சாய்பாபாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி! -பலி கேட்கும் உபா!

ss

க்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி.என். சாய்பாபா மறைந்தார்.

ஆனால், உண்மையில் அவரைக் கொன்றது இதயச் செயலிழப்பு இல்லை,…காவல்துறையின் தவறான குற்றச்சாட்டும், நீதித்துறையின் தாமதமும், தவறாகப் பிரயோகிக்கப்பட்ட உபா வழக்கும்தான்.

s

ஒருபக்கம் கல்லூரிப் பேராசிரியராக இருந்த சாய்பாபா, மறுபுறம் தனது வாழ்நாள் முழுவதுமே, மனித உரிமை அமைப்புகளில் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். 2005-ல் அவர் புரட்சிகர ஜனநாயக முன்னணியில் உறுப்பினரானார். விரைவில் இவ்வமைப்பு ஆந்திர அரசால் தடைசெய்யப்பட்டது. 2009-ல், மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகளை அழித்தொழிக்க இந்திய அரசு ‘"ஆபரேஷன் கிரீன் ஹண்ட்'’ வேட்டையை தீவிரமாக மேற்கொண்டது. இதற்கெதிரான பிரச் சாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஜி.என். சாய்பாபா. ஆனால் அவரது போராட்டமும் எதிர்ப்பும் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இருந்ததே தவிர தீவிரவாத வழிமுறையில் இல்லை.

இருந்தும் 2014-ல் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும்,

க்டோபர் 12-ஆம் தேதி ஹைதராபாத் நிஜாம் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இதயச் செயலிழப்பு காரணமாக ஜி.என். சாய்பாபா மறைந்தார்.

ஆனால், உண்மையில் அவரைக் கொன்றது இதயச் செயலிழப்பு இல்லை,…காவல்துறையின் தவறான குற்றச்சாட்டும், நீதித்துறையின் தாமதமும், தவறாகப் பிரயோகிக்கப்பட்ட உபா வழக்கும்தான்.

s

ஒருபக்கம் கல்லூரிப் பேராசிரியராக இருந்த சாய்பாபா, மறுபுறம் தனது வாழ்நாள் முழுவதுமே, மனித உரிமை அமைப்புகளில் ஆர்வமுடன் செயல்பட்டுவந்தார். 2005-ல் அவர் புரட்சிகர ஜனநாயக முன்னணியில் உறுப்பினரானார். விரைவில் இவ்வமைப்பு ஆந்திர அரசால் தடைசெய்யப்பட்டது. 2009-ல், மாவோயிஸ்ட்டுகள், நக்ஸலைட்டுகளை அழித்தொழிக்க இந்திய அரசு ‘"ஆபரேஷன் கிரீன் ஹண்ட்'’ வேட்டையை தீவிரமாக மேற்கொண்டது. இதற்கெதிரான பிரச் சாரத்தில் தீவிரமாகச் செயல்பட்டவர் ஜி.என். சாய்பாபா. ஆனால் அவரது போராட்டமும் எதிர்ப்பும் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இருந்ததே தவிர தீவிரவாத வழிமுறையில் இல்லை.

இருந்தும் 2014-ல் மாவோயிஸ்ட்டுகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி உபாவில் சாய்பாபா கைதுசெய்யப்பட்டார். போலியோ காரணமாக, தனது சக்கரவண்டியையே பெரிதும் சார்ந்திருக்கும் ஜி.என். சாய்பாபாவை நாக்பூர் சிறையில் தள்ளியது ஒன்றிய அரசு. உபா போன்ற சட்டங்களில் ஒருவரை கைதுசெய்யும்போது, அதற்கான ஆதாரங்கள் முக்கியமானவை. டெல்லி பல்கலைக்கழகத்திலிருந்து காவல்துறை ஆதாரங்களைக் கைப்பற்றும்போது சாய் பாபாவோ, அவர் குடும்பத்தினரோ அங்கில்லை. படிப்பறிவில்லாத ஒருவர் முன்னிலையில் ஆதாரங் களைக் கைப்பற்றியதாகத் தெரிவித்தன விசாரணை அமைப்புகள். கீழமை நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. சாய்பாபா செய்த பிரதான குற்றம், நலிந்த பிரிவினருக்காக, முக்கிய மாக அஸ்ஸாம், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் தாதுப் பொருட்கள் கிடைக்குமிடத்தில் வசிக்கும் நலிந்த பழங்குடியினருக்கு ஆதரவாக குரல் எழுப்பியது மட்டும்தான்.

இந்த குற்றத்திற்குத் தண்டனையாகக் கிடைத்த சிறைத்தண்டனை போக, சிறையில் இவரது மனநலமும், உடல்நலமும் பாதிப்புக்குள் ளாக்கியது. அவரது உடல்நலமற்ற நிலையைக் கருத்தில்கொண்டு, கேட்கப்பட்ட சலுகைகள் எதுவுமே செய்துதரப்படவில்லை. உடல் நலக் குறைவை அடிப்படையாகக் கொண்டு கேட்கப் பட்ட பிணை திரும்பத் திரும்ப மறுக்கப்பட் டது. கொரோனா அவரது பாதி உயிரைக் குடித்தது. சாய்பாபாவின் தாய் இறக்கும்நிலை யிருந்தபோதுகூட, அவரை கடைசியாக ஒருமுறை பார்க்கும் உரிமை மறுக்கப்பட்டது.

ss

பிறவியிலிருந்தே அவர் ஊனமுற்றவராக இருந்தபோதும், சிறைக்குச் செல்லும்போது அவருக்கு எந்த நோயும் இருக்கவில்லை. சிறையிலிருந்து திரும்பியபோது முற்றிலும் உடல்நலிந்தவராகத் திரும்பி வந்தார் சாய்பாபா.

மிக நீண்ட போராட்டத்துக் குப் பின் மகா ராஷ்டிர உயர்நீதிமன்றம், அவருக்கெதிரான ஆதாரங்கள் போதுமானவையில்லை. அவரை சிறையில் வைத்திருக்கமுடியாதென 2022-லேயே விடுவிக்க முன்வந்தது. உடனே விசாரணை அமைப்புகள், அது சனிக்கிழமை என்றபோதும் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விசாரணைக்கு ஏற் பாடு செய்து அதற்குத் தடைவாங்கின. உச்சநீதி மன்றம் அந்த வழக்கை வேறொரு அமர்வுக்கு மாற்றி மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

மறுவிசாரணையிலும் குற்றம்சாட்டப் பட்டவர்களை உயர்நீதிமன்றம் விடுவித்தது. வெறும் சந்தேகத்தின் பலன் அடிப்படையிலோ, தொழில்நுட்பக் காரணங்களுக்காகவோ விடுவிக்கவில்லை. வழக்கில் குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள் முற்றிலும் நம்பமுடியாதவை, உபா குற்றச்சாட்டுக்கு சிறிதும் ஆதாரமில்லை என்று கூறியதோடு, சாய்பாபாவின் டெல்லி பல்கலைக் கழக வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட ஆதாரங் களை நிராகரித்ததோடு, வழக்கின் தீங்கிழைக்கும் நோக்கையும் தெளிவாகக் குறிப்பிட்டு, ஆதாரங்களைக் கைப்பற்றும்போது படிப்பறி வில்லாத ஒருவரை வைத்துக் கைப்பற்றியதையும் அடிக்கோடிட்டுக் காட்டியது. நக்சல் தத்துவம் அடங்கிய பொருட்களை பதிவிறக்கம் செய் வதன் அடிப்படையில் மட்டுமே பயங்கரவாத ஆதரவு குற்றத்தை நிரூபிக்கமுடியாதெனவும் குறிப்பிட்டது.

இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யாதிருந் தால் குறைந்தபட்சம் 2022-லாவது சாய்பாபா விடுதலையாகி யிருந்திருப்பார். ஒருவேளை இன்னும் சிலகாலம் வாழ்ந்திருக்கவும்கூடும். மாறாக, விசாரணை அமைப்புகளின் மேல்முறை யீட்டால் மேலும் 2 வருடம் தாமதமாகியது சாய்பாபாவின் விடுதலை.

இந்த வழக்கில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. சாய்பாபாவின் விடுதலையை முன்வைத்துப் போராடிய மற்றொரு பேராசிரியரும் சாய்பாபாவின் நண்பருமான ஹனிபாபு, இப்படிப் போராடியதற்காக எல்கர் பரிஷத் வழக்கில் இணைக்கப்பட்டு இவரும் உபா வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டார். இவர் இன்னமும் சிறையிலிருந்து விடுதலையாகவில்லை.

2024, மார்ச்சில் விடுதலையாகிவந்த சாய்பாபா, “தான் அதிர்ஷ்டவசமாகத்தான் சிறையிலிருந்து உயிருடன் விடுதலையாகி வந்ததாகக்” குறிப்பிட்டார். ஆனால் அந்த அதிர்ஷ்டம் ஆறுமாதங்கள்கூட நீடிக்க வில்லை. சிறையிலிருந்து உடல்நலக் குறைவோடு வந்த சாய்பாபா, பித்தப்பை நீக்க அறுவைச் சிகிச்சையையடுத்து ஏற்பட்ட பிரச்சினைகளால் இதயச் செயலிழப்புக்கு உள்ளாகி உயிரிழந்திருக்கிறார்.

பொய் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு, உபாவுக்கு பலியாக் கப்பட்ட ஸ்டேன் சுவாமியையடுத்து இன்னொரு உயிர் உபாவுக்குப் பலியாகியிருக்கிறது.

இந்தியாவில் 2018-22 காலகட்டத்தில் மட்டும் 8,947 பேர் உபாவில் கைது செய் யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருக் கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

nkn191024
இதையும் படியுங்கள்
Subscribe