Advertisment

இஸ்லாமியர்களை புறக்கணிக்கிறாரா? ஆதரிக்கிறாரா? - அமைச்சருக்காக போஸ்டர் யுத்தம்!

mm

""புறக்கணிப்போம் புறக்கணிப்போம் இஸ்லாமியர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் அ.இ.அ.தி.மு.க. திருச்சி மாவட்ட கழக செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் ஜனாப் கலீல் ரகுமானை பதவியில் இருந்து எடுத்து இஸ்லாமியர்களை புறக்கணிக்கும்

""புறக்கணிப்போம் புறக்கணிப்போம் இஸ்லாமியர்களை தொடர்ந்து புறக்கணிக்கும் அ.இ.அ.தி.மு.க. திருச்சி மாவட்ட கழக செயலாளர் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி பாலக்கரை பகுதி செயலாளர் ஜனாப் கலீல் ரகுமானை பதவியில் இருந்து எடுத்து இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் அமைச்சரையும் அ.தி.மு.க.வினரையும் சட்டமன்றத் தேர்தலில் புறக்கணிப்போம் புறக்கணிப்போம்'' என இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் திருச்சி மாவட்டம் என மாநகர் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டப் பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisment

mm

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ""திருச்சி மாநகர் மாவட்ட அதிமுகவிற்கு புதியதாக பகுதி செயலாளர்கள் அறிவிப்பு வெளியானது. அதில் பாலக்கரை பகுதி செயலாளராக இருந்த கலீல் ரகுமான் நீக்கப்பட்டு புதிய பகுதி செயலாளராக சுரேஷ் குப்தா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன் காரணமாகவே இப்போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது'' என்றனர்.

இந்த போஸ்டர்கள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜனுக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது என்பதால், ""நன்றி நன்றி நன்றி கொரோனா பேரிடர் காலத்தில் சுமார் 3000 இஸ்லாமிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் அரிசி மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய நிவாரணப் பொருட்கள் வழங்கிய மாண்புமிகு அன்பு அண்ணன் வெல்லமண்டி நடராஜன் சுற்றுலா துறை அமைச்சருக்கு மனமார்ந்த நன்றி நன்றி நன்றி'' என இஸ்லாமிய அதிமுக நிர்வாகிகள் திருச்சி மாநகர் மாவட்ட அஇ அதிமுகவும் பதிலுக்கு போஸ்டர் ஒட்டி திருச்சி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-ஜெ.டி.ஆர்.

Advertisment
nkn090920
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe