மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், சிற்றின்ப வியாபாரத்தில் மும்முரம் காட்டும் மசாஜ் கிளப்புகளால் இளைஞர்களின் வாழ்க்கை பாழாகி வருகிறது என்ற புகார் நம் கவனத்துக்கு வர, விசாரணையில் இறங்கினோம்.
மசாஜ் சென்டரால் ஏற்பட்ட பாதிப்பை நம்மிடம் மனம்திறந்து பகிர்ந்துகொண்ட ராகுல் (பெயர் மாற்றப்படிருக்கிறது) என்ற இளைஞர்...
""இணையத்தில் திருச்சி மசாஜ் சென்டர் என்று தேடினால் சுலோகா, லாக்னோ என்கிற பெயர்களில் சில இணையதளங்கள், நூற்றுக்கணக் கான மசாஜ் மையங்களைக் காட்டுகின்றன. இதில் ஒன்றைத் தொடர்புகொண்டேன். உடனே என் மொபைலுக்கு ’சகலவித மசாஜும் உண்டு... அதற்கு மேலும் சேவை உண்டு’ என்ற ரீதியில் சபலத்தைத் தூண்டும் மெசெஜ் வந்தது. அதோடு குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்புகொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே ஆர்வமான நான், அந்த எண்ணுக்கு கால் பண்ணினேன்.
எதிர்முனையில், "ஹாய் சார்' என்ற ஆண் குரல், "1 மணி நேரத்திற்கு 1,500 ரூபாய் சார். 5 பெண் கள் இருக்கிறார்கள். நல்லா எக்ஸ்ட்ரா சர்வீஸ் பண்ணுவாங்க சார்'… என்று எடுத்தவுடன் நேரடி யாக விசயத்திற்கு வந்தார். ஒரு நொடி நான் மிரண்டு போயிட்டேன். சுதாரித்து எக்ஸ்ட்ரா என்றால், என்றேன். உடனே அவர்... "அது உங்களுக்கு என்ன தேவையோ, நீங்கள் விருப்பப் பட்டா, பப்பி, சிப்பிங், போட்டிங், குலுக்கல் எல்லாம் பண்ணுவாங்க
மலைக்கோட்டை மாநகரான திருச்சியில், சிற்றின்ப வியாபாரத்தில் மும்முரம் காட்டும் மசாஜ் கிளப்புகளால் இளைஞர்களின் வாழ்க்கை பாழாகி வருகிறது என்ற புகார் நம் கவனத்துக்கு வர, விசாரணையில் இறங்கினோம்.
மசாஜ் சென்டரால் ஏற்பட்ட பாதிப்பை நம்மிடம் மனம்திறந்து பகிர்ந்துகொண்ட ராகுல் (பெயர் மாற்றப்படிருக்கிறது) என்ற இளைஞர்...
""இணையத்தில் திருச்சி மசாஜ் சென்டர் என்று தேடினால் சுலோகா, லாக்னோ என்கிற பெயர்களில் சில இணையதளங்கள், நூற்றுக்கணக் கான மசாஜ் மையங்களைக் காட்டுகின்றன. இதில் ஒன்றைத் தொடர்புகொண்டேன். உடனே என் மொபைலுக்கு ’சகலவித மசாஜும் உண்டு... அதற்கு மேலும் சேவை உண்டு’ என்ற ரீதியில் சபலத்தைத் தூண்டும் மெசெஜ் வந்தது. அதோடு குறிப்பிட்ட ஒரு எண்ணைத் தொடர்புகொள்ளும்படி அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. உடனே ஆர்வமான நான், அந்த எண்ணுக்கு கால் பண்ணினேன்.
எதிர்முனையில், "ஹாய் சார்' என்ற ஆண் குரல், "1 மணி நேரத்திற்கு 1,500 ரூபாய் சார். 5 பெண் கள் இருக்கிறார்கள். நல்லா எக்ஸ்ட்ரா சர்வீஸ் பண்ணுவாங்க சார்'… என்று எடுத்தவுடன் நேரடி யாக விசயத்திற்கு வந்தார். ஒரு நொடி நான் மிரண்டு போயிட்டேன். சுதாரித்து எக்ஸ்ட்ரா என்றால், என்றேன். உடனே அவர்... "அது உங்களுக்கு என்ன தேவையோ, நீங்கள் விருப்பப் பட்டா, பப்பி, சிப்பிங், போட்டிங், குலுக்கல் எல்லாம் பண்ணுவாங்க சார்' என்று எனக்கு தெரியாத, புரியாத, பல விசயங்களைச் சொல்லி இன்னும் ஆர்வத்தை தூண்டினார். அதுபற்றி நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே... "இப்ப இருக்கிற பியூட்டி பொண்ணுங்க படம் அனுப்புறேன் சார். நீங்களே பாருங்க' என்று வாட்ஸ் ஆப்பிற்கு 5-க்கும் மேற்பட்ட பொண்ணுங்க படங்களை அந்த ஆண் அனுப் பினான். அவ்வளவு தான்... நானும் அப்படியே மன்மத வலையில் விழுந்து விட்டேன். அவன், "சார்… நேரில் பார்த்தே… செலக்ட் பண்ணுங்க'ன்னு இன்னும் ஆசைத் தீயை மூட்ட.. எப்படியாவது அங்க போய்விட வேண்டும்ங்கிற ஆர்வத்தில்... பணத்தைத் தயார் செய்து கொண்டு, அவன் சொன்னபடி தில்லைநகரில் குறிப்பிட்ட கிராஸுக்குப் போனேன். என் உடையின் நிறத்தை எல்லாம் கேட்டுக்கொண்டான். அங்கே போனதும், "வந்துட்டீங்களா, அங்க மெடிக்கல் இருக்கா? அதை ஒட்டி மாடி போகும், 2 ஆம் மாடி போயிடுங்க' என்று சொன்னான். நானும் அங்கே வேகமாகச் சென்றேன்.
வெளியே போர்டு எதுவும் இல்லை. அந்த அறையில் இருந்து ஒருவன் வெளியே வந்து... "வாங்க சார்... உட்காருங்க. தண்ணீ குடிங்க'ன்னான். பிறகு, உங்களுக்கு யார் வேணுமோ… செலக்ட் பண்ணிக்கோங்க, அதுக்கு முன், பணத்தைக் கட்டச் சொன்னான். உடனே 1,500 ரூபாயைக் கார்டில் கட்டினேன், உள்ளே போனவுடன், நான் தேர்வு செய்த பெண் உள்ளே வந்து…மெல்லிய துணி போன்ற உள்ளாடையைக் கொடுத்து, "இதை போட்டுக்கங்க'ன்னா என்றாள். அதேபோல் செய்து, கேமிரா எதுவும் இருக்கிறதா? என்று பார்த்துக்கொண்டேன். அந்த பெண்ணோ, சில்மிஷத்தோடு... ""நா.. உங்களுக்கு சர்வீஸ் பண்ணணும்னா, எக்ஸ்ட்ராவா... 1,000, 1,500, 2,000 வரை கொடுக்கனும். 2,000 ரூபாய் குடுத்தா, கணவன், மனைவி மாதிரியே எல்லாமும்...'' என்றாள். என்னிடம் இருந்த 1000 ரூபாய்க்கு, அவள் ஒரு சிறிய மன்மத சேவையைச் செய்து 15 நிமிடத்திற்குள் ளேயே படபடப்பாக என்னை அனுப்பிவைத்தாள்'' என்று சற்று வெட்கத்தோடு விவரித்து முடித்தார்.
ராகுல் சென்ற அந்த மசாஜ் மையத்தைப் போலவே திருச்சியில் ஏகப்பட்ட மையங்கள் இருப்பது தெரியவந்தது. தங்கள் விளம்பரத்தில் சிக்கும் இளைஞர்களை மயக்கி பணத்தை லாவகமாகப் பறித்து கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற மன்மத சேவையை, அதற்குரிய ரேட்டைக் கொடுத்தால் வீட்டிற்கே வந்தும் செய்கிறார்களாம்.
நம்மிடம் பேசிய அந்த சமூக ஆர்வலர், ’""இந்த மசாஜ் ஜல்சா மையங்களை நடத்திவரும் நபர்களில் முக்கிய புள்ளியாக இருப்பவர் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகனான அருண்தான். இவர் சினிமா தொடர்புகள் மூலம் பல பெண்களை திருச்சியில் இறக்குமதி செய்து, திருச்சியின் முக்கிய வி.ஐ.பி.களுக்கும் இந்த கொரோனா காலத்தில் பக்காவாக சர்வீஸ் செய்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் திருச்சியில் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில், ஒரு இளம் நடிகர், ஒரு இயக்குநர், அருண் ஆகியோர் கும்மாளம் போட்டு, கடைசியில் அடிதடியில் முடிந்தது. அருண் மசாஜுக்காக வரும் பெண்களை, தேவதானம் சஞ்ஜீவி நகரில் ஒரு பெரிய வீடு எடுத்து தங்க வைத்து இருந்தார்.
அந்த வீட்டின் அருகில் இருந்த ஓய்வு பெற்ற இன் னொரு போலீஸ் அதிகாரி, கோட்டை காவல்நிலையத்தில் புகார் செய்ய, உடனே போலீஸ் எல்லோரையும் அள்ளிக் கொண்டு சென்றது. ஆனால் அடுத்த சில மணி நேரத்திலேயே, வழக்கறிஞரை வைத்து அவர் களை மீட்டுச்சென்று வேறு இடத்திற்கு பிஸினஸை மாற்றி விட்டார். இந்த அருணுக்குப் பின்னால் பிரபல ராம்ஜிநகர் கஞ்சா வியாபாரி இருக்கிறார். இந்த வியாபாரியும் மத்திய பேருந்து நிலையம் அருகிலே ஓட்டலில் மசாஜ் சென்டர் நடத்துகிறார். அருண் நடத்தும் சென்டர்களுக்கு முழுமையாக முதலீடு செய்கிறார். இதனாலே இவருடைய வட்டம், பக்கத்து மாவட்டமான தஞ்சை வரை விரிந்து பரந்து கொண்டு இருக்கிறது. வெளி ஊர், வெளி மாநிலங்களில் இருந்து பெண்களை 10 நாட்கள், 1 மாதம் என தங்கவைத்து, அவர்களுக்கு சகல வசதிகளும் செய்து கொடுக் கிறார்கள். இந்த சென்டர்களுக்கு திருச்சியின் பிரபல ரவுடி களான மதன், பாண்டி, ஆகியோர் பாதுகாப்பாக இருந்து மாத மாமூல் வாங்குகிறார்கள். போலீஸ் அதிகாரிகளும் இவர்களிடம் வெட்கமில்லா மல் மாமூல் வாங்கிக் கொண் டிருக்கிறார்கள்'' என்றார் கவலையாய்.
புத்தூர் பகுதியில் உள்ள நீராவி குளியல் இடத்தில் தினமும் போலீஸ்காரர்களே முழு நேரத்தையும் ஆக்கிர மித்துக்கொள்கிறார்களாம். மும்பை, சென்னை எனத் தொடங்கிய மசாஜ் கிளப்பு கள் இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இரண் டாவது பெரிய நகரங்களில் மசாஜ் கிளப் என்ற பெயரில் இத்தகைய பாலியல் சேவை கள் ஆரம்பிக்கப்பட்டு, ரகசிய மாக சக்கைப் போடு போடு கின்றன. முன்பு இதுபோன்ற கேளிக்கைகளுக்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக், கடற்கரை நகரமான பட்டையா போன்ற இடங்களுக்கு சென்று பட்டை யைக் கிளப்பிய தமிழக இளவட்டம், தற்போது கொரோனா காலத்தால் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலையில், அவரவர்கள் நகரங்களிலேயே இத்தகைய மசாஜ் சேவைகள் கிடைப்பதால் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.
வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்புகளும், இணையம் மூல மாக கட்டணம் செலுத்துதலும் நடைபெறுவதால் மிகவும் வசதி யாகப் போய்விடுகிறது. பயணக் கட்டணம் இல்லை. ஹோட்டல் ரூம் போட்டு தங்க வேண்டியதில்லை. இரண்டு மூன்று நாட்கள் பயணத்திற்காக வீட்டில் பொய் சொல்லவேண்டியதில்லை. அதனால், இளைஞர்கள் இந்த மசாஜ் கிளப் நோக்கி படை யெடுக்கிறார்கள். அதனைப் புரிந்துகொண்ட முன்னாள் காவல் துறை அதிகாரிகள் சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய காரியங்களுக்குப் பின்னணியாக இருக்கிறார்கள்.
இந்த மன்மதக் குற்றவாளிகளை யார் தட்டிக்கேட்பது?
-ஜெ.டி.ஆர்.