என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவேன்...! -வீரப்பன் மகள் வித்யா வீரப்பன்!

vv

ddகிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகளே களமிறங்கி யிருப்பதால், அங்கே பிரச்சார அனல் விறுவிறுப்பாக வீசிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கோபிநாத்தும், அ.தி.மு.க.வில் ஜெயப்பிரகாஷும், பா.ஜ.க.வில் நரசிம்மனும் வரிந்துகட்டி நிற்க, இவர்களுக்கு நடுவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகள் வித்யாவீரப்பன் அதிரடி பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார். இவரையும் சேர்த்து இங்கே 27 வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றியைக் குறிவைத்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நிகராக வீரப்பன் மகள் வீறுகொண்டு விறுவிறுப்பான பிரச்சாரத்தில் குதித்திருப்பதால், வேட்பாளர்கள் பலரும் திகிலில் இருக்கிறார்களாம்.

ஏரியா வாக்காளர்களில் சிலர் நம்மிடம் "நாம் தமிழர் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களிலேயே அதிரடி காட்டுபவராக வீரப்பன் மகள் வித்யாவீரப்பன்தான் காட்சி தருகிறார். இவர் இந்தத் தொகுதிக்கு மிகச் சரியான தேர்வு. கர்நாடக மாந

ddகிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகளே களமிறங்கி யிருப்பதால், அங்கே பிரச்சார அனல் விறுவிறுப்பாக வீசிக்கொண்டிருக்கிறது.

இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கோபிநாத்தும், அ.தி.மு.க.வில் ஜெயப்பிரகாஷும், பா.ஜ.க.வில் நரசிம்மனும் வரிந்துகட்டி நிற்க, இவர்களுக்கு நடுவே நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரப்பன் மகள் வித்யாவீரப்பன் அதிரடி பிரச்சாரத்தில் சுறுசுறுப்பாக இருக்கிறார். இவரையும் சேர்த்து இங்கே 27 வேட்பாளர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றியைக் குறிவைத்து ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.

காங்கிரஸ், அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு நிகராக வீரப்பன் மகள் வீறுகொண்டு விறுவிறுப்பான பிரச்சாரத்தில் குதித்திருப்பதால், வேட்பாளர்கள் பலரும் திகிலில் இருக்கிறார்களாம்.

ஏரியா வாக்காளர்களில் சிலர் நம்மிடம் "நாம் தமிழர் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்களிலேயே அதிரடி காட்டுபவராக வீரப்பன் மகள் வித்யாவீரப்பன்தான் காட்சி தருகிறார். இவர் இந்தத் தொகுதிக்கு மிகச் சரியான தேர்வு. கர்நாடக மாநில எல்லையான இந்த கிருஷ்ணகிரியில், வீரப்பன் உயிரோடு இருந்தவரை, தமிழகத்துடன் உரசவே கர்நாடக மாநிலம் தயங்கியது. இப்போது அப்படி ஒரு பாதுகாப்பு நிலைமை இல்லை. அங்கே தமிழர்களுக்கு எதிரான எந்தப் பிரச்சைனை வெடித் தாலும், பெங்களூரை ஒட்டியுள்ள இந்த மாவட்ட மக்கள்தான் அதிக மாகப் பாதிப்பை அடைகிறார்கள். அவர்களின் அராஜகம் கொஞ்சநஞ்சம் இல்லை. இந்த நேரத்தில் வீரப்பன் மகள் அரசியலில் நுழைந்து, இங்கே வேட்பாளராகவும் ஆகியிருப்பது, அந்த வீரப்பனே மீண்டும் இங்கே வந்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது'' என்றார்கள் உற்சாகத்தோடு.

vv

நம்மிடம் பேசிய அந்த அரசியல் பிரமுகர்

"பா.ம.க. இப்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்தாலும், அக்கட்சியில் இருக்கும் வன்னிய சமூகத்தினரில் 75 சதம் பேர், தங்கள் சமூகத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பனுக்கு ஆதரவாக நிற்கிறார்கள். ஏனென்றால் பா.ம.க.வைச் சேர்ந்த எவரும் இங்கே நேரடியாக நிற்க வில்லை. அ.தி.மு.க.வை எடுத்துக் கொண்டால், அங்கே இருக்கும் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த சீனிய ரான கே.பி.முனுசாமியின் மகனுக்கு, எடப்பாடி சீட் கொடுக்காமல் விட்டுவிட்டார். இதுவும் வன்னியர்கள் தரப்பில் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. அதனால், பெரும்பாலான வன்னிய சமூகத்தினர் இப்போது மானசீகமாக வீரப்பனின் மகளுக்கு ஆதரவாக, அவருக்குப் பின்னால் இருந்து அவரை ஊக்குவித்து வருகிறார்கள்''’ என்கிறார் அழுத்தமான குரலில்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வித்யாவீரப்பன் வேட்புமனுவைத் தாக்கல் செய்த நொடியில் இருந்தே, அவர் தரப்பில் உற்சாகம் பற்றிக்கொண்டது. வித்யா வீரப்பன், தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, தன்னுடைய தந்தையின் நினைவிடத்திற்குச் சென்று...’"அப்பா உங்கள் ஆசியுடன் களமிறங்கியிருக் கிறேன். என்னை மனதார வாழ்த்துங்கள். வெற்றியோடு உங்களை இங்கே வந்து பார்க்கிறேன்'' என்று சபதம் எடுத்துக்கொண்டு, தன் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறாராம்.

vv

கிருஷ்ணகிரியில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதியிலும் உள்ள பிரச்சினைகளை ஆராய்ந்து, அவற் றின் அடிப்படையில் ஒவ்வொரு தொகுதிக்கும் தேவை யானதைப் பட்டியல் போட்டுக்கொண்டு, அவற்றை நிறைவேற்றுவது குறித்த வாக்குறுதிகளுடன் வித்யா வீரப்பன், தன் பிரச்சாரத்தை வடிவமைத்திருக்கிறார்.

குறிப்பாக, இப்போது கர்நாடகாவில் கடும் தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் இப்போது அவர்களிடம் தண்ணீர் கேட்டு நாம் பிரச்சினை செய்வதை விட்டுவிட்டு, இங்குள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளைப் பராமரிப்பதற்கான முயற்சிகளை எடுக்கலாம் என்ற கருத்தை அவர் பரவலாக முன்வைக்கிறார்.

அதேபோல் ஒசூர் பகுதியில் இருக்கும் தொழிற்சாலைகளில், தமிழர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், வெளி மாநிலத்தவருக்கு முக்கியத்துவம் கொடுத்துவரும் போக்கினைத் தடுத்து நிறுத்தி, அங்கே தமிழர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதற்கான முயற்சியில் இறங்குவேன் என்கிறார்.

இந்தப் பகுதியில் அதிகமான பெண்கள் பணிபுரிவதால் அவர்களுக்கான தங்கும் விடுதிகளை அரசின் மூலமாக ஏற்படுத்தித் தருவதும் தனது திட்டம் என்கிறார். மேலும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளையும் அவர் மேற்கொள்வது குறித்தும் பிரச்சாரம் செய்துவருகிறார்.

கிருஷ்ணகிரி வனப் பகுதிகளில் உள்ள வன விலங்குகள் தங்கள் தேவைகளுக்காக, காட்டை விட்டு அடிக்கடி வெளியே வருகின்றன. இதற்கான காரணிகளை இனங் கண்டு, அவற்றைத் தடுப்பதற்கான வழி வகைகளைக் கொண்டு வருவேன் என்றும் வித்யாவீரப்பன் வாக்குறுதி கொடுத்து வருகிறார். வன விலங்கு களால் மக்களுக்கு ஏற்படும் அச்சத்தை நீக்கி, அவர்களுக்குத் தானே ஒரு வன மகனின் மகளாக, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவேன் என்றும் வசீகரமான வாக்குறுதிகளை அவர் வழங்கி வருகிறார்.

மேலும் மலைவாழ் மக்களுக்கு நிரந்தர மான இடங்களில் வீடுகளும், அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தித் தருவதோடு, அவர்கள் பிள்ளைகள் கல்வி கற்க, பள்ளிக்கூடத்தையும் அமைத்துத் தரமுயல்வேன் என்றும் வித்யாவீரப்பன் வாக்குறுதிகளைத் தந்து, அம்மக்களின் கவலைக்கும் மருந்து தடவி வருகிறார். இப்படி தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தைச் செய்துவரும் இவருக்கு, செல்லும் இடமெல்லாம் சிறப்பான வரவேற்பு அதிகமாகவே கிடைத்து வருகிறது. என் அப்பாவின் ஆசையை நிறைவேற்றியே தீருவேன்'' என்று மக்களிடம் உறுதியோடு சொல்கிறார் வித்யாவீரப்பன்.

வித்யாவீரப்பன் வடிவில் இப்பகுதி மக்கள் வீரப்பனையே பார்ப்பதால், அவர்களின் செல்ல மகளாகவே பிரச்சாரப் பயணத்தில் அவர் வளைய வந்துகொண்டு இருக்கிறார்.

வீரப்பன் மகள் வெற்றித் திருமகளாக மாறுவார் என்ற நம்பிக்கை, அங்கே பெரும்பாலான மக்களிடம் மிகுந்திருக்கிறது.

-அருண்

nkn100424
இதையும் படியுங்கள்
Subscribe