2008-ஆம் ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் உருவான டீம், சென்னை சூப்பர் கிங்ஸ். நான்கு முறை ஐ.பி.எல். சாம்பியன்ஷிப்பை வென்ற டீம். இந்த ஐ.பி.எல்.லில் ஒரு ஆட்டத்தில் வெற்றியைப் பெறுவதற்கே திணறித் தேறியது.

பத்து அணி விளையாடும் ஐ.பி.எல். போட்டிகளில், கடந்தமுறை சாம்பியனான இந்த டீம், இதுவரை விளையாடிய ஐந்து மேட்ச்களில் நான்கில் தோல்வியடைந்து ஒரே ஒரு மேட்சில் மட்டும் வெற்றிபெற்று, புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸுக்கு மேல்... 9-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஏன் இந்த மாற்றம் என ஐ.பி.எல். வட்டாரங்களில் கேட்டோம்...

ipl

Advertisment

""ஐ.பி.எல்.லின் பிராண்ட் வேல்யூ 47,500 கோடி ரூபாய். இது பழைய கணக்கு. எட்டு அணிகளாக இருந்த ஐ.பி.எல். போட்டி இப்பொழுது பத்து அணிகளாக வளர்ந்துள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ 732 கோடி ரூபாய். ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இண்டியன்சுக்கு அடுத்தபடியாக நான்கு முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி சென்னை சூப்பர் கிங்ஸ்.

உலக அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கெடுக்கும் பண மதிப்புமிக்க 150 அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸும் ஒன்று என லண்டனில் உள்ள விளையாட்டு அணிகளை மதிப்பிடும் கழகம் அறிவித்துள்ளது. இதில் சென்னை அணியின் கேப்டனாக, கடந்த சீஸன் வரை செயல்பட்ட தோனி, சென்னை அணியை விட பணக்காரராக 846 கோடி ரூபாய் மதிப்புள்ளவராக இருக்கிறார். அவரது மாத வருமானம் 4 கோடி ரூபாய் என்கிறது புள்ளி விபரங்கள்.

ipl

பாய்ந்து வரும் பந்தை நொடிப்பொழுதில் கணித்து அடிப்பது, கோடிக்கணக்கான ரூபாய் தரும் பிசினஸ் என முதலில் கணித்தவர், ஐ.பி.எல்.லை தொடங்கியவரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முன்னாள் உரிமையாளரு மான லலித்மோடி. அவர்தான், கபில்தேவால் ஐ.சி.எல். (இந்திய கிரிக்கெட் லீக்) என தொடங்கப்பட்ட 20 ஓவர் போட்டிகளை ஐ.பி.எல். என இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கீழ் கொண்டு வந்தவர்.

ஐ.சி.எல். போட்டிகளுக்கு பி.சி.சி.ஐ. எனப்படும் கிரிக்கெட் வாரியம் தடை விதிக்க... ஐ.பி.எல். காலத்தின் கட்டாயமானது. முதல் போட்டி நடந்தபோது, அந்த வருடம் சாம்பியன் ஆனது லலித்மோடி உரிமையாளராக இருந்த ஆஸ்திரேலிய கிரிக்ùட் வீரர் ஷேன்வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அதன்பிறகு பெரும்பாலான சாம்பியன் பட்டம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சென்றது. ஒருமுறை சன் டி.வி.யின் சன் ரைசர்ஸ் அணி வென்றது.

மும்பை அணியின் உரிமையாளர், இந்தியாவின் பிரபல தொழிலதிபர் அம்பானி. இவருக்கும் கிரிக்கெட் விளையாட்டுக்கும் தொடர்பில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உரிமையாளர் தமிழகத்திலும் ஆந்திராவிலும் சிமென்ட் தொழில் நடத்தும் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சீனிவாசன். இவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் பல ஆண்டுகள் இருந்தவர். இவர் வைத்ததுதான் சட்டம் என பல ஆண்டுகள் கோலோச்சிய சீனிவாசன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி தலைமையில் கொண்டு வந்தார்.

2013-ஆம் ஆண்டுவரை நன்றாக போய்க் கொண்டிருந்தது. 2013-ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் தோனி, ரெய்னா போன்றோர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்ப னோடு சிக்கினர். இரண்டாண்டு காலம் சென்னை அணிக்கு தடை விதிக்கப்பட்டது.

ipl

தடை முடிந்து வெளியே வந்த சென்னை அணி, சாம்பியன் பட்டம் வென்றது. அப்பொழுதெல்லாம் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு பக்கபலமாக அம்பயர்கள் இருந்தனர். அவர்கள் சென்னை அணிக்கு அவுட் கொடுக்க மாட்டார்கள். எதிர் அணிக்கு அவுட் கொடுப்பார்கள். அவர்களெல்லாம் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகியான சீனிவாசனால் இயக்கப்பட்டார்கள். இதுதான் சென்னை அணியின் வெற்றிக்கு காரணம்.

மும்பை அணி ஒரு பெரிய தொழிலதிபரால் நடத்தப்படுகிறது. ஆளுகின்ற அரசுக்கு சாதகமாக அம்பானி சகோதரர்கள் தங்கள் அணிக்கு எதிராக அம்பயர்கள் முடிவுகளைத் தவறாகக் கொடுத்தால் விடமாட்டார்கள் என்பதால் மும்பை அணி வெற்றி பெற்றது.

இந்த செட்டிங்குகளுக்கு எதிராக ஐ.பி.எஸ். மேட்ச்க ளில் டி.வி. கேமராக்கள் மூலமாக அவுட் கொடுக்கும் டி.ஆர்.எஸ். முறை வேண்டும் என்கிற குரலை சீனிவாசனுக்கு எதிராக கொல்கத்தா வீரரான சவுரவ் கங்குலி எழுப்பினார்.

சீனிவாசனால் விரட்டியடிக்கப்பட்ட, ஐ.பி.எல். போட்டிகளின் முதல் சாம்பியன் அணியான ராஜஸ்தான் ராயல்சின் உரிமையாளரான லலித்மோடியின் சிஷ்யர் சவுரவ் கங்குலி. அவரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக்கினார் பா.ஜ.க.வின் பவர்புல்லான அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா. கங்குலி தலைவரானதும் ஜெய்ஷா செய லாளராக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் பொறுப்பேற்றார்.

அதன்பின் ஐ.பி.எல். போட்டிகளே மாறிவிட்டது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் பெயரில் "குஜராத் டைட்டன்ஸ்' என ஒரு அணியும், பா.ஜ.க. ஆளும் உத்திரப்பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டு "லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்' என ஒன்றுமாக இரு அணிகளை ஐ.பி.எல். போட்டிக்கு கொண்டு வந்தார் ஜெய்ஷா.

இப்போது நடக்கும் ஐ.பி.எல். போட்டிகள் அனைத்தும் டெலிவிஷன் ரீ-ப்ளே அடிப்படையில், டி.ஆர்.எஸ். முறையில் முடிவு செய்ய கங்குலியும், ஜெய்ஷாவும் தீர்மானித்தனர். அத்துடன் போட்டிகளை ஒரே இடத்தில் நடக்கும்படி மகாராஷ்டிராவின் மும்பை நகரிலேயே நடத்தினர்.

விளைவு... கடந்த புதன்கிழமை நிலவரப்படி... முதலிடத்தில் ராஜஸ்தான் அணி வந்துவிட்டது. அதையடுத்து கங்குலியின் கொல்கத்தா அணி, அதன்பிறகு குஜராத், அதற்குப் பின் லக்னோ என அணிகள் இடம் பிடிக்க... பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், ஹைதரா பாத் அடுத்த இடங்களுக்கு வந்துள்ளன. சென்னையும் மும்பையும் முன்னாள் தொடர் சாம்பியன்கள் என்கிற புகழை மீறி கடைசி இடம் பிடித்துள்ளன.

அத்துடன், மற்றெந்த ஐ.பி.எல். சீசன்களையும்விட ஆயுஷ்பதோனி, திலக்வர்மா, அனுஜ்ராவத், அபிஷேக்வர்மா போன்ற புதிய வீரர்கள், இந்திய கிரிக்கெட்டிற்கு கிடைக்கும் அளவுக்கு போட்டிகள் நடந்து கொண்டிருக் கின்றன என சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடிமட்டத்திற்கு போன கதையை விவரிக் கிறார்கள்.

""அணிகளின் உரிமையாளர்கள் அம்பயர்களையே செட் செய்யும்போது விளையாட்டு வீரர்கள் இப்படித்தான் பௌலிங் போட வேண்டும், இந்த ஓவரில் பேட்ஸ்மேன் சிக்ஸர் அடிக்க வேண்டும் என செட் செய்ய மாட்டார்களா? அம்பயர்களைக் கட்டுப்படுத்த டி.வி. ரீ-ப்ளே இருக்கிறது. விளையாட்டு வீரர்களை கட்டுப்படுத்த என்ன இருக்கிறது?'' என கேட்டோம்.

ipl

""ஐ.பி.எல். போட்டி யில் சர்வதேச வீரர்கள் விளையாடுவார்கள். அவர்களை சர்வதேச கிரிக்கெட் கழகத்தின் ஊழல் தடுப்புப் பிரிவு கண்காணிக்கிறது. அவர்கள் ஊக்க மருந்து உட்கொள்கிறார்களா? என அவர்களது ரத்தமும் சிறுநீரும் கூட பரிசோதிக்கப்படுகிறது'' என பதில் சொன் னார்கள்.

""அதையும் மீறித்தானே 2013-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெட்டிங்கில் ஈடுபட்டதாகக் கூறி இரண்டாண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது?'' என கேட்டதற்கு...

""அந்தக் குற்றச்சாட்டில் உண்மை நிரூபிக்கப்படவில்லை. அதனால்தான் சென்னை அணி மறுபடியும் விளையாட அனுமதிக்கப் பட்டது'' என பதில் சொல்கிறார்கள் கிரிக்கெட் வாரியத்தைச் சேர்ந்தவர்கள்.

ஐ.பி.எல்.லில் புரளும் பணத்தை விட பெட்டிங்கில் அதிக பணம் புரளுகிறது. ""சென்னை சௌகார்பேட்டையில் உள்ள சராசரி வடஇந்தியர் ஒருவர், இதுவரை நடந்த ஐ.பி.எல். போட்டிகளில் பத்து கோடி ரூபாய் பெட் வைத்திருக்கிறார்'' என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

இது தவிர ட்ரீம் 11 என்கிற சூதாட்ட நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகளின் ஸ்பான்சராகவே இணைந்திருக்கிறது. மைதானத்துக்கு வெளியே நடக்கும் பெட்டிங்குகள் எல்லாம் மைதானத்திற்குள் நடக்கும் மேட்ச்சில் வீசப்படும் ஒவ்வொரு பந்தையும் அடிப்படையாக வைத்துதான் நடக்கிறது.

""முன்னாள் சாம்பியன்களான மும்பையும், சென்னையும் ஜெயிக்கும் என பெரும்பான்மை யானோர் பெட் கட்டியிருந்தார்கள். ஆனால் அந்த அணிகள் தோற்றுவிட்டன'' என்கிறது சூதாட்டத்தில் ஈடுபடும் தரகர்களின் வட்டாரம்.

""இனி மும்பையோ, சென்னையோ எழுச்சி பெறுமானால் அது வீரர்களின் திறமையால் நடக்குமா என்பது, ஐ.பி.எல். போட்டிகளைப் பொறுத்தவரை சந்தேகம்'' என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.

Advertisment