"ஹலோ தலைவரே, ஒருவழியாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தி.மு.க. அரசு, ரொம்பவும் அமைதியாக நடத்தி முடித்திருக்கிறது.''”
"ஆமாம்பா, பெரிய அளவில் எங்கவும் அசம்பாவிதங்கள் நடக்காதபடி பார்த்துக்கிட்டாங்க. ஆனாலும் வாக்குப்பதிவு எண்ணிக்கை, எதிர்பார்த்த அளவுக்கு இல்லையே?''”
"உண்மைதாங்க தலைவரே, இந்தத் தேர்தலில் தமிழகம் முழுவதும் 61 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், சென்னையில் மட்டும் 45 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருக்கு. கடந்த 2006 மற்றும் 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தல்களை ஒப்பிடும்போது, சுமார் 7 சதவீத வாக்குகள் இந்த முறை குறைஞ்சிருக்கு. மேயர் மற்றும் சேர்மன்களை இந்த முறை மக்களே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற வாய்ப்பு இல்லை. அதனால்தான் மக்களிடம் ஆர்வம் குறைந்தது என்றும் சொல்லப்படுது. அதேபோல் பங்களாவாசிகளான மேல்தட்டு மக்களில் 99 சதம் பேர் வாக்களிக்க வரவில்லை. நடுத்தட்டு மக்களிலும் சுமார் 40 சதவீதம் பேர் வாக்களிக்கலை. அதோட, கட்சிகளின் சார்பில் களமிறக்கப்பட்ட வேட்பாளர்கள், மக்களுக்கு அதிக அறிமுகம் இல்லாதவர்களாகவே இருந்ததால், ஒருவித சலிப்பும் பலரிடமும் இருந்தது.''”
"ம்...''”
"இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கு. கட்சிக்காரர்கள் பூத் ஸ்லிப் கொடுக்கக்கூடாதுன்னு தேர்தல் ஆணையம் அறிவிச்சதால, வீடு வீடா போகும் கட்சி நிர்வாகிகள் பலரும் இந்த முறை போகலை. ஆளுங்கட்சி நிர்வாகிகளிடம் ஆட்சிக்கு வந்து 9 மாதமாகியும் பெருசா எந்த லாபமும் இல்லைங்கிற சலிப்பு. எதிர்க்கட்சியோ செலவு பண்ணியும் பயனிருக்காது என்பதால் பெருசா ஆர்வம் காட்டலை. பூத் ஸ்லிப் கொடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம்-மாநகராட்சி நிர்வாகம், நகராட்சி நிர்வாகம் ஆகியவையும் இதை சரியா செய்யலை. ஒரு பள்ளிக்கூடத்திற்குள் மூன்று, நான்கு பூத்கள் இருந்ததால், தங்களுடைய வாக்கு எந்த பூத்தில்னு தெரியாம குழம்பிப் போயிட்டாங்க. வாக்கு சதவீதம் குறைந்ததில் நிர்வாகத்தோட குளறுபடிகளும் எக்கச்சக்கம்.''”
"தேர்தலின்போது எதிர்க்கட்சியினரால் கட்சிக் காரர்களுக்கு எந்தவிதமான பிரச்சினையும் இருக்கக் கூடாதுன்னு தி.மு.க. தலைமை கவனமாக இருந்துச்சே?''”
"உண்மைதாங்க தலைவரே, கட்சிக்காரர்களிடம் இருந்து வரும் புகார்களைக் கவனிப்பதற்காக வே அறிவாலயத்தில் வார் ரூம் உருவாக்கப்பட்டி ருந்தது. அங்கு சென்று அதன் பணிகளையும், அங்கு வருகிற புகார்களையும் முதல்வர் ஸ்டா லினே ஆய்வு செய்தார். சில புகார் போன்களை அவரே அட்டெண்ட் செய்து பிரச்சினைகளைத் தீர்த்துவைத்தார். இது முடிந்ததும் மா.செ.க்களைத் தொடர்பு கொண்டு, மாவட்ட வாரியான நிலவரங்களை அவர் விசாரித்தார். எந்த சூழலிலும் எதிர்க்கட்சிகள் குறைசொல்லாதபடி நடந்துக்க ணும்னு அவர்களிடம் அறிவுறுத்தினார். தேர்தல் ஏஜண்டுகளாக நியமிக்கப்பட்ட தி.மு.க.வினர், அவரிடம், 80-85 சதவீத வெற்றி நமக்குத்தான்னு சொல்ல, அது சரியான்னு உளவுத்துறையிடமும் விசாரித்த படியே இருந்தார் ஸ்டாலின்.''”
"அ.தி.மு.க. தரப்பு என்ன பண்ணுச்சு?''”
"ஸ்டாலினைப் போலவே மாஜி முதல்வரான எடப்பாடியும் அ.தி.மு.க. மா.செ.க்களைத் தொடர்பு கொண்டு, வாக்குப் பதிவு நிலவரத்தை விசா ரிச்சிக்கிட்டே இருந்தார். சென்னை நிலவரத்தை மாஜி ஜெயக்குமா ரிடம் மட்டுமே விசா ரிச்ச அவர், சென்னை யில் இருக்கும் மற்ற மா.செ.க்களிடம் பேசவே இல்லை. அந்தளவுக்கு இந்தத் தேர்தலில் அவர்கள் எடப்பாடியை மனதளவில் காயப்படுத்தி இருந்தனர். மா.செ.க்களாக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும், ரிசல்ட் ஒன்னும் மோசமாக இருக்காது, கணிசமான வெற்றி நமக்கு கிடைக்கும்னு அவருக்கு நம்பிக்கையைக் கொடுத்தபடியே இருந்தாங்க.''”
"கொங்குமண்டலத்தில் மாஜி வேலுமணி, பரபரப்பை ஏற்படுத்தினாரே?''”
"ஆமாங்க தலைவரே, கோவையில் ஆளுங் கட்சி மீது குற்றம்சாட்டிப் போராட்டத்தில் ஈடு பட்டார் முன்னாள் அமைச்சர் வேலுமணி. அவர் பெரிய கூட்டத்தைக் கூட்டி கலவரத்தை உண்டாக் கப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்ட போலீஸ் டீம், அ.தி.மு.க.வினரை குண்டு கட்டாகத் தூக்கிச் செல்ல, சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துச்சு. இதனால், அந்த மண்டலத்தில் உள்ள கொங்கு கவுண்டர்களிடம் ஒருவித பதட்டம் ஏற்பட்டது. இதைப் பார்த்த கொங்கு சமூ கத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள், இது நமக்கு சாதகமான நிலையையும், தி.மு.க. மீது வெறுப்பையும் உண்டாக் கும்னு சொல்லி, எடப்பாடியைக் குஷி படுத்தினாங்க. அவரைப் பொறுத்த வரை, தமிழகத்தில் எந்த பகுதியில் தோல்வி வந்தாலும் பரவா யில்லை. கொங்கு மண்டலம் மட்டும், நம்மைக் கைவிடாம இருந்தால் சரிதான்னு, அதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார்.''”
"தி.மு.க., அ.தி.மு.க. தவிர மற்ற கட்சிகளின் களப்பணிகள் எப்படி இருந்துச்சு?''”
"பெருசா சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லை. எப்படியும் ஆளும் கட்சிதான் ஜெயிக்கப் போகுதுங்கிற மனநிலைக்கு பா.ம.க. நிறுவனர் டாக் டர் ராமதாஸ் தொடங்கி, தே.மு.தி.க. பிரேமலதா, நாம் தமிழர் சீமான், மக்கள் நீதி மய்யம் கமலஹாசன் போன்றவர்களே வந்துட்டாங்களாம். 2011 உள்ளாட்சித் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய பா.ஜ.க.வில், மாநகராட்சி உறுப்பினர்கள் 4 பேரும், நகராட்சித் தலைவர்கள் 2 பேரும், நகராட்சி உறுப்பினர்கள் 37 பேரும், பேரூராட்சித் தலைவர்கள் 13 பேரும், பேரூராட்சி உறுப்பினர்கள் 185 பேரும் வெற்றி பெற்றார்கள். அது இப்ப ரெட்டிப்பாகும்னு பா.ஜ.க. கணக்குப் போடுது. அதேசமயம், தமிழ்நாட்டில் 48 சத தொகுதிகளுக்கு மட்டும்தான் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வேட்பாளர்களை நிறுத்தினார்னு, அவர் மீது அந்தக் கட்சியின் தேசியத் தலைமைக்குப் புகார்கள் போயிருக்கு.''”
"தி.மு.க.விலேயே சிலர் லோக்கல் பாசத்தில் தடம் புரண்டதாக அறிவா லயக் கதவைப் புகார்கள் தட்டுச்சே?''”
"சில இடங்கள்ல அப்படி நடந் திருக்குதாம். இது பற்றிய புகார்கள் வர, அதைப் பார்த்து அறிவாலயம் ஷாக் ஆயிடுச் சாம். காரணம், அப்படிப்பட்ட தடம் புரளும் லீலைகளுக்கு அமைச்சர்கள் சிலரே உடந் தையா இருந்தாங்களாம். ஒரு சில மா.செ.க் களுக்கு இதெல்லாம் தெரிந்தும், அவர்களும் கண்டுகொள்ளலையாம். அதனால், ரிசல்ட் டைப் பொறுத்து தி.மு.க.வில் சிலருக்கு கல்தா இருக்கும்னு அறிவாலயத்தில் டாக் அடிபடுது. குறிப்பாக, அமைச்சரவையில் மாற்றமும் சிலருக்கு இலாகா மாற்றமும் நடக்கலாம் என்றும் சொல்லப்படுது. இதையறிந்த அமைச்சர்கள் தரப்பு பரபரப்படைஞ்சிருக்கு.''”
"ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றமும் பெரிய அளவில் நடக்கப்போகுதுன்னு தகவல் வருதே?''”
"ஆமாங்க தலைவரே, இவர்களில் அமைச்சர் களின் துறையின் செயலாளர்களாக இருக்கும் சில மூத்த ஐ.ஏ.எஸ், அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக் கும் ஒத்துப்போவதில்லையாம். அமைச்சர்களுக்குத் தெரியாமலே பலவற்றையும் அவர்கள் நடத்தறாங் களாம். துறையின் செயல்பாடுகள் பற்றியும், கோப்புகள் பற்றியும் கூட அவர்கள் அமைச்சர்களி டம் விவாதிப்பதில்லையாம். இதனால் நொந்து போன அமைச்சர்களின் புகாரால்தான், முதல்வர் ஸ்டாலின், டிரான்ஸ்பர் மேளாவை நடத்தும் முடிவுக்கு வந்திருக்காராம். அதேபோல், அமைச்சர் களை முதல்வரின் செயலாளர்களே கூட மதிப்ப தில்லைன்னும் புகார்கள் இருக்குது. காவல்துறை யிலும் சிலர் மீது புகார்கள் கிளம்ப, டிரான்ஸ்பர் பட்டியலும் சுறுசுறுப்பா ரெடியாகுது.'' ”
"சில துறைகளில் இன்னமும் அதிகாரிகளின் மெத்தனம் தொடருதுன்னு குற்றச்சாட்டுகள் இருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, உதாரணத்துக்குச் சொல்லணும்னா, கடந்த மாதம் பெய்த கனமழை யால், சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. அப்பவே, முதல்வர் ஸ்டாலின், வெள்ளத்தில் இறங்கி ஆய்வுகளை நடத்தினார். வெள்ளம் வடிந்ததும் தி.நகர், மகாலிங்கபுரம், நுங்கம் பாக்கம்னு பல பகுதி களிலும் சாலைகளைச் செப்பனிடும் பணி களையும் அவர் நேரடி யாக ஆய்வு செய்தார். அதேபோல் தலைமைச் செயலாளர் இறையன்புவும் ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் அடிப்படையில் அனைத் துப் பகுதிகளிலும் சாலைகளைத் தரமானதாகப் போடணும்னு முதல்வர் உத்தரவிட்டார். இருந்தும் இந்தப் பணிகள் சரிவர நடக்கலையாம். இது பற்றிய புகார்களும் வலுத்து வருது.''”
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். உள்ளாட்சித் தேர்தலில் சசிகலா, பா.ஜ.க.வின் அறிவுறுத்தல் காரணமாகத்தான் தினகரனை விட்டுவிட்டு, அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கும்படி சொன்னாராம். இதைத் தொடர்ந்து அ.தி.மு.க.வுக்குள் தான் நுழைய பா.ஜ.க. பாதை அமைத்துக் கொடுக்கும்னு அவர் எதிர்பார்த்தாராம். ஆனால், ஆடிட்டர் குருமூத்தியும், சில மயிலாப்பூர் புள்ளிகளும், சசிகலாவை மறுபடியும் அ.தி.மு.க.வுக்குள் நுழையவிடக் கூடாதுன்னு கொடிபிடிக்கறாங்களாம். அதனால் நொந்துபோன சசிகலா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைத் தொடர்பு கொண்டு முறையிடணும்னு, படாதபாடு படுகிறாராம்.''”