"ஹலோ தலைவரே, தலைமறைவாக இருக்கும் போலி சாமியார் நித்யானந்தா பற்றி பல்வேறு செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துது.''”

"ஆமாம்பா, நாமும் அதைப் பற்றிப் பேசியிருக்கோம். அவருடைய உடல்நிலை குறித்து பரபரப்பு தகவல்கள் வந்துக் கிட்டிருந்த நிலையில், நித்யானந்தா கோமாவில் இருக்காருன்னு செய்தி வருதே?''”

nithy

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, நித்திக்கு நுரையீரல் பிரச்சினை ஏற்கனவே இருந்திருக்கிறது. அதோடு அவர் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வயாக்ரா வகை மாத்திரைகளை அதிகம் எடுத்துக்கொண்டதால், அவரது கிட்னியும் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டதாம். அதனால் அவர் இப்போது நினைவிழந்த நிலையில் இருப்பதாக அவர் தரப்பில் இருந்தே செய்திகள் கசிகிறது. இதற்கிடையே நித்திக்கு மருத்துவச் சிகிச்சை கொடுக்க, அவரை இந்தியாவிற்குள் அனுமதிக்குமாறு, அவரது சீடர்கள் தரப்பு ஒன்றிய, உள் துறை அமைச்சர் அமித்ஷாவை அணுகியிருக்கிறது. ஆனால் அமித்ஷா வோ, புலனாய்வு அமைப்புகள் நித்தியைத் தேடிவருவதால், அவரை சிகிச்சைக்காக இங்கே அனுமதிக்க முடியாது என்று கைவிரித்து விட்டாராம்.''”

"நித்தி சமாதி நிலையில் இருக்கிறார்னு அவரது பிரதான சிஷ்யை ரஞ்சிதா செய்தி வெளி யிட்டிருக்கிறாரே?''”

"இது தொடர்பாக புலனாய்வு அமைப்புகளுக்குக் கிடைத்த செய்தி என்னவென்றால், நித்தி உடல் நலம் மோசமடைந்து வருவதை உணர்ந்து, தன்னால் இனி பிழைக்க முடியாது என்று உணர்ந்து, தனது சொத்துக்கள் குறித்து அவர் உயில் எழுதி வைத் திருக்கிறார் என்ற செய்தி அவர் களுக்குக் கிடைத்திருக்கிறதாம். இந்த நிலையில், நித்தியின் அம்மாவும் தம்பியும் சொத்து விவகாரத்தில் ரஞ்சிதாவுடன் மோதியதாகவும் தெரிகிறது. இதில் மிகவும் முக்கியமான தகவல் என்னவென்றால், நித்தியின் சொத்துக்கள் மற்றும் ஆன்மீக பீடத் தைக் கைப்பற்றும் ஆசையில் அவரது பிரதான சிஷ்யையான நடிகை ரஞ்சிதாவுக்கும் வெளிநாட்டு -உள்நாட்டு சிஷ்யைகளுக்கும் கடும் போட்டி நடப்பதாகவும், இந்த அதிகாரப் போட்டியில்தான் ஸ்லோ பாய்சன் வகை மருந்தை நித்திக்கு கொடுத்து, அவரை இண்ட்டியூஸ்டு கோமா என்கிற நிலைக்கு கொண்டுபோய்விட்டதாகவும் செய்தி வருது.''”

"ஓ...''”

"குறிப்பிட்ட காலம்வரை இதே நிலையில் நித்தியை வைத்திருந்து, பின்னர் அவர் மரணத்தை அறிவிப்பதுதான் சீனியர் சிஷ்யை உள்பட எல்லாருடைய திட்டமும்னு அதிரவைக்கிறது புலனாய்வுத் தரப்பு. ஏற்கனவே உலகளவில் புகழ்பெற்ற இந்தியாவின் ஓஷோ ரஜனீஷ் சாமியார் திடீர்னு மரணமடைந்தார். இப்ப தனி நாடுன்னு சொல்லி உலகத்தையே அதிரவைத்த நித்தியோட நிலையும் இப்படி இருப்பதில் ஒரு சில நாடுகளோட கைங்கர்யமும் சேர்ந்திருக்கும்னு தகவல் வருது. முழு விவரங்களுக்காக வெயிட்டிங்.''”

"அது சரிப்பா, அரசின் மெடிக்கல் கார்ப்ப ரேசன் தொடர்பான சர்ச்சை கிளம்பி இருக்குதே?''

"ஆமாங்க தலைவரே, குழந்தைகளுக்கு சத்துப் பொருட்கள் வாங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடந்திருக்கிற செய்தி, நம் கவனத்துக்கு ஆதாரங்களோடு வந்திருக்கிறது. இப்போது தமிழக அரசுக்கு இருக்கும் நிதிப் பற்றாக்குறைக்கு நடுவே, குழந்தைகளுக்கு ’நியூட்ரீஷியன் ஹெல்த் கிட்’ என்ற பெயரில் சத்துப் பொருட்கள் அடங்கிய பேக்கை வழங்க, ரூபாய் 450 கோடி மதிப்புள்ள டெண்டரை, கடந்த 10-2-2022 அன்று தமிழக அரசின் மெடிக்கல் கார்ப்பரேசன் வெளியிட்டிருக் கிறது. இந்த சத்துப்பொருட்களை அவசரமாக வாங்கவேண்டிய தேவை இல்லாத போதும், கொள்முதலுக்கான டெண்டர் விடப்பட, அதில் திருப்பூரைச் சேர்ந்த அனிதா, பாலாஜி, வைசாக், என்.சி.சி.எஃப், அப்பல்லோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் கலந்துகொண்டன. கடைசியில் இந்த காண்ட்ராக்ட் திருப்பூர் அனிதா நிறுவனத்துக்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே பொங்கல் பரிசுப் பொருட்களை சப்ளை செய்ததில் ஏகப்பட்ட முறைகேடுகளை நடத்திய நிறுவனம். இதன் மீது விசாரணை நடந்திருக்கும் நிலையில் இதற்கே மறுபடியும் டெண்டர் கொடுக் கப்பட்டிருப்பது பலரையும் அதிர வைத்திருக்கிறது. இதற்குக் காரணம், உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர், இந்த நிறுவனத்தில் சைலண்ட் பார்ட்ன ராக இருப்பதால்தான் என்கிறார்கள்.''”

"அ.தி.மு.க.வில் அதிருப்தியில் உள்ள மாஜி மந்திரி ஒருவர் உள்பட சீனியர்கள் பலரும் சசிகலாவுக்குத் தூது விடுறாங்களாமே?''”

sasi

Advertisment

"ஆமாங்க தலைவரே, 10-ஆம் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில், அ.தி.மு.க. தனக்கு வெற்றி வாய்ப்பு உள்ள இரண்டு இடங்களுக்கு, மாஜி மந்திரி சி.வி.சண்முகத்தையும் முதுகுளத்தூர் தர்மரையும் வேட்பாளர்களாக அறிவித்து, வேட்பு மனுவையும் தாக்கல் செய்திருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க.வில் ராஜ்யசபா வாய்ப்பு கிடைக்காத சிலர் கடும் அதிருப்தியில் இருக்காங்க. இதையறிந்த சசிகலா தரப்பு, அவர்களைத் தொடர்புகொண்டு தங்கள் பக்கம் இழுக்கப் பேசி வருகிறது. அவர்களில் முதற்கட்டமாக அ.தி.மு.க.வின் சீனியரும் மாஜி மந்திரியுமான ஒருவர், சசிகலா அணியில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்திருக் கிறாராம். அப்படி வரும் அவரைத் தன் அரசியல் ஆலோசகராக சசிகலா நியமிக்கப்போகிறார் என்கிறார்கள்.''”

"ஜனாதிபதி தேர்தல் குறித்த பரபரப்பு ஆரம்பிச்சிடுச்சே?''”

vv

"உண்மைதாங்க தலைவரே, இப்ப இருக்கும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் பதவிக் காலம் முடிவடைய இருப்பதால் ஜூலைக் குள் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் மோடியின் ஒன்றிய அரசு இருக்கிறது. இந்த நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தைச் சந்தித்திருக்கிறார் பிரதமர் மோடி. அப் போது, மீண்டும் அவருக்கு வாய்ப்பளிக்க இயலவில்லை என்று மோடி அவரிடமே விவரித்ததாக டெல்லித் தகவல்கள் சொல்கின்றன. இந்த நிலையில், அடுத்த குடியரசு தலைவராகும் முயற்சியில் துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு இறங்கியிருந்தாரு. அவருக்கும் வாய்ப்பு இல்லை என்று பா.ஜ.க. தரப்பு சொல்லிவிட்டதாம். அதனால் வெங்கய்ய அப்செட்டில் இருக்கிறாராம்.''”

"அப்போ டெல்லியின் ஜனாதிபதி வேட்பாளர் யாராம்?''”

"இதுகுறித்து டெல்லித் தரப்பிலேயே நான் விசாரிச்சேங்க தலைவரே. இந்த முறை பழங்குடியினர் சமூகத்தில் இருந்து ஒருவரை ஜனாதிபதியாக உட்காரவைக்க நினைக்கிறார் மோடின்னு ஒரு தரப்பு சொல்லுது. குறிப்பாக அந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் பிரமுகரையும் 2 ஆண் பிரமுகர்களையும் பரிசீலனைப் பட்டியலில் அவர் வைத்திருக்கிறாராம். இவர்களில் ஒருவர் குஜராத்காரர் என்றும், இன்னொருவர் ஜார்கண்ட் என்றும், மற்றும் ஒருவர் சட்டீஸ்கர் என்றும் சொல்கிறார்கள். இந்த மூவரில் ஒருவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியாம். இந்த மூவரிலிருந்து ஒருவர் தேர்ந்தெடுக்கப்படலாம்னு அந்தத் தரப்பு சொல்றாங்க. இன்னொரு தரப்போ, முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஒருவரையே ஜனாதிபதியாக உட்காரவைத்து, தன்னை மதத்துவேசம் இல்லாத ஆளாகக் காட்டிக்கொள்ள மோடி திட்டமிடுகிறார் என்றும், அதனால் கேரள கவர்னராக இருக்கும் ஆரிஃப் முகமதுகானுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் சொல்லி, பெண்டுலம் மாதிரி அல்லாட வைக்கிறாங்க.''”

"ஆம் ஆத்மியின் இமேஜ் உயர்வதை ஒன்றிய பா.ஜ.க. அரசால் பொறுத்துக்க முடியலையே?''”

rr

"உண்மைதாங்க தலைவரே... ஆம் ஆத்மி ஆள்கிற பஞ்சாபில், முதல்வராக இருப்பவர் பகவந்த் மான். இவர், ஊழல் புகாரில் சிக்கிய தனது அமைச்சரவை சகாவான விஜய் சிங்லாவின் பதவியைப் பறித்தார். அதோடு அவரை கைது செய்யவும் உத்தரவிட்டார். இதனால் ஆம் ஆத்மி யின் செல்வாக்கும் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் இமேஜும் கிடுகிடுவென உயர்ந்தது. இதைப் பார்த்த ஒன்றிய மோடி அரசு, டெல்லி மாநில சுகாதார அமைச்சரான இருக்கும் ஆம் ஆத்மியைச் சேர்ந்த சத்யேந்தர் ஜெயினை, ஹவாலா குற்றச் சாட்டில் அமலாக்கத் துறைமூலம் அதி ரடியாகக் கைது செய்திருக்கிறது. கெஜ்ரிவா லின் மனசாட்சின்னு வர்ணிக்கப்படும் இந்த சத்யேந்தர் ஜெயினையே கைது செய்ததன் மூலம், கிடுகிடுன்னு உயர்ந்த கெஜ்ரிவாலின் இமேஜைத் தட தடன்னு சரிய வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கு மோடி தரப்பு.''”

"நானும் எனக்குக் கிடைச்ச ஒரு தகவலைச் சொல்றேன். தாம்பரம் மாநகர காவல் ஆணையரான ரவி ஐ.பி.எஸ்.ஸின் பதவிக் காலம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. மேலும் ஓராண்டுக் காலம் பணி நீட்டிப்பு பெற அவர் தரப்பு முயற்சித்தது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெற வில்லை என்கிறார்கள். ரவியின் இடத்துக்கு யார் வரப்போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோரிடம், தாம்பரம் காவல் ஆணையர் பொறுப்பு கூடுத லாக ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.''”