ராங்கால் : இலட்சியம் 200! ஒரு மந்திரியும் ஜெயிக்கக்கூடாது! ரத யாத்திரைக்கு ரெடி!

rang

லோ தலைவரே, மிஷன் 200னு சொல்லி இருநூறு தொகுதிகளுக்கு ஒன்று குறையாமல் ஜெயிக்கணும்னு தி.மு.க. நிர்வாகிகளிடம் மு.க. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டா சொல்லியிருக்காரே?''

""ஞாயிறுன்னா சூரியன். உதயசூரியன் கட்சியான தி.மு.க. நிர்வாகிகளை ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு அறிவாலயத்தில் கூட்டி ஆலோசித்தாரு மு.க.ஸ்டாலின். அப்பதானே இந்த மிஷன் 200ஐ அறிவிச்சாரு.''

stalin

""ஆமாங்க தலைவரே.. ஸ்டாலின் தான் வாராரு.. விடியல் தரப்போறாருங்கிற முழக்கத்தோடு, "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்'ங்கிற ட்ரெண்டிங்னு இந்த மிஷன் தொடங்கப்பட்டிருக்கு. தமிழகத்தில் இருக்கும் 16 ஆயிரம் ஊராட்சிகளிலும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10-க்குள் கிராம சபை கூட்டம் நடத்தி, எடப்பாடி அரசுக்கு எதிரான 10 குற்றச் சாட்டுகளை மக்களிடம் விளக்கும் திட்டத்தை தி.மு.க. வகுத்திருக்கு. கிராமங்கள் வரை ஊடுருவி வாக்குகளை உதய சூரியனுக்கு ஆதரவா பூத்துக்கு கொண்டு வருவதும், ஒரு மந்திரி யைக்கூட ஜெயிக்க விடக் கூடாது என்பதும் இந்த மிஷனோட நோக்கம்.''

""ஆரம்பகால தி.மு.க. பாணின்னு சொல்லுப்பா...''’’

""உண்மைதாங்க தலைவரே, கடந்த நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பும் இதேபோல் கிராம சபைக் கூட்டங்களை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முன்னெடுத்தது. அதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை இல்லா அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்துடன் மகத்தான வெற்றியை தி.மு.க. கூட்டணி அடைந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை மிஞ்சி எதிர்க்கட்சியான தி.மு.க. ஜெயித்தது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஐபேக், ஐ.டி விங், ஆன்லைன் பிரச்சாரங்கள் இருந்தாலும், கிராம சபைக் கூட்டங்கள்தான் தி.மு.கவின் மெகா டார்கெட்.''

rr

""மிஷன் சரி, கள நிலவரம் எப்படி?''

""மிஷன் 200ன்னாலும் தி.மு.கவுக்கு மெஜாரிட்டி கிடைக்கக்கூடிய அளவில் களம் இருப்பதை மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும் உளவு ரிப்போர்ட்டுகள் உறுதிப்படுத்துது. ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலினே சொன்னதுபோல, தி.மு.க நிர்வாகிகள் உள்ளடி செய்யாமல் ஒற்றுமையா வேலை பார்த்தால், எம்.பி. தேர்தல்போல எம்.எல்.ஏ தேர்தலும் அமையும்.''

""கரன்சி பலமும் அதற்கான பாய்ச்சலும் ஆளுந்தரப்பிடம் அமோகமா இருக்குதே?''

rang

""உண்மைதாங்க

லோ தலைவரே, மிஷன் 200னு சொல்லி இருநூறு தொகுதிகளுக்கு ஒன்று குறையாமல் ஜெயிக்கணும்னு தி.மு.க. நிர்வாகிகளிடம் மு.க. ஸ்டாலின் ஸ்டிரிக்ட்டா சொல்லியிருக்காரே?''

""ஞாயிறுன்னா சூரியன். உதயசூரியன் கட்சியான தி.மு.க. நிர்வாகிகளை ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு அறிவாலயத்தில் கூட்டி ஆலோசித்தாரு மு.க.ஸ்டாலின். அப்பதானே இந்த மிஷன் 200ஐ அறிவிச்சாரு.''

stalin

""ஆமாங்க தலைவரே.. ஸ்டாலின் தான் வாராரு.. விடியல் தரப்போறாருங்கிற முழக்கத்தோடு, "அ.தி.மு.க.வை நிராகரிப்போம்'ங்கிற ட்ரெண்டிங்னு இந்த மிஷன் தொடங்கப்பட்டிருக்கு. தமிழகத்தில் இருக்கும் 16 ஆயிரம் ஊராட்சிகளிலும் டிசம்பர் 23 முதல் ஜனவரி 10-க்குள் கிராம சபை கூட்டம் நடத்தி, எடப்பாடி அரசுக்கு எதிரான 10 குற்றச் சாட்டுகளை மக்களிடம் விளக்கும் திட்டத்தை தி.மு.க. வகுத்திருக்கு. கிராமங்கள் வரை ஊடுருவி வாக்குகளை உதய சூரியனுக்கு ஆதரவா பூத்துக்கு கொண்டு வருவதும், ஒரு மந்திரி யைக்கூட ஜெயிக்க விடக் கூடாது என்பதும் இந்த மிஷனோட நோக்கம்.''

""ஆரம்பகால தி.மு.க. பாணின்னு சொல்லுப்பா...''’’

""உண்மைதாங்க தலைவரே, கடந்த நாடாளு மன்றத் தேர்தலுக்கு முன்பும் இதேபோல் கிராம சபைக் கூட்டங்களை ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. முன்னெடுத்தது. அதன் விளைவாக நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை இல்லா அளவுக்கு அதிக வாக்கு சதவீதத்துடன் மகத்தான வெற்றியை தி.மு.க. கூட்டணி அடைந்தது. ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை மிஞ்சி எதிர்க்கட்சியான தி.மு.க. ஜெயித்தது. சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஐபேக், ஐ.டி விங், ஆன்லைன் பிரச்சாரங்கள் இருந்தாலும், கிராம சபைக் கூட்டங்கள்தான் தி.மு.கவின் மெகா டார்கெட்.''

rr

""மிஷன் சரி, கள நிலவரம் எப்படி?''

""மிஷன் 200ன்னாலும் தி.மு.கவுக்கு மெஜாரிட்டி கிடைக்கக்கூடிய அளவில் களம் இருப்பதை மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பப்படும் உளவு ரிப்போர்ட்டுகள் உறுதிப்படுத்துது. ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலினே சொன்னதுபோல, தி.மு.க நிர்வாகிகள் உள்ளடி செய்யாமல் ஒற்றுமையா வேலை பார்த்தால், எம்.பி. தேர்தல்போல எம்.எல்.ஏ தேர்தலும் அமையும்.''

""கரன்சி பலமும் அதற்கான பாய்ச்சலும் ஆளுந்தரப்பிடம் அமோகமா இருக்குதே?''

rang

""உண்மைதாங்க தலைவரே, தேர்தலை மனதில் வைத்து, பொங்கல் பரிசுங்கிற சாக்கில் எடப்பாடி அரசு, ரேசன் கார்டுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப் போகுதுன்னு ஏற்கனவே நாம் பேசிக்கிட்டோம். அதை இப்போ 2,500 ரூபாய்னு உயர்த்தி அறிவிச்சிருக்கார் எடப்பாடி. கொரோனா பொதுமக்களின் பொருளாதாரத்தை முடங்கியதால், தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ரேசன் அட்டை தாரர்களுக்குத் தலா ரூ 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கனும்னு கோரிக்கை வச்சிருந்தார். இந்தக் கோரிக்கைக்கு ஆதரவும் எதிர்பார்ப்பும் இருந்தது. நிதி இல்லைன்னு அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது.''

""இப்ப மட்டும் சொந்தக் காசையா அள்ளி கொடுக்குறாங்க?''

""அள்ளிக் கொடுத்தாலும் அது சொந்தக்காசு இல்லீங்களே தலைவரே... தேர்தல் ஆணையம் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதியை அறிவிக்க இருக்குது. இந்த நிலையில் 19-ந் தேதியன்னைக்கு காங்கிரஸ் எம்.பி.யும், அதன் செயல் தலைவர்களில் ஒருவருமான விஷ்ணுபிரசாத், ஊடகத்தினரை சந்திச்சி, கஜா புயல் தாக்கிய நேரத்திலேயே ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ 2000 ரூபாய் தரப்படும்னு சொன்ன எடப்பாடி, அதற்காக 1,200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவித்தார். இதைத் தேர்தலுக்குப் பிறகு வழங்கனும்ன்னு உயர்நீதி மன்றம் உத்தரவிட்ட பிறகு, அந்த அறிவிப்பு என்ன ஆச்சுன்னு தெரியலை. அதற்காக ஒதுக்கப்பட்ட பணம் எங்கே போச்சுன்னும் தெரியலைன்னு குற்றச்சாட்டை வச்சார்.''

""ஆமாம்பா, இது பத்தி நாடாளுமன்றத்தில் பேசுவேன்னும் விஷ்ணு பிரசாத் சொன்னாரே?''’

""ஆமாங்க தலைவரே, அதோடு, ரேசன் கார்டுக்கு தலா 5 ஆயிரம் வீதம் வழங்கனும்னு வலியுறுத்தினார். இதுக்கு முன்பே, இவரது ஊடகச் சந்திப்பைப் பற்றி முன்னதாகவே உளவுத்துறை முதல்வர் எடப்பாடிக்கு நோட் போட்டதால், எடப்பாடியில் பிரச்சாரத்தை தொடங்கிய அன்று மதியம் சேலத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய எடப்பாடி, பொங்கல் பரிசாக அரிசி கார்டுகளுக்கு ரூபாய் 2,500 ரூபாய் வீதம் வழங்கப்படும்ன்னு உயர்த்தி அறிவிச்சிட்டார். ஊரெங்கும் இப்ப இதுதான் பேச்சு.''

""அது சரிப்பா, கட்சியின் ஏனைய தலைமைக் கழக நிர்வாகிகளிடம் கூட ஆலோசிக்காமல் எடப்பாடி தன்னிச்சையாகத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிட்டார்ன்னு ஓ.பி.எஸ். உள்ளிட்டவர்களே கோபத்தில் இருக்காங்களாமே?''

""தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவது பற்றி, 2021 பிறந்தவுடன் முடிவு செய்யலாம்னு சொல்லியிருந்த எடப்பாடி, திடீர்ன்னு தன்னிச்சையாக பிரச்சாரம் தொடங்கியதை ஓ.பி.எஸ். உள்ளிட்ட கட்சியின் மற்ற சீனியர்கள் ரசிக்கலை. அப்செட்டான அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ், க்ரீன்வேஸ் சாலையில் அரசு இல்லம் தவிர, தனக்கு இருக்கும் தனி ஃப்ளாட்டில் உட்கார்ந்து தியானம் பண்ண ஆரம்பிச்சிட்டாராம்.''

""கூட்டணி, முதல்வர் வேட்பாளர் இதையெல்லாம் பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்யும்னு எல்.முருகன் ஒரு பக்கம் குடைச்சல் கொடுக்குறாரே?''

""19-ந் தேதி அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் விசிட் அடித்தபோது இதையே திரும்பவும் முருகன் அழுத்தமாகச் சொல்ல, அ.தி.மு.க. தரப்பில் எரிச்சலை ஏற்படுத்திருக்கு. இதைத் தொடர்ந்து, முருகன் வாய்க்கு கடிவாளம் போடுங்கள். இல்லைன்னா, எங்கள் கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறதா இல்லையான்னு தெளிவுபடுத்துங்கள்னு பவ்யம் கலந்த டென்ஷனை டெல்லியிடம் காட்டியிருக்கிறதாம் அ.தி.மு.க. தலைமை.''

""அ.தி.மு.க.வுக்கு எதிரான நடவடிக்கைகளில் டெல்லி வேகம் காட்ட ஆரம்பித்திருக்கே?''

""ஏற்கனவே எடப்பாடி அரசுக்கு எதிரான புகார்கள் பல தரப்பில் இருந்தும் டெல்லிக்குப் போயிருப்பது பற்றியும், அதன் அடிப்படையில் 12 அமைச்சர்கள் உட்பட அ.தி.மு.வினர் சிலர் மீது நடவடிக்கைகள் பாய இருப்பது பற்றியும் பேசியிருக்கிறோம். அதில் முதல் டார்கெட், எடப்பாடி தரப்புதானாம். அடுத்தடுத்து அமைச்சர்கள் பலரும் டெல்லியின் கிடுக்கிப் பிடியில் சிக்க இருக்கிறார்களாம். டெல்லி லாபி மூலம் எடப்பாடியும் சளைக்காம காய் நகர்த்துறாராம்.''’

ra

""சசிகலாவுக்கு முன்பாகவே அவரோடு கைதான, மாஜி வளர்ப்பு மகன் சுதாகரன் ரிலீஸ் ஆகப்போகிறாராமே?''

""கைதானதிலிருந்து பரோல் கேட்டு சுதாகரன் வெளியே வராததால, சசிக்கு முன்னதாகவே விடுதலை ஆகப்போகிறாராம். பிப்ரவரிவாக்கில் சசிகலா விடுதலை ஆனதும், அவரை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டு அவருக் குக் கட்சியில் முக்கிய பதவியை வழங்க வேண்டும்னு பா.ஜ.க. தலைமை நிர்பந்திக்கிறதாம். இணைப்பின் மூலம் அ.தி.மு.க.வை பலப்படுத்தி தி.மு.க.வுக்கு செக் வைப்பது, அல் லது அ.தி.மு.க.வைப் பஞ்சர் பண்ணி அந்த இடத்தில் தங்கள் கட்சியை நிலைநிறுத்துவதுன்னு இரண்டு ப்ளான் வச்சிருக்குது பா.ஜ.க மேலிடம்.''

rajini

""வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாதுன்னு மன்ற நிர்வாகிகளை ரஜினி எச்சரித்திருப்பதா செய்தி வந்திருக்கே?''

""அரசியல் கட்சிக்கான ஆலோசனைகள் விறுவிறுப்பாகியிருக்குங்க தலைவரே!…ரஜினியின் புதுக்கட்சி அறிவிப்பு வெளியாகும் நாளில் பா.ஜ.க.வின் தேசியத் தலைவரான ஜே.பி.நட்டாவை தமிழகத்துக்கு அனுப்பிவைக்க மோடி முடிவெடுத்திருந்தது பற்றி ஏற்கனவே பேசியிருந்தோம். நட்டாவுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டதால், அவருக்கு பதில் ஆர்.எஸ். எஸ்.சின் தேசியத் தலைவர் மோகன் பகத்தை அனுப்ப இருக்கிறார் மோடி. அவரது நிகழ்ச்சி நிரலை டெல்லி கவனமாக தயாரித்து வருகிறதாம்.''’

""ஓஹோ.''

""ரஜினி கட்சி தொடங்கும் நாளில், மோகன் பகவத் தமிழகத்தில் இருப்பதோடு, ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தொண்டர்களுக்கு, ஒரு சில வியூகங்களை வகுத்துக் கொடுத்து, தேர்தல் பணிகளில் களமிறக்க இருக்கிறாராம். இதற்கிடையே அத்வானி பாணி யில் ஜனவரியில் ரஜினி, தமிழகம் முழுக்க ரத யாத்திரை நடத்தும் முயற்சியில் தீவிரமாகி இருக் கிறாராம். இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியில் தனக்கு இருக்கும் ஆதரவை அவர் தெரிந்து கொள்ள விரும்புகிறாராம். ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ந் தேதி அவர் நினைவிடத் தைத் திறந்துவைக்கும் மோடி, அந்தப் பயணத்தைப் பிரச்சாரப் பயணமாக்க நினைக்கிறார். அதேபோல் மத்திய அமைச்சர்களையும் தமிழக பிரச்சாரக் களத்தில் இறக்கிவிட நினைக்கிறாராம், தமிழகத்தின் மீது குறி வைத்திருக்கும் மோடி.''

""அதுசரிப்பா, காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர், தொகுதி உடன்பாட்டுக்கு முன்பாகவே தங்களுக்குப் பிடித்த தொகுதி களைக் குறிவைத்துக் கள மிறங்கிட்டாங்களே?''

""காங்கிரஸின் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் பலரும் அவங்கவங்க தொகுதியைக் குறிவைப்பதோடு, புதுசா சில பிரமுகர்களும் தேர்தல் காய்ச்சலில் இருக்காங்க. முன்னாள் எம்.எல்.ஏ.வான மறைந்த ஊர்வசி செல்வராஜின் மகனும் இளைஞர் காங்கிரசின் முதன்மை பொதுச்செயலாளருமான அமிர்தராஜ், ஸ்ரீவைகுண்டம் தொகுதியைக் குறிவைத்திருக் கிறார். அதனால் தொகுதிக்கு உட்பட்ட பெரிய தாழை கிராமத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான நலத்திட்ட உதவிகளைச் செய்திருக்கிறார். மாற்றுத் திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் உள்பட இதுவரை தொகுதிக்காக அவர் 2 கோடி ரூபாய் அளவுக்கு கரன்சியை வாரி இறைத் திருப்பதா அவர் தரப்பில் சொல்றாங்க. இதையெல் லாம் அறிந்த தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க. மா.செ.வுமான சண்முகநாதன், தி.மு.க., இந்தத் தொகுதி யைக் காங்கிரஸுக்கு ஒதுக்கப்போகுதானு விசாரிக்க ஆரம்பிச்சிட்டாராம்.''

rajini

""அண்மையில் தற்கொலை செய்துகொண்ட சீரியல் நடிகை சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன், அந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்கிறாரே?''

""சித்ராவின் கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஹேமந்த் அப்பா ரவிச்சந்திரன், தன் மகன் பலிகடா ஆக்கப்பட்டிருப்பதாகச் சொல்லிவருகிறார். ஏற்கனவே சித்ரா, மூன்று பேரைக் காதலித்திருப்பதாகவும், அவர்களில் ஒருவர் சித்ராவை மிரட்டியதாகவும் சொல்லும் ரவிச்சந்திரன், இந்த விவகாரத்தில் அமைச்சர்கள், அரசியல்வாதிகள் சிலருக்கும் தொடர்பு இருப்ப தாகத் தான் கருதுவதால், சி.பி.ஐ. விசாரணைக் கேட்டு நீதிமன்றம் செல்லத் தயாராகி வருகிறாராம்.''

r

""இதைத்தானே நம்ம நக்கீரன் தொடர்ச்சியா சொன்னது.''

""நானும் ஒரு விவகாரமான ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழகத்தின் கொங்கு பகுதியைச் சேர்ந்த அந்த அமைச்சர் சமீபத்தில் டெல்லிக்குப் போயிருந்தார். ஓய்வில் ஒரு உயர்தர பாருக்குச் சென்ற அவர், அங்கு ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து மயங்கி, லுக் விட்டதோடு, சைகையால் சில்மிஷம் செய்திருக்கிறார். கோபியர் கொஞ்சும் பெயர் கொண்டவரான இவரது தீவிரத்தைப் பார்த்த அந்தப் பெண், அவரை தன் காரில் தனியே ஏற்றிக்கொண்டு பறந்திருக்கிறார். அமைச்சரோ, டெல்லி வந்த இடத்தில் இப்படியொரு அழகிய ஜாக்பாட்டான்னுகிறங்கிப் போயிருக்கிறார். இருட்டான பகுதியில் திடீரென கார் நிற்க, அமைச்சரை இறங்கச் சொன்ன அந்தப் பெண், அங்கேயே அடித்து உதைத்து சாலையோரம் தள்ளிவிட்டு போய்விட்டாராம். ஒரே நொடியில் தெளிந்து போய்விட்ட அமைச்சர் தப்பித்தோம்... பிழைத்தோம்னு அரைகுறையாய் அறைக்கு ஓடிவந்திருக்கிறார். இப்போது, எந்தப் பெண் எதிரே வந்தாலும் மிரட்சியாகத்தான் பார்க்கிறாராம் அந்த அமைச்சர்.''

nkn231220
இதையும் படியுங்கள்
Subscribe