முதல்நாளில் கர்நாடகாவில் ஈஷா மையத் திறப்பிற்கு தடை, மறுநாள் தடை நீக்கம் என்கிற நிலையில், சுற்றியிருந்த தன்னுடைய சீடர்களிடம், ""I would have cut their throats" என பேசிய ஜக்கியின் ஒற்றை வாக்கியம்தான் ஈஷா மையத்தினுள் உள்ள சீடர்களிடம் மந்திரமாக ஒலித்துக்கொண்டி ருக்கிறது.
சுற்றுச்சூழல் முக்கியத்துவமுள்ள வடக்கு மற்றும் தெற்கு பெண்ணாறுகள் உற்பத்தியாகும் நந்திமலை அடிவாரத்தில் வணிகரீதியான நிறுவனம் அமைக்கப்பட்டுள்ளதாக, ஜக்கி வாசுதேவின் புதிய யோக மையத்துக்கு தடை கேட்டு கர்நாடகா நீதிமன்றத்தில் இரு கிராமங்கள் சார்பாக காத்தயப்பா என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய உள்துறை, கர்நாடக மாநில அரசு, வன பாதுகாப்பு இயக்குநர், ஈஷா உள்ளிட்ட 16 நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி சிலை திறப்பிற்கு தடை விதித்தது உயர்நீதிமன்றம்.
இந்த யோகா மையம் அனைத்துத் துறைகளின் அனுமதி பெற்றபின்னரே அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்டது. விதிமுறைகள் மீறப்பட்டால் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பில்லை. ஆகையால் யோகா மையம் திறக்க அனுமதிக்க வேண்டுகிறேன்'' என உடனடியாக மனு தாக்கல் செய்ய ஆர்.எஸ்.எஸ்., கர்நாடக முதல்வர் பின்புலத்தில் ஜக்கியின் யோகா மையம் திறக்க அனுமதிக்கப்பட்டது.
"இதற்கு முந்தைய நாளில் கோவையிலுள்ள ஈஷா மையத்தில் தன்னுடைய சீடர்களையெல்லாம் தன் முன்னே அழைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். முன்பு நித்தியானந்தாவிடம் பணியாற்றி நித்யானந்தாவிற்கு பிரச்சனை ஏற்பட்டபொழுது தானும் சிக்கலில் மாட்டிக்கொள் வோம் எனக் கருதி அங்கிருந்து வெளியேறி ஜக்கியிடம் தற்பொழுது பணியிலுள்ள ராஜபாளையத்தைச் சேர்ந்த அந்த பவர்புல் நபர் முன்னி லையில் நடைபெற்ற அக்கூட்டத்தில், சீடர்களைப் பார்த்து முதுகு காட்டிய ஜக்கி "ஹா..! ஹா..!' என ஓங்கிக் குரலெழுப்பி சத்தமாக சிரித்து விட்டு மெதுமெதுவாக தலையை சீடர்கள் முன் திருப்பி நேரடியாகக் காட்சி தர... "தங்களுடைய குருவின் முகம் கண்ட' மகிழ்ச்சியில் சந்தோஷமாக ஆர்ப்பரித்திருக் கின்றனர் அங்கிருந்த சீடர்கள். இதை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல், "எந்த மாதிரி என்னைப் பற்றி, ஈஷாவைப் பற்றி எழுதினாலும், பேசினாலும் என்னை ஒண்ணும் செய்திட முடியாது' என நிறுத் தியவர் அமைதியாக இருக்க, சீடர்கள் மத்தியில் மயான அமைதி. சில நிமிட அமைதிக்குப் பிறகு, "எதுவும் பாதிப்பில்லை என்றாலும், நான் எதற்காக இந்த உலகத்திற்கு வந்தேனோ, மக்களுக்கு செய்ய நினைத்தேனோ அதைச் செய்யமுடியாது போய்விடும் போல் இருக் கின்றது. அதாவது என்னைப் பின்னோக்கி இழுத்துச் சென்று விடு வார்களோ என்கிற பயம் இருக்கின்றது' என்றவர் அழுது அரற்ற, சுற்றியுள்ள சீடர்களும் மனம் கசிய அந்த இடமே துக்கமாக மாறியது.
இதைப் பயன்படுத்திக் கொண்ட ஜக்கி, "எனக்கு நடந்தது போல், என்னை எழுதியதுபோல், என்னை அவதூறு பேசியதுபோல் என்னுடைய குருவிற்கு நடந்திருந்தால் இந்நேரம் அவர்களின் கழுத்தை நான் அறுத்திருப்பேன். ஒ ஜ்ர்ன்ப்க் ட்ஹஸ்ங் ஸ்ரீன்ற் ற்ட்ங்ண்ழ் ற்ட்ழ்ர்ஹற்ள்… ஒ ஜ்ர்ன்ப்க் ட்ஹஸ்ங் ஸ்ரீன்ற் ற்ட்ங்ண்ழ் ற்ட்ழ்ர்ஹற்ள்… ஒ ஜ்ர்ன்ப்க் ட்ஹஸ்ங் ஸ்ரீன்ற் ற்ட்ங்ண்ழ் ற்ட்ழ்ர்ஹற்ள்…என அழுத்தம் திருத்தமான வார்த்தைகளில் கூறி முடிக்க, சீடர்களோ மிரட்சியில், "குருவே நாங்கள் என்ன செய்யவேண்டும்.. குருவே நாங் கள் என்ன செய்ய வேண்டும்'' என அவர்கள் தூண்டப்பட்ட மன நிலையில் கேட்க, சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார் ஜக்கி வாசுதேவ். தன்னுடைய எண்ணத்தை தன்னுடைய அடிமைகளிடம் விதைத்து அறுவடை செய்ய மூளைச்சலவை செய்து நினைத்ததை முடித்திருக் கிறார் ஜக்கி. எனினும் இப்பொழுதுதான் தவறு செய்ய ஆரம்பித் திருக்கிறார் அவர்'' என்கிறார் ஈஷாவில் பணியாற்றும் நபர் ஒருவர்.
இது ஜக்கிக்கு எதிராக எழுதும், பேசும் ஊடகத்தினருக்கு எதிரான அச்சுறுத்தல் என்றாலும், சுபஸ்ரீயின் மரணத்தை மடைமாற்றும் வழிகளில் இதுவும் ஒன்றே என்கின்றனர் ஜக்கியுடன் துவக்கத்தில் பயணித்து வெளியேறியவர்கள். எந்த வழியில் பார்த்தாலும் சுபஸ்ரீயின் மரணம் மர்ம மரணமாக இருப்பதாலும், இதுபோல் பல மர்ம மரணங்கள் அடங்கிய ஈஷாவில் மனித உரிமை மீறல்கள் இருப்பதாலும் உயர்நீதிமன்றக் கண்காணிப்பின்கீழ் சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து தமிழக அரசு விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பலரின் எதிர்பார்ப்பு.