"பெட்ரோல் குண்டு வீச்சுக்களின் சூத்ரதாரிகளை கைது செய்துவிட்டோம். ஈஸ்வரன் கோவில் வீதியில் நடந்த கார் வெடிப்பு தற்கொலை என்.ஐ.ஏ. வசம் சென்றுவிட்டது. இனி இங்கு எந்த பதற்றமும் இல்லை'' என மேற்கு மண்டல காவல்துறை மார்தட்டிய நிலையில், இலங்கை ஆசாமி ஒருவருக்கு கோவையில், இந்திய வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசென்ஸும் வழங்கப்பட்டு, அது இன்னும் நடைமுறையில் இருப்பது தெரியவர நிலை குலைந்துள்ளது தமிழக உளவுத்துறை.

srilanka

இலங்கையைச் சேர்ந்த ஆசாமி ஒருவருக்கு எண் 28, ஹாஜி முகம்மது வீதி, கோட்டை, கோயம்புத்தூர் என்ற முகவரியிட்டு இந்திய வாக்காளர் அடையாள அட்டை (தஞஏ 1148097), வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் (பச66 20160001809) வழங்கப்பட்டுள்ளது. அதுபோக, இரண்டு இந்திய சிம் கார்டுகள், திருவாரூரிலுள்ள அன்னூரல் முகமது அராபிக் கல்லூரியின் அடையாள அட்டை, இலங்கை இ.ஞ.ஈ. வங்கி, ச.ந.இ. வங்கி மற்றும் மக்கள் வங்கியின் ஏ.டி.எம். அட்டைகள், இலங்கை குடியுரிமை அட்டை மற்றும் ஐந்து விதமான புகைப்படங்கள் ஆகியன இருப்பது குறித்த தகவல்களால் அதிர்ச்சியடைந்து, தற்போது விசாரணையைத் தொடங்கியுள்ளது தமிழக உளவுத்துறை.

கிடைக்கப்பெற்ற ஆவணங்களுக்கு சொந்தக்காரன், இலங்கை காத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த முகமது பவ்ஜர் என்பவரின் மகனான அகமது இக்மால். ஐந்து பேருடன் பிறந்த அகமது இக்மால், முதலில் அடிப்படைவாத அமைப்புகளோடு தொடர்பு ஏற்படுத்தி, அதன் வழியே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பிடம் நெருக்கமாகி யிருக்கின்றான். உலக அளவில் இயங்கும் ஜமாத் ஒன்றின் மூலமாக 2016-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு கடல் வழியாக தனுஷ்கோடி வந்திறங்க, அவனிடமிருந்த ஆவணத்தின் அடிப் படையில் நடவடிக்கை எடுக்காமல் சாதாரண வழக்கிலேயே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றான். ஆனால், அவனுடைய தந்தை முகமது பவ்ஜர், "என்னுடைய மகனுக்கு வலிப்பு நோய். அதை குணமாக்க பாஸ்போர்ட் மூலமாக நாகூர் வந்தான். வந்த இடத்தில் பாஸ்போர்ட் தொலைந்து விட்டது. இப்பொழுது சிறையில் இருக்கின்றான். அவனை விடுதலை செய்ய வேண்டும்'' என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருக்கிறார். பணத்திற்காக, கையிலிருந்த ஆவணங்களை ஓரங்கட்டிவிட்டு, நாகூரில் சிகிச்சைக்காக வந்தவன் ஏன் தனுஷ்கோடியில் இறங்க வேண்டும்? என்கின்ற அடிப்படைக் கேள்வி கூட கேட்கத்தோணாமல் இருந்திருக்கிறது அன்றைய உளவுத்துறை.

அவனும் 20.06.2016 அன்று புழல் சிறையிலிருந்து விடுதலையாகி இலங்கை சென்றிருக்கின்றான். பின்னாளில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் தாக்குத லில் அவனுடைய பங்கும் இருந்திருக்கின்றது. அந்தத் தாக்குதலின்போதே மறுபடியும் கடல்மார்க்கமாக வேதாளை வந்தவன், இப்பொழுது தன்னுடைய இந்திய அடையாளத்துடன் கோவையில் நடமாடி வருகின்றான். அதுவும் அவனுடைய வாக்காளர் அடையாள அட்டை நடப்பில் இருக்கின்றது. முதலில் பாகம் எண் 178-ல் இருந்த அவனது வாக்காளர் அடையாள அட்டை, தற்பொழுது பாகம் எண் 174-க்கு மாறியிருக்கின்றது. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பின்போது சில வாக்காளர்களை நீக்குவது தேர்தல் ஆணையத்தின் வழக்கமான நடவடிக்கை. ஆனால் கடந்த ஜனவரி அன்று இவனது வாக்காளர் அடையாள அட்டை அதே முகவரியில் இருக்கின்றது. 20.06.2016 அன்று இங்கிருந்து இலங்கை சென்றவனுக்கு இன்னும் வாக்காளர் அடை யாள அட்டை, டிரைவிங் லைசென்ஸ் இருப்பது எப் படி? என முதற்கட்ட விசா ரணையில் உளவுத்துறைக்கு தகவல் கிடைக்க, எச்சரிக்கை மணியை கோவை மாவட்ட காவல்துறைக்கு பாஸ் செய்திருக்கின்றது.

Advertisment

srilanka

உளவுத்துறையிலுள்ள அதிகாரி ஒருவரோ, "கோவையில் நடந்த கார் வெடிப்பு தற்கொலை, அனைவரும் கூறுவதுபோல் ஒற்றை ஓநாய் தாக்குதல் அல்ல. அது அரசியலுக்காக பேசப்படுவதே ஆகும். ஷமேசா முபின் போன்ற இளைஞர்களைத் தேர்ந் தெடுத்து மூளைச்சலவை செய்து அவர்கள் மூலம் தாக்குதல் நடத்துவதே குறிப்பிட்ட ஒரு அமைப்பின் திட்டம். குறிப்பிட்ட அந்த அமைப்பு தனிப்பட்ட தீவிரவாதக்குழு அல்ல. 'மக்கள் மத்தியில் அச்சத்தை விதைப்பது, இஸ்லாமிய ஆட்சியை மீள்கட்டமைப்பது, காபீர்களுக்கெதி ரான கைபர் யுத்தத்தை முன்னிலைப்படுத்துவது' எனும் சித்தாந்தக் கொள்கைகளைப் பின்பற்றுவதே அந்த அமைப்பு. இவர்கள் எந்த அமைப்பிலும், அரசியலிலும் இருக்கலாம். எனினும் சித்தாந்தத்தின்பால் ஈர்க்கப்பட்டு பல தரப்பிலும் ஒன்று சேர்ந்து தாக்குதலைத் தொடுப்பது தான் இவர்களின் பணி. அனைவரும் உளவுத்துறையைச் சாடுகிறீர் கள். குற்றவாளியைத் தேடி னால், 'அவன் எனக்குத் தெரிந்தவன்... அவன் அப்படி இல்லையே...' என எங்களை மேலதிகாரிகள் அதட்டி விடுவாங்க. அதனால் தான் இது நடந்திருக்கின்றது. எங்க ளுக்கு சோதனையிடும் அதிகாரம் கிடைத்து, ஷமேசா முபினின் வீட்டில் சோதனையிட்டிருந்தால் இன்று இவ்வளவு பெரிய கார் சிலிண்டர் வெடிப்பு தற்கொலை நடந்திருக்காது. இப்பொழுதுகூட இந்த விஷயத்தில் சுதந்திரமாக எங்களைச் செயல்பட அனுமதிக்கும் பட்சத்தில் இனி கோவையில் குண்டுவெடிப்பே இருக்காது'' என்கிறார் அவர்.

இது இப்படியிருக்க, அவனது இன்னொரு பெயர் கம்ரான் என்பதும், கேரளாவிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளதும் உளவுத்துறைக்கு கூடுதல் தகவலாகக் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-நாகேந்திரன்