பத்து மாதம் சுமந்து பெற்றெடுத் தலின் அருமை புரியாமல், குழந்தை யைப் பிரசவித்து, தொப்புள்கொடி அறுத்த ரத்தம்கூட காய்வதற்குள் கழி வறைத் தொட்டிகளி லும், கருவேலங் காட்டிலும், மூங்கில் புதர்களிலும் மலக்கழிவைப் போல தூக்கி வீசிவிட்டுச் செல்லும் சம்பவம் தொடர் கதையாகியாகிவருகிறது.
சம்பவம்: 1
எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்ற துப்புரவுத் தொழிலாளர் களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த கழிவறைத் தண்ணீர்த் தொட்டியில், தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பெண் குழந்தை ஒன்று, தண்ணீரில் மூழ்கடித்துத் சாகடிக்கப்பட்ட நிலை யில் கிடந்தது. இதுதான் அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம். பிறகு விசாரணையில் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் ஒரு இளம்பெண் அதிகாலை இரண்டு மணியளவில் கழிவறைக்குள் சென்று முப்பது நிமிடம் கழித்து வெளியே செல்வதைக் கண்டுபிடித்து விசாரித்ததில், அந்த இளம்பெண் திருமணம் ஆகாமலேயே கருவுற்றதாகக் கூறியுள் ளார். பத்து மாதம்வரை பெற்றோர்களுக்கும்கூடத் தெரியாமல் இந்த காரியத்தைச் செய்திருக்கிறார் கல்லூரி மாணவியான அந்த இளம்பெண்.
சம்பவம்: 2
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருக்கும் மூங்கில் காட்டில் பிறந்து, சில நொடிகளே ஆன நிலை யில் ஓர் ஆண் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்ற சிலர், குழந்தையின் அழுகுரல் வந்த திசையில் சென்றபோது, தொப
பத்து மாதம் சுமந்து பெற்றெடுத் தலின் அருமை புரியாமல், குழந்தை யைப் பிரசவித்து, தொப்புள்கொடி அறுத்த ரத்தம்கூட காய்வதற்குள் கழி வறைத் தொட்டிகளி லும், கருவேலங் காட்டிலும், மூங்கில் புதர்களிலும் மலக்கழிவைப் போல தூக்கி வீசிவிட்டுச் செல்லும் சம்பவம் தொடர் கதையாகியாகிவருகிறது.
சம்பவம்: 1
எப்போதும் பரபரப்பாகவே இருக்கும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள கழிவறையைச் சுத்தம் செய்யச் சென்ற துப்புரவுத் தொழிலாளர் களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த கழிவறைத் தண்ணீர்த் தொட்டியில், தொப்புள்கொடி கூட அகற்றப்படாத நிலையில் பெண் குழந்தை ஒன்று, தண்ணீரில் மூழ்கடித்துத் சாகடிக்கப்பட்ட நிலை யில் கிடந்தது. இதுதான் அவர்களின் அதிர்ச்சிக்குக் காரணம். பிறகு விசாரணையில் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சியில் ஒரு இளம்பெண் அதிகாலை இரண்டு மணியளவில் கழிவறைக்குள் சென்று முப்பது நிமிடம் கழித்து வெளியே செல்வதைக் கண்டுபிடித்து விசாரித்ததில், அந்த இளம்பெண் திருமணம் ஆகாமலேயே கருவுற்றதாகக் கூறியுள் ளார். பத்து மாதம்வரை பெற்றோர்களுக்கும்கூடத் தெரியாமல் இந்த காரியத்தைச் செய்திருக்கிறார் கல்லூரி மாணவியான அந்த இளம்பெண்.
சம்பவம்: 2
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள திருமயிலாடி கிராமத்தின் ஒதுக்குப்புறமாக இருக்கும் மூங்கில் காட்டில் பிறந்து, சில நொடிகளே ஆன நிலை யில் ஓர் ஆண் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டு, அந்த வழியாகச் சென்ற சிலர், குழந்தையின் அழுகுரல் வந்த திசையில் சென்றபோது, தொப்புள் கொடியின் ரத்தம்கூட காயாத நிலையில் ஆண் குழந்தை புதரில் கிடந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்கள். பிறகு, குழந்தையை காட்டில் இருந்து பாதுகாப்பாக எடுத்துச்சென்று சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மிக அழகான அந்த குழந்தையை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தத்து எடுத்துக் கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில், அந்த குழந்தையின் தாயான இளம்பெண் அதே பகுதியைச் சேர்ந்தவர் என்றும், கல்லூரி மாணவி என்பதும் தெரியவந்தது, இந்த விவகாரத்தில், ஏற்கனவே திருமணமான காளிதாஸ் என்பவனை போக்ஸோவில் கைது செய்துள்ளனர்.
சம்பவம்: 3
திருவாரூர் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்த மாணவிக்கு கல்லூரியிலும், வீட்டிலும், அடிக்கடி மயக்கம், வாந்தி தொடர்ந்து வந்த போதெல்லாம் பித்த வாந்தி எனப் பல காரணங் களைக் கூறி சமாளித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் உடல்ரீதியாகப் பிரச்சினை பெரிதாக, அப்போது தான் பெற்றோர்களுக்குத் தங்கள் மகள் கருவுற்றி ருக்கிறார் என தெரிந்திருக்கிறது. திருமணம் ஆகாம லேயே கருவுற்றதை நினைத்து நொந்துபோனவர் கள், யாருக்கும் தெரியாமல் வைத்திருந்து குழந்தை யை உருவாக்கி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்ததில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. பிறந்து சில மணிநேரங்களில் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
சம்பவம்: 4
பெரம்பலூர் மாவட்டம் எசனை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு கணவனிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு குழந்தையாக இருந்த ஒரு மகளுடன் ஊட்டிக்குச் சென்று தனியார் தேயிலைத் தோட்டத்தில் வேலை பார்த்து, மகளைப் படிக்க வைத்தார். மகள் தற்போது கல்லூரியில் படித்து வந்த நிலையில்.. கொரோனா காலத்தில் சொந்த ஊருக்குப் போய் வருவதாகத் தனது அம்மாவிடம் கூறிவிட்டு வந்தவர், வந்த இடத்தில் ஒரு இளைஞரோடு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது காதலாக மாறி, இருவரும் நெருக்கமாகப் பழகியதில் அந்த இளம்பெண் கர்ப்பமானார். மருத்துவர்களிடம் சென்று கருவைக் கலைக்கச் சென்றபோது, இருவ ரின் உயிருக்கும் ஆபத்து என கை விரித்ததால், வேறுவழியின்றி கர்ப்பமானதை யாரிடமும் சொல்லாமல் மறைத்தே நாட்களைக் கடத்தியிருக் கிறார். உறவினர்கள் கேட்கும் போதெல்லாம் வயிற்றில் கட்டி இருப்பதாக டாக்டர் சொல்லி யிருக்காங்க, அதனால் அடிக்கடி வலியும், வாந்தியும் வருவதாகச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் இயற்கை உபாதை கழிக்கச் சென்றபோது அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை பிறந்ததும் அழாமல் இருந்ததால் குழந்தை இறந்துவிட்டதாக நினைத்து, அங்கேயே தொப்புள் கொடியோடு போட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டார். இதற்கிடையே, வீட்டிற்குச் சென்ற அந்த பெண்ணிற்கு ரத்தப்போக்கு அதிகமானதால் அவரது உறவினர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்த னர். விசாரணைக்குப் பிறகு குழந்தையை மீட்டு சிகிச்சை கொடுத்தனர்.
இப்படி கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே பதினைந்துக் கும் அதிகமான சம்ப வங்கள் நடந்துள்ளன. இதில் சம்பந்தப்பட்ட பெண்கள் பெரும்பாலும் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் என்பதுதான் மிகப்பெரிய அதிர்ச்சித் தகவலாக இருக்கிறது.
இதுகுறித்து கல்லூரி, பள்ளிகளில் போக்ஸோ குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்திவருபவரும், நன்னிலம் காவல்துறை ஆய்வாளருமான சுகுணாவிடம் கேட்டோம். "பிறந்த குழந்தையை விட்டுச் செல்பவர்கள் பட்டியலில் முதலில் வருபவர் காதலர்களை நம்பி அவர்களிடம் திருமணத் திற்கு முன்பும், திருமண வயதை எட்டாத நிலையிலும் உடலுறவு வைத்துக்கொள்பவர்தான். அதன்காரணமாக குழந்தை உண்டாகி அது வெளியில் தெரிந்தால் சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் ஏற்படும் என்கிற காரணத்திற்காக கருவுற்றது தெரியாமல், நாள் கடந்து அதைக் கலைக்க நினைத்து மருத்துவர்களிடம் செல்லும்போது, உயிருக்கு ஆபத்தாகிவிடும் என அவர்கள் அறிவுரை கூறிய பிறகு வேறு வழியின்றி அந்த குழந்தையை வெளி ஊருக்குச் சென்றோ, ஊரிலேயே யாருக்கும் தெரியாமலேயே வளர்த்து, குழந்தையைப் பெற்று தூக்கி வீசிவிட்டு வீட்டுக்குப் போய் நல்ல புள்ள மாதிரி இருந்துடுறாங்க. பிரசவத்தின்போது இருக்கிற ஆபத்து புரியாம லும் இதனைச் செய்கிறார்கள். காதலோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாது, சமுதாயத்துக்கு வெளியே தெரிஞ்சா தனக்கு அவமானம்னு நினைத்து இப்படிச் செய்துடுவாங்க. அதேபோல வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற கணவர் இரண்டு மூன்று ஆண்டுகள் வராமல் இருக்கும் நிலையில் சில பெண்கள் கர்ப்ப மாகி, அதை கலைக்க முடியாமல், பிரசவித்து தூக்கி வீசிடுறாங்க.
அதேபோல, விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண் கள், குழந்தை பெத்துக்க முடியாது, சமுதாயம் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்காது என்கிற பட்சத்தில்... அதாவது ஆரம் பத்தில் குழந்தை உண்டாகியிருப்பது தெரியாது, பிறகு தெரிந்து அதை அழிக்க முடியாத ஒரு சூழ்நிலை உருவாகும்போது, வேறு வழியே இல்லாம பெற்று தூக்கிப் போட்டுட்டு, எதுவுமே தெரியாது போல மக்க ளோடு மக்களாக இருப்பாங்க, சில சம்பவங்கள் தான் வெளியில் தெரியும், பல சம்பவங்கள் வெளியில் தெரியாம லேயே மூடி மறைக்கப்பட்டுடும். இதற்கு முதல் காரணம், பெண்கள் சுய கட்டுப்பாட்டை இழப்பதுதான். விவரம் தெரிஞ்ச இந்த கால கட்டத்திலும் இப்படி இருப்பது வருத்தம் அளிக்கிறது. போரா டித் தன்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். செக்ஸ் குறித்தான முழுமையான விழிப்புணர்வை சிறு வயதிலிருந்தே, மாணவப் பருவத்தில் இருந்தே ஏற்படுத்த வேண்டும்.
இது பெரிய ரகசியமெல்லாம் கிடையாது. நமக்கு எப்போது தேவை, நாம எப்போது அதற்கு தயாராகுறோம், நம்ம உடல்நிலை எப்போது தயாராகுது, அப்படிங்கிற ஒரு கல்வி சார்ந்த விழிப்புணர்வை மாணவர்களிடையே கொடுக்கும்போது, எதிர்காலத்தில் அவங்க அந்த கல்வியைச் சரியான விதத்தில் பயன்படுத்திக்க வாய்ப்பிருக்கு. பள்ளி, கல்லூரிகளில் நிச்சயம் செக்ஸ் குறித்தான பாடத்தை உருவாக்கி விழிப்புணர்வை உண் டாக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற தவறுகளைக் களைய முடியும், ஒன்றுமே தெரியாத ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பால் கொடுத்து கொலை செய்த வழக்கத்தையே விழிப்புணர்வால் பெரிதும் குறைந்துவிட்டோம். நுனி விரலில் இருக்கும் இந்த தகவல் தொடர்புக் காலத்தில் மாற்ற முடியாதது என்ன?" என்கிறார் உறுதியோடு.