"ஹலோ தலைவரே, குடியரசுத் தலைவருக்கான தேர்தல் இப்ப அகில இந்திய அளவில் சூடுபிடிச்சிடுக்கு.''”

"ஆமாம்பா, ஜூலை 18-ல் நடக்கும் இந்தத் தேர்தலில் இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவர் யாருங்கிறது தெரிஞ்சிடும். நாம் ஏற்கனவே சொன்ன மாதிரிதான் இந்த விவகாரத்தில் எல்லாமே நடந்திருக்கு.''”

rr

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு மீண்டும் பா.ஜ.க. வாய்ப்பைத் தர விரும்பலைன்னும், புதிய ஜனாதிபதியாக பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த பிரதமர் மோடி விரும்பறாருன்னும் முதன்முதலில் நாம்தான் பேசிக்கிட்டோம். அதன்பிறகு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவரும் ஜார்கண்ட் மாநில முன்னாள் கவர்னரு மான திரௌபதி முர்மு உள்பட 4 பேரின் பெயர் பரிசீலிக்கப்படுவதையும் நம்ம நக்கீரன்தான் உறுதியாகச் சொல்லி இருந்தது. அதன் படியே இப்ப, பா.ஜ.க. தனது வேட்பாளராக ஒடிசா மாநில, பழங்குடி ffவகுப்பைச் சேர்ந்த திரௌபதி முர்முவை நிறுத்தியிருக்கு. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் யஸ்வந்த் சின்ஹா களமிறக்கப்பட்டு இருக்கிறார்.''”

"முர்முவுக்கு ஆதரவு எப்படி இருக்கு?''”

"பா.ஜ.க.வில் கவுன்சிலராகத் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கிய முர்மு, அமைச்சர், கவர்னர்னு உயரிய பதவி களை வகித்தவர். ஒடிசா, குஜராத் உட்பட இந்தியா முழுக்க இருக் கும் பழங்குடி யினரின் ஆதரவு தற்போது 25 சதவீதம் பா.ஜ.க. வுக்கு இருக்கு. அதை 2024 தேர்தலின் போது 100 சதவீதமாக் கனும்ன்னு பா.ஜ.க. திட்டமிடுது. அதனால்தான் ஆர்.எஸ்.எஸ்.சின் ஆலோசனைப்படி அந்த சமூக வேட்பாளரான முர்மு நிறுத்தப்பட்டிருக்கார். தற்போதைய சூழலில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உள்ளிட்ட பா.ஜ.க. கூட்டணியில் இல்லாத தலைவர்களும் இவரை வரவேற்றிருப்பதால் திரௌபதி முர்மு எளிதாக வெற்றி பெறுவார்ங்கிற எதிர்பார்ப்பு நிலவுது. இவர் வெற்றி பெற்றால், பழங்குடியினர் சமூகத்தின் முதல் பெண் ஜனாதிபதி என்கிற பெருமை இவருக்குக் கிடைக்கும்.''”

"நாடாளுமன்ற புதிய கட்டிடம் கட்டும் பணியை, குறிப்பிட்ட நாட்களுக்கு முன்ன தாகவே முடிக்கும்படி அதிகாரி களை பிரதமர் மோடி நிர்பந்திக் கிறாராமே?''”

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கான எஸ்டிமேட் முதலில் 971 கோடி ரூபாய்னு நிர்ணயிக்கப்பட்டு, இப்போது அது 1,250 கோடியாக உயர்த்தப் பட்டிருக்கு. இதை நவம்பர் மாதம் திறக்க முடிவு செய்திருந்தார் மோடி. அதற்கேற்ப கட்டுமானப் பணிகளும் நடந்தன. இப்போது ஜூலை 18-ல் புதிய ஜனாதிபதிக்கான தேர்தல் நடக்கவிருப்பதால், புதிய ஜனாதிபதி ஜூலை 24 அல்லது 25-ல் பதவி ஏற்கிற சூழல் இருக்கிறது. அதனால் விரைவாக புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் தயார் செய்து, அதில் புதிய குடியரசுத் தலைவரின் பதவி ஏற்பு நிகழ்வை நடத்தினால், அது மேலும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாக அமையும் என்பது மோடியின் கணக்கு. ஆனால் அதிகாரி களோ, இவ்வளவு குறுகிய காலத்தில் அவசர கதியில் கட்டுமானப் பணிகளைச் செய்வது சரியாக இருக்காதுன்னு சொல்லியிருக்காங்க. இருந்தும், முயற்சி பண்ணுங்கள்னு மோடி நிர்பந்திக்கி றாராம்.''”

"இந்தப் பரபரப்புக்கு இடையில் காங்கிரஸ் பாதயாத்திரைக்குத் திட்ட மிடுதே?''”

raghul

Advertisment

"ஆமாங்க தலைவரே, 2024-ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதிலேயே காங்கிரஸ் குறியாக இருக்கிறது. இதற்காக, ராகுல் காந்தி தலைமையில் அமைக்கப்பட்ட காங்கிரஸின் அரசியல் விவகாரக் குழு, பல்வேறு திட்டங்களையும் வியூகங்களையும் போட்டுக்கிட்டு இருக்குது. அதில் முதல்கட்ட திட்டமாக, இந்தியா முழுக்க பாதயாத்திரையை நடத்த ராகுல்காந்தி திட்டமிட்டிருக்கார். அதாவது, மு.க.ஸ்டாலின் நடத்திய நமக்கு நாமே மாதிரி. அக்டோபர் 2-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி, ஒவ்வொரு மாநிலமாகப் பயணித்து, முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்யப்படும் பொதுக்கூட்டத்தில் ராகுல் பிரச்சாரம் செய்வதுன்னு திட்டம் வகுக்கப்பட்டு வருது. இந்தப் பாத யாத்திரையில் பா.ஜ.க. அரசையும் மோடி, அமித்ஷா, அதானி, அம்பானி ஆகியோரையும் ராகுல்காந்தி கடுமையாக விமர்சிக்கத் தயாராகிறார். அதற்காக விபரங்கள் சேகரிக்கப்படுதாம்.''”

"சரிப்பா, தமிழகத்துக்கு வருவோம். அமைச்சரவைக் கூட்டம் வரும் 27-ந் தேதி கூட்டப்படுதே?''”

"இந்தக் கூட்டத்தில், ஆன்லைன் சூதாட்டத்துக்குத் தடை விதிக்கும் அவசர சட்ட முன்வடிவை தாக்கல் செய்வதற்கான அனுமதி பெறப்பட இருக்கிறது. அதேபோல் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, அதற்கு ஒப்புதல் அளிப்பதற்கான முடிவுகளும் இதில் எடுக்கப்பட உள்ளன. இந்த முறை கூட்ட அறிவிப்பு ஒரு வாரத்துக்கு முன்பாகவே அறிவிக்கப் பட்டிருக்கிறது. இன்ஃபெக்சன் காரணமாக ஏற்பட்ட காய்ச்சலில் ரெஸ்ட் எடுத்து வரும் முதல்வர் ஸ்டாலின், தன் உடல்நலன் பற்றிய வீண் வதந்திகளைத் தவிர்க்கும் வகையில், இப்படி முன்னதாகவே அமைச்சரவைக் கூட்ட அறிவிப்பை வெளியிடச் செய்து அனைவரின் கவனத்தையும் அதன் பக்கம் திரும்பச் செய்தார்னு கோட்டைத் தரப்பில் பேச்சு அடிபடுது.''”

"வருமானவரித் துறையின் தமிழகம் மற்றும் புதுச்சேரி மண்டல முதன்மைத் தலைமை ஆணையராக தமிழரான ரவிச்சந்திரனை ஒன்றிய அரசு நியமிச்சிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழரான ஐ.ஆர்.எஸ். அதிகாரி ரவிச்சந்திரன் 21-ந் தேதி வருமான வரித்துறை ஆணையராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இந்தியாவை உலுக்கும் பிட் காயின் பரிமாற்றங்கள் மற்றும் அதன் முதலீட் டாளர்கள் மீதான விசாரணை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர் ரவிச்சந்திரன். மேலும், வரி ஏய்ப்பு விவகாரங்கள், ஹவாலா பரிவர்த்தனைகள், சொத்து மதிப்பீடு விவகாரங்கள் உள்ளிட்ட குற்றங்களைக் கண்டறிவதிலும் இவர் கில்லாடியாம். இதற்காக மோடியாலேயே பாராட்டப்பட்டிருக்கிறார். தமிழகத்தில் இருக்கும் பெரும்பான் மையான அரசியல் பிரமுகர்களும் தொழிலதிபர்களும் பிட் காயின், கிரிப்டோ கரன்சி உள்ளிட்ட முதலீடுகளில் ஆர்வம் காட்டுகிறார் களாம். எனவே சட்ட விரோத முதலீடுகளில் கவனம் செலுத்தும் இவர்களைக் குறி வைத்துதான் ரவிச்சந்திரனை டெல்லி இங்கே களமிறக்கி இருக்குன்னு டாக் அடிபடுது.''”

"பா.ஜ.க. அண்ணாமலைக்கு எதிரான புகார்கள் அந்தக் கட்சியிலேயே வலுக்குதே?''”

"ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. மாநிலத் தலைவரான அண்ணாமலை, மோசமான கிரிமினல்களுக்கும் கட்சிப் பதவிகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்ன்னு அக்கட்சியின் சீனியர் களே குற்றம் சாட்டறாங்க. குறிப்பாக வழக்குகள் பல உள்ள செம்மரக் கடத்தல் புள்ளியான முரளீதரனுக்கு ஏற்கனவே கட்சிப் பதவியைக் கொடுத்த அவர், அண்மையில் கொலை உள்ளிட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய சேலத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் கட்சிப் பதவிகளைத் தாரை வார்த்திருக்கிறாராம். இதன் மூலம் அவர் அதிக அளவுக்கு லாபம் பார்த்ததாகவும் குற்றம் சாட்டும் பா.ஜ.க. சீனியர்கள், தேசியத் தலைமைக்கும் புகார்களை அனுப்பி இருக்கிறார்கள்.''”

"ம்..''”

rang

"அடுத்த தகவலைச் சொல்றேங்க தலைவரே.. பொதுக்குழு விவகாரத்தில், நீதிமன்றத் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரும்னு நம்பி இருந்த எடப்பாடிக்கு, கடைசி நேரத்தில் அப்பீலில், புதிதாக எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றக்கூடாதுன்னு வந்த தீர்ப்பு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகம் முழுக்க இருக்கும் பெரும்பாலான மா.செ.க்களையும் பொதுக்குழு உறுப்பினர்களையும் வளைக்க, அவர் 5 ஆயிரம் ’"சி'’வரை வாரி யிறைத்திருக்கிறார் என்கிறார்கள் அவர் தரப்பினரே. அவர் கூடவே இருப்பதுபோல் காட்டிக் கொண்ட மாஜி மந்திரிகளான வேலுமணி, தங்கமணி, வீரமணி ஆகியோர் எதிர்த்தரப்பான ஓ.பி.எஸ். அணியோடும் அண்டர் டீலிங்கில் இருந்ததை அறிந்து பதட்டமான எடப்பாடி, லீகல் டீமும் சரியாக வேலை செய்யவில்லை என்பதையறிந்து ரொம்பவே நொந்துபோய்விட் டாராம். அதனால் அப்செட் மன நிலையோடு தான் அவர் பொதுக்குழுவுக்குக் கிளம்பிப் போனாராம்.''”

"நான் ஒரு விளக்கத் தகவலைச் சொல் றேன். போன முறை நம்ம நக்கீரனில் செய்தித் துறை சலசலப்புன்னு வெளியிட்டிருந்த செய்தி யில், கூடுதல் இயக்குநர் பதவிக்கு ராஜ்பவனில் உள்ள சிவசரவணனைக் கொண்டு வரும் முயற்சிகள் நடக்குதுன்னும், செல்வராஜ் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோருக்கு நெருக்கடியும் சிக்கலும் ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதற்கு அந்தத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கு. சிவசரவணன் மூத்த அடிஷனல் டைரக்டர் என்றும், அன்புச்செல்வனோட புரமோஷன் ஆர்டர் முறைப்படி விரைவில் வரும்னும், செல்வராஜ் இந்த சீனியாரிட்டி லிஸ்ட்டில் இல்லைன்னும் தெரிவிச்சிருக்காங்க.''’