மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யூ.பி.எஸ்.சி.) ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்தி இந்தியக் குடிமைப் பணிகளுக்கான இடங்களை நிரப்புவது வழக்கம். அந்த வகையில், 2020-ம் ஆண்டுக் கான இந்தியக் குடிமைப் பணிகளுக்கான இறுதித் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின.
முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்க ளாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு அவற்றின் மதிப்பெண் அடிப் படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ்., குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பிரிவுகளில் உள்ள பணியிடங்களுக்கு இந்த நியமனங்கள் நடக்கின்றன. 2020-ம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகளின்படி, 761 பேர் உடனடி நியமனத்துக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகளில் சுமார் 142 மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த "கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமி'யின் முதன்மை பயிற்றுவிப் பாளரும் தலைவருமான சத்யஸ்ரீ பூமிநாதன், யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழகத்திற்குத் தேவையான உரிமைகள், போட்டியாளர்களுக்கான கல்வி முறையில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்தான தனது பார்வையை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.
"இந்த தேர்வு முடிவுகளை மகிழ்ச்சியாகக் கொண்டாட முடிய வில்லை. ஏனென்றால், அந்த காலத்திலெல்லாம் தேர்வானவர்களின் மொத்த எண்ணிக்கையில் 20 அல்லது 30 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஆனால், இப்போது தமிழ்ப் பெயர் களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. இந்த ஆண்டுக்கான தேர்வு முடிவுகளில் கூட சுமார் 40 பேர்தான் தமிழகத்திலிருந்து வெற்றிபெற்றுள்ளார்கள். இதில் சிலர் வேறு மாநிலத்திலிருந்து தமிழகத் திற்கு வந்தவர்கள். சிலர் தமிழகத்திலிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்று படித்தவர்கள். தமிழகத்திலேயே பிறந்து, படித்து, வெற்றிபெற்றவர்கள் டாப் 100 இடங்களில் யாருமே இல்லை என்பதுதான் இதில் வருத்தமான விஷயம். எங்களிடம் படித்த அபர்ணா ரமேஷ் என்கிற மாணவிதான் தமிழகத்திலிருந்து முதலிடம் பிடித்துள்ளார். ஆனால், அவருமே ஹரியானாவில் செட்டில் ஆனவர். நூறாவது இடத்திற்கு மேல்தான் நமது மாநில போட்டியாளர்களின் ரேங்க் ஆரம்பிக்கிறது.
இதில் நாம் இழந்த பெருமையை மீட்க வேண்டும். தமிழகத்தில் இன்று எக்கச்சக்கமான அகாடெமிக்கள் உள்ளன. இருந்தும் ரிஸல்ட்ஸ் நிறைய வரவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமான காரணம், நம்முடைய திறமையான மாணவர்கள் பலர் தனியார் துறை பணிகளுக்குச் சென்றுவிட்டனர். தனியார் வேலையையே பெரிதாக கருதுகின்றனர். அடுத்ததாக, பல பயிற்சி மையங்களில், பயிற்சிக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், கிராமப்புற ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார வாய்ப்பு கிடைப்பதில்லை. மூன்றாவதாக, அரசு பயிற்சி மையங்களில் தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்படவில்லை. ஆனால், அண்மைக்காலமாக இது மெல்ல மாறத் துவங்கியுள்ளது.
அதேபோல, யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் இறுதிச் சுற்றுவரை செல்லும் போட்டியாளர்களை சில மாநில அரசுகள் ஒப்பந்த அடிப் படையில் வேறு பணியில் அமர்த்தி, அதன்பின்னர் அவர் களை யூ.பி.எஸ்.சி. தேர்வில் பங்கேற்க ஊக்கப்படுத்துகின் றன. ஆனால், அதுபோன்ற ஒரு திட்டம் நம் மாநிலத்தில் இல்லை. இறுதிச்சுற்று வரை சென்ற மாணவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குக் குறைந்த காலத்திற்கு ஒரு ஒப் பந்தப் பணியை வழங்கி, அவர்களை யூ.பி.எஸ்.சி. தேர்வுக் குப் படிக்க அரசு ஊக்கப்படுத்த வேண்டும். மேலும், மாவட் டங்கள் தோறும் அரசு பயிற்சி மையங்கள் இருந்தாலும், அவை பெரும்பாலும் சரியாகச் செயல்படுவதில்லை. இதனை மாற்றியமைப்பதோடு, மாவட்டங்கள் தோறும் நிறைய நூலகங்களைக் கொண்டுவர வேண்டும். நல்ல ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தேர்வில் இறுதிச்சுற்று வரை சென்ற மாணவர்களை மாவட்டம்தோறும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து, யூ.பி.எஸ்.சி. போட்டியாளர் களுக்கான வழிகாட்டி யாக நியமித்தாலே, அவர்களும் வெற்றிபெறு வார்கள், உடன் படிப்பவர்களையும் வெற்றி பெற வைப்பார்கள்.
இந்த தேர்வில் அதிக மான தேர்ச்சியை பெற நம் முடைய கல்வி முறையையும் மாற்ற வேண்டியுள் ளது. ஒப்புவித்தல் சார்ந்த கல்வி முறையை மாற்றி, மாணவர்கள் தங்களின் புரிதலைச் சொந்த வார்த்தைகளால் எழுதும்படியான முறையைக் கொண்டுவருதல் அவசியமாகி யுள்ளது. மேலும், மொழியும் நமது மாணவர்களுக்கு முக்கிய பிரச்சனையாக உள்ளது. யூ.பி.எஸ்.சி வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கும். இது மற்ற மாநில மாணவர்களுக்கு ப்ளஸ்ஸாக உள்ளது. ஆங்கிலம் சரியாகத் தெரியாதபோது, தமிழக மாணவர்களால் இந்தியில் உள்ள கேள்விகளையும் படித்துப் புரிந்துகொள்ள முடிவதில்லை. எனவே, யூ.பி.எஸ்.சி. கேள்வித்தாள்களில் தமிழ் மொழியும் இடம்பெறும் வகையில் விதிமுறைகளைக் கொண்டுவர தமிழக அரசு முயற்சிகளை எடுக்கவேண்டும். அப்படி இல்லையென்றால், மாணவர் களின் ஆங்கில அறிவை மேலும் வளர்க்கும் வகையில் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவர வேண்டும்.
இவற்றையெல்லாம் செய்தால் யூ.பி. எஸ்.சி. தேர்வுகளில் நம்மால் நல்ல முடிவு களை எதிர்பார்க்க முடியும். தேர்வு குறித்த இதுபோன்ற விழிப்புணர்வுகளை மாணவர் களிடம் ஏற்படுத்த 2013 முதல் கிங் மேக் கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடெமி பல திட்டங் களை முன்னெடுத்து வருகிறது. பல இடங் களில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கிறது. யூ.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிபெறுமளவு திறமை உள்ள மாணவர் கள் தன்னம்பிக்கை இல்லாததால் டி.என். பி.எஸ்.சி தேர்வுகளோடு நின்று விடுகின்ற னர். அரசுத் திட்டங்கள், மாணவர்களின் மனநிலை, கல்வியின் தரம் என மூன்றையும் சரிசெய்ய வேண்டிய சூழல்தான் தற் போது உள்ளது. தமிழக அரசு இவற்றிற் கெல்லாம் உடனடியாக நடவடிக்கை எடுத்தால்தான், யூ.பி.எஸ்.சி. தேர்வுகளில் தமிழகம் மீண்டும் தலை நிமிரவும், முன்பிருந்த ஆளுமையைத் திரும்பப் பெறவும் முடியும். இல்லையென்றால் தமிழகத்திற்கு மீண்டும் மீண்டும் தலைகுனிவுதான்''.