நார்த்தாமலை போலீசார் துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது குண்டு பாய்ந்து இறந்த சிறுவன் புகழேந்தியின் இறுதிச் சடங்கில் ஊரே கலந்துகொண்டு துயரத்தை வெளிப்படுத்தியது. புகழேந்தி மரணத்துக்குக் காரணமான காவலரின் கைதையும், நார்த்தாமலை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை மூடுவதையும் ஊர்மக்கள் வலியுறுத்தினர்.
30-ஆம் தேதி தாத்தா வீட்டில் சாப்பிட்டுக் கொண்டி ருந்த சிறுவன் புகழேந்தி தலை யில் ஏதோ வந்து மோத, "தலையில் “குருவி கொத்திருச்சு'“ என்று சொல்லிக்கொண்டே சரிந்தவன் எழவில்லை. ஜனவரி 3-ஆம் தேதி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
புகழேந்தியின் மரணத் தகவல் வேகமாகப் பரவியதும்... நார்த்தாமலை, கொத்தமங்கலப் பட்டி கிராமங்களில் சிறுவன் புகழேந்தியின் உறவினர்களும், பொன்னமராவதியில் சி.பி.ஐ. கட்சியினரும் மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத் துரை தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு சென்று பெற்றோ ருக்கு ஆறுதல் சொன்னதோடு சிறுவன் குடும்பத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம், அரசு வேலை, அரசு வீடு வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தார்.
4-ஆம் தேதி பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அசம்பா விதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டு குளத்தூர் தாலுகாவிலுள்ள டாஸ்மாக் கடைகளும் அடைக் கப்பட்டன. சிறுவனது சடலம் நேராக மயானத்திற்கு கொண்டு செல்லப்பட, உறவினர்கள் அஞ்சலி செலுத்தவேண்டும் என்று சடலத்தை சாலையில் வைத்து அஞ்சலி செலுத்தினார் கள். தொடர்ந்து மாவட்ட அமைச்சர்கள் ரகுபதி, மெய்ய நாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னத்துரை, விஜயபாஸ்கர், அப்துல்லா எம்.பி., மாஜி ஆறுமுகம் ஆகியோர் அஞ்சலி செலுத்தி, தமிழக அரசு நிவாரணம் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள்.
திரண்டிருந்த உறவினர்கள் கதறும்போது, "தம்பி புகழு... உன்னை புல்லட் பாண்டினு செல்லமா அழைச்சது தப்பாய்யா. இப்படி புல்லட்டுக்கு இரையா கிட்டியே...''’என்று அழுத குரல்கள் கூடியிருந்தோரின் நெஞ்சைப் பிசைந்தன.
இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி விசாரணைக் குப் பிறகு கொடுத்த அறிக்கையில், "சி.ஐ.எஸ்.எஃப். மற்றும் போட்டி யில் கலந்துகொள்ள பயிற்சி எடுத்த போலீசாரிடம் விசா ரணை செய்யப்பட்டதுடன் கள ஆய்வும் செய்யப்பட்டது. யார் சுட்ட குண்டு சிறுவன் தலையில் பாய்ந்தது என்பது தெரியவில்லை. அதனால் சிறுவன் தலையி லிருந்து எடுக்கப்பட்ட துப்பாக் கிக் குண்டை தடய அறிவியல் சோதனைக்கு உட்படுத்த வேண் டும்' என்று தெரிவித்திருந்தார்.