ஷா மைய பாலியல் விவகாரம், பல லட்சம் கோடி சொத்து என ஜக்கியை மையம்கொண்டு சர்ச்சைப் புயல் சுழன்றடிக்கும் நிலையில், அவருக்கு விசுவாசமான அன்பர் களும், அம் மையத்துக்கு எதிரான ஆதாரங் களைக் கண்டு வெலவெலத்துப்போய் உள்ளனர். ஜக்கியின் ஆடம்பரத்தையும், ஆன்மிகத்தின் பெயரால் நடத்திவரும் கார்ப்பரேட் அர சியலையும் அறவே வெறுக்கும் பெரும்பாலோர், "ஜக்கி வாசுதேவின் முகத்திரையைக் கிழி யுங்கள். விட்டுவிடாதீர்கள். அநீதிக்கு எதிராக எழுதிவரும் நக்கீரன் பக்கம் நாங்கள் இருக்கிறோம்''’ என தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர்.

isha

இந்நிலையில், 2010ல் சென்னையில் முதலமைச்சர் கலைஞர் சார்பில், அன்றைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடமிருந்து தமிழறிஞர் பட் டம் பெற்ற சைவ இலக்கிய ஆன்மிக விரி வுரையாளர் மாரியப்பன், "அது என்ன தியான லிங்கம்? அங்கே எதுக்கு சுடுகாடு?''’என ஈஷா மையத்தின் தகாத நடவடிக்கைகள் குறித்து நம்மிடம் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் அவர், "ஈஷா போன்ற அமைப்பு களின் செயல்பாடுகளையும், மூட நம்பிக் கையைப் புகுத்தி ஏமாற்றும் வேலையையும் சைவ சமயம் ஏற்றுக்கொள்வதில்லை. அப்பழுக்கற்ற ஒழுக்க நெறியுடன் இருக்க வேண்டும் என்று சமய நெறிமுறைகள் சொல்கின்றன. இந்த தியான லிங்கம், சுடுகாடு எல்லாம் சைவ சமயத்திற்கு உடன்பாடல்ல. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய நால்வரும், கோவில் வழிபாடுகளைத்தான் குறிப்பிட்டுள்ளனர். சிவஞான போதம் 12ம் சூத்திரத்தில் சிவன் வழிபாடு குறித்து என்ன சொல்கிறதோ, அதுதான் நெறிமுறை. அதில் செம்மலர் நோன்தாள் என்று சொல்லப்பட்டி ருப்பதைக் கவனிக்கவேண்டும். இதுதான் வழிபாடே தவிர, ஈஷாவில் நடக்கிற மாதிரி அல்ல. இதுபோன்ற தீட்சைகள் குறித்து பெரியபுராணம் சொல்ல வில்லை. சைவ சமயத்தின் அடிப்படைக் கொள்கையே சாதிக்கு அப்பாற்பட்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவனென்று சொத்தை எல்லாம் விற்றுவிட்டு துறவியானார் பட்டினத்தார். அன்பே சிவம் என்பது திருமூலர் வாக்கு. பசியால் வாடுபவனுக்கு இயன்றதைச் செய். இதுதான் சைவ சமயக் கொள்கை. சிவலிங்க அமைப்பிற்கான 28 ஆகமங்களுக்கு உட்பட்டு அங்கே தியான லிங்கம் அமைக்கவில்லை. எங்கே சிவலிங்கம் வைக்கவேண்டும்? எங்கே விநாயகரை வைக்கவேண்டும்? என்பதற்கான ஆகமங்கள் உள்ளன. அதன்படிதான் சிவாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பணத்தாசைக்கு தக்கபடி அவரவர் இஷ்டத்துக்கு சிவலிங்கம் அமைப்பது பாவச்செயல்.

Advertisment

isha

சுடுகாடு அமைப்பதும் அது போலத்தான். ஒவ்வொரு சமயத்தவ ருக்கும் ஒவ்வொரு வகையான அடக்க முறைகள் உள்ளன. லிங்கம் இருக்கும் இடத்தில் சுடுகாடு அமைப்பது முறையல்ல. ஆகமவிதிப்படி, எந்தக் கோவிலும், சிவன் கோவிலே என்றாலும், உள்ளே சுடுகாடு அமைப்பதில்லை. சைவ ஆகமத்தில், வழிபாட்டு நெறிமுறையில், இதுபோல் சுடுகாடு அமைப்பது குறித்து எதுவும் இல்லை. எந்த இலக்கியத்திலும், சமயத்திலும் இப்படி சொல்லப்பட வில்லை. ஊருக்கு வெளியே சுடுகாடு அமைந்திருக்கவேண்டும் என்பதுதான் மரபு. ஜக்கி வாசுதேவோ, ஈஷா யோகா மையமோ, ஆகமத்திற்கு உட்பட்டு நடக்காமல் மீறியிருக்கின்றனர். ஊருக்கு ஊர் ஆலயங்களில் சிவலிங்கம் இருக்கும்போது, அங்கே சென்றுதான், சிவலிங்க வழிபாடு நடத்தவேண்டுமா?

இங்கே முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், கோவிலின் அருகில் வசிப்பவர்கள் யாராவது இறந்துவிட்டால், ஆகமவிதிப்படி அந்தக் கோவிலின் நடையை உடனே சாத்திவிடுவார்கள். அடக்கத்திற்காக உடல் எடுத்துச் செல்லப்பட்ட பிறகே, சிறிய பரிகாரம் செய்து நடை திறப்பார்கள். ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்படும் நடைமுறை இது. தியான லிங்கம் இருக்கும் பகுதியில் சுடுகாடு அமைத்திருப்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று''’என்று கைகளை உயர்த்தினார்.

Advertisment

தமிழறிஞர் மாரியப்பன் எழுப்பிய குறிப்பிட்ட அந்த இரண்டு கேள்விகளுடன், மிகத் தொன்மையான சைவ சமயத் திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனம் சென்று, 291வது ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக சுவாமிகளை சந்தித்தோம்...

ss"2500 வருடங்களாக, வழிவழியாக அறநெறியைப் பரப்பும் மடமாகச் செயல்படுகிறது மதுரை ஆதீனம். இங்கு வழிபாடுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவோம். தமிழ்நாட்டில் புதிதாக முளைத்துள்ள இந்த கார்ப்பரேட் சாமியார்கள், பவுர்ணமி திருவிழா போன்ற விழாக்களை நடத்தி, மக்களைக் கூட்டி ஆண்கள், பெண்கள் வித்தியாசமின்றி டான்ஸ் ஆடுவதெல்லாம் மதுரை ஆதீனத்தில் கிடையாது. அதெல்லாம் வியாபார நோக்கில் நடைபெறுகிறது. மரபுவழி சைவ சித்தாந்தங்களில் நான் கேள்விப்படாதது தியான லிங்கம். எல்லாம் பணம் பண்ணுவதற்கான ஒரு வழி... மற்றபடி ஒன்றுமில்லை.

சுடுகாடு என்றால் அர சாங்கம்தானே வைத்திருக் கும்? தனியார் வைத்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கோவில் வளாகத்திற்குள் எரியூட்டும் சுடுகாடு அமைத்திருப்பது சைவ சமய நெறிகளின்படி தவறானது. வள்ளலார் உடலை எரிப்பதற்கு எதிரான கொள்கை உள்ளவர். புதைப் பதே மேலானது என்கிறார். சாவு விழுந்துவிட்டால் தீட்டு என்கிறார்கள். வள்ளலார் வழியில் தீட்டு என்பது கிடையாது. இந்து என்பதும் இங்கு கிடையாது. சைவம்தான் தமிழர் மரபு. தமிழ் முறைப்படிதான் வழிபாடு செய்யவேண்டும். "கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளாரடி கிளியே!' எனப் பாடியிருக்கிறார் பாரதியார். அவர்கள் அரசியல் கட்சி மாநாடு மாதிரி கூட்டி, ஆன்மிகத்தின் பெயரில் டான்ஸ் ஆடி களிப்புற்று மகிழ்கிறார்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆன்மிகம் என்றால் இறைவனை இறைஞ்சுவது, இப்படியல்ல.

விளம்பரம் செய்து, கலர் கலராக லைட் போட்டு, இசையின் வாயிலாக ஒருவித ஈர்ப்பு ஏற்படுத்துவதாலோ என்னவோ, நடிகர், நடிகைகள் எல்லாம் அங்கு போகிறார் கள். நடிகர், நடிகைகளை ஆதின மடத்திற்கு ஒருக் காலும் அழைக்கமாட் டோம். ஆதீனத்திற்கு வரும் பெண்கள் வழிபாடு நடத்திவிட்டு மறு நொடியே போய் விடுவார்கள்.

ss

ஒருமுறை நெய்தல் விழா வுக்கு என்னை அழைத் திருந்தார்கள். அங்கு என்னதான் நடக்கிறது என்று நானும் போனேன். திடீரென்று லைட்டை அணைத்துவிட்டார்கள். ஒரே இருட்டாக இருந்தது. வண்ண வண்ண விளக்குகளை எரியவிட்டார்கள். ஆச்சரியமாகவும், அதே நேரத்தில் கொஞ்சம் பதட்டமாக வும் இருந்தேன். எதிர்பாராத நேரத்தில் ஹம்மிங் சத்தம் கேட்டது. மியூசிக் போட்டார்கள். வெளிநாட்டினர் கூச்ச லிட்டு ஆடினார்கள். நானோ, அய்யய்யோ… நமக்குச் சம்பந்தமில்லாத இடத்துக்கு வந்துவிட்டோமே என்று ஓடி வந்து விட்டேன். ஷோ காட்டுகிறார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை.

ஈஷா மையத்தில் பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுவதாக நானும் கேள்விப் பட்டேன். ஜக்கி ஒரு பக்கிங்கிறது எல்லாம் எனக்குத் தெரியாது. அவரைப் பார்த்துப் பேசியதில்லை. பார்க்கவும் மாட்டேன். அவர் வந்தாலும் மடத்துக்குள் அனுமதிக்கமாட்டேன். நக்கீரன் என்றாலே பயமாக இருக்கிறது. என் வாய் சும்மா இருக்காது. மனதுக்குப் பட்டதைச் சொல்லிவிடுவேன்''’என்று முடித்துக் கொண்டார் மதுரை ஆதீனம்.

ஈஷா மையத்தின் மர்ம நடவடிக்கை களை தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிகப் பெரியவர்களும் கவனித்தபடியே உள்ளனர். அவர்கள் மனம் திறந்து தங்களது ஆதங்கத்தைப் பதிவு செய்தனர். மரியாதைக்குரிய ஆன்மிகவாதிகளின் அதிரடி கருத்துக்கள் வரும் இதழில்!

-ராம்கி, அண்ணல், ராம்குமார்