லக சதுரங்க கூட்டமைப்பின் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொ டங்கியது. பிரமாண்ட மேடை, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள், நிகழ்த்து கலைகள் எனப் பார்வை யிட்டவர்களின் மனதை கொள்ளை கொண்ட இந்த விழாவில், ஆளுநர் ஆர். என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக்சிங் தாக்கூர், எல். முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்ள, ஒலிம்பியாட் ஜோதியை தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்தியப் பிரதமர் மோடியிடம் வழங்கி தொடங்கிவைத்தார்.

chess

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ரூ.100 கோடி செலவில் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன. ஜூலை 28 தொடங்கி, ஆகஸ்ட் 10 வரை போட்டிகள் நடக்கவுள்ளன.

விழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தன. தப்பாட்டம், பரதம், காவடியுடன் செஸ் வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. எல்.சி.டி. திரையில் மணலைத் தூவி மகாத்மா காந்தி, முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி, செஸ் சின்னமான தம்பி உள்ளிட்ட படங்களை வரைந்துகாட்டி அசத்தினார் மணல் ஓவியர் சர்வம் படேல்.

ஒற்றுமையை வலியுறுத்தி பரத நாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம், கதக், மணிப்பூரி, ஒடிசி, கதகளி ஆட்டங்கள் ஒருங் கிணைக்கப்பட்டிருந்தன. இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் ஒரே நேரத்தில் இரு பியானோக்களை இசைத் தது பார்வையாளர்களால் வியப்புடன் பார்க்கப்பட்டது. அதே போல கமல்ஹாசனின் பின்னணிக் குரலுடன், தமிழர் வரலாற்றைக் கூறும் நிகழ்த்து கலை பார்வையாளர்களை கொள்ளைகொண்டது. அதில் கரிகால்சோழன் கல்லணை கட்டியது, ராஜேந்திரசோழன் கடல்கடந்து வென்றது, பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்தது. சிலப்பதிகாரச் சிறப்பு, யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் தமிழர் பாரம்பரியம் உள்ளிட்டவை சிறப்பாக நடித்துக்காட்டப்பட்டது.

Advertisment

cc

விழா மேடைக்கு 5 மணிக்கு முன்பாகவே முதல்வர் ஸ்டாலின் வந்துவிட்டார். சென்னை வந்திறங்கிய பிரதமர் மோடி, விழா மேடையை வந்தடைய 6.30 மணியானது. பட்டு வேட்டி சட்டையில் வந்திருந்த முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு தொல்காப்பியம் புத்தகத்தை வழங்கி மேடைக்கு அழைத்துச் சென்றார். தனது உரையின்போது, “"சர்வதேச சதுரங்கப் போட்டியால் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைக்கும். பிரதமரை நேரில் சென்று அழைக்கத் திட்டமிட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் நலம் விசாரிக்க பிரதமர் அழைத்தபோது, எனது நிலையை அவரிடம் விளக்கினேன். ‘நிச்சயம் இந்த விழாவில் கலந்துகொள்வேன். நீங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்’ என்றார்.

பிரதமர் மோடிக்கு செஸ் விளையாட்டின் மீதான ஆர்வத்தை நான் அறிவேன். அவர் குஜராத் முதல்வராக இருந்தபோது 20,000 வீரர்கள் பங்கேற்ற செஸ் போட்டியை நடத்திக்காட்டியவர்.

இந்த 44-வது பன்னாட்டு செஸ் ஒலிம்பியாட் முதலில் ரஷ்யாவில் நடப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் சில பிரச்சனைகளால், அது சிக்கலுக் குள்ளானபோது இந்தியாவில் நடக்கும் வாய்ப்பு வந்தால், தமிழகத்தில் நடத்தும் வாய்ப்பை நாம் பெறவேண்டுமென அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டேன்.

Advertisment

c

தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் நடப்பது உறுதியான நிலையில், விளையாட்டுப் போட்டியை ஒருங்கிணைக்க 18 குழுக்களை அமைத்தேன். இத்தகைய சர்வதேச விளையாட்டுப் போட்டியை ஏற்பாடுசெய்ய 18 மாதங்களாகும் என்பர். தமிழ்நாடு 4 மாதங்களில் செய்திருக்கிறது என்பதில் எனக்குப் பெருமைதான். இந்த பெருமிதத்தில் இளைஞர்நலன் மற்றும் விளை யாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனுக்கும் அதிகாரிக ளுக்கும் பங்குண்டு.

இந்தப் போட்டியால் விளையாட்டுத் துறை, அதனோடு சேர்ந்து சுற்றுலாத் துறை பெரிய வளர்ச்சியை அடையும். தமிழகத்தின் மதிப்பும் உயரும். ஆசியக் கண்டத்தில் மூன்றாவது முறையாகவும், இந்தியாவில் முதல்முறையாகவும் நடைபெறுகிறது செஸ் ஒலிம்பியாட்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே இந்தியாவில் விளையாடப் பட்ட சதுரங்க விளையாட்டே, பல மாறுதலுக்கு உட்பட்டு செஸ்ஸாக மாறியிருக்கிறது. செஸ் விளையாட்டில் சென்னையை, இந்தியாவின் தலைநகரம் என்று சொல்லலாம். இந்தியாவில் உள்ள 73 கிராண்ட் மாஸ்டர்களில், 26 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த செஸ் விளையாட்டுக்கான சின்னமான தம்பியை, செஸ்ஸை நினைவுபடுத்தும் விதமாக குதிரையின் வடிவிலும், தமிழர் பாரம்பரிய உடையில் வணக்கம் சொல்வதுபோலும் வடிவமைத்தோம்.

தமிழகம் எங்குமுள்ள பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளி களுக்கிடையே செஸ் போட்டிகள் நடத்த ஒரு கோடி ரூபாயை பள்ளிக் கல்வித்துறை ஒதுக்கியிருக்கிறது. சிறப்புமிக்க இந்த விழாவுக்கு வருகைதந்த பிரதமர் மோடிக்கு நன்றியையும் எனது வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு வீரர்களையும் தமிழகத்துக்கு வரவேற் கிறேன்''’என்று பேசி அமர்ந்தார்.

ஜூன் 19-ஆம் தேதி டெல்லியில் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்ட ஜோதி, இந்தியாவின் 75 நகரங்களைக் கடந்து ஜூலை 27-ஆம் தேதி சென்னை வந்தடைந்தது. அந்த ஜோதியை கிராண்ட்மாஸ்டர் விஸ்வநாதன் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்க, அவர் அதை பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார். பின் கிராண்ட் மாஸ்டர்கள் விஜயலட்சுமி, பிரக்ஞானந்தா, குகேஷ் ஆகியோர் ஜோதியைப் பெற்று அரங்கை வலம்வந்து பீடத்தில் ஜோதியை ஏற்றினர்.

போட்டியைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, செஸ் கட்டங்களை நினைவுபடுத்தும் கறுப்பு- வெள்ளைக் கட்டங்களிலான விளிம்புடைய வேட்டி, சட்டை அணிந்திருந்தார். "செஸ் போட்டி களின் தாயகமாக விளங்கும், இந்தியாவில், மிகவும் கவுரவம் வாய்ந்த செஸ் போட்டி நடக்கிறது. இந்தியாவின் 75-ஆவது சுதந்திர தினம் நடக்கும் நேரத்தில் இந்த போட்டி நடக்கிறது. மிகக் குறைந்த காலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்தும் விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்தப் போட்டியின் மூலம் பல இளைஞர்கள் செஸ் விளையாட்டில் ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். இனி எப்போதும் இந்தியாவிலிருந்துதான் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தொடங்கும். இதற்காக இந்தியர்கள் ஒவ்வொருவரின் சார்பாக பிடே அமைப்புக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களில் விளையாட்டு தொடர்பான அழகான சிற்பங்களை நாம் காணமுடியும். சதுரங்கவல்லப நாதன் கோயில் திரூவாரூரில் உள்ளது. அந்தக் கோயிலில் கடவுளே சதுரங்கம் விளையாடுவதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கும் செஸ் போட்டிக்குமான வரலாற்றுத் தொடர்பை அறியமுடிகிறது.

தமிழகம் பல கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்கியுள்ளது. தமிழகம் தனித்துவமான கலாச்சாரம், பழமையான மொழியைக் கொண்டி ருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே, நாம் சம்பாதிப்பதெல்லாம், வீட்டுக்கு வரும் விருந்தினர்க ளுக்கு விருந்தோம்பல் செய்யத்தான் எனக் கூறியுள்ளார் வள்ளுவர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் விருந்தினர்களாக வந்துள்ளார்கள். இந்தியர்கள் விருந்தினர்களை கடவுளுக்கு இணையாக நடத்துவர். இந்திய விருந்தோம்பலின் சிறப்பை சர்வதேச வீரர்கள் பெறுவர்''’எனக் கூறினார்.

இதற்கிடையில், சென்னையில் நடைபெறும் செஸ் போட்டியில் பங்கேற்க, வீரர்களை அனுப்பியிருந்த பாகிஸ்தான், ஜம்மு- காஷ்மீர் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச்சென்றதை ஏற்கமுடியாதெனச் சொல்லி வீரர்களை திரும்ப அழைத்தது சலசலப்பை ஏற்படுத்தியது.