Advertisment

வில்லங்க புகாரில் ஐ.பி.எஸ். அதிகாரி, வெளியான ரகசியக் கடிதம்!

ff

"மாவட்டத்துல சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய வேலையில் எனக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும்? சரியாக சாப்பிடக் கூட முடி யாது, தூங்க முடியாது. என்னைய அக்கறையாக பார்த்துக்க வேண்டிய மனைவியோட எனக்கு எவ்வித உறவும் இல்லை. நித்தமும் வேதனைதான். எனக்கு ஆறுதல் கூறி, என்னை வழி நடத்த வேண்டிய ஆத்மா எதுவும் இல்லை. நண்பர்களிடம் பேசினால் என்னு டைய பதவியை தவறாக உபயோகப் படுத்திவிடுவார்கள். "நீ எனக்கு ஆறு தல் தரக்கூடிய ஆத்மாவாக இருப் பியா?' என்று தன்னை சந்திக்கும் பெண்களை முதல் பந்திலேயே வீழ்த்தி படுக்கைக்கு அழைத்துவிடுவார் அந்த மன்மத (ஐ.பி. எஸ்.) அதிகாரி. அந்த வலையில் வீழ்ந்தவள் நான். என்னைப் போல பலரும் அவரிடம் வீழ்ந்துள்ளனர்'' என ஐ.பி.எஸ். அதி காரி ஒருவர்மீது பாலியல் குற்றச்சாட்டை பெண் ஒருவர் சமூக வலைத்தளத் தில் பகிரங்கப்படுத்த... ஐ.பி.எஸ். வட்டாரமே கிடுகிடுத்துள்ளது.

Advertisment

gg

ஐ.பி.எஸ். அதிகாரி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்ணை பல்வேறு சிரமங் களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்தோம். முகம் மறைத்து, பெயர் மறைத்து பேசத் தொடங்கி, அந்தப் பெண்ணோ, "எம்.பி.

"மாவட்டத்துல சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய வேலையில் எனக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும்? சரியாக சாப்பிடக் கூட முடி யாது, தூங்க முடியாது. என்னைய அக்கறையாக பார்த்துக்க வேண்டிய மனைவியோட எனக்கு எவ்வித உறவும் இல்லை. நித்தமும் வேதனைதான். எனக்கு ஆறுதல் கூறி, என்னை வழி நடத்த வேண்டிய ஆத்மா எதுவும் இல்லை. நண்பர்களிடம் பேசினால் என்னு டைய பதவியை தவறாக உபயோகப் படுத்திவிடுவார்கள். "நீ எனக்கு ஆறு தல் தரக்கூடிய ஆத்மாவாக இருப் பியா?' என்று தன்னை சந்திக்கும் பெண்களை முதல் பந்திலேயே வீழ்த்தி படுக்கைக்கு அழைத்துவிடுவார் அந்த மன்மத (ஐ.பி. எஸ்.) அதிகாரி. அந்த வலையில் வீழ்ந்தவள் நான். என்னைப் போல பலரும் அவரிடம் வீழ்ந்துள்ளனர்'' என ஐ.பி.எஸ். அதி காரி ஒருவர்மீது பாலியல் குற்றச்சாட்டை பெண் ஒருவர் சமூக வலைத்தளத் தில் பகிரங்கப்படுத்த... ஐ.பி.எஸ். வட்டாரமே கிடுகிடுத்துள்ளது.

Advertisment

gg

ஐ.பி.எஸ். அதிகாரி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்ணை பல்வேறு சிரமங் களுக்கிடையே தேடிக் கண்டுபிடித்தோம். முகம் மறைத்து, பெயர் மறைத்து பேசத் தொடங்கி, அந்தப் பெண்ணோ, "எம்.பி.ஏ. பட்டதாரியான நான் 2015-ல்தான் இன்ஸ்டாகிராம் மூலம் அவரை பாலோ செய்து அவருடைய மோட்டி வேஷன் பேச்சில் மயங்கி அவருடைய அனைத்துப் பதிவுகளுக்கும் ஒவ்வொன்றாக லைக் போட்டு வந்தேன். 2019-ம் ஆண்டு ஜூன் மாத வாக்கில் இன்ஸ்டாகிராமில் நாய் குறித்து பதிவு ஒன்றை அவர் போட... அதனை ஷேர் செய்தேன். இன்ஸ்டாகிராமிலுள்ள என்னு டைய ஐடியைக் கொண்டு, என்னுடைய மொபைல் எண்ணை எடுத்து, "என்னுடைய போஸ்ட்டை ஷேர் செய்துள்ளீர்கள். யார் நீங்கள்...?'' எனக் கேட்க அப்பொழுதுதான் எங்களுக்குள் பேச்சு தொடங் கியது. திடுமென 2019 ஜூலை யில் மொபைல் போன் மூலம் என்னைத் தொடர்பு கொண்ட அந்த அதி காரி, "நீ மூவி பார்ப் பியா? டிரிங்க்ஸ் பண்ணுவியா..?'' என கேட்கத் தொடங்கி, " எனக்கென யாரும் இல்லை... சாப்பிட்டி யா? தூங்கினியா? என கேட்கக்கூட நாதி யில்லை'' என பேசத் தொடங்க... ஊருக்கே பெருமை சேர்க்கும் போலீஸ் அதிகாரி.! அவருக்கு இந்த நிலைமையா.? என பெண் மைக்கே உண்டான இரக்க குணத்தில் அந்தப் பேச்சுக்கு மயங்கினேன்... அக்கறையாக உதவத் தொடங்கினேன்.

Advertisment

இந்நிலையில், 2019, ஜூலை 28-ம் தேதியன்று, "மதியம் லஞ்சுக்கு மகாபலி புரம் போவோமா?' எனக் கேட்டு, என்னை அவருடைய காரில் மகாபலிபுரம் நோக்கி கூட்டி செல்ல ஆரம்பித்தார். மகாபலிபுரத்திற்கே போகா மல் வி.ஜி.பி. அருகிலேயே சாலையோரத்தில் நின்று கொண்டு பேசத் தொடங்கி னோம். அதன்பின் வீட்டிற்கு வந்தால், "எனக்கென்று யாரும் இல்லை...''என்கின்ற புராணம்.

இதனிடையே சென் னையிலிருந்து வேறொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப் பட்ட நிலையில், "அத்திவரதரைப் பார்க்க வர்றீயா?' எனக் கேள்வி கேட்க... அங்கும் மக்கள் மத்தியில் சாதாரண சந்திப்பு நடந்தது. பிறகு "ஸ்ரீபெரும் புதூர் அருகிலுள்ள தனியார் காட்டேஜில் ரூம் புக் செய்துள்ளேன். நம்முடைய எதிர்காலம் குறித்து பேச வேண்டும். மனைவியுடன் நிம்மதியே இல்லை. அதனால் விவாகரத்து செய்யலாமென இருக்கின்றேன். அதற்கடுத்த வாழ்க்கை குறித்து பேச வேண்டுமென' மறுபடியும் அழைக்க... நான் போகவில்லை.

பின்னாளில் -2019, செப்டம்பர் 13 அன்று செனாய் நகரிலுள்ள சாய்பாபா கோவிலுக்கு அருகிலுள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டிற்கு வர வழைத்தார். நானும், இதுநாள்வரை பொதுவெளியில்தான் நம்மை சந்தித் துள்ளார். டீசண்டாக நடந்து கொண் டுள்ளார் என்று நம்பி சென்றேன். மனைவியுடன் விவாகரத்து முடிந்த வுடன் என்னை திருமணம் செய்து கொள்வேன் என்கின்ற அவரது சத்தியத்தை நம்பினேன். இதற்குப் பிறகும் பல நாட்கள்

இதனிடையே அங்கிருந்து மேற்கு மண்டலத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டார். அவருடைய தேவையை நிறைவேற்றும் பெண் ணாய் நான் இருந்துள்ளேன். "எப்பொழுது நமது திருமணம்' என எப்போது கேட்டாலும், இன்று, நாளை... என நாளை கடத்தியவர், ஒரேடியாக என்னை பிளாக் செய்து விட்டார். மேற்கு மண்டலம் சென்ற வுடன் அங்கேயும் என்னைப்போல் பல பெண்களையும் ஏமாற்றியதாக என்னிடம் அவருடைய நண்பர்கள் கூற, அனுதாபத்தை காரணம் காட்டி எங்களைப் போன்ற பெண்களைச் சீரழிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்கின்ற காரணத்தி னாலேதான் அவனுக்கு உறைக்க வேண்டுமென்பதற்காக பொது வெளியில் பதிவிட்டேன். உளவுத் துறை அதிகாரிகள் இதுகுறித்து விசாரித்துள்ளனர். சீக்கிரம் காவல்துறை இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமென நம்புகின்றேன்'' என்றார்.

இது இப்படியிருக்க, சமீபத்தில் கடந்த வாரத்தில் 12 ஐ.பி.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்திருந்தது தமிழக அரசு. அதில் மேற்கு மண்டலத்தில் பணியாற்றிய இந்த மன்மத அதிகாரியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த அதிகாரியால் பாதிக் கப்பட்ட பெண்களின் லிஸ்ட் நீளமானது. இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தைப் பயன்படுத்தும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மொத்தமே நான்கு நபர்கள் மட்டுமே.! அதில் அவரும் ஒருவர். அந்த மன்மத அதிகாரியின் சொந்த ஊர் சென்னை. சர்ச்சையின் நாயக னான இவர், தூத்துக்குடியில் நடைபெற்ற சிவப்பு சட்டைப் பேரணியை ரத்தக் களறியாக்கியது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின்போது திரேஸ் புரம் பகுதியில் நின்று கொண்டி ருந்த ஜான்ஸி என்பவரை குறி வைத்து தலை சிதற சுட்டுக் கொன்றதும் இவரது கைங்கர் யமே! ஆரம்பத்தில் நடிகை ஒருவருடன் ஊர் சுற்றியதையும், துணை நடிகைகளுடன் பழக்கம் வைத்திருப்பதையும் கண்ட இவரது மனைவி விவாகரத்து வழக்கு தொடர்ந்திருக்கின்றார். இவரால் மதுவும், பெண்களும் இல்லாமல் இருக்க முடியாது. அதுபோல் மேற்கு மண்டலத்தில் மணியான முன்னாள் அமைச்சரும் இவருக்கு ஆதரவு என்பதாலும், சமீபத்திய பெண் விவகாரத்தாலும் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டார்'' என்கிறார் மேற்கு மண்டலத்தில் பணியாற்றி வரும் உளவு அதிகாரி ஒருவர்.

nkn020422
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe