சென்னை பாரிமுனையிலுள்ள காளிகாம்பாள் கோயிலுக்கு வழிபட வந்த பெண்ணை அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த பெண் விஜயா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பாரிமுனையிலுள்ள காளிகாம்பாள் கோவிலுக்கு அடிக்கடி வந்துசெல்வது வழக்கம். அப்படி சென்றுவரும் சூழ்நிலையில் கோவில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமிக்கும் விஜயாவுக்கு நட்பாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஒரு நாள் அவள் வீட்டுக்குச் சென்று, கோவில் தீர்த்தம் என கூறி குடிக்கக் கொடுத்துள்ளார். அதைக் குடித்ததும் விஜயா மயங்கியுள்ளார். நினைவு திரும்பியபோது தான் பா-யல்ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதை உணர்ந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்தப் பெண் கதறவே, அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி சமாதானம் செய்து வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கருக்கலைப்பு செய்துள்ளார் கார்த்திக் முனுசாமி.
அந்த பெண்ணுடன் அவ்வப்போது பழக்கத்தில் இருந்துவந்த கார்த்திக் முனுசாமி, ஒரு நாள் முக்கியமான இடத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, முக்கிய பிரமுகர் ஒருவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அந்தப் பிரமுகருடன் நெருக்கமாக இருக்கச் சொன்னதும், ஆத்திரமடைந்த அந்தப் பெண் அங்கிருந்து கோபத்தில் கிளம்பிவந்துள்ளார். அப்பெண்ணால் விசயங்கள் வெளியில் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் கார்த்திக் மிரட்டல் விடுத்துள்ளார்.
அப்பெண்ணோ, விருகம்பாக்கம் மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத சூழ்நிலையில் சென்னை கமிஷனர் அலுவலகத்திலும் புகார் கொடுக்க, விருகம்பாக்கம் காவல்துறையினர் அர்ச்சகர் கார்த்திக் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல், நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம் செய்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கார்த்திக் முனுசாமியை கைதுசெய்துள்ளனர்.
இந்த கைதுக்குப் பின்னரே பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இது ஒன்றும் கார்த்திக்குக்கு புதிதல்ல… என அந்தக் கோயி-ல் பணிபுரியும் ஊழியர் நம்மிடம் கூறியதையடுத்து விசாரிக்கத் தொடங்கினோம்.
அர்ச்சகர் காளிதாஸ், கார்த்திக் முனுசாமி, அறங்காவலர் மோகன் மூவரும் விஷ்வகர்மா சமுகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்குள் நல்ல அறிமுகமும் நெருக்கமும் உண்டு. இந்த கோவில்களுக்கு வி.ஐ.பி.க்கள் வந்துசெல்லும் போது, தனிப்பட்ட முறையில் இவர்கள் சில வி.ஐ.பி.க்களுக்கு சாமி தரிசனம் செய்துதருவதால் அவர்களுடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுத்திக் கொள்வார்களாம். முன்னாள் முதலமைச்சர் ஜெ.வையே நேரில் சந்திக்கும் அளவுக்கு இவர்களுக்கு செல்வாக்கு உண்டு என்கின்றனர்.
கோவிலுக்கு வருகின்ற சில அழகான பெண்களைக் குறிவைத்து, வி.ஐ.பி.க்களுக்கு சலுகைதருவதுபோல், அம்பாளை நெருக்கமாக தரிசனம் செய்ய வாய்ப்பளிப்பர். காலப்போக்கில் அவர்களை தங்களுடைய இச்சைக்குப் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்படி வந்தவர்தான் நதியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அதேபோல காளிதாஸýக்கு வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கோவிலுக்கு வருகின்ற இளம்பெண்களுடன் கார்த்திக், காளிதாஸ் இருவரும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்வர். அவர்களை அடுத்தகட்ட நகர்வுகளுக்கு கொண்டுபோகும் பொறுப்பு நதியா, வனிதாவுடையது. சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்வதன் மூலம் கிடைக்கும் ஆதாயங்களை நாசுக்காக அந்தப் பெண்களிடம் எடுத்துச்சொல்- மூளைச்சலவை செய்வார்களாம். அதில் பலனில்லையென்றால், அடுத்தகட்ட நகர்வே தீர்த்தம்தானாம்.
இப்படி பல பெண்களை வி.ஐ.பி.களுக்கு சப்ளை செய்துவந்துள்ளனர். இதனால் எதிர்பாராதவிதமாக கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கென்றே தனி மருத்துவரை கைவசம் வைத்துள்ளார்களாம். அரசுராஜ் மற்றும் சிவகாமி இத்தகைய டாக்டர்கள்தான். தற்போது வழக்கு கொடுத்த பெண்ணுக்கும் இவர்கள்தான் கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இதைப்பற்றி வெளியில் சொல்ல நினைக்கும் பெண்களை அச்சுறுத்துவதற்கென சர்வேஸ்வரன் போன்ற அடியாட்களை வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுவது, அதிகாரபலத்தால் விஷயம் வெளியில் வராமல் மூடிமறைப்பது போன்ற வேலையில் ஈடுபடுவார்களாம். தற்போது விஜயா தைரியமாக வெளியில் வந்து பேசியிருக்கிறார்.
கார்த்திக் முனுசாமியின் செல்போன், கணினியை முறையாகச் சோதிப்பதுடன் நதியா, வனிதா போன்றோரையும் விசாரித்தால் நிச்சயம் பல வி.ஐ.பி.க்கள் சிக்குவார்கள். பல பெண்களின் கண்ணீர்க் கதை அம்பலமாகும் என்கிறார்கள்.
பாதிக்கப்பட்ட பெண், தன்னுடன் சமாதானமாகப் போக விரும்புவதாகக் கூறி கார்த்திக் முனிசாமி ஜாமீன் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிபதி அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.