ssதி.மு.க., சிறுபான்மை சமுதாயத்தவர் களுக்கு ஆதரவாகவும் அரணாகவும் இருப்பதுடன் அனைத்துத் தரப்பு மக்களையும் ஒன்றாய் அரவணைத்துச் செல்வது பேரறிஞர் காலந்தொட்டு தலைவர் கலைஞர், முதல்வர் ஸ்டாலின் காலம்வரை நீடித்துவருகிறது. அதற்கேற்ப சிறுபான்மை சமூகமான இஸ்லா மிய சமூக வாக்குகள் தி.மு.க.வின் பக்கமே இருக்கின்றன.

குறிப்பாக, மதுரைக்குத் தெற்கே திண்டுக் கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி என தென்மாவட்டங்களில் திருச்செந்தூர், காயல்பட்டினம், பாளை, நெல்லை, அம்பை, தென்காசி, கடையநல்லூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்குமளவுக்கு மெஜாரிட்டியாக சுமார் 9 சதவிகிதம் அளவுக்கும் நிறைந்திருக்கிறார்கள் இஸ்லாமியர்கள்.

காலகாலமாக கட்சிக்கும் ஆட்சிக்கும் இஸ்லாமிய சமூகம் உறுதுணையாக இருந்துவருவதால் தி.மு.க. தலைமை அந்தச் சமூகத்திற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியது. குறிப்பாக ரகுமான்கான், சாதிக் பாட்சா இருவரையும் அமைச்சராக்கியதுடன் சாதிக் பாட்சா கட்சியின் நாற்பது ஆண்டுகால பொருளாளராகவும் தலைவர் கலைஞரால் கௌரவப்படுத்தப்பட்டார்.

தற்போது தங்களுக்கான உரிய பிரதிநித்துவம் வழங்கப்படாத மனக்குறையிலிருக்கும் அவர்கள், "கடந்த சட்டசபை தேர்தலின்போது தி.மு.க.வின் சார்பில் நாகப்பட்டினம் தொகுதிக்கு தமிமுன் அன்சாரி நிறுத்தப்பட்டார். பின்பு கூட்டணிக்கு அது ஒதுக்கப்பட்டதால் முதல்வரின் வாக்குப்படி நாகப்பட்டினத்தை வி.சி.க.வின் ஆளூர் ஷாநவாசுக்கு விட்டுக்கொடுத்த தமிமுன் அன்சாரிக்கு தற்போதுவரை உரிய அங்கீகாரம் தரப்படவில்லை.

Advertisment

இஸ்லாமிய பிரதிநிதியாக செஞ்சிமஸ்தான், ஆவடி நாசர் என்று இருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பிற்பாடு சில விவகாரம் காரணமாக அமைச்சர் நாசரின் பதவியான பால்வளத்துறை எடுக்கப்பட்டு மனோதங்கராஜ் அமைச்சராக்கப்பட்டதால் இஸ்லாமிய சமூகத்தவர்களுக்கான பிரதிநிதித்துவம் குறைக் கப்பட்டு தற்போது இந்தப் பிரிவைச் சார்ந்தவர் ஒருவரே என்ற நிலை. சொல்லப்போனால் விழுப்புரத்திற்கு தெற்கே இஸ்லாமியர்களுக்கான எந்த ஒரு பிரதிநிதித் துவமும் இல்லாத நிலை. இதனால் எங்க ளுக்கான முறையான கோரிக்கைகளை யாரிடம் சுதந்திரமாகவும், நிர் பந்தமில்லாமலும் தெரிவிப்பது என்கிற மனச்சோர்வு எழுகிறது.

ss

Advertisment

ஆம்பூர், வேலூர், வாணியம்பாடி, ஆயிரம்விளக்கு, திருவல்லிக்கேணி உள்ளிட்ட இஸ்லாமிய சமூகத்தவர்கள் மெஜாரிட்டி யாயிருக்கிற தொகுதிகளில் அம்மக்களின் வேட்பாளர்களே ஜெயிக்கக்கூடிய தொகுதிகளைக் கூட கட்சித் தலைமை கேட்டுக்கொண்டதற்கிணங்க இஸ்லாமிய சமூகமில்லாத கட்சியின் பிற வேட்பாளர்களை ஏற்றுக்கொண்டு, தர்மப்படி அவர்களை ஜெயிக்கவைத்தோம். இனியாவது எங்கள் சமூகத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புதான் காரணம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

இதுகுறித்து பொள்ளாச்சி நகர வழக்கறிஞரும், இஸ்லாமிய சமூகத்தின் முக்கி யஸ்தருமான ஷாநவாஸ்கான் கூறும்போது, “"தமிழகம் முழுக்க இஸ்லாமிய சமூகத்தவர்கள் சுமார் 82 லட்சம் பேர். கடந்த தேர்தலின்போது 62 லட்சம் முஸ்லீம்கள் தி.மு.க.வுக்கு வாக்களித்தனர். அண்ணா காலம் தொட்டு தலைவர் கலைஞர் வரை கட்சி, ஆட்சி அதிகாரத்தில் முஸ்லீம் சமூகத்தவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவ மும், அங்கீகாரமும் தரப்பட்டன. தற்போது கட்சியிலும் சரி, ஆட்சி யிலும் சரி நாங்கள் தவிர்க் கப்பட்டு வருகிறோம். கட்சி மட்டத்தில் 3 பேர்தான் மா.செ.க்களாக இருக் கின்றனர். கட்சி அமைப் பின் 47 மாவட்டப் பிரிவு கள்ல இஸ்லாமியர் களுக்கான பிரதிநிதித்துவம் இல்லை.

நீலகிரி முபாரக், கட்சியே மூச்சு என்று 50 வருடங்களாகச் செயல்பட்டு வருபவர். அவருக்கு போனமுறை எம்.எல்.ஏ. வாய்ப்பு தரப்பட்டது. ஆனால் இந்தமுறை முபாரக்கிற்கு வாய்ப்பு தரப் படலை. 97 மாவட்ட கட்சிப் பிரிவுகளில் இஸ்லாமியர்களுக்கென்று பிரதிநிதித்துவமே கிடையாது. குறிப்பா ஈரோடு, கோவையிலிருக்கிற 27 மாவட்ட அமைப்புகள்ல ஒருத்தர்கூட இஸ்லாமிய அரசு வழக்கறிஞர் கிடையாது. எங்களுக்கான பிரதிநிதித்துவத்தை, கோரிக் கைகளை தளபதி நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம்''’என்றார்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மா.செ.வான பாளை பாரூக், "தி.மு.க. ஆட்சியைக் கொண்டுவந்ததில் 50 ஆண்டுகாலமாகவே முஸ்லீம் மக்களின் பங்கு கணிசமானது. இதைப்போன்றே தமிழகத்தில் 50 தொகுதிகளின் வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பவர்களும் இஸ்லாமிய மக்கள்தான். தற்போது ஆட்சியில் எங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்படலை. மறைமுகமா மறுக்கப்படுது.

அரசு உயர் பதவியில் மற்றும் அரசு தீர்மானிக்கிற உயர்மட்ட பதவியில், பொறுப்புகளில் ஒரு முஸ்லீம்கூட கிடையாது. டி.என்.பி.எஸ்.சி. கமிட்டி உறுப்பினர் பொறுப்பிலயும் ஒரு முஸ்லீம்கூட இல்லை. சமீபகாலமா பி.ஜே.பி.யோட நடவடிக்கை முஸ்லீம் மக்களுக்கு மட்டும் அச்சுறுத்தல் அல்ல, சமூக நீதியைப் பின்பற்றுகிற, விரும்பக்கூடிய, தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட அனைத்துத் தரப்பு மக்களுக்கு மானதுதான்.

எங்களுக்குரிய பிரதிநிதித்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் தரப்படலன்றதுக்காக நாங்க தி.மு.க.விற்கு ஓட்டை மறுத்தா, அது ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பாயிருமேன்னு யோசிக்க வேண்டியிருக்கு. மூன்றரை சதவிகித இட ஒதுக்கீடு தான் தலைவர் கலைஞரால எங்க மக்களுக்குக் கெடைச்சது. ஆனா அது இந்த சமூகத்திற்கு பத்தாது. இப்ப கட்சி உயர்மட்டத்தில் ஆட்சியில் எங்களுக்கான அடையாளம் கிடையாது. ஆனா லும் தலைவர் மீது ரொம்பவும் நம்பிக்கையாய் இருக்கிறோம்''’என்றார் தெம்பான குரலில்.

தி.மு.க. தலைமை திரும்பிப் பார்க்கவேண்டும் என்பதே இஸ்லாமியரின் எதிர்பார்ப்பு.

-பி.சிவன்