விபத்தா? அல்லது சதியா? என்கிற கோணத்தில் முப்படை தளபதியின் உயிரைப் பறித்த குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தை இந்திய ராணுவ புலனாய்வு பிரிவு, மத்திய உளவுத்துறைகளான ரா, ஐ.பி. உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் தங்களின் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளன.

நிலைகுலைந்த தேசம்

நீலகிரி மாவட்டம் குன்னூரிலுள்ள வெலிங்டனில் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியின் ஆலோசனைக் கூட்டத்திற்காக தனது மனைவி மதுலிகா மற்றும் 4 பைலட்டுகள், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேருடன் கோவை சூலூரில் இருக்கும் ராணுவ விமானப்படைத் தளத்திலிருந்து எம்.ஐ.17-வி-5 ரக ராணுவ ஹெலிகாப்டரில் வெலிங்டன் நோக்கி பயணப்பட்டார் பிபின்ராவத்.

Advertisment

bipin

ராணுவ கல்லூரியை நெருங்க 10 நிமிடங்கள் இருந்த நிலையில், பிற்பகல் 12:40 மணிக்கு கடும் மேகமூட்டத்திற்கிடையே குன்னூர் அருகே காட்டேரி -நஞ்சப்பா சத்திரம் மலைப் பள்ளத்தாக்கின் மேலே பறந்துகொண்டிருந்தது ராணுவ ஹெலிகாப்டர். பனி மூட்டத்தில் சிக்கியதில் முழுமையான கட்டுப்பாட்டை இழந்ததால், அங்கு உயரமாக வளர்ந்திருந்த மரங்களில் கடுமையாக மோதியது ஹெலிகாப்டர்.

மூன்றுமுறை குட்டிக்கரணம் அடித்து தரையில் மோதி வெடித்துச் சிதறியதில் கடும் வெப்பத்துடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், லெப்டி னல் கர்னல் ஹர்ஜித்தர் சிங், பிரிகேடியர் லிடர் உள்ளிட்ட 13 பேர் சம்பவ இடத்திலேயே தீக்கிரையாகினர். டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் இறந்தவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

Advertisment

இந்த விபத்து ஜனாதிபதி, பிரதமர் உள்பட தேசத்தையே நிலைகுலைய வைத்தது. தமிழ்நாட்டில் நடந்த விபத்தைக் கேள்விப் பட்டு அதிர்ச்சியடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக குன்னூருக்கு பறந்தார். விபத்து குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றன புலனாய்வு அமைப்புகள்.

ஹெலிகாப்டரின் பாதுகாப்புத் தன்மை

பிபின் ராவத் பயணித்த எம்.ஐ.-17 வி-5 ரக ஹெலிகாப்டர், ரஷ்யாவின் தயாரிப்பு. ஒரு மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 580 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக பயணிக்கும் சக்தி கொண்டது. அதிகபட்சமாக 6,000 மீட்டர் உயரம் வரை பறக்க முடியும். இதன் விலை ரூ.145 கோடி. உலக அளவில் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர் என வகைப்படுத்தப்பட்டது. ஆட்டோ பைலட் சிஸ்டம் பொருத்தப்பட்ட மிகச்சில ஹெலிகாப்டர்களில் இந்த ரகம் மிக முக்கியமானது. இரவு நேரத்திலும் துல்லியமாக பாதையைப் பார்க்க முடியும். பெட்ரோல் டேங்க் மிகவும் பாதுகாப்பானதாக வடிவமைக்கப் பட்டிருக்கும். தீ விபத்து ஏற்பட்டால் அணைக்கும் வசதி உண்டு. அனைத்து தட்பவெப்ப நிலையிலும் இந்த ரக ஹெலிகாப்டர்களால் இயங்க முடியும். யுத்த காலங்களில் முழு கவசம் தரித்த ஆயுதங்கள் கொண்ட தாக்குதல் ஹெலிகாப்டராகவும் இதனை பயன்படுத்த முடியும்.

bb

சைபர் போர்?

இவ்வளவு பாதுகாப்பு அம்சங்கள் இருந்தும் சாதாரண பனி மேக மூட்டங்களில் சிக்கி விபத்துக்குள்ளானதால்தான் சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து பேசிய சுப்பிரமணியசாமி, "ராணுவத்தில் உயர் பொறுப்புகளில் இருக்கும் ஒரு சிலர்தான் அரசாங்கத்தை பற்றி பயப்படாமல் கருத்துச் சொல்லக்கூடியவர்கள். அந்த வகையில், இந்தியாவுக்கு சீனா தொல்லை கொடுத்து வருகிறது. சீனா நமக்கு ஒரு ஆபத்து. நமது எல்லைக்குள் சீனா வந்து விட்டது என கூறியவர் பிபின்ராவத். என்னைப் பொறுத்த வரை, சைபர் வார்ஃபேர் இந்த விபத்தின் பின்னணியில் இருந்திருக்கலாம். லேசர் மூலமாகவே தொழில் நுட்பக் கோளாறுகளை ஏற்படுத்த முடியும். இந்த சம்பவம் அதுபோன்ற ஒன்றாக இருக்குமோ என சந்தேகம் கொள்ள வைக்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடு பாதுகாப்பு விசயங்களில் மறு ஆய்வு நடத்திட வேண்டும்'' என்கிறார்.

தொடரும் விபத்துகள்

கடந்த 2 வருடங்களில் மட்டும் இந்திய ராணுவத்தின் 7 விமானங்கள் விபத்துக்குள்ளாகி யிருக்கின்றன. குறிப்பாக, மத்திய பிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் 21-ந் தேதி பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிராஜ் 2000 ரக விமானம் விழுந்து நொறுங்கியது. அதேபோல கடந்த ஆகஸ்டில் ராஜஸ்தான் பார்மரிலிம், மே மாதம் பஞ்சாப்பின் மோக மாவட் டத்திலும் நடந்த பயிற்சியில் மிக் 21 ரக விமானங்கள் நொறுங்கி விழுந்தன. கடந்த மார்ச் 17-ந் தேதி மத்திய பிரதேசத்தின் குவாலியரிலும், ஜனவரி 5-ந் தேதி ராஜஸ்தான் சூரத்கரிலும் நடந்த பயிற்சியில் மிக் 21 பைசன் ரக விமானங்கள் விபத்துக்குள்ளாகின. அதேபோல 2018-ல் கேதார்நாத் மலை முகடுகளில் இறங்கிய எம்.ஐ.-17 வி 5 ரக ஹெலிகாப்டர் இரும்பு காரிடாரில் மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக 2 விமானிகள், 4 பயணிகள் தப்பித்தனர். 2017-ல் அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் அருகே பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படை யின் எம்.ஐ.-17 வி-5 ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதில் 7 பேர் பலியானார்கள்.

ss

2015, டிசம்பரில் டெல்லி விமானநிலையம் அருகில் துணை ராணுவ ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 10 பேர் உயிரிழந்தனர். 1996-ல் இந்திய பாதுகாப்புத்துறை இணை அமைச்சராக இருந்த தி.மு.க.வின் என்.வி.என். சோமு, ராணுவ முகாமிற்கு செல்வதற்காக அவர் பயணித்த ராணுவ ஹெலி காப்டர் விபத்தில் சிக்கியது. சோமு மரணமடைந் தார். அதேபோல மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த மாதவராவ் சிந்தியா, கடந்த 2001-ல் விமான விபத்தில் உயிரிழந்தார்.

எவ்வளவு அதிநவீன பாதுகாப்பு அம்சங் களை உள்ளடக்கிய விமானங்கள், ஹெலிகாப்டர் களாக இருந்தாலும், பராமரிப்பு சரியில்லாமலும் தரமற்றவையாகவும் இருந்தால் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின் றன. இத்தகைய விபத்துகளால், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை இழந்தது போல, கடந்த காலங்களில் பல தலைவர்களையும் தளபதிகளையும் இந்தியா இழந்திருப்பது ஜீரணிக்கமுடியாத சோகம்.

-இரா.இளையசெல்வன்

____________

தளபதியின் வீரநடை!

பிபின் ராவத்தின் முழுப்பெயர் பிபின் லஷ்மண்சிங் ராவத். அவரது தந்தையும் ராணுவத்தில் அதிகாரியாக இருந்தவர். சிம்லா வில் பள்ளிப்படிப்பிற்குப் பிறகு, இதே வெலிங்டன் ராணுவ உயரதிகாரிகளுக்கான பயிற்சிக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, கடக்வாஸ்லாவிலுள்ள தேசிய பாதுகாப்புக் கல்லூரி யிலும் பல்வேறு பிரிவுகளில் தேர்ச்சியடைந்தவர் பிபின். சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு குறித்த படிப்பில் எம்.ஃபில் பட்டமும் அவருக்கு கிடைத்தது.

dd

இந்திய ராணுவத்தில் 40 ஆண்டுகள் அனுபவம் கொண்ட பிபினின் பங்களிப்பு மிகப் பெரியது. இந்திய ராணுவத்தில் பிரிகேடியர் கமாண்டர் மற்றும், இந்திய ராணுவ இயக்குனரகத் தில் தலைமை அதிகாரியாக இருந்தபோது அர்ப்பணிப்புடன் கூடிய ராணுவ வீரர்கள் பலரையும் உருவாக்கியவர்.

ஐ.நா. அமைதிப்படையின் ஒருங்கிணைந்த பிரிவில் உறுப்பினராகவும், காங்கோ ஜனநாயக குடியரசில் சர்வதேச படையணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பும் பிபினுக்கு கிடைத்தது. அவரது ராணுவ அறிவாற்றலுக்காக 2 முறை "ஃபோர்ஸ் கமாண்டர்' என்கிற கௌரவப் பட்டம் சர்வதேச அளவில் வழங்கப்பட்டது.

cc

இந்திய ராணுவ ஜெனரல் தல்பீர்சிங்கின் ஓய்வுக்குப் பிறகு, 2016, டிசம்பர் 17-ல் இந்தியாவின் 27-வது ராணுவ தளபதியாக பதவியேற்றார் பிபின் ராவத். அந்தப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றதையடுத்து, அவரது ராணுவ சேவையையும் ராணுவ நிபுணத்துவத்தையும் தேசத்துக்கு மேலும் பயன்படுத்திக்கொள்ள 2019, டிசம்பர் 31-ந் தேதி இந்திய முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்டார் பிபின். இவருக்காகவே இந்த பதவியை முதன்முதலாக உரு வாக்கினார் பிரதமர் மோடி. இந்த பதவியில் பிபினை நியமிப்பதற் காக 2 உய ரதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தது மோடி அரசாங்கம். இது அப்போதே பலத்த சர்ச்சைகளையும் ஏற் படுத்தியது.

இந்திய -மியன்மார் எல்லைப் பகுதியில் 2015-ல் நாகா கிளர்ச்சியாளர்கள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எல்லை தாண்டிச் சென்று இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து முறியடித்தது. அந்த ஆப்ரேசனுக்கு மூளையாக செயல்பட்டவர் பிபின் ராவத். டெல்லியில் உட்கார்ந்து கொண்டே எல்லைப் பகுதியில் துல்லியமாக தாக்குதலை நடத்திய அவரது நிபுணத்துவம் பிரமிக்கத்தக்கதாக இருந்தது.

பாகிஸ்தானின் எல்லை தாண்டும் பயங்கரவாதத்தை முறியடிக்க பிபினின் உரி தாக்குதல்தான் பயன்பட்டது. பாகிஸ்தானுக்குள்ளேயே நுழைந்து இந்திய ராணுவம் நடத்திய சர்ஜிகல் ஸ்ட்ரைக்கிற்கு தலைமையேற்றிருந்தவர் பிபின் ராவத். பிபினின் ராணுவ சேவைக்காக பரம் விசிஷ்டா சேவா, விசிஷ்டா சேவா, அதி விசிஷ்டா சேவா, உத்தம் யுத் சேவா, யுத் சேவா உள்ளிட்ட பல உயரிய விருதுகள் அவரை அலங்கரித்துள்ளன.

-இளையர்

__________________

எரிந்தபடி கதறியவர்கள்!

ஹெலிகாப்டர் நொறுங்கி கீழே விழுந்ததுமே, குண்டு வெடித்தது போன்ற சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தது. மக்கள் அலறியடித்து சம்பவ இடத்தை நோக்கி ஓடினர். அங்கே ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் நாலாப்புறமும் சிதறிக்கிடந்தன. சிலர் உடல் கருகிய நிலையில் தங்களை காப்பாற்றுங்கள் என கத்தியபடியே உயிர் விட்டுக் கொண்டிருந்தனர் .

dd

பொதுமக்களால் அவர்களை நெருங்க முடியாமல் போனதற்கு ஹெலிகாப்டரில் இருந்த எரிபொருள் டேங்க் முழுதாய் நிரப்பப்பட்டிருந்ததுதான் காரணமாய் இருந்தது. வெலிங்டன் ராணுவ மையத்தில் இருந்து மீட்பு குழுவினரும், தீயணைப்புப் படையினரும் வந்து நீண்ட போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்த பின்னர் கருகி இறந்து போனவர்கள், உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள் என அனைவரையும் வெலிங்டன் ராணுவ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரி பேராசிரியரும், குரூப் கேப்டனுமான வருண்சிங் மட்டுமே பலத்த காயங்களோடு உயிர் தப்பியிருக்கிறார் .

கடந்த ஆண்டு தேஜஸ் ரக போர் விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த வருண்சிங் நடுவானில் தொழில் நுட்பக் கோளாறு ஏற்பட்டபோது, சூழ்நிலையை திறம்படக் கையாண்டு தரையிறக்கியதை வைத்தே "சவ்ரிய சக்ரா விருது' வருண் சிங்கிற்கு கொடுக்கப்பட்டது . அப்படி நடுவானில் இருந்து தரையிறங்கச் செய்த வருண்சிங்கால், இந்த சின்ன காரியத்தை செய்ய இயலாமல் போனது துரதிர்ஷ் டம்தான் என்கின்றனர் ராணுவ மையத்தினர்.

ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டெடுக்கப் பட்டிருக்கிறது. கடைசி நேர உரையாடல்களை அது சேமித்து வைத்திருக்கும் என்பதால், அது முக்கியமாக கவனப்படுத்தப் பட்டிருக்கிறது.

-அ.அருள்குமார்