மிரட்டும் நீட்! ஏமாற்றும் அரசு! -போராடத் தயாராகும் தமிழகம்!

neetopposite

டந்த ஆண்டே நீட் நம் தலையில் கட்டப்பட்டுவிட்டது. அதை அகற்ற முயற்சி எடுக்கவேண்டிய மாநில அரசு "நீட் கோச்சிங் சென்டர்களை ஆரம்பிப்போம்' என்ற அலட்சிய அறிக்கையுடன் ஒதுங்கிக்கொண்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விலையாக அனிதாவின் உயிரைக் கொடுத்த நிலையில், புதிய இழப்புகளைத் தவிர்க்கவும், மாநில உரிமைகளை உறுதிப்படுத்தவும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் பொசுங்காமல் தடுக்கவும் நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு சென்னை தேனாம்பேட்டை -காமராஜர் அரங்கில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு முடிவுகட்ட பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர்த்த மற்ற அனைத்துக் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து, உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு, புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு போன்றவை இணைந்து நீட் தேர்வுக்கான நிரந்தர விலக்கு மாநாட்டை நடத்தின.

இந்த மாநாட்டில் ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன், வைகோ, திருச்சி சிவா, செல்வப்பெருந்தகை, வழக்கறிஞர் பாலு, சீமா

டந்த ஆண்டே நீட் நம் தலையில் கட்டப்பட்டுவிட்டது. அதை அகற்ற முயற்சி எடுக்கவேண்டிய மாநில அரசு "நீட் கோச்சிங் சென்டர்களை ஆரம்பிப்போம்' என்ற அலட்சிய அறிக்கையுடன் ஒதுங்கிக்கொண்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விலையாக அனிதாவின் உயிரைக் கொடுத்த நிலையில், புதிய இழப்புகளைத் தவிர்க்கவும், மாநில உரிமைகளை உறுதிப்படுத்தவும், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் பொசுங்காமல் தடுக்கவும் நீட் தேர்வுக்கு எதிரான மாநாடு சென்னை தேனாம்பேட்டை -காமராஜர் அரங்கில் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது.

நீட் தேர்வுக்கு முடிவுகட்ட பா.ஜ.க., அ.தி.மு.க. தவிர்த்த மற்ற அனைத்துக் கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து, உலகத் தமிழ் அமைப்பு முன்னெடுக்க தமிழ்நாடு, புதுச்சேரி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு, தமிழர் உரிமைக்கான மாணவர்கள் இளைஞர்கள் கூட்டமைப்பு போன்றவை இணைந்து நீட் தேர்வுக்கான நிரந்தர விலக்கு மாநாட்டை நடத்தின.

இந்த மாநாட்டில் ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன், வைகோ, திருச்சி சிவா, செல்வப்பெருந்தகை, வழக்கறிஞர் பாலு, சீமான், வேல்முருகன், ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, ஆளூர் ஷாநவாஸ், பி.ஆர்.பாண்டியன், மணியரசன், நடிகர் சத்யராஜ், கவிஞர் வைரமுத்து, கோவை ராமகிருஷ்ணன், வழக்கறிஞர் அருள்மொழி, திருமுருகன் காந்தி உள்பட அரசியல், சமூக இயக்கத் தலைவர்கள் பேசினர். மேற்குவங்காளத்திலிருந்து வந்த கல்வியாளர் முனைவர் கோர்கா சாட்டர்ஜியும் கலந்துகொண்டு உரையாற்றினார்.

"நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்குத் தரவேண்டும், கல்வியை மாநிலப் பட்டியலில் சேர்க்கவேண்டும்' என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

""மாநில அரசின் பாடத்திட்டத்தில் படிக்கும் கிராமப்புற, ஏழை மாணவர்கள் மருத்துவர்களாவதற்கும், கடைக்கோடிச் சிற்றூர்களில் தேவையான மருத்துவத் தொண்டாற்றுவதற்கும் பெரும்தடையாக இருக்கும் மிகக்கொடிய நீட் தேர்வுக்கு எதிராகத் தம் உயிரையே ஈந்த அனிதாவை இம்மாநாடு வணங்குகிறது.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்குகோரும் தமிழக அரசின் சட்ட முன்வரைவை உடனடியாக இந்திய ஒன்றிய அரசு சட்டமாக்க வேண்டும்.

நீட் மட்டுமல்லாது, இந்திய நிலப்பரப்பு முழுவதற்கும் நடத்தும் எவ்வகையான நுழைவுத்தேர்வும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், மாணவர் சேர்க்கை ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்புக்கு எதிராக இந்திய ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாநில அரசுகளும் வழக்குத் தொடுத்து, நுழைவுத்தேர்வு/ மாணவர் சேர்க்கை உரிமைகளை மாநில அரசுகளே திரும்பப்பெற இம்மாநாடு வலியுறுத்துகிறது.

neet-opposite

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குப் புறம்பான முறையில் நெருக்கடி நிலையின்போது, மாநில அரசின் கல்வி உரிமை ஒன்றிய அரசால் தகாத வழியில் பறிக்கப்பட்டது. அதனை மீண்டும் மாநிலப் பட்டியலில் சேர்க்க இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் நிறைவேறியபிறகு வந்திருந்த அனைத்துத் தலைவர்களும் தங்கள் கருத்துகளைப் பேசினர். அவை நீட் தேர்வுக்கு எதிரான கொந்தளிப்புகளாக, எச்சரிக்கைகளாக, நீட்டின் அநீதியை விளக்குவதாக இருந்தன. நீட் தேர்வுக்கு எதிராக, வருகின்ற 6-ஆம் தேதி போராட்டம் நடத்தவேண்டுமென இறுதித் தீர்மானம் நிறைவேற்றினர்.

directorgawthamஇந்த மாநாட்டை ஒருங்கிணைத்த இயக்குநர் கௌதமன், “""இரண்டு மாதமாக ஒட்டுமொத்த அரசியல் தலைவர்களிடம் பேசி அவர்களை வரவழைத்து வெற்றிகரமாக மாநாட்டை நிகழ்த்தியதுபோன்றே இந்த நீட் தேர்வையும் வெற்றிகரமாக விரட்டியடிப்போம்''’என்றார். +1, +2 மாணவர்கள் அவர்களது பெற்றோர் என பலரையும் மாநாட்டிற்கு வரச்செய்தது கௌதமன் அணியினரின் முயற்சியைக் காட்டியது.

நீட் தேர்வுக்கு இரண்டு வாரத்துக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நீட் கோச்சிங் சென்டர்களைத் தொடங்குவதாகச் சொன்ன தமிழக அரசு வெறும் 412 கோச்சிங் சென்டர்களையே தொடங்கியுள்ளது. இதில் கோச்சிங் அளிப்பவர்களுக்கு குறைந்த ஊதியமே அளிக்கப்படுவதால், பயிற்சியாளர்களும் பெரிய ஆர்வமின்றி உள்ளனர். லட்சக்கணக்கான மாணவர்கள் நாடெங்கும் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், "அவர்கள் அனைவருக்கும் இந்த அரசு கோச்சிங் சென்டர்களில் இடம் கிடைக்குமா?' என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்த சென்டர்கள் மிகவும் தாமதமாக 12-ஆம் வகுப்பு தேர்வையொட்டியே தொடங்கப்பட்டதால், பலரும் தேர்வுக்கு தயாராவதிலேயே கவனம் செலுத்தினர்.

neet-opposite

11-ஆம் வகுப்பு முதலே நீட் கோச்சிங் அளிக்கப்படுவதுதான் சரியாக இருக்குமென்கிறார்கள் பிரபல நீட் பயிற்சியாளர்கள். அரசு கோச்சிங் சென்டர்களில் 12-ஆம் வகுப்பு பாடங்களிலேயே கவனம் செலுத்தப்படுகின்றன. ஆனால், நீட் தேர்வில் 11-ஆம் வகுப்பு பாடங்களிலிருந்தே பெரும்பான்மையான கேள்விகள் வருமென நீட்டின் சூட்சுமம் தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.

மறுபுறம் தமிழகமெங்கும் உள்ள தனியார் நீட் பயிற்சி மையங்களிலோ 25,000 முதல் 50,000 வரை பணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் வசதியுள்ளவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மட்டும்தான் சேரமுடியும். நீட்டைத் தடுக்காமல் கோட்டைவிட்டவர்கள், நாடுமுழுவதும் கோச்சிங் சென்டர்கள் அமைக்கப்போவதாக நீட்டி முழக்கிவிட்டு, அதிலும் கோட்டைவிட்டிருக்கிறார்கள் என்பதுதான் கண்முன் புலப்படுகிற நிஜம்.

-அ.அருண்பாண்டியன்

படம்: சுந்தர்

NEET Protest
இதையும் படியுங்கள்
Subscribe