கோடி கோடியாய் வாரிச்சுருட்டும் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள்! -மதுரை துணைக்கோள் நகர மனை மோசடி!

hh

துரையில் உருவாகிவரும் துணைக்கோள் நகரத்தில் வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடும், ஊழலும் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தற்பொழுது பெருகிவரும் வீட்டு வசதித் தேவையினைக் கருத்தில்கொண்டு திருமங்கலம் அருகி லுள்ள தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் உருவாகிவருகிறது. இங்கு 19,500 மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14,300 மனைகள் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய்ப் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய்ப் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

hh

இந்த துணைக்கோள் நகரத்தில் குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலை யம், மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக் கப்படும். இந்த துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆட்சி மாறினாலும் சேர்மன் மற்றும் அமைச்சரைப் பிடித்து மீண்டும் தான் நினைத்த இடத்திற்கு செயற்பொறியாளராக வந்திருக்கிறார் பழனிகுமார் என்கிறார் சமூக ஆர்வலரான தவமணி. “தற்போது மதுரை தோப்பூர், உச்சப்பட்டி துணைக்கோள்நகர மனை விற்பனையில் இவர்மேல் அடுக்கடுக்கான ஊழல், முறைகேடு புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நீங்களே நேரில் வந்து விசாரித்து உண்மையை எழுதுங்கள்” என தவமணி அழைக்க, நாம் விசாரிக்கத் தொடங்கினோம்.

hh

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நெருக்கமாக இருந்தவர் வீட்டு வசதி வா

துரையில் உருவாகிவரும் துணைக்கோள் நகரத்தில் வீட்டுமனை ஒதுக்கீட்டில் முறைகேடும், ஊழலும் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் தற்பொழுது பெருகிவரும் வீட்டு வசதித் தேவையினைக் கருத்தில்கொண்டு திருமங்கலம் அருகி லுள்ள தோப்பூர் மற்றும் உச்சப்பட்டி கிராமங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்குச் சொந்தமான 586.86 ஏக்கர் நிலத்தில் ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் உருவாகிவருகிறது. இங்கு 19,500 மனைகள் உருவாக்கப்பட்டு, அவற்றில் 14,300 மனைகள் குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும், 2,500 மனைகள் மத்திய வருவாய்ப் பிரிவினருக்கும், 750 மனைகள் உயர் வருவாய்ப் பிரிவினருக்கும், 1,950 மனைகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

hh

இந்த துணைக்கோள் நகரத்தில் குடியேறும் மக்களின் நலனுக்காக பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலை யம், மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் உருவாக் கப்படும். இந்த துணைக்கோள் நகரத்தில் அடிப்படை வசதிகளுக்காக ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆட்சி மாறினாலும் சேர்மன் மற்றும் அமைச்சரைப் பிடித்து மீண்டும் தான் நினைத்த இடத்திற்கு செயற்பொறியாளராக வந்திருக்கிறார் பழனிகுமார் என்கிறார் சமூக ஆர்வலரான தவமணி. “தற்போது மதுரை தோப்பூர், உச்சப்பட்டி துணைக்கோள்நகர மனை விற்பனையில் இவர்மேல் அடுக்கடுக்கான ஊழல், முறைகேடு புகார்கள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. நீங்களே நேரில் வந்து விசாரித்து உண்மையை எழுதுங்கள்” என தவமணி அழைக்க, நாம் விசாரிக்கத் தொடங்கினோம்.

hh

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு நெருக்கமாக இருந்தவர் வீட்டு வசதி வாரிய அதிகாரி பழனிகுமார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்திலேயே இவர்மேல் பல்வேறு ஊழல் புகார்கள் வந்தன. அமைச்சரின் ஆள் என்பதால் இவரை ஒன்றும் செய்யமுடியவில்லை. அடுத்து இவரின் படிப்பு பற்றி தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்டு, இவர் வெறும் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு சேலத்திலுள்ள தனியார் கல்லூரியான விநாயகாவில் வகுப்புகளுக்குப் போகாமலேயே பி.இ. பொறியியல் பட்டம் படித்ததாக சான்றிதழ் வாங்கியதாக சர்ச்சை எழுந்தது. அப்போதைய அ.தி.மு.க. அமைச்சர் களைக் கையில் வைத்துகொண்டு இந்த சான்றிதழ் களின் துணையுடன் உதவிப் பொறியாளராக பதவி உயர்வு பெற்றதாகவும் பேச்செழுந்தது.

அப்போதைய அ.தி.மு.க. மேயர் ராஜன் செல்லப்பாவிற்கு நெருக்க மானார். செயற்பொறியாளரானதும், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான அரசு இடத்தை செல்லப்பாவுக்கு குத்தகைக்குக் கொடுத்து அதில் அவர் திருமண மண்டபம் கட்டியது சர்ச்சையானது.

hh

பழைய விவகாரங்கள் ஒருபுறமிருக்க, தோப்பூர், உச்சப்பட்டியில் முதலில் 1391 குடியிருப்பு மனைகளுக்கான விண்ணப்பங்களை பொதுமக்களிடமிருந்து பெற்று, கடந்த டிசம்பர் மாதம் குலுக்கல் முறையில் பயனாளிகள் தேர்வு நடைபெற்றது. 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை வந்த நிலையில், 1,391 விண்ணப்பங்களில் சென்னை, சேலம், ஓசூர் வியாபாரிகளுக்கே 950 மனைகளுக் கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள் ளன. மதுரையைச் சேர்ந்தவர்களின் விண்ணப்பங் கள் சுமார் 200ஐ கூட தாண்டாது என்கிறார்கள்.

hh

இது எப்படி சாத்தியம் என்றபோது, சென்னை, ஓசூர் வியாபாரிகள் ஒரே முகவரியில் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்களின் ஆதார் அட்டை யை வைத்து ஐநூறு, ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பித்து குலுக்கலில் எப்படியும் ஒரு வியா பாரிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் விழுவது போல் பார்த்துக்கொள்கிறார்கள். மேலும் அதிகாரி களுக்கு ஒரு மனைக்கு 50 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்து பல மடங்கு அதிகமான விலைக்கு விற்று, கோடி கோடியாய் வீட்டுவசதித் துறை அதிகாரிகளும், புரோக்கர்களும் சுருட்டுகிறார்கள். இதைக் கண்டித்து தோப்பூர், உச்சப்பட்டி ஊருக்கு அருகாமையில் இருக்கும் மக்கள் ஒன்றுகூடி வீட்டுவசதி வாரிய அலுவகத்திற்கு முன் ஆர்ப்பாட் டம் செய்து செயற்பொறியாளர் பழனிகுமாரை சந்தித்து முறையிட்டனர். அதற்கு அவர் "எல்லாம் முறைப்படி குலுக்கல் முறையில்தான் நடைபெற்றது. இதில் எந்தவித தலையீடும் நடைபெறவில்லை' என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தார்.

சமூக ஆர்வலர் தவமணி நம்மிடம், "இங்கிருக்கும் 20 நபர்களும் விண்ணப்பித்திருக்கிறார்கள். நான்கூட மனை கேட்டு விண்ணப் பித்திருந்தேன். யாருக்குமே விழவில்லை. தற்போது நடந்த முதல் குலுக்கலில் 1,391 மனைகளில் 1000 மனைகள் எப்படி சென்னை, ஓசூர் முகவரிக்கு விழுந்திருக்கு'' என கேள்வியெழுப்ப, எந்த முறைகேடும் நடைபெறவில்லை, வெளியே போங்கள்” என்றிருக்கிறார்.

ஒரு வியாபாரி அவரது ஊரில் இருக்கும் அனைவரின் ஆதார் அட்டையையும் வாங்கி வைத்துக்கொண்டு விண்ணப்பத்தில் தனது முகவரியைப் போட்டு 1000 விண்ணப்பங்கள் கொடுக்கும்போது, அதில் எப்படியும் 100-ல் இருந்து 150 வரை குலுக்கலில் விழும். இதுபோல் பெரிய வியாபாரிகள் 1000 மனைகளை முடக்கி வைத்துக்கொண்டு இவர்கள் இஷ்டம்போல் கூடுதலாக விற்கிறார்கள் வீட்டுவசதி வாரிய அலுவலகத்தில் மனை விழுந்த வர்களின் முகவரி அனைத்தும் மொத்த மொத்தமாக சென்னையிலுள்ள ஒரே ஊரைச் சேர்ந்தவைகளாக வருவது எப்படி சாத்தியம்?

ஒரு பிளாட்டிற்கு ஐம்பதாயிரம் வரை லஞ்சமாக செயற்பொறியாளருக்கு கொடுத்துவிடுவார் வியாபாரி. செயற்பொறியாளர் மற்ற அதிகாரிகளுக்கு பங்கு கொடுத்துவிடுவார். ஒரு மனைக்கு 50 ஆயிரம் என்றால் 1000 மனைகளுக்கு எவ்வளவு என்று கணக்கு போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோல் இன்னும் 19 ஆயிரம் மனைகள் இருக்கு. தோராயமாக 95 கோடி''’ என்கிறார்.

hh

அலுவலகத்திற்கு வெளியே கூட்டமாக நின்றுகொண்டு இருந்தவர்களை சுட்டிக்காட்டிய தவமணி, "இவர்கள் அனைவரும் புரோக்கர்கள். இவர்களிடம் பேசிப் பாருங்கள்'' என்றார்.

அவர் சொல்லிகொண்டிருக்கும்போதே ஒரு புரோக்கர் நம்மை நோக்கி வந்தார். "சார் வணக்கம், என் பேரு சந்திரபோஸ் இடம் வேண்டுமா? எங்க கிட்ட 20 பிளாட் இருக்கு. தோப்பூர் வேண்டுமா உச்சப்பட்டியில் வேண்டுமா எனக் கேட்க... நாம் உச்சப்பட்டி என்றதும் அங்கு ஒரு சென்ட் 6 லட் சம். தனியார் பிளாட் 7 லட்சம். வாங்க பேசிக்கலாம் 5 லட்சத்திற்கு முடித்துத் தருகிறேன்''” என்றார்

வீட்டு வசதி வாரிய வராண்டாவில் சாப் பிட்டுக்கொண்டிருந்த தம்பதிகளிடம் சென்றோம். “"என்ன ரொம்ப நேரமாக இங்கேயே இருக்கீறீர் கள்?''’என்றதும், "சார் எங்களுக்கு மதுரைதான். நான் ஆசிரியராக பள்ளியில் வேலை செய்கிறேன். என் பெயர் ரமேஷ்குமார். பிளாட் விழுந்துவிட்டது. ஆனா அதை பதிவதற்கான அனுமதி பத்திரத்துக்கு 4 நாளா நடையா நடக்கிறேன். பள்ளியில் லீவும் தரமாட்டேங்கிறாங்க. இவர்கள் 6 அதிகாரிகளிடம் கையெழுத்து வாங்கவேண்டும் என்று அலைக் கழித்தார்கள். இப்பதான் சீக்கிரம் முடிக்க வழி தெரிஞ்சிருக்கு. சூப்பிரண்டு எங்களை அழைத்து பிளாட் விலையிலிருந்து 2% கொடுங்க. ணீ மணி நேரத்தில் இருந்து வாங்கிக்கொண்டு போங்க என்றார். 20 ஆயி ரத்தை தூக்கிக் கொடுத்து விட்டு நிம்மதியா சாப்பிட உட்கார்ந்து இருக்கோம்''’என்றார்.

இறுதியாக செயற்பொறியாளர் பழனிக்குமாரை சந்தித்தோம். "என்ன சார் மனை பெரும்பாலும் சென்னை, சேலம், ஓசூர் வியாபாரிகளுக்கே ஒதுக்கியிருப்பதாக சொல்கிறார்களே? உள்ளூர்க்காரர்களுக்கு குலுக்கலில் எதுவும் விழாதது எப்படி?''’என்றோம்.

"அப்படியெல்லாம் இல்லை சார் வியா பாரிகள் 1000 விண்ணப்பங்கள் போடுகிறார்கள். அதனால் அவர்களுக்கு 100 மனைகள் விழுகிறது. அதற்கு நான் என்ன செய்யமுடியும்?'' என்றவரிடம் “"ஒருவருக்கு ஒரு மனைக்கான விண்ணப்பம்தான் கொடுக்கப்படுகிறது அவர் களுக்கு மட்டும் எப்படி 1000 விண்ணப்பங்கள் கிடைத்தது''’என்றதும் சிறிது யோசித்துவிட்டு, “"அவர்கள் பல்வேறு நபர்களின் ஆதார் அட்டையை சமர்ப்பித்து, தனிப்பட்ட நபர்கள் அனைவரின் பெயரிலும் விண்ணப்பித்துள்ளார்கள். மற்றபடி அண்ணா பல்கலைக்கழகத்தோடு இணைந்து முறைப்படிதான் குலுக்கல் நடத்து கிறோம். இதில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை''’என்றார். “

"பிளாட்டிற்கு 50 ஆயிரம்வரை லஞ்சமாக அதிகாரிகளுக்கு கொடுத்து அதிக விலைக்கு விற்கிறார்கள் என்கிறார்களே...''’என்றதும், "சார் இங்கு எந்த முறைகேடும் நடைபெறவில்லை அவ்வளவுதான் சொல்வேன். நீங்கள் கேட்கும் தேவையற்ற கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டிய அவசியம் இல்லை''’என்று முடித்துக்கொண்டார்.

நாம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சேர்மன் பூச்சி முருகனிடம் பேசினோம். "இதுவரை தோப்பூர், உச்சப்பட்டி வீட்டு வசதி வாரியம் குறித்து எந்தப் புகாரும் வரவில்லை. முழுக்க முழுக்க கலெக்டர், காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகள், மக்களின் முன்னிலையில்தான் குலுக்கல் நடைபெறுகிறது. நீங்கள் சொல்வதுபோல வியாபாரிகள் மொத்தமாக வெவ்வேறு ஆதார் அட்டைகளை வாங்கி வைத் துக்கொண்டு விண்ணப்பித்து அதிக விலைக்கு விற்பதாகத் தெரிந்தால் கட்டாயம் நடவடிக்கை எடுப்பேன்''’என்று முடித்துக்கொண்டார்

nkn080223
இதையும் படியுங்கள்
Subscribe