லை வளர்க்கும் கலாஷேத்ராவில், களைகளாக மாறிய பேராசிரியர்கள், மாணவிகளிடம் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பாலியல் ஆதாயத்தை எதிர்பார்த்ததாகவும், பா-யல் தொந்தரவு செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை நிர்வாகத் தரப்பில் மீண்டும் மீண்டும் மறுத்துவந்த நிலையில், முன்னாள் மாணவி மீராகிருஷ்ணன் உள்ளிட்டவர்களின் புகார்களால் கலாஷேத்ராவின் சாயம் கலைந்துபோயிருக்கிறது.

kalashtra

Advertisment

கலாஷேத்ராவில் பாலியல் குற்றம் நடந்திருக்க வாய்ப்புள்ளதாக, கலாஷேத்ராவின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அனிதா ரத்னா, நடன கலைஞர் நித்தியா பிள்ளை, பாடகி சின்மயி ஆகியோர் விவகாரத்தை மூடி மறைக்கும் நிர்வாகத்திற்கு எதிராகக் குரல்கொடுத்தனர். பிரபல கர்நாடக பாடகர் டி.எம். கிருஷ்ணாவும் இந்த விவகாரத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

தற்போது கலாஷேத்ராவின் துணை பேராசிரிய ரான ஹரிபத்மன், சஞ்ஜித்லால், சாய்கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகிய ஆசிரியர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர்களில் ஹரிபத்மனை மகளிர் ஆணையம் ஏப்ரல் 3-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டிருந்த நிலையில் ஹரிபத்மன் தலைமறை வானார். அவரை தனிப்படை போலீசார் தேடிப்பிடித்து கைதுசெய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த முன் னாள் மாணவியும், பேராசிரியர் ஹரிபத்மனின் பாலியல் சீண்டலால் தனது படிப்பையே பாதியில் நிறுத்திவிட்டுச் சென்ற மீராகிருஷ்ணன், "பாதிக்கப்பட்டது நான் மட்டுமல்ல'' என்கிறார். "என்னைப் போல பல மாணவிகளும் படிப்பை பாதியில் விட்டுச் சென்றுள்ள னர். என் எதிரிலே பல மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்கள் நடந்துள்ளது. ஹரிபத்மன் போலவே மேலும் 4 பகுதி நேர ஆசிரியர்கள், பல மாணவிகளை பாலியல்ரீதியாகத் தொந்தரவு செய்துள்ளனர். நடந்ததைப் பேச மாணவிகள் தயங்குவதால், இனி வரும் மாணவியருக்கு இந்த கொடுமைகள் நடக்காமல் இருக்க, நான் சட்டப்படி புகார் கொடுக்கப் போகிறேன்''’என்று கூறினார்.

Advertisment

"மாணவிகளுக்கு மட்டுமல்ல, சில மாணவர்களுக்கும் ஆசிரியர்களால் பாலியல் தொந்தரவு தரப்பட்டுள்ளது. நான் படித்தபோது ஒரு பெண் கொடுத்த பாலியல் புகாரின் மீது அஜிஷ் என்ற நடன ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் இவ்வளவு புகார் எழுந்தும் ஹரிபத்மன் மீது இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக எந்த புகாரும் வரவில்லை என்று கலாஷேத்ரா நிர்வாகம் தெரிவிக்கின்றது. ஆனால் இது முற்றிலும் பொய். கடந்த பிப்ரவரி மாதம் இமெயில் மூலம் நான் மூன்று புகார்களை அனுப்பினேன். அதன்மீது எந்த ஒரு நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்கவில்லை'' என மீரா கிருஷ்ணன் நம்மிடம் தெரிவித்தார்.

கலாஷேத்ராவின் தற்போதைய இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன் ஒரே நாளில் இரவோடு இரவாக கலாஷேத் ராவின் இயக்குநர் ஆனார். ஆனால் இயக்குநராக வர வேண்டிய நரேந்திரன் தவிர்க்கப் பட்டார். ரேவதி ராமச்சந்திரனுக்கு பா.ஜ.க.வுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்கின்றனர் நிர்வாகத்துக்கு நெருக்கமான வர்கள்.

kalakshetra

தேசிய ஊடகங்கள், தேசிய மகளிர் ஆணையம் உள்ளிட்டவற்றிலிருந்து புகார் கிளம்பிய பிறகும் எந்த நட வடிக்கையும் எடுக்கப்படாததை அடுத்து கலாஷேத்ரா மாணவி கள் கடந்த மார்ச் 30-ஆம் தேதி வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தின் உள்ளே உள் ளிருப்புப் போராட்டத்தைத் துவங்கினர். "நீதி வேண்டும்' என்ற கோஷத்துடன் பதாகை களை ஏந்திப் போராடினர். சில மாணவிகள் சமூக வலைத் தளத்தில் போராட்டம் பற்றிப் பதிவிட்டதும் மீடியாக்கள் குவிந்தன. முதலில் மீடியாக்களை உள்ளே அனுமதிக்கவில்லை. பிறகு நிருபர்களின் வேண்டு தலை ஏற்று உள்ளே அனுமதித்தனர். ஒரு கட்டத்தில் இயக்குனர் ரேவதி ராமச்சந்திர னின் கார் போராட்டக் காரர்களால் சிறைபிடிக்கப்பட் டது. இதிலிருந்து தப்பிக்க மயக்கம் போட்டதைப் போல அவர் நடிக்க, போலீசார் அவரை மீட்டு அனுப்பி வைத்தனர்.

போலீசார் தரப் பிலும் நிர்வாகத் தரப் பிலும் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத் தினர். மாணவிகள் தரப்பில், சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் தொடரும் என்று அறிவித்தனர். நிலைமை யைச் சமாளிக்க கல்லூரி நிர்வாகம் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது. உடனடியாக கல்லூரி விடுதியை காலி செய்து செல்லும்படி நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது மாணவிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 90% மாணவிகள் வெளியூரிலிருந்தும் வெளிமாநிலத்திலிருந்தும் வந்து படிப்பவர்கள். அதனால் உடனடியாக எப்படி செல்லமுடியும்? என்று கேள்வியெழுப்பினர்

இந்த நிலையில் போலீசார் வந்து சமாதானம் செய்தனர். பாலியல் தொந்தரவுக்குக் காரணமான ஆசிரியர்கள் இனி மாணவியருக்கு பாடம் எடுக்கக்கூடாது என்று மாணவிகள் கோரிக்கை வைத்தனர். எனினும் அதே நிலை நீடித்ததால், மார்ச் 31ஆம் தேதி இரண்டாவது நாளாக மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் பற்றி கேள்விப்பட்ட மாணவிகளின் பெற்றோரும் அங்கு வந்து குவிந்தனர். இந்த நிலையில் மாநில மகளிர் ஆணையத் தலைவி குமாரி 12 மாணவிகளிடம் நேரிலும் ஐந்து மாணவிகளை ஸ்கைப் மூலமும் விசாரணை நடத்தினார். விசாரணையின் பின், "அரசிடம் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பல ஆண்டுகளாக இங்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்து வந் தது தெரிகிறது''’என்று தெரிவித்துள்ளார்.

kalashstra

ஆரம்பம் முதல் குற்றச்சாட்டை மறுத்து வந்த கலாஷேத்ரா நிர்வாகம், விஷயம் கைமீறிப் போனபின்பும் மாணவிகளை அழைத்து, "சம்பந்தப்பட்ட பேரா சிரியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப் போம். பாரம்பரியமிக்க இந்த கல்வி நிறுவனத்தின் பெயருக்கு ssகளங்கம் ஏற்படாத வகையில் மாண வர்கள் நடந்துகொள்ள வேண்டும். இதை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்'’என்று அதிகாரத் தோரணையிலே நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போராட்டக் களத்தை ஒருங்கிணைத்த மாணவி சக்தியிடம் பேசினோம். “"இது தொடர்பாக எது வும் பேசக்கூடாது என்று எங்க ளுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளனர். தற்போது விசாரணை நடந்து வருவதால் அது முடிந்த பின் நாங்களே பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறோம்''’ என்று தொடர்பைத் துண்டித்தார்.

இந்நிலையில் கலாஷேத்ராவின் இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், 03-04-2023 திங்கள் கிழமை காலை காவல்துறையின் விசாரணையில் ஆஜராகி, கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார். இதையடுத்து விசாரணை மேலும் தீவிரமடைந்துள்ளது.

அரசைப் பொறுத்தவரை இந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, "குற்றச்சாட்டு உறுதியானால் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாணவர் சங்கம், மாதர் சங்கம் பங்குபெற திருவான்மியூர் சந்திப்பில் போராட்டம் நடத்தினர்.

களைகள் பிடுங்கப்பட்டு கலைகள் மட்டும் வளர்க்குமிடமாக கலாஷேத்ரா மாறவேண்டும் என் பதே அங்கு பயிலும் மாணவிகளின் எதிர்பார்ப்பு.