Zee5-ல் வெளியாகியுள்ள வீரப்பன் தொடர் மிகவும் காத்திரமாக, நடுநிலையோடு, துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ளது. குரலற்ற பாதிக்கப் பட்ட உண்மையான மனிதர்களின் பேட்டியைக் காணும்போது தொடர் என்பதை மறந்து கண் கலங்குகிறது.
Hunt for veerappan தொடர் ஒரு சார்பானதாகவும், அது ஒரு அரசியல் என உணர முடிந்தது. விரைவில் இந்த தொடர் வெளிவந்தது நல்தருணம். இந்த தொடரில் வீரப்பன் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை நம்மிடம். நடிகனுக்கு இந்த தமிழ்நாட்டுக்காரனுங்க ஏன் ஓட்டு போடுறானுங்க? அரசியலைப் பத்தி அவுங்களுக்கு என்ன தெரியும்? என்று வீரப்பன் கேள்வி கேட்கும்போது அத்தனை ஆண்டுகள் கழித்தும் விடை தெரியா சிரிப்பு கேள்வி.
காட்டுக்குள் இருக்கும் முறையான படிப்பறிவு இல்லாத ஒருவனின் கேள்வி முக்கியமானது.
இந்த தொடரைக் காணும்போது வீரப்பன் நல்ல கதை சொல்லியாகவும் நல்ல மேடை நடிகனாகவும் தோற்றமளிக்கிறான். வீரப்பன் குரல் பிசிறு இல்லாமல் பேட்டியில் வெளிப்படும் போது அவனிடம் இருந்த ஆளுமை வெளிப்படுகிறது.
ஏகே 47 துப்பாக்கியை வைத்துக்கொண்டு அவன் நடித்துக் காட்டுவதையும், நடனம் ஆடு வதையும் பார்க்கும்போது, சன்னதம் கொண்டாடும் வனதேவனைப் பார்ப்பதுபோல உணர்ந்தேன்.
வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங் களை திருடியவன். சந்தன மரங்களைக் கடத்திய வன். அவன் குற்றவாளி என்றால் வாங்கியவன் யார்?
வீரப்பன் தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் தன்னைக் காட்டிக்கொடுத்த கிராமத்தினரையும் கொன்றது மகா குற்றம் என்றால்... தேடுதல் வேட் டையில் காவல்துறை மலைவாழ் மக்களைக் கொடூரமாக சித்திரவதை செய்ததையும், பெண் களை வன்புணர்வு செய்து தடாவில் சிறையில் அடைத்த கொடூரத்திற்கு என்ன பெயர் சூட்டுவது?
முன்பே நக்கீரன் பத்திரிகையிலும், இணையத் திலும் வந்திருந்தாலும் இணையத் தொடராகப் பார்க்கும்போது இலங்கையில் மட்டுமல்ல, நம் தமிழகத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எந்த அரசும் செவி கொடுக்கவில்லை என்பது அநீதி.
சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகும் நிவாரணத் தொகை இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட பலருக்கு சென்று சேரவில்லை என்ற தகவலைக் கேட்கும்போது கவலையளிக்கிறது.
வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப் பட்ட இரு தரப்பினரின் வீடியோ வெளியானது. இருபக்க நியாயங்களையும் எடுத்துக் கூறியது இந்த இணையத்தொடரின் சிறப்பு.
நக்கீரன் பத்திரிகை நிருபர்களுக்கும், நக்கீரன் கோபால் அவர்களுக்கும், தயாரித்த பிரபாவதி த.ய. அவர்களுக்கும், எழுத்தாக்கம் செய்த ஜெயச்சந்திர ஹாஸ்மி, சரத்ஜோதி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகி யோருக்கும், இயக்கிய சரத்ஜோதி அவர்களுக்கும், வெளியிட முன்வந்த ழங்ங்5 நிறுவனத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அனைவரும் அவசியம் காணவேண்டிய இணையத் தொடர்.
(விமர்சனங்கள் தொடரும்...)