சிறையில் 20.6.18 காலை 9 மணிக்கு வழக்கம் போல காலையுணவு வழங்கப்பட்டது. வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிட்ட வியாசர்பாடி தாதா பாக்ஸர் முரளி (34) உடம்பை முறுக்கியபடி, குளியலறை இருந்த திசையில் நடந்தார். நடந்த தாதா மீது திடுமெனப் பாய்ந்து தாக்கினர் ஐந்து பேர்.

baskar-murali

ஒரே நேரத்தில் ஐவரையும் சமாளிக்க முடியாத பாக்ஸர் முரளி மல்லாக்கச் சாய்ந்தார். ""இப்ப எடுத்தாங்கடா சாமான்களை...'' கட்டளை யிட்டான் ஐவரில் ஒருவனான சரண்ராஜ்.

கழிப்பறைக் கூரை மீது பதுக்கப்பட்டிருந்த இரண்டு பொருட்களை எடுத்துக் கொண்டு வந் தான் ஒருவன். ஒன்று கத்திபோல கூர்மை யாக்கப்பட்ட ஒரு தகரம். இன்னொன்று கத்தி போல கூர்மையாக்கப்பட்ட அலுமினிய சாப்பாட்டுத் தட்டு.

Advertisment

பாக்ஸர் முரளியை மூவர் அழுத்திப் பிடித்துக் கொண்டார்கள். ஒருவன் பாக்ஸர் முரளியின் கழுத்தை அறுத்தான். இன்னொருவன் பாக்ஸரின் உறுப்பை அறுத்தான். ஒரு சில நிமிடங்களில் துடித்து அடங்கியது பாக்ஸர் முரளியின் உடல்.

அடுத்த அரைமணி நேரத்தில் விஷயம் வட சென்னை ரவுடிகள் வட்டாரத்திற்குள் பரவியது.

""ஆயுள் தண்டனை பெற்று கடந்த ஒன்பது வருஷமா புழல் சிறையில் இருந்தாலும் வடசென்னைக்குத் தாதா, தானே என்பதை பாக்ஸர் படுகொலை மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார் எங்கள் தாதா நாகேந்திரன்'' என்று ஆர்ப்பரிக்கிறது தாதா நாகேந்திரன் ரவுடிப்படை.

Advertisment

வடசென்னையில் வியாசர்பாடி கூட்ஸ் யார்டு லேபர் காண்ட்ராக்ட் கண்ட்ரோல் முழுக்க நாகேந்திரனிடம்தான் இருக்கிறது. மாதம் பல லட்சங் களை வாரிக்குவிக்கும் கண்ட்ரோல் இது.

puzhal

நாகேந்திரனின் முன்னாள் நண்பன் தான் பாக்ஸர் முரளி. முப்பதுக்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளுக்கு சொந்தக்காரரான நாகேந்திரன், 2009இல் ஆயுள்தண்டனை பெற்றார். திருச்சி, கடலூர், கோவை சிறைகளில் அடைக்கப்பட்டு 2012இல் புழல் சிறைக்கு கொண்டு வரப் பட்டார். நாகேந்திரனின் கலெக்ஷன் ராஜ்ஜியத்தை அவருடைய ஐம்பதுக்கும் அதிகமான சீடர்கள் கவனித்துக் கொண்டார்கள். எந்த ஊர் சிறையில் நாகேந்திரன் இருந்தாலும், அவருடைய பாதுகாப்பிற்காக, ஏதாவது குற்றங்களை செய்துவிட்டு, பத்துப் பன்னிரண்டு சீடர்கள் தண்டனை பெற்று, நாகேந்திரன் இருக்கும் சிறைக்குச் சென்று விடுவார்கள்.

இப்போது புழல் சிறையிலும் நாகேந்திரனுக் காக சீடர்கள் இருக்கிறார்கள். பாக்ஸர் முரளியைப் படுகொலை செய்த சரண்ராஜ், கார்த்திக், ஜோயல், பிரதீப், ரமேஷ் ஆகிய இளைஞர்களும் நாகேந்திரனின் சீடர்கள்தான்.

""தாதா நாகேந்திரன் ஜெயிலுக்குப் போனதும் அந்த இடத்துக்கு வரணும்னு துடித்தார் பாக்ஸர் முரளி. தனியே அகப்படும் நாகேந்திரன் சீடர் களைத் தாக்கினார். சிறைக்குள் வைத்தே நாகேந் திரனைத் தீர்த்துக்கட்டுவதற்கும் ஏற்பாடுகளைத் தொடர்ந்து முயற்சி செய்தார், முடியவில்லை.

jail-acidentஇரண்டு, மூன்று மாதம் முன்பு கிட்னி பாதிக்கப்பட்டு, ஸ்டேன்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நாகேந்திரனை, மருத்துவ மனையில் வைத்து தீர்த்துக் கட்ட முயன்றார் பாக்ஸர் முரளி. இதை தெரிந்து கொண்ட நாகேந்திரன் படை ரொம்ப உஷாராக இருந்ததால், முடியவில்லை. அதற்குப் பிறகுதான் பாக்ஸர் முரளி கைதானார். தாதா நாகேந்திரன் இப் போது பெரும்பாக்கத்தில் ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். சீக்கிரம் கிட்னி ஆபரேஷன் நடக்கவிருக் கிறது'' -வியாசர்பாடி கூட்ஸ்யார்டு தொழிலாளி ஒருவர் நம்மிடம் விவரித்தார்.

வடசென்னை -வியாசர் பாடி -சத்தியமூர்த்தி நகர் -மல்லி காலனிவாசியான பாக்ஸர் முரளி மீது கொலை, கொலை முயற்சி, வழிப்பறி என 16 வழக்குகள் வியாசர்பாடி, பாரதியார் நகர், கொடுங்கையூர், மாதவரம் காவல்நிலையங்களில் பதிவாகியுள்ளன.

கடந்த ஆண்டு வெட்டரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு கைது செய்யப்பட்டபோது, சென்னை முழுக்க சோதனை நடத்தி "ஏ' கிரேடு ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது போலீஸ். அப்போது இந்த பாக்ஸர் முரளியும் அகப்பட்டார். ஆனால் தன்னைப் பிடித்த இரண்டு போலீஸ்காரர்களையும் தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார் முரளி.

கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பாக்ஸர் முரளியை முதலில் விசாரணைக் கைதிகளுக்கான பிரிவில்தான் அடைத்திருந்தனர். பிறகுதான் குண்டாஸில் மாற்றப்பட்டு தண்டனைக் கைதிகள் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வடசென்னை தாதா பட்டத்தையும் வருமானத்தையும் தக்க வைத்துக்கொள்வதற்காக நாகேந்திரனும் அவற்றைக் கைப்பற்றுவதற்காக பாக்ஸர் முரளியும் பல முறை ஒருவர் மாற்றி ஒருவர் மரணத்தின் விளிம் பில் சந்தித்துக்கொண் டார்கள். கடைசியில் நாகேந்திரன் டீம் ஜெயித் திருக்கிறது கொலைவெறி யுடன்! பாக்ஸர் தரப்பு காத்திருக்கிறது.

-அரவிந்த்

கண்காணிப்பில் வாரிசு!

ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், தமிழக காங்கிரசின் வடசென்னை மாவட்ட மாணவர் காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எட்., படிப்பதாக விண்ணப்பத்தில் காட்டியிருக்கிறார். கிருஷ்ணகிரியில் படிப்பவர் சென்னையிலேயே இருப்பது எப்படி? என மாநில உளவுத்துறை சந் தேகப்பட்டு, பாக்ஸர் முரளி கொலை விசா ரணையில் அஸ்வத்தாமனையும் கண்காணிக்கும் படி சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கேட்டுக்கொண்டிருக்கிறது.

-இளையர்