ள்ளிப் பருவத்திலேயே எதிர்கால லட்சி யத்துடன் படித்து வரும் செந்தமிழ் செல்வி, சிவகாசி -இந்து தேவமார் மேல்நிலைப்பள்ளியின் 8ஆம் வகுப்பு மாணவி ஆவார். சென்னையில் நக்கீரன் இதழும் ஈசஈ கைடுகளும் இணைந்து நடத்திய 3ஆம் ஆண்டு பேச்சுப்போட்டியில் கலந்துகொண்ட செந்தமிழ் செல்வி, விருதுநகர் மாவட்டத்தின் நிறைகுறைகளைப் பட்டியலிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அப்போது, சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களின் நிலை குறித்து உணர்ச்சிபொங்கப் பேசினார்.

ff

சிவகாசியில் அவர் படிக்கும் பள்ளியில் அனுமதி பெற்று செந்தமிழ் செல்வியை சந்தித்தோம். “சிவகாசியின் வாழ்வாதாரமும் உயிர்த் தொழிலும் பட்டாசுதான். இத்தொழிலை முதன் மைப்படுத்தி, மாறுபட்ட தொழில்நுட்பத்துடன், விபத்துகள் ஏற்படாதவாறு, தொழில் முனைவோர் கூட்டமைப்பை ஏற் படுத்தவேண்டும்.

பட்டாசுத் தொழி லாளர்களின் கனவான காப்பீட்டுத் திட்டத்தை, ஒவ்வொரு பட்டாசு ஆலையிலும் கட்டாயம் கொண்டுவரவேண்டும். வெடிவிபத்தில் சிக்கி ஊனமுற்ற பட்டாசுத் தொழிலாளர்கள், மாற்றுத் தொழிலில் ஈடுபட வழிவகை செய்யவேண்டும். வெடிவிபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உரிய உதவிகள் கிடைக்கச் செய்து, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்''’என்றார் வேகத்துடன்.

‘பட்டாசுத் தொழிலாளர் காப்பீட்டுத் திட்டத்தை, தொழிலாளர் சட்டத்தின் பெயரால், சம்பிரதாய அளவிலேயே விருது நகர் மாவட்ட பட்டாசு ஆலை கள் கடைப்பிடித்து வரு கின்றன’ என்ற பொதுவான குற்றச்சாட்டு குறித்து நம்மிடம் பேசிய சி.ஐ .டி.யு. மாவட்ட செய லாளர் தேவா, "தொழிலாளர் நலச் சட்ட பிரகாரம், ஊழியர் அரசு காப்பீடு (ஊநஒ) திட்டத்துல பட்டாசுத் தொழிலாளர்கள் அத்தனை பேரையும் பதிவு பண்ணுனா போதும். அவங்களுக்கு காப்பீடு, மருத்துவம், விபத்து எதுவும் நடந்து உயிரிழப்பு ஏற்பட்டால் வாரிசுகளுக்கு பென்சன், இழப்பீடுன்னு எல்லாம் கிடைக்கும். வெறும் காப்பீடுன்னா கொஞ்சமாத்தான் பணம் கிடைக்கும். ஃபேக்டரி ஆக்ட் பிரகாரம், ஒவ்வொரு தொழிலாளிக்கும் இன்சூரன்ஸ் பண்ணனும்கிற நடைமுறை இருக்கு. அதெல்லாம் பெயரளவுக்குத்தான் நடக்குது.

ff

Advertisment

இ.எஸ்.ஐ.ன்னா முதலாளி, தொழிலாளி ரெண்டு பேரோட பங்களிப்பும் அதுல இருக்கும். ஒருசில ஊர்கள்ல இ.எஸ்.ஐ.ல ஸ்கேன் போன்ற வசதி இல்லைன்னாகூட, வெளிய பிரைவேட்டா பார்த்துட்டு பணத்தை க்ளைம் பண்ணமுடியும். ஆனா பாருங்க.. 3 லட்சம் தொழிலாளர்கள் நேரடியா பட்டாசு ஆலைகள்ல வேலை பார்க் கிறதா சொல்லுறாங்க. பட்டாசு சார்ந்த தொழில்லயும் 3 லட்சம் பேர் ஈடுபடு றாங்க. இ.எஸ்.ஐ. கவரேஜோ 56 ஆயிரம் பேருக்குத்தான் கிடைக்குது. அப்படின்னா.. ஆறுல ஒரு பங்கு தொழிலாளர்கள்தான் வேலை பார்க்கிற கணக்குல வர்றாங்க. ஐந்து பங்கு தொழிலாளர்களை கணக்கில் காட்டாம பட்டாசு ஆலைகள் இருட்டடிப்பு பண்ணுது. எல்லா பட்டாசுத் தொழிலாளர்களையும் இ.எஸ்.ஐ.ல சேர்த்துட்டா, அத்தனை பேருக்கும் பணிக்கொடைல இருந்து சகல நிவாரணமும் கொடுக்க வேண்டியதிருக்கும்.

அதனாலதான், பட்டாசுத் தொழிலாளர்கள் பலரையும் கணக்குல வராம பார்த்துக் கிறாங்க. இதுகுறித்து நாங்களும் பல முறை புகார் கொடுத்திருக்கோம். ஒரு ஸ்பெஷல் டீம் போட்டு இன்ஸ் பெக்ஷன் வைக்கிறோம்னு சொல்லுவாங்க. ஆனா.. செய்யமாட்டாங்க. மாணவி செந்தமிழ் செல்வி சொன்ன மாதிரி பட்டாசுத் தொழிலுக்கென்று தொழில் முனைவோர் கூட்டமைப்பு அவசியம் ஏற்படுத்தப்படணும்'' என்றார்.

பட்டாசுத் தொழிலாளர் களின் அவலத்தையும், பட்டாசு ஆலை அதிபர்களின் தொழி லாளர் விரோத போக்கினையும், தமிழ்நாடு அரசு கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Advertisment

ff