மிரட்டும் நீட்! ஏமாற்றும் அரசு! -போராடத் தயாராகும் தமிழகம்!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
ரமணா பட பாணியில் ஊழல் செய்த பா.ஜ.க; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கழுதூர் உள்ளது. இந்த பகுதியில் வெங்கடேஸ்வரா கல்வியியல் வளாகத்தில் கலைஞர் திடல் அமைக்கப்படவுள்ளது. இந்த திடலில் ஒருங்கிணைந்த கடலூர் மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். மேலும் இந்த கூட்டத்திற்கு, அமைச்சர் சி.வி. கணேசன், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய அதிமுக தற்போது எதிர்க்கட்சியாக இருக்கிறது. அந்த கட்சி அதற்காக போராட வேண்டும். இந்த நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன். நீட் தேர்வு ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்த இருக்கிறேன். இந்த போராட்டத்திற்கு ஒரு உதயநிதி ஸ்டாலின் மட்டும் போதாது, ஒவ்வொருவரும் உதயநிதியாக மாற வேண்டும். நீட் தேர்வுக்கு எதிராக திமுக இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் கடந்த வாரத்தில் போராட்டம் நடத்தினோம்.
அந்த போராட்டத்தின் தலைமையாக சென்னையில் அறப்போராட்டம் நடந்தபோது, ஒரு அமைச்சராக இருக்கும் போது போராட்டம் நடத்தினால் அமைச்சர் பதவியில் தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள் என்று பத்திரிகையாளர்கள் கூறினர். அதேபோல், அதிமுக வழக்கறிஞர் ஒருவர், என்னை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் புகார் கொடுத்தார். ஆனால், எனக்கு இந்த அமைச்சர் பதவி எல்லாம் முக்கியம் கிடையாது. தமிழக மாணவர்களின் உயிர் தான் முக்கியம்.
இந்த பதவி, பொறுப்பு, அமைச்சர் பதவிக்காக திமுக தொடங்கப்படவில்லை. மாநில கல்விக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் தொடங்கப்பட்டது தான் திமுக என்பதை அனைவரும் உணர வேண்டும். நீட் தேர்வு விலக்குப் பெறுவது தொடர்பாக திமுக உறுதி அளித்தது உண்மைதான். அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். அந்த உறுதிமொழிக்கேற்ப உண்மையாக போராடி வருகிறேன்.
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சி அமைந்து 9 ஆண்டுகளாகியும் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி இந்தியாவில் இருந்த நாள்களை விட வெளிநாட்டில் இருந்த நாள்கள் தான் அதிகம். ஒன்றிய பா.ஜ.க அரசு ரூ.7 1/2 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது. ரமணா பட பாணியில் ஆயுஷ்மான் காப்பீட்டு திட்டத்தை இறந்து போன 88 ஆயிரம் கோடி பேருக்கு கொடுத்து ஊழல் செய்துள்ளார்கள். நாங்கள் மோடிக்கும் பயப்பட மாட்டோம், ஈ.டி.க்கும் பயப்பட மாட்டோம். ஏனென்றால் தமிழகத்தை மு.க. ஸ்டாலின் ஆண்டு கொண்டு இருக்கிறார்.
மோடியால் வளர்ந்தது ஒரே குடும்பம் அதானி குடும்பம் தான். அவர்கள் ரயில்வே, விமான சேவை, ஸ்டேடியம் என அனைத்தையும் அதானியிடம் ஒப்படைத்து விட்டார்கள். தமிழ்நாடு எனும் வீட்டில் விஷப் பாம்பு எனும் பா.ஜ.க நுழைய பார்க்கிறது. வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக எனும் அடிமைகளை விரட்டி பா.ஜ.க.வை வீட்டிற்கு அனுப்பி நாட்டை சுத்தப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.
Next Story
நீட் ரத்து எனக்கூறி மாணவர்களுக்கு அழுத்தம் தருவது திமுக தான் - விஜய பிரபாகரன் கருத்து
'நீட்டை ரத்து செய்வோம் எனக்கூறி மாணவர்களுக்கு அழுத்தம் தருவது திமுகதான்' என தேமுதிகவின் விஜய பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில், ''விஜயகாந்தின் உடல்நிலையில் சற்று பின்னடைவு தான் ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் நன்றாகத்தான் இருக்கிறார். அவர் இப்பொழுது இருக்கக்கூடிய நடைமுறைக்கு நன்றாகவே இருக்கிறார். நூறு வயசு வரைக்கும் நல்லா இருப்பார். ஆனால் பழையபடி அவர் வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நிச்சயம் நாங்களும் நம்புகிறோம். இப்போதைக்கு விஜயகாந்த் நன்றாகத்தான் இருக்கிறார்.
ரசிகர் மன்ற காலத்திலிருந்து அப்பாவின் நிழலாக இருந்து அம்மா ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். நானும் சின்ன வயசுல இருந்தே எப்படி எல்லாம் எங்க அப்பா மக்களுக்கு உதவி செய்கிறார். கட்சியில் எப்படி கஷ்டப்பட்டார் என்பதை பார்த்து நானும் என் கனவை கூட ஒதுக்கி வைத்துவிட்டு தொண்டர்கள் கூப்பிட்ட குரலுக்காக ஓடோடி வந்து துணை நின்று வேலை பார்த்து வருகிறேன்.
அதிமுகவிற்கு மாநாடு ஒன்றும் புதிதல்ல, அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அதேபோன்ற கூத்து தான் இப்பொழுது நடந்துள்ளது. அவர்கள் கட்சிக்குள்ளேயே நிறைய குழப்பம் இருப்பதால். நீ பெருசா; நான் பெருசா என்று போட்டி போட்டுக் கொண்டு செய்கின்ற விஷயமாகத்தான் அதிமுக மாநாட்டை பார்க்கிறேன்.
நீட் தேர்வு என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல இந்தியா முழுவதும் நீட் தேர்வு இருக்கிறது. எந்த அரசியல்வாதியும் அரசியல் செய்யாமல் சரியான விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அப்படி சொன்னால் அதற்கான பலன் கிடைக்கும். நம்மைவிட பின்தங்கிய பல மாநிலங்கள் இருக்கிறது .அங்கே எல்லாம் கூட இதுபோன்ற உயிரிழப்புகள் கம்மியாக இருக்கிறது. ஆனால் திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்வோம் என கூறுவதால் மாணவர்கள் மீது அழுத்தம் போகிறது. என்ன நிலைப்பாடு அதைச் சரியாக சொல்லி விட்டால் இந்த பிரச்சனை இருக்காது'' என்றார்.