"ஹலோ தலைவரே, தமிழக அமைச்ச ரவையில் அதிரடி மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பதெல்லாம் ஒரு பக்கம் அரங் கேறி, தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்திய போதும், டெல்லியின் போக்கு தி.மு.க. தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கியிருக்கிறது.''”
"ஆமாம்பா, அதனால்தான் காஞ்சியில் நடந்த தி.மு.க. பவளவிழாவில் வைத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற மோடி அரசை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார்''”
"உண்மைதாங்க தலைவரே, மோடியின் அணுகுமுறைதான் ஸ்டாலினை இந்த அளவுக்கு எரிச்சல்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். தமிழகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசுக்கு பல முறை கடிதம் எழுதி அலுத்துப்போன நிலையில், கடந்த 27 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின், ஒன்றிய அரசு தமிழகத்தின் எந்தெந்த திட்டங்களுக்கு இன்னும் நிதி தரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டு, விரைந்து அவற்றை வழங்கவேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவையும் கொடுத்தார். அதனை வாங்கி மேலோட்டமாகப் பார்த்த மோடி, பார்க்க லாம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டு, அந்த மனுவைத் தன் செயல ரிடம் கொடுத்துவிட்டாராம். கோரிக்கையை நிறைவேற்றுவதாக எந்த உறுதியையும் அவர் தராததாலும், தமிழக விவகாரங்களில் மோடி காட்டிய அலட்சியத்தாலும் மனதிற்குள் கொந்தளித்துப் போய்விட்டார் ஸ்டாலின். அந்த கோபத்தில்தான், ’மாநிலங்களை ஒடுக்கி, ’ஒரே நாடு - ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறார். இதை அனுமதிக்கவே மாட்டோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத வர், வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன் என் கிறார்’என்றெல்லாம் காஞ்சிபுரத்தில் நடந்த தி.மு.க. பவள விழாவில், மோடியை கடுமையாக ஸ்டா லின் அட்டாக் செய்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"மோடியுடனான அந்த சந்திப்பில் இன்னும் சில கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது என்கிறார்களே?''”
"ஹலோ தலைவரே, தமிழக அமைச்ச ரவையில் அதிரடி மாற்றம், உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி என்பதெல்லாம் ஒரு பக்கம் அரங் கேறி, தி.மு.க. தொண்டர்களை உற்சாகப்படுத்திய போதும், டெல்லியின் போக்கு தி.மு.க. தலைமையை ஏகத்துக்கும் டென்ஷனாக்கியிருக்கிறது.''”
"ஆமாம்பா, அதனால்தான் காஞ்சியில் நடந்த தி.மு.க. பவளவிழாவில் வைத்து, ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற மோடி அரசை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்திருக்கிறார்''”
"உண்மைதாங்க தலைவரே, மோடியின் அணுகுமுறைதான் ஸ்டாலினை இந்த அளவுக்கு எரிச்சல்படுத்தி இருக்கிறது என்கிறார்கள். தமிழகத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் வஞ்சித்து வரும் ஒன்றிய அரசுக்கு பல முறை கடிதம் எழுதி அலுத்துப்போன நிலையில், கடந்த 27 ஆம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த ஸ்டாலின், ஒன்றிய அரசு தமிழகத்தின் எந்தெந்த திட்டங்களுக்கு இன்னும் நிதி தரவில்லை என்பதைச் சுட்டிக் காட்டிவிட்டு, விரைந்து அவற்றை வழங்கவேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவையும் கொடுத்தார். அதனை வாங்கி மேலோட்டமாகப் பார்த்த மோடி, பார்க்க லாம் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்லி விட்டு, அந்த மனுவைத் தன் செயல ரிடம் கொடுத்துவிட்டாராம். கோரிக்கையை நிறைவேற்றுவதாக எந்த உறுதியையும் அவர் தராததாலும், தமிழக விவகாரங்களில் மோடி காட்டிய அலட்சியத்தாலும் மனதிற்குள் கொந்தளித்துப் போய்விட்டார் ஸ்டாலின். அந்த கோபத்தில்தான், ’மாநிலங்களை ஒடுக்கி, ’ஒரே நாடு - ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தைக் கொண்டுவரப் பார்க்கிறார். இதை அனுமதிக்கவே மாட்டோம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாத வர், வானம் ஏறி வைகுண்டம் காட்டுவேன் என் கிறார்’என்றெல்லாம் காஞ்சிபுரத்தில் நடந்த தி.மு.க. பவள விழாவில், மோடியை கடுமையாக ஸ்டா லின் அட்டாக் செய்திருக்கிறார் என்கிறார்கள்.''”
"மோடியுடனான அந்த சந்திப்பில் இன்னும் சில கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டது என்கிறார்களே?''”
’"ஆமாங்க தலைவரே, இதுகுறித்து டெல்லி தரப்பில் நாம் விசாரித்தபோது, ’வேறு சில பர் சனல் கோரிக்கையையும் மோடியிடம் ஸ்டாலின் வைத்தார். ஆனால், அதற்கு மோடியிடமிருந்து பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கவில்லை’ என்கிறார் கள். குறிப்பாக, தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன், இந்திய ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் வெளிநாடுகளில் முதலீடு செய்தார் என்று குற்றம் சாட்டி, அவருக்கு 908 கோடி ரூபாய் அபராதம், அண்மையில் அமலாக்கத்துறை விதித்தது. இந்த டூமச் அபராதம், தி.மு.க. மேலிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே, தி.மு.க. எம்.பி.யான ஜெகத்ரட்சகன் விசயத்தில், அமலாக் கத்துறை அத்துமீறுகிறது என்றும் மோடியிடம் ஸ்டாலின் சொன்னாராம். இதற்கும் மோடியிட மிருந்து பாசிட்டிவ்வான பதில் வரவில்லையாம். இதுவும் ஸ்டாலினின் டென்சனை அதிகரித்ததாம். இதைச் சொல்லும் டெல்லி தரப்பு, ஜெகத்தின் அந்த வெளிநாட்டு முதலீடுகளில், கட்சி மேலிடத்தின் பங்கும் இருக்கிறது என்று வில்லங்கமாய் புன்னகைக்கிறது.''”
"செந்தில்பாலாஜியின் ரீ-என்ட்ரியைக் கண்டு அ.தி.மு.க. தரப்பு ரொம்பவே கவலையடைந் திருக்கிறது என்கிறார்களே?''”
’"செந்தில்பாலாஜி ஜாமீனில் வெளியே வந்ததும், அதே வேகத்தில் அவர் அமைச்சராகப்பட்டதும் அ.தி.மு.க. தரப்பிற்கு ஒருவித கலக் கத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம். அவர் கொங்குமண்டலத்தில் தங்க ளுக்குப் பெரும் சவாலாக இருப்பார் என்று அது நினைக்கிறதாம். தங்கள் கோட்டை என்று அ.தி.மு.க.வினர் சொல்லிவரும் கொங்கு மண்ட லத்தில், 11 எம்.எல்.ஏ.க்களை அவர் கள் பெற்றிருக்கிறார்கள். அவர்களின் இந்த எண்ணத்தை உள்ளாட்சித் தேர்தலிலும், நாடாளுமன்றத் தேர் தலிலும் தி.மு.க. முறியடித்திருக்கிறது என்றாலும், அங்கே மறுபடியும் தங்களை நிலை நாட்டிக்கொள்ள அ.தி.மு.க.வும் மாஜி வேலுமணி தரப்பும் தயாராகிவந்தது. இந்த நிலையில் வேலுமணிக்கு எதிராக டெண்டர் முறைகேடு வழக்கைக் கையில் எடுத்து, தி.மு.க. அரசு அவருக்கு செக் வைத்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மறு எழுச்சி அ.தி.மு.க. தலைமையை மிரட்சியோடு ஆலோசிக்க வைத்திருக்கிறது. எடப்பாடி வீட்டில் நடந்த இந்த ஆலோசனையின்போது, செந்தில்பாலாஜி தங்கள் எம்.எல்.ஏ.க்களை வளைக்கலாம் என்றும், கொங்கின் ஜாதகத்தை அவர் மாற்றி எழுதலாம் என்றும் அவர்கள் கவலையோடு விவாதித்தார்களாம்.''”
"ஆம்ஸ்ட்ராங் விவகாரத்திலும் காங்கிரஸ் செல்வப் பெருந்தகைமீது பா.ஜ.க. தரப்பு குற்றம் சாட்டி வருகிறதே?''
"ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கு தற்போதைக்கு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறதாம். அந்த விவகாரத்தில் தொடர்புடைய சம்பவ செந்தில் சிக்கினால்தான் மேற்கொண்டு, விசாரணை நகரும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆனால், தலைமறைவான சம்பவ செந்திலோ, தாய்லாந்தில் இருந்து துபாய்க்கு தப்பிவிட்ட தாக விசாரணை டீமுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இந்த நிலையில்தான் ஆம்ஸ்ட்ராங் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பிருக் கிறது என்று பா.ஜ.க. தரப்பு ஒரு அதிரடிக் குரலை எழுப்பி வருகிறது. இதற்கெல்லாம் விடை அந்தக் குற்றப்பத்திரி கையில் இருக்கும் என்கிறார்கள் காவல்துறையினர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் கைதானவர்களில் ஒருவரான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனின், வழக் கறிஞர் பதிவைப் பறிக்கும்படி காவல்துறை கேட்டுக் கொண்டதால், அகில இந்திய வழக்கறிஞர் வாரியம் அதை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை எடுத்திருக்கிறதாம். இதுவரை நடந்த விசாரணையில் கைதுசெய்யப்பட்ட அசுவத்தாமன் மற்றும் அவரது அப்பா நாகேந்திரன் ஆகி யோர்தான் இந்தப் படுகொலைக்குத் திட்டமிட்டதாகத் தெரியவந்திருக்கிறதாம். எனவே, அடுத்தவாரம் குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், விசாரணை டீம் தயாராகிவருகிறது என்கிறார்கள்.''”
"தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் பாஜக மாநில நிர்வாகி அடித்த ஸ்டண்ட் தப்பாயிருச்சே?''”
"தஞ்சை அருகே உள்ள மைக்கேல்பட்டி மாணவியர் விடுதியில் தங்கியிருந்த ப்ளஸ் டூ மாணவி லாவண்யா, தற்கொலை செய்துகொண்டது பெரிய பிரச்சினையானது. மதமாற்றத்துக்கு வற்புறுத்தியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று, மாற்று மதத்தினர் மீது புகார் குண்டை வீசி, பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தினார் மாநில பா.ஜ.க. நிர்வாகி. இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ., அவரது தற்கொலைக்கு மதமாற்ற விவகாரம் காரணமில்லை என்று நீதிமன்றத்திடம் தெரிவித்திருக்கிறது. இந்த விவகாரத்திற்கு மதமாற்ற சாயம் பூசியவரான அந்த பா.ஜ.க. நிர்வாகி, இப்போது வெளிநாட்டில் இருக்கிறார், எனினும், அவரது அவசரக்குடுக்கைத்தனத்தை, அவர் கட்சியினரே இப்போது விமர்சித்து வருகிறார்கள்.''”
"மாணவி கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி விவகாரமும் பலருக்கும் நெருடலை ஏற்படுத்தி வருகிறதே?''”
’"கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் மாமா செந்தில்முருகனை, அதிரடியாகக் கைதுசெய்த போலீஸ், அவரை சிறையில் அடைத்திருக்கிறது. அவர் இன்னும் ஜாமீனில் வெளியே வரவில்லை. இந்த நிலையில் ஸ்ரீமதியின் அம்மா செல்வியையும் விசாரித்த போலீஸ் டீம். அவர் தன் மகள் மரணத்துக்கு நீதி வேண்டும் என்று கதறியழுததைப் பார்த்து கோபமாகி, ஸ்ரீமதி இறந்தபோது கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்துக்குக் காரணமே நீதான் என்று சொன்னதாம். இதை எதிர்த்து செல்வி நீதிமன்றம் செல்ல இருக்கிறாராம். இதைத் தொடர்ந்து ஸ்ரீமதி தொடர்பான வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்த இருக்கிறது என்கிறார்கள்.''”
"என் கவனத்துக்கு வந்த ஒரு முக்கிய தகவலை இங்கே நானும் பகிர்ந்துகொள்கிறேன். நெல்லை காங்கிரஸ் பிரமுகர் ஜெயகுமார் மர்ம மரண விவகாரத்தில் இன்னும் குற்றவாளிகள் என்று யாரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை கைது செய்யவில்லை. இந்த வழக்கு கொஞ்சம் கூட முன்னேற்றம் இல்லாமல் நொண்டி அடிக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணியில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் கிளம்பிய நிலையில், அவரை இதுவரை பெயரளவுக்கு கூட சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கவில்லை. அதற்குக் காரணம், தி.மு.க.வில் உயர்ந்த மனிதர் என சொல்லப்படும் தென்மாவட்டப் புள்ளியின் பாதுகாப்பில் அவர் இருப்பதால்தானாம். இந்த சம்பவத்தில் போலீஸ் அக்கறை காட்டவில்லை என இங்குள்ள காங்கிரஸ் பிரமுகர்கள் ராகுல்காந்தியிடம் புகார் வாசித்து வருகிறார்களாம்.
_____________
காஞ்சிபுரத்தில் தி.மு.க. பவள விழா பொதுக்கூட்டம்!
திராவிட முன்னேற்ற கழகம் துவங்கி 75-ஆம் ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, காஞ்சிபுரம் அண்ணா பிறந்த மண்ணில் மாபெரும் பவள விழா பொதுக்கூட்டம், காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி விளையாட்டு திடலில் செப்டம்பர் 28-ஆம் தேதி நடந்தது.
கூட்டத்தை தி.மு.க. பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுரு கன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் விழாவில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசும்போது, “சில கட்சிகள் உருவாக்கும் கூட்டணி கள் தேர்தல் நேரத்தில் உருவாகி தேர்தல் முடிந்ததும் கலைந்துவிடும். ஆனால் நம்முடைய கூட்டணி அப்படி அல்ல. தி.மு.க.வின் அடிப் படைக் கொள்கை சமுதாய சீர்திருத்தம், பொருளாதார சமத்துவம், அரசியல் ஜனநாயகம். இதை உருவாக்கத்தான் தி.மு.க. தோன்றியது. தொடர்ந்து செயல் பட்டு வருகிறது. இந்த உன்னத மான மூன்று கொள்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டு மென்றால் அதிகாரம் பொருந்திய தாக மாநிலம் இருக்கவேண்டும். அதனால்தான் மாநில சுயாட்சிக் கொள்கையை தன்னுடைய உயிர்போல அண்ணா வலியுறுத்தினார். மாநில சுயாட்சிக் கொள்கையை அடைவதற்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்துவருகின்றது தி.மு.க. தொடர்ந்து மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதியேற்போம்” என்று பேசி யமர்ந்தார்.
-அரவிந்த்
படம்: ஸ்டாலின்