"என்னுடைய இமேஜை சரிக்கட்ட எதற்கும் துணிவேன் என்பதுபோல் உருட்டல் மிரட்டல்களை கையில் எடுத்துள்ளார் ஜக்கி வாசுதேவ், தன்னுடைய மகன் ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி ஆசிரியரால் சீரழிக்கப்பட்ட செய்தியை பொதுவெளியில் ஒப்புவித்த யாமினி நரேந்திராவிற்கு எதிராக மானநஷ்டஈடு கேட்டு வழக்கறிஞர் நோட்டீஸை அனுப்பிய ஜக்கி & கோ கூடுதலாக யாமினியின் அண்ணனை வைத்தே யாமினி -நரேந்திரா தம்பதியை மிரட்டி வருகின்றது. அதுபோல், சில மின்னஞ்சல்களை "நக்கீரனுக்கு' தந்த ஆஸ்திரேலியா "சுவாமி விபு'விற்கும் வழக்கறிஞர் நோட்டீஸை அனுப்பியுள்ளது ஈஷா. இதில் "நக்கீரனையும்' மிரட்டிப் பார்த்துள்ளது ஜக்கி குரூப்.

jagg

தனக்கு எதிரானவர்களை அடக்க ஜக்கி முதலில் வழக்கறிஞர் நோட்டீஸை அனுப்பியும், எதிரானவர்களின் உறவினர்களை தம் வசப்படுத்தி யும் உருட்டல் மிரட்டல்களை தொடங்கியுள்ளார். இதில் ஆஸ்திரேலியா விபு, யாமினி -நரேந்திரா வரிசையில் "நக்கீரனும்' ஒன்று.

Advertisment

முன்னதாக 2021ஆம் ஆண்டின்பொழுது சரியாக 07-09-2021 அன்று டெல்லியிலிருந்து தியானம் கற்றுக்கொள்ள வந்திருக்கின்றார் அம்பிகா எனும் 22 வயது பெண். (உண்மையான பெயர் மாற்றப்பட்டிருக்கின்றது.) அன்று அவருடைய பிறந்ததினம் என்பதால் கோவையி லுள்ள ஈஷா தியான மையத்தில் பிறந்த தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டிருக்கின்றது. அன்றைய தினத்தில் நவீன் மற்றும் ரோஹித் என இருவர் அந்தப் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயன்றுள்ளனர். ஆனால், அம்பிகா அவர்களை தவிர்த்திருக்கின்றார். அப்பொழுது, "உன்னுடைய பிறந்தநாளை மகாதேவர் பாட்டு போட்டு கொண்டாடுவோம்' என்றிருக்கின்றனர் இருவரும். மகாதேவர் பாடல், யோகா மைய பாடல்கள் பாடிக்கொண்டிருக்கும்பொழுது அம்பிகாவிற்கு ஒருவித பானம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. சற்றுநேரத்தில் மயங்கிச் சரிய... அறையில் உறங்க அனுமதிக்கப்பட்டிருக்கின்றார். இரவில் தன்னு டைய உடல் மீது அழுத்தம் இருந்ததை அனு பவித்த அவர், மயக்க நிலையிலேயே உறங்கியிருக் கின்றார். அதிகாலையில் விழிப்பு வந்து பார்க்கும் போது உடையில் இரத்தம் கசிந்திருக்கின்றது. இதுகுறித்து ஈஷா யோகா மையத்தில் புகார் அளித் திருக்கின்றார், எடுபடவில்லை. அன்றைய கோவை மாவட்ட எஸ்.பி.யான செல்வன் நாகரத்தினத்தை அணுகியிருக்கின்றார். அவரோ இவரை நிரகரித் திருக்கின்றார். ஒருகட்டத்தில் தன்னுடைய ஊரான டெல்லிக்குச் சென்று புகாரளித்துள்ளார். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கம்போல் ஜக்கியின் உருட்டல் மிரட்டல்களால் வழக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.

jaggi

ஈஷா யோகா மையத்தில் முன்னாள் சுவாமி ஒருவரோ, "சரிந்துகொண்டிருந்த இமேஜை சரிக்கட்ட அசர்பைஜானுக்கு சென்றார் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ். ஜக்கி குடியுரிமை பெற்ற இந்தியாவும், தற்பொழுது அடைக்கலமாகியுள்ள அமெரிக்காவும் COP 29ஐ புறக்கணிச்சுட்டாங்க. யோகா மாஸ்டர் லெவலுக் குக்கூட ஜக்கியை கூப்பிடலை. இவராக பணம் கட்டி பெட்டிக்கடை சைஸில் ஸ்டால் போட்டு விளம்பரம் தேடியிருக்கின்றார். போதாக்குறைக்கு "நானும் ரவுடி... நானும் ரவுடி!' என ஜக்கி வாண்டடாக வண்டியில் ஏறிய கதையை நக்கீரன் ஆசிரியர் வீடியோவில் பேசி வைக்க, ஜக்கியின் இமேஜ் ஒட்டுமொத்தமாக டேமேஜ் ஆனது.

Advertisment

sss

"ஜக்கிதான் என்னுடைய கடவுள். ஜக்கி கூறுவதுதான் என் வேதம். ஜக்கிக்காக உயிரையும் கொடுப்பேன்'' என ஜக்கியின் தியானத்தில் நம்பிக்கை வைத்து மாதச் சம்பளமே பெறாமல் தன்னார்வலராக பணிபுரிந்துவந்தேன். பின்னாளில் நான் வைத்த நம்பிக்கை அனைத்தும் குருட்டுத்தன மானது எனத் தெரியவந்தது. அருகிலிருந்த இன் னொரு சுவாமி எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத் தார். கடவுளான ஜக்கியிடம் கூறினேன். "கண்டு கொள்ளாதே....' என்றார். அது தவறு என அவர் கண்டிக்கவில்லை. தொடர்ந்து நான் பாலியல் சீண்டலுக்கு ஆளானேன். அங்கு எப்படி வேண்டுமானாலும் இருந்துகொள்ளலாம். யாரும் யாரையும் கண்டுகொள்ளமாட்டார்கள். அதுபோல் ஜக்கி செய்யும் பாலியல் சேஷ்டைகளையும் நாம் கண்டுகொள்ளக் கூடாது. அப்படியெனில் அங்கு நடப்பது என்ன..? அங்கு மின்னஞ்சல்தான் பிரதா னம் என்பதால் மின்னஞ் சல் வழியாக எனக்கு செக்ஸ் டார்ச்சர் செய்தார் அந்த சுவாமி. அதற்கு மசியாததால் ஒருகட்டத்தில் அவருடைய ஆண் உறுப்பை புகைப்படம் எடுத்து எனக்கு மின்னஞ்சல் செய்தார். இதுகுறித்தும் புகார் செய்தேன். ஆனால் நிர்வாகமும், ஜக்கியும் கண்டுகொள்ளவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் பொதுவெளியில் வெளியிட தயாராக இருக்கின்றேன்'' என்கின்றார் ஆஸ்திரேலிய ஆண் சுவாமியான விபு.

ss

இது இப்படியிருக்க, யாமினியின் உடன் பிறந்த அண்ணன் கொடிபிரவீனோ, "யாமினியின் கணவரான நரேந்திரா ஒரு பொய்யர். பணம் பறிப்பதற்காக ஜக்கி மீது அவதூறு பரப்பியுள்ளார் என அறிக்கையை வெளி யிட்டதோடு மட்டுமில்லாமல் நேரடியாக யாமினி -நரேந் திராவிற்கு மிரட்டல் விடுத்ததும் குறிப்பிடத்தக்க ஒன்று.

எத்தனை மிரட்டல்கள், உருட்டல்கள் வந்தாலும் ஜக்கி வாசுதேவின் உண்மை முகத்தை வெளியிடாமல் இருக்கப்போவதில்லை என்று பல தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றது.

குறிப்பாக சிஷ்யை ஒருவரின் மின்னஞ்சலோ பகீர் ரகம். அதிலிருந்து....

dd

"செல்வி பங்கஜ் மற்றும் ஜக்கி வாசுதேவ் ஆகியோரால் நடத்தப்பட்ட சகஜ ஸ்திதி யோகாவில் (SSY) கலந்துகொள்ளும்படி என் நண்பர் என்னை வற்புறுத்தி னார். கோவையில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. என் வீட்டிற்கு அருகில் இருந்ததால் ஜக்கியின் வகுப்புக்கு சென்றேன். அதே நேரத்தில், இரண்டு SSY ஆசிரியர்களான வினய் மற்றும் தத்தா ஆகியோர் சேலம், திருச்சி, பெங்களூரு போன்ற இடங்களில் இதே திட்டத்தைக் கற்பித்துக் கொண்டிருந்தனர். பாவ ஸ்பந்தனா நிகழ்ச்சிகள் (BSP) உட்பட நான்கு நபர்களின் திட்டங்களிலும் நான் தன்னார்வத் தொண்டு செய்தேன். மெதுவாக, ஜக்கியின் ஆட்களால் நான் மூளைச்சலவை செய் யப்பட்டேன், அவரது அமைப்பு, வழிபாட்டு முறையில் சேர, ஜக்கி என் தலையை மொட்டை யடித்து என்னை துறவியாக அறிவித்தார். பல வருடங்கள் சாதனா மற்றும் துறவறத் திற்குப் பிறகும் நான் விடுபடுவது மிகவும் கடினமாக இருந்தது. எனது வரம்புகள், பாலியல் தேவைகள் மற்றும் உடல் நிர்ப்பந்தங்கள் அனைத்திலிருந்தும் நான் வெளியே வரு வேன் என்று நம்பி என்னை முழுவதுமாக அர்ப்பணித்தேன். ஆனால், ஆசிரமத்தில் உள்ள இடங்களான ட்ரையாங்கிள் பிளாக், ஸ்பந்தனா மண்டபம், மற்றும் கைவல்ய குதிர் ஆகிய இடங்களில் துறவிகள் பாலியல் உறவில் ஈடுபடுவதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தேன்.

என்னைப்போல் இரண்டு துறவி ஆசிரியர்களான சோமு மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் உடலுறவு கொண்டு துறவிகளாக இருந்த நிலையில்... திருமணம் செய்து கொண்டு மாயமாகினர். அவர்கள் கண்டு பிடிக்கப்பட்டபோது, சிறிது நேரம் கழித்து ஸ்ரீதேவி ஜக்கியின் வீட்டில் இறந்து கிடந் தார். பாம்பு கடித்தது என்று சொன்னார்கள். மேலும் சோமு மிகவும் விசித்திரமாக, மர்மமான முறையில் இமயமலையில் மறைந்துபோனார். இன்றுவரை அவ ரது பெற்றோர் அவரைத் தேடி வருவது காலக்கொடுமை. ஸ்ரீனிவாசன், வாசு போன்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் துறவிகள் மற்ற இணை ஆசிரியர்களு டன் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.

மற்றொரு லெபனான் ஆசிரியை டினா, மலேசியாவில் கற்பிக்கும்போது ஒரு தன்னார்வலரின் கணவனுடன் உறவுகொண்டு அந்தக் குடும்பத்தை அழித்துள்ளார். பல மாக்களுக்கு உடல் ரீதியான தொடர்பும் இருந்தது. இரண்டு மாக்களுக்கு இடையே இந்த தீவிர உறவு இருந்தது, மேலும் அவர்கள் பிடிபட்டபோது ட்ரையாங்கிள் ப்ளாக் மொட்டை மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றனர். சுயக்னா என்ற ஸ்வாமி ஜக்கியின் தனிப் பட்ட செயலாளருடன் உடலுறவு கொண்டிருந்தார், கண்டுபிடிக்கப்பட்ட போது அவர் ஆசிரம நிர்வாகி பதவியி லிருந்து நீக்கப்பட்டு அதிகாரம் குறைந்த பதவிக்கு மாற்றப்பட்டார். இன்னும் பல சம்பவங்கள் உள்ளன, அவற்றைப் பட்டியலிட அதிக நேரம் எடுக்கும். மிகவும் சொகுசான கட்டடமான நாளந்தாவில் நிரந்தரமாக தங்கியிருந்த ஜக்கியின் சகோதரர் ரவியும், பெண்களின் பின்னால் சென்று பாலியல் விருப்பங்களை நிறை வேற்றிக்கொள்பவர். ஏன் அவரை ஆசிரமத்தில் தொடர்ந்து வாழ அனுமதித்தார்கள், இன்னும் பல பெண்களை வருடக் கணக்காகப் பின்தொடர்ந்து செல்ல அனுமதித்தார்கள் என்பது எனக்குப் புரிய வில்லை. ஒவ்வொரு முறையும் நான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும்போது, ஜக்கிக்கு எழுதுவது வழக்கம். சில சமயம் என்னைக் கூப்பிட்டுச் சந்தித்து சமாதானப் படுத்துவார். மற்ற சமயங்களில் பிரம்மச்சாரி குழு உறுப்பினர்கள் என்னிடம் பேசி, அவர்களின் பிரசங்கங்களால் என்னை சித்ரவதை செய்வார்கள்.

இப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கும்போதும், விதிகளை மீறி பல துறவிகள் மற்றும் ஆசிரியர்கள் இன்னும் தன்னார்வலர்களின் வீடுகளில் தங்கியிருக்கையில் அத்துமீறும் போது, "நான் எப்படி துறவியாக இருக்க முடியும்? இந்த விஷயங்கள் இனி நடக்காது, தன்னார்வலரின் குடும்பங்களை அழிக்காது' என்று யார் உத்தரவாதம் அளிப்பார்கள்? சொந்த மகளின் மீது கட்டுப்பாடு இல்லாத ஜக்கி எல்லோருக்கும் எதிர்கால உத்தரவாதம் எப்படி அளிக்க முடியும்? பிரம்மச்சரியத்தின் விதிகளை மீறி, பேராசை மற்றும் அதிகாரத்தில் ஈடுபடும் தனது பிரம்மச்சாரிகளை அவர் கட்டுப்படுத்தாதபோது உனக்கும், எனக்கும் எதிர்காலம் என்ன?

ஜக்கிக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் பல ஆண்டு களாக அறக்கட்டளைக்கு சேவை செய்தவர்கள் வெளியேறி விட்டனர் அல்லது மறைந்துவிட்டனர். முற்றிலும் ஏமாற்றம் மற்றும் வெறுப்புடன், எனது 40களில் ஈஷாவையும் நாட்டை யும் விட்டு வெளியேறினேன். எனது வாழ்க்கையின் சிறந்த மற்றும் மிகவும் பயனுள்ள ஆண்டுகள் வீணாகிவிட்டாலும், எனது வாழ்க்கையை மீண்டும் தொடங்குவது கடினமாக இருந் தாலும், தூய்மையான மற்றும் உண்மையுள்ள வாழ்க்கையை வாழ்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக இந்த மோடி வருகைக்குப் பிறகு நான் சொல்வதெல்லாம் மறுக்கப்படும் என்பது எனக்குத் தெரியும். ஆனால், சசிகலா மீது மோடி கை வைத்த பிறகு என்ன நடந்தது என்பது நமக்குத் தெரியும். ஆனால் எனது வாழ்க்கையைப் பற்றியும் உண்மையைப் பற்றியும் அனைவரும் கேட்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது, அவர்கள் என்னையோ அல்லது எனது குடும்பத்தினரையோ சித்திரவதை செய்ய முயன்றால், நான் அதை பகிரங்கமாக வெளியிடுவேன்.

மரியாதையுடன்,

உங்கள் நலம் விரும்பி

என எழுதப்பட்டுள்ளது அந்த மின்னஞ்சலில்!

ஜக்கி வாசுதேவின் உருட்டல் மிரட்டல்கள் ஒருபுறம் இருப்பினும், ஜக்கியின் உண்மைத் தன்மையை அம்பலப்படுத்தும் பணியும் மறுபுறம் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றது. ஜக்கியின் முகத்திரை கிழியும் நாள் வெகுதொலைவில் இல்லை.