"நல்லா கேட்கவும் இல்ல.. தெரியவும் இல்ல.. முன்னே போய் பார்க்குறேன்னு' கச்சேரியின் முன்பகுதிக்கு சென்றவள், விடியும் வரை வரவில்லை என்பதால் விக்கித்து நின்றிருக்கின்றார் அந்த தாய். சிறிது நேரத்தில் அலங்கோல நிலையில் மகள் வர, மகளுடன் தாய் வெள்ளக்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலைய கதவினைத் தட்ட பற்றி எறிந்தது திருப்பூர் மாவட்டம்.

vv

புகார்தாரரான சுசீலாவோ, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "சொந்த ஊர் தாராபுரம் மூலனூர். தாராபுரத்திலுள்ள பாலிடெக்னிக் கில் என் மகள் படித்து வந்தாள். சிவராத்திரி திருவிழா என்பதால் பக்கத்திலுள்ள வெள்ளக்கோவில் வீரக்குமாரசுவாமி கோவிலுக்கு 2ஆம் நாள் (9ஆம் தேதி இரவு) தேர்த் திருவிழாவுக்கு வந்து இருந்தேன். பாலிடெக்னிக் முடித்து வீட்டுக்கு வந்து பார்க்கையில் என்னைக் காணாமல் என்பதால் எனக்கு போன் அடித்தாள் வானதி. (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கோவில் தேரடியில் இருப்பதாக நான் கூற, அவளும் வீட்டை பூட்டிக்கிட்டு என்னைப் பார்க்க 20 கி.மீ. தொலைவிலுள்ள வெள்ளக்கோவிலுக்கு ஒத்தையில் வந்தாள்.

அன்றைக்கு விஜய் டி.வி. ராஜலெட் சுமி -செந்தில் கச்சேரியை பார்த்து விட்டுத் தான் ஊருக்கு போறது என அவள் அடம்பிடிக்க, அப்பா இல்லாத பிள்ளை என்பதால் நானும் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. கச்சேரி ஆரம்பித்த நிலையில் "எனக்கு சரியா கேட்கவும் இல்ல, யார் பாடுகிறார்கள் என தெரியவும் இல்லை' என அவ கூப்பாடு போட, அவளை தனியா பார்க்க அனுமதித்தேன். அதுதான் நான் செய்த தவறு. இப்ப இந்த நிலையில் நிற்கிறாள். தீர விசாரணை செய்து பாவிகளுக்கு தண்டனை வாங்கித் தரவேண்டும்'' என்கிறார் அவர்.

Advertisment

"அந்தம்மா என்ன சொல்கிறது... தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை' என புரியாமல் புலம்பியது அனைத்து மகளிர் காவல்துறை.

சிறிதுநேர ஆசுவாசத்திற்குப் பின், "அம்மா... எம் புள்ளைய 8 நபர்களுக்கு மேல் கெடுத்திருக்காங்கம்மா..'' என மீண்டும் சுசீலா ஒப்பாரி வைக்க, தலை கிறுகிறுத்துள்ளது போலீஸிற்கு. உடனடியாக டி.எஸ்.பி. மூலம் மாவட்ட எஸ்.பி.க்கு தகவல் சொல்ல, போலீஸ் பட்டாளமே அடுத்தகட்டத்திற்காக விறைப்புடன் காத்திருந்தது.

முதலில், காமராஜபுரத்தை சேர்ந்த பிர பாகர் மற்றும் அவரது நண்பர் மணி கண்டன் ஆகியோர் கைது செய்யப்பட, அவர்கள் கை காட்டியதன் பேரில் தொட்டம்பாளையத்தை சேர்ந்த தினேஷ், பாரதி நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்கிற சதீஸ், ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார், சுந்தராண்டிவலசையைச் சேர்ந்த நந்தகுமார் மற்றும் பாலசுப்பிரமணி ஆகிய 5 பேரையும் அதிரடியாக கைது செய்தது காவல்துறை. முதற்கட்ட விசாரணையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை அனைவரும் ஒப்புக்கொண்ட நிலையில்... குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரின் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Advertisment

vv

வானதியோ, "ராத்திரி முழுக்க எங்கம்மா போயிருந்த.. எதுக்கு வீட்டுக்கு வரல'' என அம்மா விளக்குமாற்றை வைத்து என்னைச் சுழற்ற உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டியாதாயிற்று. கச்சேரி விறுவிறுப் பான நிலையில் கச்சேரியில் பாட்டு பாடும்போது, பாட்டுக்குத் தகுந்தவாறு நானும் மேடையில் ஏறி ஆடினேன். மேடையிலிருந்தவர்களோ, ஒவ்வொரு தடவையும் என்னை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி இறக்கி விட்டனர். இந்த நிலைமையில் தான் காமராஜ புரத்தை சேர்ந்த பிரபாகரும், மணிகண்டனும் என் பக்கத்தில் வந்து "என் கூட வா... இது மாதிரி ஆடி யூ-டியூப்பில் நேரடியாக லைவ் செய்யலாம்' எனக்கூறி என்னைக் காட்டிற்குள் கூட்டிச் சென்று இருவரும் மாறி, மாறி பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இதில் ஒருவன் என்னை வீட்டில் விடுவதாகக் கூறி ஸ்கூட்டியில் அழைத்து வரும்போது எங்கிருந்தோ வந்த வேறொரு நபர்கள் அவனிட மிருந்து என்னை மீட்டு டூவீலரிலேயே சென்று வெள்ளை நிறக்காரில் ஏற்றினர். அங்கிருந்தவர்கள் என்னை பாலியல் பலாத்காரம் செய்து ஓய்ந்த பின், இன்னொரு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதிலிருந்தவர்களும் என்னை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி விடியற்காலை 3 மணிக்கு தேரடியில் இறக்கிவிட்டனர். அவர்களை எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். ஒரு காரில் சாய்பாபா இருப்பார். இன்னொரு காரில் அமைச்சர் வேலுமணியும், எடப்பாடியும் இருப்பார்கள். காரின் எண் பச 78 ஜெ 2222 என எழுதியிருக் கும்'' என ஒப்புதல் வாக்குமூலத் தினை காவல்துறையிடம் அளிக்க, காவல்துறையும் அனைவரையும் அதிரடியாக கைது செய்தது.

கைது செய்யப்பட்ட 7 நபர்களுடன் பச 78 ஜெ 2222 என்கிற காரையும், பச 69 ஐ 3040 என்ற காரையும் கைப்பற்றியது காவல்துறை. இதில் எடப்பாடி பழனிச்சாமி, வேலுமணி உள்ளிட்ட புகைப்படங்கள் ஒட்டப்பட்ட காரான பச 78 ஜெ 2222 என்ற வாகனம் தினேஷ் என்பவனுக்கு சொந்தமானது என்றும், மேற்படி அவனுடைய தந்தை கதிர்வேல்சாமி மாம்பாடி ஊராட்சியில் தொட்டம்பாளையத்தில் அ.தி.மு.க. கிளைக்கழக செயலாளராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதே வேளையில், "இந்த பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது 7 பேர் மட்டுமா? இன்னும் சிலர் இருக்கின்றனர். அவர்களை ஏன் போலீஸ் கைது செய்யவில்லை..?'' என்கின்ற கேள்வியையும் முன்வைக் கின்றனர் குற்றஞ்சாட்டப்பட்டு கைதான வர்களின் உறவினர்கள். இது இப்படி யிருக்க, கைது செய்யப்பட்டவர்கள் காங்கேயம் காவல்நிலையம் மற்றும் மகளிர் காவல் நிலையங்களில் கைவிலங்குடன் உள்ள புகைப்படங்கள் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி காங்கேயம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.