவர் மட்டுமல்ல, ஸ்ரீமதியின் ஹாஸ்டலில் ஸ்ரீமதியுடன் அவருக்கு பொறுப்பாளராக இருந்த எட்டாம் வகுப்பு ஆசிரியை ஜெபஜோதிப் பிரியாவிடம் ஒரு வாக்குமூலம் மட்டும் வாங்கி விட்டு அனுப்பிவிட்டார்கள். ஜெபஜோதிப் பிரியா, பாலதண்டாயுதபாணி, சாந்தியின் உதவியாளராக இருந்த மாலினி, ரவிக்குமாரின் மகன் சக்தி ஆகியோரை சரியாக விசாரிக்கவில்லை. இவர்களிடம்தான் ஸ்ரீமதியின் மரணம் தொடர்பான மர்மம் புதைந்து கிடக்கின்றது என்கிறார்கள் சி.பி.சி.ஐ.டி. துறையைச் சேர்ந்தவர்கள்.
பாலதண்டாயுதபாணிக்கு பதிமூன்றாம் தேதிதான் பிறந்த நாள் என கல வரத்தின்போது அவரது அறைக் குள் சென்றவர்கள் எடுத்துக்காட்டிய அவரது அடை யாள அட்டையி லேயே தெளிவாகத் தெரிகிறது. இவ் வளவு வெளிப் படையாக வீடியோ காட்சிகளாகவே தெரியும் அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தை ‘அப்படி ஒன்று நடக்கவேயில்லை எனச் சொல்வது ஏன்? என கேள்வி எழுப்புகிறார்கள் ஸ்ரீமதியின் வழக்கறிஞர்கள்.
இதற்கிடையே முதல் போஸ்ட் மார்ட்ட அறிக்கையை ஆய்வுசெய்த சீனியர் வழக்கறிஞர், “ஸ்ரீமதி உடல்ரீதியாக துன் புறுத்தப்பட்டாரா, இல்லையா? என்பதை கன்னித்தன்மை பரிசோதனை செய்யும் சோதனை முறை மூலம்தான் அறிய முடியும். முதல் பிணக்கூராய்வில் அந்த சோதனை செய்யப் பட்டிருக்க வேண்டும். அதை ஏன் முதல் பிணக்கூராய்வை செய்த டாக்டர் செந்தில்குமார் செய்யவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள்