Skip to main content

வலைவீச்சு!

Published on 22/06/2018 | Edited on 23/06/2018
Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

முகநூலில் அறிமுகமாகி, பெண் குரலில் பேசி வழிப்பறி... நால்வர் கைது!

Published on 28/01/2021 | Edited on 28/01/2021

 

chennai

 

முகநூலில் அறிமுகமாகி, பெண் குரலில் பேசி தனியே அழைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

மாதவரத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு மாதவரம் போலீசாரிடம் புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்தப் புகாரில், ரெட்டேரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை வழிமறித்து தாக்கி தன்னிடம் இருந்த பிரேஸ்லெட், செல்ஃபோன் ஆகியவற்றை வழிப்பறி செய்ததாக கூறியிருந்தார். இதேபோல் அந்தப் பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் குறித்த புகார்கள் அதிகமானதை அடுத்து போலீசார் அந்தப் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

 

chennai

 

அப்போது போலீசாரை கண்டவுடன் தப்ப முயன்ற நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விரட்டிப் பிடித்து விசாரணை செய்ததில், நான்கு பேரும் முகநூலில் பழகி, பெண் குரலில் பேசி தனியே வரவழைத்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட விஜயகுமார், மோனிஷ், டனிஷ், தமிழ் ஆகிய நான்கு பேரிடமும் இருந்து திருட பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள், செல்ஃபோன்கள் மற்றும் திருடப்பட்ட நகைகள் ஆகியவைப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் ஐயப்பனிடம் வழிப்பறியில் ஈடுபட்டதும் இந்தக் கும்பல்தான் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

Next Story

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் வேலை செய்யவில்லையா...?

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதள கணக்குகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் பல இடங்களில் நேற்று திடீரென முடங்கின.

 

fb

 

அதனை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து புகார் அளிக்க துவங்கிய நிலையில் அந்நிறுவனங்கள் அதன் தொழில்நுட்ப துறை வல்லுநர்களை வைத்து உடனடியாக தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்துவிட்டதாகவும், தொழில்நுட்ப கோளாறுகளுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டது. ஆனால், உலகளவில் இன்னமும் சில பயனாளர்களுக்கு சமூக வலைதளங்களை பயன்படுத்துவதில் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
 

இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள Down Detector, இங்கிலாந்து, டெக்சாஸ், சீட்டல், வாஷிங்டன், லத்தின் அமெரிக்காவின் சில பகுதிகள், பெரு, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட இடங்களிலும் பயனர்களுக்கு சமூக வலைதள கணக்குகள் முடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளது.

 

மேற்குறிப்பிட அந்த இடங்களில் எல்லாம் வாடிக்கையாளர்கள் அவர்களின் கணக்கை லாக் அவுட் செய்யவில்லை என்றால் தொடர்ந்து பயன்படுத்த முடிவதாகவும், அதேசமயம் அவர்களின் கணக்கு ஒருமுறை லாக் அவுட் செய்துவிட்டு மீண்டும் முயன்றால் அவர்களால் லாக் இன் செய்ய முடியவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

 

இந்த பிரச்னையை சரி செய்ய பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட நிறுவனங்களின் தொழில்நுட்ப குழு பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. விரைவில் உலகம் முழுவதும் இந்த தொழில் நுட்பக் கோளாறு சீராகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.