ஜெய்பீம் பாணி சித்ரவதை! புதுச்சேரி போலீஸ் அராஜகம்!

jai

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அரசு புறம்போக்கு இடங்களிலும், ஏரி, குளக்கரை பகுதிகளிலும் குடிசை போட்டு வாழ்ந்துகொண்டு, அப்பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் பழங்குடி இருளர் இன மக்கள். இவர்கள் மீது அவ்வப்போது திருட்டு வழக்குகளைப் பதிவுசெய்து, காவல் நிலையத்தில் அடித்து உதைத்து சித்ரவதை செய்து சிறையிலடைப்பது வாடிக்கையாகிவருகிறது. இம்மக்கள்மீது அதுபோன்ற கொடுமையை புதுச்சேரி காட்டேரிகுப்பம் காவல் நிலைய போலீசார், சில தினங்களுக்குமுன் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களைச் சந்தித்தோம். அய்யனார் என்கிற அய்யப்பன் மனைவி கற்பகம் நம்மிடம்,

jjjai

"வானூர் அருகே உள்ள கலிங்க மலை கிராமத்திலுள்ள புறம் போக்கு இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ராசாத்தி, கார்த்திகா, ஸ்வேதா, என மூன்று பெண் பிள் ளைகள் அருணாச்சலம், சந்தோஷ், வெங்கடேசன், பூமிநாதன், ,சிவகார்த்திகேயன் என 5 ஆண் பிள்ளைகள். இதில் மூத்த மகள் ராசாத்திக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டோம். கே. வி.குப்பம் வெங்கடேசன் என்பவ ரின் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறோம்.

கடந்த 26.2.2023 அன்று காலையில், காட்டேரிகுப்பம் போலீ சார், எனது கணவர் அய்யப்பனை யும், எங்கள் உறவினர்கள் கட்டப் பன் என்கிற கன்னியப்பன், பூனை என்கிற செங்கேணி, செங்கல் சூளை சின்ன ஓனர் ரமேஷ், மண்டகப் பட்டு சங்கர், எனது மகன் அரு ணாச்சலம் ஆகியோரை, விசா ரணை என்ற பெயரில் ஜீப்பில் கூட் டிச் சென்றனர். காரணம் கேட்டா லும் சொல்லவில்லை. அன்று இரவு ஒரு மணி அளவில் செல்லிப்பட்டு பகுதியில் எனது தங்கை ஜெய லட்சுமியின் குடிசைப்

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் அரசு புறம்போக்கு இடங்களிலும், ஏரி, குளக்கரை பகுதிகளிலும் குடிசை போட்டு வாழ்ந்துகொண்டு, அப்பகுதியில் கிடைக்கும் கூலி வேலைகளைச் செய்து தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார்கள் பழங்குடி இருளர் இன மக்கள். இவர்கள் மீது அவ்வப்போது திருட்டு வழக்குகளைப் பதிவுசெய்து, காவல் நிலையத்தில் அடித்து உதைத்து சித்ரவதை செய்து சிறையிலடைப்பது வாடிக்கையாகிவருகிறது. இம்மக்கள்மீது அதுபோன்ற கொடுமையை புதுச்சேரி காட்டேரிகுப்பம் காவல் நிலைய போலீசார், சில தினங்களுக்குமுன் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட இருளர் இன மக்களைச் சந்தித்தோம். அய்யனார் என்கிற அய்யப்பன் மனைவி கற்பகம் நம்மிடம்,

jjjai

"வானூர் அருகே உள்ள கலிங்க மலை கிராமத்திலுள்ள புறம் போக்கு இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு ராசாத்தி, கார்த்திகா, ஸ்வேதா, என மூன்று பெண் பிள் ளைகள் அருணாச்சலம், சந்தோஷ், வெங்கடேசன், பூமிநாதன், ,சிவகார்த்திகேயன் என 5 ஆண் பிள்ளைகள். இதில் மூத்த மகள் ராசாத்திக்கு திருமணம் செய்து கொடுத்து விட்டோம். கே. வி.குப்பம் வெங்கடேசன் என்பவ ரின் செங்கல் சூளையில் தங்கி வேலை செய்து வருகிறோம்.

கடந்த 26.2.2023 அன்று காலையில், காட்டேரிகுப்பம் போலீ சார், எனது கணவர் அய்யப்பனை யும், எங்கள் உறவினர்கள் கட்டப் பன் என்கிற கன்னியப்பன், பூனை என்கிற செங்கேணி, செங்கல் சூளை சின்ன ஓனர் ரமேஷ், மண்டகப் பட்டு சங்கர், எனது மகன் அரு ணாச்சலம் ஆகியோரை, விசா ரணை என்ற பெயரில் ஜீப்பில் கூட் டிச் சென்றனர். காரணம் கேட்டா லும் சொல்லவில்லை. அன்று இரவு ஒரு மணி அளவில் செல்லிப்பட்டு பகுதியில் எனது தங்கை ஜெய லட்சுமியின் குடிசைப் பகுதிக்கு போலீசாருடன் சென்ற காட்டேரி குப்பம் காவல் உதவி ஆய்வாளர் சரண்யா, "உனது அக்கா கற்பகம், கணவர் அய்யனார் உன்னிடம் கொடுத்த ஐந்து பவுன் நகையைக் கொடு' என்று ஜெயலட்சுமியை கன்னத்தில் அறைந்துள்ளார். "அப் படி எதுவும் நகை கொடுக்கவில்லை' என்று மன்றாடியபடி மயங்கி விழுந்தார். பதறிப்போய், "ஏன் இப்படி எங்க அம்மாவை அடிக்கி றீங்க?' என்று பிள்ளைகள் கேட்க, அவர்களையும் போலீசார் கடுமை யாகத் தாக்கியுள்ளனர். அதன்பின் னர்தான், எனது கணவர் மற்றும் உறவினர்கள் மீது பொய்யான திருட்டு வழக்குகளை சுமத்தி, விசாரணை என்ற பெயரில் அடித்து சித்ரவதை செய்வது தெரிய வந்தது. அதேபோல், புதுச்சேரி, புதுச்சேரியை ஒட்டிய தமிழகப் பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் பதிவான பழைய திருட்டு கேஸ்களில் இவங்க எல்லாரையும் சிறையில் அடைக்கப்போறாங்கன்னு தெரியவந்துச்சு.

ffஉடனே எங்கள் பழங்குடியினர் சங்கத்தின் பொறுப்பாளரான துர்கா என்பவருக்கு தகவல் கொடுத்தோம். அவரது வழிகாட்டுதலின் பேரில், நானும் எனது தங்கை ஜெயலட்சுமியும் திண்டி வனம் சென்று, எங்கள் பழங்குடி இருளர் பாது காப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரி யர் ஐயா பிரபா கல்விமணி அவர்களை சந்தித்து முறையிட்டோம். அவர் வழிகாட்டுதல்படி, புதுச்சேரி- தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட, மாநில அளவிலான பெரிய அதிகாரிகளுக்கு புகார் அனுப்பியுள்ளோம். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காட்டேரி குப்பம், மங்களம், வில்லியனூர் காவல் நிலையங்கள், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்டமங்கலம், மயிலம் ஆகிய காவல் நிலையங்களில் உள்ள திருட்டு வழக்குகளில் கைது செய்திருப்பது தொடர்பாகவும், எங்கள் இன மக்கள் மீதான தாக்குதல் தொடர்பாகவும் சி.பி.ஐ. விசாரணை வேண்டும்னு புகார் அனுப்பியுள்ளோம்'' என்றார்.

போலீசாரின் சித்ரவதைகளை சிறையில் நேரடியாக அனுபவித்த அப்புவிடம் கேட்டபோது, "நான் எனது உறவினர் குடும்பத்தினருடன் ஐவேலி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் முன்பணமாகப் பெற்றுக்கொண்டு, செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறேன். கடந்த 25.2.2023 அன்று இரவில், நானும் எனது மாமா செங்கேணி, சிறுவன் சந்திரன் ஆகிய மூவ ரும் வேலை முடித்து குடிசைக்குத் திரும்பிக்கொண் டிருந்தோம். அப்போது இரண்டு போலீசார் வழி மறித்து எங்களிடம் விசாரித்தவர்கள், செல்போனில் தகவல் கொடுத்த அடுத்த சில நிமிடங்களில் நான்கு போலீசார் வர, எங்களைக் கன்னத்தில் அறைந்து, சிறுவன் சந்திரனை மட்டும் விட்டுவிட்டு எங்கள் இருவரையும் காட்டேரிகுப்பம் காவல் நிலையத் திற்கு கொண்டுசென்றனர். எங்கள் உடைகளைக் கழட்டிவிட்டு ஜட்டியுடன் போட்டோ எடுத்தனர். பின்னர் லாக்கப் அருகில் கிடந்த மின்சார வயர் களை எங்கள் கழுத்தில் மாட்டி போட்டோ எடுத்தார் கள். பிறகு எங்கள் இருவரையும் தனித்தனி அறை யில் அடைத்து வைத்து காலை நீட்டச் சொல்லி அதில் ஏறி நின்று லத்தியால் பாதங்களில் அடித்து இரவு முழுவதும் சித்ரவதை செய்தார்கள். காலை யில் போலீஸ் ஜீப்பில் திருக்கனூர் அழைத்துச் சென்று என் குடும்பச் செலவுக்காக அடகுக் கடையில் அடகு வைத்திருந்த என்னுடைய மனைவியின் வெள்ளிக் கொலுசு மற்றும் அத்தை அடகு வைத்தி ருந்த நகைகளைக் கடைக்காரரை மிரட்டி வாங்கிக் கொண்டனர். எங்களுடன் செங்கல் சூளையில் வேலைசெய்த அய்யப்பன், செங்கேணி, கட்டப்பன், சங்கர் ஆகியோரையும் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து லாக்கப்பில் அடைத்தனர்.

சிறிதுநேரத்தில் வந்த பெண் போலீஸ் அதி காரி "மோட்டார் மின்சார வயர்களைத் திருடினீர் களா?' என்று மிரட்டினார். நாங்கள் செங்கல்சூளை யில் வேலை செய்வதாகவும், திருடவில்லை யென்றும் சொன்னதும், "அடித்து உதை யுங்கள்... அப்போதுதான் ஒப்புக்கொள் வார்!' என்று ஆணையிட, எங்களை கடப் பாரையால் அடித்தனர். மிளகாயைக் கசக்கி கண்களிலும், முகத்திலும் தேய்த் தார்கள். கையில் குண்டூசியால் குத்தினார் கள். இரு கால்களையும் விரித்துப்பிடித்து பின்புறத்தில் அடித்தார்கள். சித்ரவதை யை நிறுத்த வேண்டுமென்றால் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னார்கள். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டோம். மூன்று நாட்களுக்குப் பிறகு காட்டேரிகுப்பம் அரசு மருத் துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, செங்கல் சூளையில் வேலைபார்த்தபோது காயம்பட்டதாகச் சொல்லவேண்டுமென மிரட்டினார்கள். சிகிச்சைக் குப் பிறகு நீதிமன்றத்தில் நிறுத்தியபோதும், அவர்கள் மிரட்டியதற்குப் பயந்து செங்கல்சூளை தீ விபத்தென்றும், திருடியது நாங்கள் தானென்றும் நீதிபதியிடம் கூறினோம். அதன்பின் எங்கள் 7 பேரையும் சிறையிலடைத்தனர். கடலூரைச் சேர்ந்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தைச் சேர்ந்த கடலூர் பாபு, எங்களை நிபந்தனை ஜாமீனில் எடுத்தார். எங்களையும், எங்களது உறவினர்களையும் பொய் வழக்கு போட்டு சித்ரவதை செய்த காட்டேரிகுப்பம் காவல் நிலைய பெண் போலீஸ் அதிகாரி உட்பட அனைவர் மீதும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நீதி கிடைக்கச்செய்ய தமிழக-புதுச்சேரி அரசுகள் முன் வரவேண்டும்'' என்றார்.

"எங்கள் சூளை முதலாளி வெங்கடேசனை மயிலம் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று, செங்கல் சூளையில் வேலை செய்யும் இருளர் இனத்தைச் சேர்ந்தவர்கள், 10 பவுன் நகை, இரண்டு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவந்து உன்னிடம் கொடுத்துள்ள தாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் என்று சொல்லி மிரட்ட, அவர்கள் அப்படியெல்லாம் திருடுபவர்கள் இல்லையென்றும், நான்தான் முன்பணமாக ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்துள்ளேன் என்றும் கூறியுள்ளார். அவரிடம், இனி இருளர் இனத்தவர்களை வேலைக்கு சேர்க்கக்கூடாதென எழுதி வாங்கி யுள்ளனர். எங்களை பிழைக்கவிடாமல் செய்தால் நாங்கள் வாழ்வதா? சாவதா?'' என்கிறார் கன்னி யப்பன்.

இதுகுறித்து பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பிரபா கல்விமணி கூறுகையில், "புதுச்சேரி -தமிழக போலீசார் அணிந்திருக்கும் உடையில் மட்டுமே சிறு மாறுபாடு இருக்கும். மற்றபடி போலீசாரின் குணங்கள் ஒரே மாதிரிதான். அத்தியூர் விஜயா என்ற இருளர் இனப் பெண்ணை திருட்டு வழக்கு சம்பந்தமாக விசாரணை செய்யச் சென்ற புதுச்சேரி போலீசார், அந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததோடு, கொடும் சித்ரவதைகளைச் செய்தார்கள். இவ்வழக்கில் நீதிமன்றம் தண்டனை வழங்கியது. அப்படியிருந்தும் போலீசாரின் அத்துமீறல்களும், சித்ரவதைகளும் தொடர்ந்தபடியே உள்ளது. இதற்கு எதிராக நீண்ட காலமாகப் போராட்டங்களை அரசியல் கட்சிகள், பொதுநல இயக்கங்களோடு இணைந்து நடத்திக் கொண்டுதான் இருக்கிறோம். தற்போது கைது செய்யப்பட்டு பொய்வழக்கு போடப்பட்டவர் களுக்கு நீதி வேண்டுமென்று போராட்டம் நடத்தினோம். இரு மாநிலங்களைச்சேர்ந்த போலீசாரும் இதில் நேர்மையான விசாரணையை நடத்தமாட்டார்கள். எனவேதான் சி.பி.ஐ. விசாரணையைக் கோருகிறோம்'' என்றார். இருளர் இன மக்களின் வாழ்வின் துயர இருள் நீக்க இரு மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.

nkn190423
இதையும் படியுங்கள்
Subscribe