சாகும்வரை ஜெயில்! நீதிக்குப் போராடிய ப.பா.மோகன் ஆணவக் கொலை தடுப்புச் சட்டம் வருமா?

f

மிழகமே மிகவும் எதிர்பார்த்த கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில், இதன் முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கும், அவரது கார் டிரைவர் அருணுக்கும் சாகும்வரை (3) ஆயுள் தண்டனை யும், சிவக்குமார், சதீஸ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு 1 ஆயுள் தண்டனையும், 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திர சேகருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம். இந்த பரபரப்பான தீர்ப்புக்கு முக்கிய காரணகர்த்தா மனித உரிமைச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ப.பா.மோகன். இந்த வழக்கில் வாதாடிய இவருக்கு கடந்த ஆட்சியில் அரசுத் தரப்பில் எவ்விதக் கட்டணமும் தரப்படவில்லை. வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்துசெல்லும் செலவே 6,000 ரூபாய் ஆகும் நிலையில், டோல் கேட் கட்டணத்தைக்கூட இவருக்கு நீக்கவில்லை. ஆனால், கம்யூனிசவாதியான இவர், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இவ்வழக்கில் வாதாடி வென்றெடுத்துள்ளார். அவரை நக்கீரனுக்காகச் சந்தித்தோம்.

yuvaraj

உங்களைப் பற்றி...?

நாங்கள் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பம். என் தந்தை பாலு என்னைத் தீவிர கம்யூனிஸ்டாக வளர்த்தார். எங்கள் வீட்டிற்கு தலைவர் ஜீவானந்தம் அடிக்கடி வந்துள்ளார். கம்யூனிசச் சிந்தாந்தத்தில் பெரிதும் நாட் டம் உள்ளதால் எப்போதும் எளியவர்கள், உழைக்கும் மக்கள், பழங்குடியினர், ஒடுக்கப் பட்ட மக்களின் பக்கமே நின்று போராடி யிருக்கிறேன். சமூக நீதி, பொதுவுடைமைத் தத்துவத்தின் தலைவர்களான மார்க்ஸ், பெரியார் போன்றவர்களின் சிந்தனைத் தாக்கம்தான் காரணம்

இந்த வழக்கில் உங்களுடைய அனுபவம் குறித்து?

இந்த வழக்கை நடத்தி முடிப்பதற் குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள். போன ஆட்சியில் ஆளும் தரப்பே பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தார்கள். என் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இதையெல்லாம் உண்மையான கம்யூ னிஸ்ட்காரன் ஒரு பொருட்டாகவே எடுத் துக்கமாட்டான் என்பதை என்னைவிட என் எதிராளிகள் தெரிந்துவைத்திருக்கிறார் கள். பவானியில் ஏழை பழங்குடி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவு என்மேல் பாசம் வைத்திருக்கிறார்கள், என்னைத் தொட்டால் என்ன விளைவு ஏற்படும் என்ற

மிழகமே மிகவும் எதிர்பார்த்த கோகுல்ராஜ் ஆணவப் படுகொலை வழக்கில், இதன் முக்கிய குற்றவாளியான யுவராஜுக்கும், அவரது கார் டிரைவர் அருணுக்கும் சாகும்வரை (3) ஆயுள் தண்டனை யும், சிவக்குமார், சதீஸ்குமார், ரகு (எ) ஸ்ரீதர், ரஞ்சித், செல்வராஜ் ஆகியோருக்கு 2 ஆயுள் தண்டனையும், பிரபு, கிரிதர் ஆகியோருக்கு 1 ஆயுள் தண்டனையும், 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், சந்திர சேகருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துள்ளது மதுரை தீண்டாமை வன்கொடுமை சிறப்பு நீதிமன்றம். இந்த பரபரப்பான தீர்ப்புக்கு முக்கிய காரணகர்த்தா மனித உரிமைச் செயற்பாட்டாளர் வழக்கறிஞர் ப.பா.மோகன். இந்த வழக்கில் வாதாடிய இவருக்கு கடந்த ஆட்சியில் அரசுத் தரப்பில் எவ்விதக் கட்டணமும் தரப்படவில்லை. வழக்குக்காக நீதிமன்றத்துக்கு வந்துசெல்லும் செலவே 6,000 ரூபாய் ஆகும் நிலையில், டோல் கேட் கட்டணத்தைக்கூட இவருக்கு நீக்கவில்லை. ஆனால், கம்யூனிசவாதியான இவர், இதையெல்லாம் பொருட்படுத்தாமல், இவ்வழக்கில் வாதாடி வென்றெடுத்துள்ளார். அவரை நக்கீரனுக்காகச் சந்தித்தோம்.

yuvaraj

உங்களைப் பற்றி...?

நாங்கள் ஒரு கம்யூனிஸ்ட் குடும்பம். என் தந்தை பாலு என்னைத் தீவிர கம்யூனிஸ்டாக வளர்த்தார். எங்கள் வீட்டிற்கு தலைவர் ஜீவானந்தம் அடிக்கடி வந்துள்ளார். கம்யூனிசச் சிந்தாந்தத்தில் பெரிதும் நாட் டம் உள்ளதால் எப்போதும் எளியவர்கள், உழைக்கும் மக்கள், பழங்குடியினர், ஒடுக்கப் பட்ட மக்களின் பக்கமே நின்று போராடி யிருக்கிறேன். சமூக நீதி, பொதுவுடைமைத் தத்துவத்தின் தலைவர்களான மார்க்ஸ், பெரியார் போன்றவர்களின் சிந்தனைத் தாக்கம்தான் காரணம்

இந்த வழக்கில் உங்களுடைய அனுபவம் குறித்து?

இந்த வழக்கை நடத்தி முடிப்பதற் குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள். போன ஆட்சியில் ஆளும் தரப்பே பல்வேறு நெருக்கடிகள் கொடுத்தார்கள். என் உயிருக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது. இதையெல்லாம் உண்மையான கம்யூ னிஸ்ட்காரன் ஒரு பொருட்டாகவே எடுத் துக்கமாட்டான் என்பதை என்னைவிட என் எதிராளிகள் தெரிந்துவைத்திருக்கிறார் கள். பவானியில் ஏழை பழங்குடி மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் எந்த அளவு என்மேல் பாசம் வைத்திருக்கிறார்கள், என்னைத் தொட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் தான் என்னைத் தொடாமல் என்னைச் சார்ந்தவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை, தூக்குத் தண்டனை கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன், ஆனால் அதைவிட கொடிய தீர்ப்புதான் வந்திருக்கிறது. சுமார் ஒன்பது மணி நேரம் கோகுல்ராஜை மறைத்துவைத்து கொடுமை செய்து தலையைத் துண்டித்துக் கொலைசெய்து, அதை மறைக்க அவரையே பொய்க் கடிதம் எழுத வைத்து தண்டவாளத்தில் வீசியுள்ளனர். கண்ணகி நீதி கேட்ட மதுரையில் ஒரு பட்டியலின இளைஞனுக்கு நீதி கிடைத்துள்ளது. இதுபோன்ற ஆணவக்கொலைகளுக்கு இத்தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும். சமீபத்தில் நடந்த மற்ற ஆணவக் கொலைகளான கண்ணகி- முருகேசன், கவுசல்யா- சங்கர், திவ்யா- இளவரசன் போன்றவை தாழ்த்தப்பட்டவர் களைத் திருமணம் செய்ததால் நடந்த கொலைகள். ஆனால் இங்கே, இவர்கள் இருவரும் காதலித்தார்கள் என்பதற்குக் கூட ஆதாரமில்லை. நட்பாகப் பழகியிருக்கிறார்கள். அவ்வளவே. இந்தப் பழக்கம் இறுதியில் காதலாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் கொலை செய்திருக்கிறார்கள்.

papamohan

யுவராஜ் சார்பான வழக்கறிஞர், இந்த வழக்கில் போதுமான ஆதாரமும் சாட்சியம் இல்லை என்றாலும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கட்டாயம் மேல்முறையீடு செய்து வழக்கிலிருந்து வெளியே வருவோம் என்று சொல்லியிருக்கிறாரே?

இதுவரை மதுரை நீதிமன்றத்தில் அரசுத்தரப்பு சாட்சியாக 106 பேரும், நீதிமன்ற சாட்சியாக 2 பேரும் சாட்சியம் அளித்துள்ளனர். 500-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுபோக, திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயிலின் சி.சி.டி.வி. பதிவுகள் முக்கிய சாட்சியாக உள்ளன. "ஜெய்பீம்' படத்தில் சாட்சிகளை உருவாக்கி மாட்டிக்கொள்வது போல, கொலையாளி யுவராஜ் நீதிமன்றத்தில், மலைக்கே போகவில்லை என்று சொன்னாலும், ஒரு முக்கிய தொலைக்காட்சியின் விவாதத்தில், "வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் பேசிக்கொள்வதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?' என்ற கேள்விக்கு, "அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தி சண்டை போட்டுக்கொண்டிருந்தான். அதனால்தான் நான் போய் அவர்களிடம் கேட்டேன்' என்று அவர் வாயாலேயே மலைக்கு போனது குறித்தும், செல்போனை பிடுங்கியது குறித்தும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

போலீஸ் விசாரணையிலாவது மிரட்டி வாங்கியதாகக் கூறலாம், ஆனால் தொலைக்காட்சி யில் இவரே விரும்பி குற்றத்தை ஒப்புக் கொண்டது வழக்கு விசாரணையில் திருப்ப மானது. மேலும் சுவாதி, நீதிமன்றத்தின் அடை யாள அணிவகுப்பில் கூறியது, யுவராஜின் கார் டிரைவர் அருண் தான் என்னிடம் எழுதி வாங்கியதென கூறியது என அனைத்து மிருக்கையில் மேல் முறையீடு போனாலும் ஒன்றும் செய்ய முடியாது, நானும் விடமாட்டேன்.

gokulraj

இவ்வழக்கில், கோகுல்ராஜ் தற்கொலை செய்யப்போகிறேன் என்று வீடியோ பதிவு செய்தது, கடிதமெழுதியதெல்லாம் எப்போது நடந்தது?

23-6-2015 அன்று இருவரும் பேசிக் கொண்டே மலைக்குப் போகிறார்கள். காலை 10.15 மணியிலிருந்து 12:15 மணிவரை பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது கொலையாளிகள் அந்த பையனின் செல்போனைப் பிடுங்குகிறார்கள். எதிர்த்துக் கேள்விகேட்ட கோகுல்ராஜை, "நீ ஒரு கீழ் சாதிப்பையன். எப்படிடா எங்க பெண்ணிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்?'' என்று மிரட்டி, அங்கிருந்து கோகுல்ராஜை காரில் கடத்தி, யாரும் நடமாட்டமில்லாத தொட்டிபாளையத்தில் இருக்கும் லெவல் கிராஸிங்கில் வைத்து அடித்து மிரட்டி அவன் கையாலேயே தற்கொலைக் கடிதம் எழுத வைத்துவிட்டு, இரவு 9:30 மணிக்கு கூர்மையான வாளால் கழுத்தை அறுத்துக் கொன்று, தண்டவாளத்தில் தலை வேறு முண்டம் வேறாகப் போட்டுவிட்டு கடிதத்தையும், செல்போனையும் கோகுல்ராஜின் ஆதார் அட்டையையும் சட்டைப் பையில் வைத்து, ரயிலில் விழுந்து தற்கொலை செய்ததுபோல் செட்டப் செய்துவிட்டுப் போகிறார்கள்.

ஆனால் போஸ்ட்மார்ட்டம் ஆய்வில், ரெயிலில் அடிபட்டால் தலை நசுங்கியிருக்கும், தலை கூர்மையான வாளால்தான் வெட்டப்பட்டுள்ளது என்று தெரியவந்தது. இதன்மூலம் தற்கொலையல்ல என்பது ஊர்ஜிதமானது. இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்று தெரியாதநிலையில், இந்த தாயின் கதறல் என்னை உலுக்கவே, நான் புலனாய்வு செய்ததில் யாரோ ஒரு பெண்ணுடன் கோகுல்ராஜ் மலையில் ஏறியதைப் பார்த்த நபர்கள் சொல்லச்சொல்ல உண்மை வெளிவந்தது. தினமும் அழுதுகொண்டேயிருக்கும் தாயின் கண்ணீர்தான் இந்த வழக்கை நடத்த என்னைத் தீவிரப்படுத்தியது.

இவ்வழக்கை விசாரித்த டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவையும் இதே யுவராஜ் மிரட்டிய ஆடியோ சமூக வலைத்தளத்தில் உலா வருகிறதே? அது கொலையா? தற்கொலையா? அந்த வழக்கு என்னவாகும்?

அந்த வழக்கையும் நான்தான் தற்போது கையில் எடுத்திருக்கிறேன். இதே யுவராஜ் மட்டுமல்லாது, விஷ்ணுபிரியாவின் காவல்துறை கண்காணிப்பு அதிகாரியின் தொடர் நெருக்கடி மற்றும் ஆளுந்தரப்பின் அழுத்தம் இவையெல்லாம் சேர்ந்துதான் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை தற்கொலைக்குத் தூண்டியது என்பதற்கான சரியான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. கட்டாயம் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

tt

நீங்கள் இதுவரை 600க்கும் மேற்பட்ட வழக்குகளைச் சந்தித் துள்ளீர்கள். இதில் மிகவும் மனதைப் பாதித்த வழக் காக எதைக் கருது கிறீர்கள்?

பர்கூர் மலைகளில் வாழும் சோளகர் மக்க ளின் வாழ்வுரிமைக்காகப் போராடிய வழக்கு இன்றும் என் கண் முன்னால் நிற்கிறது. போலீஸார் அந்த காட்டுப்பகுதியில், அந்த மலைவாழ் மக்கள் வீரப்பனுக்கு அரிசி பருப்பு கொடுப் பதைத் தடுப்பதற்காக, அப்பாவி மலைவாழ் மக்களைக் காட்டுப் பகுதியில் உள்ள விசாரணை ஒர்க் ஷாப்'பில் வைத்து விசாரணை என்னும் பெயரில் பெண்களை நிர்வாணமாக எலெக்ட்ரிக் ஷாக் வைத்து ரண கொடூரமாக சித்ரவதை செய்ததால் பாதிக்கப்பட்டவர்களை ஏராளமாகப் பார்த்திருக் கிறேன். தங்கள் உடம்பு முழுவதும் போலீஸார் கரண்ட் வைத்துப் பொசுக்கியதை என்னிடம் காண்பித்துள்ளார்கள். அதைக்கண்டு, இந்த கொடுமையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டுமென்று நினைத்திருந்த நேரத்தில்தான், வீரப்பனைச் சந்திக்க நக்கீரன் கோபால் அவர்கள் காட்டுக்குள்போக, அவரை அங்கேயே கொலை செய்யத் திட்டமிட்டனர். வீரப்பனின் கூட்டாளி யாக அவரைச் சித்தரித்து, துப்பாக்கியைப் பதுக்கி வைத்திருந்ததாக போலீசார் பொய்வழக்கு போட்டனர். இதையெல்லாம் எதிர்த்துப் போராடி வழக்கிலிருந்து விடுதலை பெற்றுத்தந்ததையும், அப்போது ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறை யைத் துணிவோடு எதிர்கொண்டதையும் இப்போதும் மனதைவிட்டு நீங்காத வழக்காகப் பார்க்கிறேன்.

கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கில் மனித உரிமைப் போராளியான வழக்கறிஞர் ப.பா.மோகன், பல்வேறு அச்சுறுத்தல்களுக் கிடையே நடத்திய சட்டப்போராட்டம் போற்றுதலுக்குரியது. கோகுல்ராஜ் ஆணவக் கொலையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடந்த ஆட்சியில் அதிகார மட்டத்தின் ஆதரவும், சமுதாய அமைப்பின் ஆதரவும் இருந்தது. தற்போது கடுமையான சட்டப்போராட்டத்துக் குப்பின் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. இச்சூழலில், திராவிட மாடல் சமூக நீதி ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆணவக்கொலைகளுக்கு எதிராகக் சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டியது அவசியம்.

________________

விஷ்ணுபிரியாவுக்கு எப்போது நீதி?

கோகுல்ராஜ் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரியாகப் பொறுப்பேற்ற திருச்செங்கோடு டி.எஸ்.பி.யான விஷ்ணுபிரியா, கொலை வழக்கு முன்னேற்றம் கண்ட நிலையில், அதே வருடம் செப்டம்பர் 18 அன்று மாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதோடு, விஷ்ணுபிரியா எழுதிய எட்டுப் பக்கக் கடிதமும் வெளியாக, விவகாரம் விஸ்வரூப மெடுத்தது.

vv

"தூக்கில் தொங்கு வதற்கு முன்பாக, எட்டுப் பக்கத்திற்கு கடிதம் எழுதுவதற்கு மனநிலை ஒத்துழைக்குமா? கோகுல்ராஜ் கொலை வழக்கிற்கும் தனது சாவுக்கும் தொடர்பில்லை என்று குறிப்பிடவேண்டிய தேவை என்ன? கோகுல்ராஜ் சந்தேக மரணத்தில், கணக்குக் காட்டப் பலரைக் கைது செய்யக் கூறியிருக்கின்றார் அப்போ தைய நாமக்கல் எஸ்.பி. மனசாட்சிக் கும் சட்டத்திற்கும் பயந்த விஷ்ணு பிரியா, எஸ்.பி. கூறியதைத் தவிர்த்ததால் கோபமான எஸ்.பி., தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு நைட் ரவுண்ட்ஸ் போடுறது என்பதுபோல பலவிதமா டார்ச்சர் கொடுத்திருக் காரு. அவள் அத்தனை சித்ரவதை களையும் தாங்கி இருக்கிறாள். திடமான பொண்ணு. இப்படி முடிவெடுப்பாள்னு நினைக்கல!" என கண்ணீர் மல்கக் கூறினார் அப்போதைய கீழக்கரை டி.எஸ்.பி.யான மகேஸ்வரி.

இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் ஆதாரமாக, மகேஸ்வரி யுடன் விஷ்ணுபிரியா பேசிய வாட்சப் ஸ்கிரீன் ஷாட்கள் நக்கீரனுக்கு பிரத்யேகமாகக் கிடைக்க, அதனை வெளியிட்டிருந் தோம். அந்த வாட்சப் உரையாடலில், கோகுல்ராஜ் விவகாரத்தில் எஸ்.பி. மறுபடி மறுபடி டார்ச்சர் செய்வ தாகவும், நிம்மதியாக இருக்க முடியவில்லை, ஏதோ ஒன்னு நடக்கப்போகிறது என்றும் அவர் பயத்துடன் புலம்பியது தெரியவந் தது. கோகுல்ராஜுக்கு நியாயம் வாங்கி கொடுத்துள்ள மனித உரிமைப் போராளியான வழக்கறி ஞர் ப.பா.மோகன், விஷ்ணுபிரியா மரணத்திற்கும் நீதியைப் பெற்றுத்தருவார் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

-நாகேந்திரன்

nkn120322
இதையும் படியுங்கள்
Subscribe