ஜெ. மரண செய்தியை வெளியிடுவேன்! -திகில் கிளப்பும் மாஜி தலைமைச் செயலாளர்!

ff

றைந்த முன்னாள் முதல்வர் “ஜெ.வின் ஆட்சியின்போது தலை மைச் செயலாளராக இருந்தவர் ராம்மோகன் ராவ். ஜெ. மரணத்திற்குப் பின், தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தப் பட்டது. பணி ஓய்வுக்குப் பின்பு பூர்வீக மாநிலமான ஆந்திரா சென்று திரும்பிய ராம்மோகன் ராவ், தனது முதலீடுகள் சார்ந்து சென்னையிலேயே பெரும்பாலும் இருக்கிறார்.

r

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறை என தன் பெயரில் பாசறையையும், நாயக்கர்- நாயு

றைந்த முன்னாள் முதல்வர் “ஜெ.வின் ஆட்சியின்போது தலை மைச் செயலாளராக இருந்தவர் ராம்மோகன் ராவ். ஜெ. மரணத்திற்குப் பின், தலைமைச் செயலகத்தில் ரெய்டு நடத்தப் பட்டது. பணி ஓய்வுக்குப் பின்பு பூர்வீக மாநிலமான ஆந்திரா சென்று திரும்பிய ராம்மோகன் ராவ், தனது முதலீடுகள் சார்ந்து சென்னையிலேயே பெரும்பாலும் இருக்கிறார்.

r

சென்னையைத் தலைமை யிடமாகக் கொண்டு டாக்டர் ஆர்.எம்.ஆர். பாசறை என தன் பெயரில் பாசறையையும், நாயக்கர்- நாயுடு பேரவை என்ற அமைப்பையும் ஏற்படுத்தி அதன் ஒருங்கிணைப்பாள ராகவும் தற்போது செயல்பட்டு வருகிறார். பாசறையும் பேரவையும்தான் சார்ந்த சமூக ரீதியானது என்பதால் அதற்கேற்ற நிர்வாகிகளையும் நியமித்திருக் கிறாராம். அவர் போகுமிடங்களுக்கேற்ப நிர்வாகிகள் திரள்கின்றனர். தன்னுடைய பணிக்காலத்தில் நடந்த சம்பவங்கள் பிற்காலங்களில் தனக்குப் பாதிப்பை ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகக் கவசமாக இந்தப் பேரவை உருவாக்கப்பட்டுள்ளது.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221வது நினைவு தினமான அக் 16 அன்று அந்த மாவீரன் தூக்கிலிடப்பட்ட தூத்துக்குடி மாவட்டக் கயத்தாறுப் பகுதிக்கு வந்த ராமமோகன் ராவ், கட்டபொம்மன் சிலைக்கு மாலை மரியாதை செலுத்திவிட்டு, மீடியாக்களிடம் பரபரப்பை கிளப்பினார் ராம்மோகன் ராவ்.

""என்னுடைய பணிக் காலத்தில் தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது தவறான நடவடிக்கை. அந்த நடவடிக்கையைப் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்று எனக்குத் தெரியாது. தேவையில்லாமல் என்மீது பெரிய பழியைச் சுமத்தியிருக்கிறார்கள். பலர் பலவிதமாகப் பேசிக் கொள்கிறார்கள். அதற்கெல் லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

அம்மா(ஜெ) மரணத்திற்குப் பின்னால என்ன நடந்தது. யார் என்ன நினைத்தார்கள் என்று தெரிய வில்லை. நான் யாரையும் பழி சுமத்த நினைக்கல. ஆனால் அதில் ஒரு சதி நடந்திருக்கு. அதைச் சொல்ல இது தருணமல்ல. நேரம் வரும், அப்போது நான் சொல்வேன்'' என்று சொல்லி பரபரப்பு தீயைக் கொளுத்திவிட்டுக் கிளம்பினார் ராம்மோகன் ராவ்.

ஜெ. மரணம் குறித்த மர்மங்களை விசாரிக் கும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு, ஜெ. சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தடை வாங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க. அரசும் தடை நீக்க முயற்சிக்கவில்லை. இந்நிலையில் முன்னாள் தலைமைச் செயலாளர் திடீர் குண்டு வீசியுள்ளதன் பின்னணியில் பல அரசியல் காரணங் கள் உள்ளது என்கிறார்கள்.

-பரமசிவன்

படங்கள் : ப.இராம்குமார்

nkn211020
இதையும் படியுங்கள்
Subscribe