தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று, நான்காம் ஆண்டு தொடக்க விழா குறித்து, "தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளுதல்' என்ற தலைப்பில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு ஆண்டில் அவர் செய்த பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்திக்குறிப்புகள் அடங்கிய நூலின் வெளியீட்டு விழா சென்னையில், அக்டோபர் 20ஆம் தேதி நடை பெற்றது. இவ்விழாவில், நக்கீரன் ஆசிரியர் கோபால், ஊடகவியலாளர்கள் மாலன், கார்த்திகை செல்வன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்திப் பேசினார்கள்.

tt

இந்த விழாவில், புத்தகத்தை வெளியிட்ட தமிழிசை சவுந்தர ராஜன், தனது பேச்சில், "என்ன தவம் செய்தேனோ என்று நினைக்கு மளவுக்கு நான் இங்கு நின்றுகொண் டிருக்கிறேன். இங்கே அண்ணன் நக்கீரன் கோபால் அவர்கள் "ஒவ் வொருத்தரும் ஒவ்வொரு வியூவில் பேசுறாங்களே, யாருமே ரிபீட் பண்ணலையே. எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்குது' அப்படீன்னு சொன்னாங்க. ஏனென்றால், பலவகையில் அவர்களோடு நான் தொடர்புகொண் டிருக்கிறேன் என்பது தான். இதுல செயற்கைத்தன்மை எதுவுமே இல்லை. எனக்கு சின்ன ஆசை... இவ்ளோ பேர் வந்திருக்கீங்க... நம்ம எல்லாரும் ஒரு படம் எடுத்துக்கணும்னு ஆசை. ஏனென்றால் இதெல்லாம் ஒரு நிகழ்வு. வருங்கால அரசியலில் வரலாற்றுப்பதிவு. இதெல்லாம் சாதாரண விஷயமில்ல.

Advertisment

மரியாதைக்குரிய சந்திரசூட் அவர்கள் தலைமை நீதிபதியாகும்போது ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். அப்பா தலைமை நீதிபதியாக இருந்து, மகனும் தலைமை நீதிபதியாக இருந்து, அப்பாவின் தீர்ப் பையே எதிர்த்து தீர்ப்பெழுதியவர் என்பதால் மகன் தலைமை நீதிபதியாகிறார். ஏறக்குறைய இது எனக்கும் பொருந்தும். ஏனென்றால், அப்பா ஒரு தேசியக்கட்சியின் தலைவராக இருந்து, மகள் ஒரு நேரெதிரான தேசியக்கட்சியில் சேர்ந்து, மாநிலத் தலைவராக மாறி, தமிழக சரித்திரம் எழுதும்பொழுது, அப்பா ஒரு மாநிலக்கட்சியின் தலைவர், மகள் ஒரு மாநிலக்கட்சியின் தலைவராக இருந்தார் என்ற பெயரை வாங்கியதை, உண்மையிலேயே நான் இந்த தமிழகத்துக்குச் செய்த மிகப் பெரிய கடமை என்று நினைக்கிறேன்.

தெலுங்கானாவில் நடக்கும் ஒன்றிரண்டு விஷயங்களை விளக்கு கிறேன். தெலுங்கானாவில் என்னுடைய பணிகள் இடையூறாக இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சில நேரங் களில் நினைத்துவிடுகிறார்கள். என்னை குடியரசு தினத்தன்று கொடியேற்ற விடவில்லை. ராஜ்பவனுக்குள்தான் கொடியேற்றிக்கொண்டேன். கவர்னர் உரை ஆற்றுவதற்கு விடவில்லை. என்னைப்பற்றி, "தெலுங்கானாவிலேயே இருக்காங்களே, எப்ப புதுச்சேரிக்கு போறாங்க?' என்கிறார்கள். புதுச்சேரியிலோ அண்ணன் நாராயணசாமி, "தெலுங்கானாவில் விரட்டி விட்டாங்களா? எப்ப பார்த்தாலும் புதுச்சேரியிலயே இருக் காங்க'ன்னு கேட்கிறார். இங்க, "என்ன தமிழ்நாட்டுலயே இருக்காங்க, அந்த ரெண்டு மாநிலத்திலும் வேலை செய்ய லையா'ன்னு கேக்குறாங்க. இன்றைக்கு சொல்கிறேன்... தெலுங்கானாவில் முழுமையாகப் பணியாற்றுகிறேன். புதுச் சேரியிலும் முழுமையாகப் பணியாற்றுகிறேன். தமிழகத்தில் முழுமையாக அன்பைச் செலுத்துகிறேன். அவ்வளவுதான்.

Advertisment

tt

வெறி என்பதை அழுத்திச்சொன்னால்தான் வெற்றி. நான் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்தபோது, என்னை மருத்துவராகப் பார்த்ததற்கும், தலைவராகப் பார்த்ததுக்கும் வித்தியாசம் இருந்ததாக சொல்லியிருக்காங்க. என்னுடைய உடை நேர்த்தியிலிருந்து என்னைப் பார்த்தாலே பயப்படும் அளவிற்கு ஒரு பலமான மருத்துவர் நான். ஆனால் டாக்டராகி, அதன்பின் தலைவரான பின், யாரோ சொன்னாங்க... ரஜினிகாந்துக்கும் உனக்கும் ஒரு ஒற்றுமைன்னு. ரஜினிகாந்தை "பதினாறு வயதினிலே' படத்துல என்னன்னு கூப்பிட்டாங்க? அதேதான் என்னைக் கூப்பிட்டாங்க! சுருட்டைதான் உனக்கு பலம் என்று அம்மா சொல்வார்கள். ஆனால் பரட்டைதான் எனக்கு பலமாகிவிட்டது.

அதுல என்னவொரு வருத்தம்னா, நான் ஆட்சியாளர் களுக்கு இடைஞ்சல் குடுக்குறதா சொல்றாங்க. பத்ராச்சலத்தில் மழை வெள்ளம். அங்க மழை வெள்ளத்தில் மக்கள் தத்தளிச்சுக் கிட்டு இருக்காங்க. நான் தத்தெடுத்த இரண்டு மலைவாழ் கிராமங்களும் அதற்குள் இருக்கிறது. இங்கே ஏனம் பகுதிக்கு சென்றேன். அவங்க என்ன சொல்றாங்கன்னா, பத்ராச்சலம் மூழ்கியதால் இங்கே வெள்ளம் வந்ததுங்கறாங்க. அப்படி யானால் பத்ராசலத்திற்கு போக வேண்டுமே. அப்படி போகும் போது, அன்று இரவு மரியாதைக்குரிய நமது ராம்நாத் கோவிந்த் அவர்கள் பிரிவுபச்சார விழா விருந்து கொடுக்கிறார் கள். எல்லா ஆளுநர்களையும் அழைத்திருக்கிறார்கள். நான் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்கிறேன். "அய்யா என்னால் பிரிவுபச்சார விழாவில் கலந்துகொள்ள முடியாது. ஏனென்றால் பத்ராசலம் நீரில் மூழ்கியுள்ளது. நான் அங்கே தத்தெடுத்த இரண்டு கிராமங்கள் இருக்கின்றது. நான் அங்கே போகவேண்டும்' என்றேன். ப்ளாஷ் நியூஸ்ல, ஆளுநர் இந்த இடங்களுக்குச் செல்கிறார்னு வருகிறது. அடுத்த அரை மணி நேரத்தில், முதலமைச்சர் அந்த இடத்துக்குச் செல்கிறார் என்று ப்ளாஷ் நியூஸ் வருகிறது. அதுவரை, தோட்டங்கள் சூழ்ந்த தனது பங்களாவில் தூங்கிக்கொண்டிருந்தவரை வெளியே வரவைத்த திறமை இந்த ஆளுநருக்கு இருக் கிறது என்று சொல்கிறேன். இடையூறு அல்ல, ஆனால் பிறரை வேலை செய்யவைத்த திறமை இருக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு எப்படி போவாங்க? ஹெலிகாப்டர் இருக்கான்னு கேட்டாங்க. நான் எளிய ஆளுநர். முதலமைச்சர் ஹெலிகாப்டரில் வருகிறார். அதே இடத்துக்கு ரயிலில் முதலமைச்சருக்கு முன்னால் சென்று சேருகிறேன். ஏனென்றால், நான் சென்றது ரயில். அவர் செல்ல நினைத்தது ஹெலிகாப்டர். அங்கே மழையின் காரணமாக ஹெலிகாப்டர் வரவில்லை. ஹெலிகாப்டரில் செல்ல வழியில்லாத முதலமைச்சர், நான் வந்துசென்ற 5 மணி நேரத்துக்கு பின்னால் காரில் அங்கே வருகிறார். ஆளுநருக்கு என்ன அதி காரம் இருக்கிறது என்று என்னிடம் கேட்டார்கள். முதலமைச்சரை அங்கே வரவைத்தது தான் எனது திறமை என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன்.

tt

அதேபோலதான், எட்டாயிரம் குழந்தைகள் படிக்கும் பாஷரா ஐ.ஐ.டி.யில் ஹாஸ்டல் வசதியில்லை, சாப்பிட வசதியில்லை. எல்லோரும் ரோட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். அதற்கு நான் ஆளுநர் கிடையாது. முற்றிலும் மாநிலம் சார்ந்தது. நான் அப்போது போகிறேன். எனக்கு வடை கொடுக்கிறார்கள். வடை மெதுவாக இருக்கிறது. உடனே நான் தட்டை எடுத்துக்கொண்டு மாணவர்களோடு வரிசையில் நிற்கிறேன். அங்கே கொடுக்கின்ற வடை கல்லு மாதிரி இருக்கிறது. உடனே பத்திரிகையாளர்கள் என்னிடம், "நீங்க ஒன்றும் ஆட்சியில் இல்லை. நீங்க என்ன செய்யப் போறீங்க?' என்றார்கள். நான் அவர்களிடம், "கல்லுவடையை மெதுவடையாக ஆக்கும் அளவுக்காவது என்னுடைய பயணம் இருந்தது' என்றேன். "இன்றுதான் எங்களுக்கு நல்ல வடை கிடைத்திருக்கிறது' என்று குழந்தைகள் சொன்னாங்க. அதற்குப் பின்புதான் ஆட்சி யாளராக இருக்கின்ற அமைச்சர் அங்கே போனார். எனக்கு தனி விமானம் எடுக்கிற உரிமை இருக் கிறது. ஆனால் இதுவரை தனி விமானம் எடுக்கவில்லை. முழுமையாக ஹெலிகாப்டர் அமர்த்துகின்ற அதிகாரமும் ஆளுநர்களுக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை ஹெலிகாப்டர் எடுத்ததில்லை.

நேற்று புதுச்சேரியில் தாய் தந்தையை கவனிங்கன்னு சொன்னேன். நானும் கவனிச்சுக் கிட்டு தான் இருக்கேன். இப்போ நான் சொல் றேன், எதிரணியில் இருந்தாலும் எங்கப்பாவுக்குச் செய்யும் கடமையை முழுமையாக நான் செய்து வருகிறேன். இப்ப அவரை தெலுங்கானாவில்தான் என்னோடுதான் வச்சிருக்கேன். ஆனா எப்போது பிச்சுக்கிட்டு வருவார்னு தெரியாது. அதுக்கு நான் பொறுப்பில்லைங்கறதை சொல்லிக்கறேன். 90 வயசுல பாத யாத்திரை போறேன்னு சொல்றார். நான் என்ன பண்றது? "தமிழில் அடிக்கடி பேசுறீங்களே, தமிழ் கற்றதனால் தமிழில் பேசுறீங்களா?'ன்னு கேட்பாங்க. கற்றதனால் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் பேசுகிறேன். அதனால் அந்த கடமையை நான் மறக்கமாட்டேன். அதுமட்டுமல்ல, எல்லோ ரும் "வீட்டுக்கு நீங்க எப்படி நேரம் ஒதுக்குறீங்க?'ன்னு கேட்கறாங்க? உங்களிடம் எப்படி தொடர்பு வச்சிருக்கேனோ, அதேபோல வீட்டினரோடும் நல்லவிதமாக தொடர்பு வைத்துள்ளேன்.

இன்னும் சிலர் கேட்கறாங்க, "தமிழகத்தில் எதாவது சொல்லிவிட்டால், தமிழக அரசியலில் ஏன் நீங்க மூக்கை நுழைக்கிறீங்க, வாலை நுழைக்கி றீங்க?'ன்னு. இன்று நான் சொல்லிக்கிறேன்... தமிழ் நாட்டில் மூக்கையும் நுழைப்பேன், தலையையும் நுழைப்பேன், வாலையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்... என்னை யாரும் தடுக்க முடியாது. மக்களோடு மக்களாகத்தான் இருக்க விரும்புகிறேன்! எனது பங்கு அரசியலில் இருக்கும். எனது பங்கு மக்களின் பங்காகத்தான் இருக்கும்! உங்கள் அக்காவாக விடைபெறுகிறேன்'' என்றார்.