உருக்கமான வைகோ! வெகுண்டெழுந்த துரை! - மதுரை ம.தி.மு.க. மாநாடு!

vv

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 வெள்ளியன்று, மதுரை விமான நிலையம் அருகிலுள்ள வலையங்குளம் பகுதியில் ம.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகோவின் பேச்சை கேட்க அவரது தொண்டர்கள் ஆவலுடன் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்திருந் தனர். சரியாக 4.30 மணிக்கு அரங்குக்கு வந்த வைகோ, மாநாட்டு கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் மேடை ஏறியதும் தொண்டர்களைப் பார்த்து உற்சாகப்படுத்தி விட்டு இருக்கையில் அமர்ந்தார். ம.தி.மு.க. தலைவர்கள் ஒவ்வொருவராக அவரவர்க்கான தலைப்பில் பேசியமர்ந்தனர். மற்ற தலைவர்கள் பேசும்போதே துரை வைகோவை பேசச்சொல்லி தொண்டர்கள் கூச்சலிட, அடுத்ததாக தொண்டர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் அதிர பேசத் தொடங்கினார் துரை.

vv

தனது பேச்சில் எடுத்ததுமே சனாதனத்துக்கு எதிராக வாளைச் சுழற்றினார். "சனாதன கலாச்சாரம் குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கிறது. சனாதன தர்மம், பெண் விடுதலைக்கு எதிரானது. குழந்தை திருமணத்தை வற்புறுத்தியது. பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றது. பெண்கள் மானத்தை காக்க மேலாடை அணியக்கூடாது என்றது. இதைத்தான் பெரியார், அண்ணா மற்றும் 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் எதிர்க்கின்றன.

மிஸ்டர் அண்ணாமலை, முகலாயர் களால், பிரிட்டிஷ்காரர்களின் கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அதற்கு காரணம் அம்பேத்கரும், அண்ணா

பேரறிஞர் அண்ணாவின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, செப்டம்பர் 15 வெள்ளியன்று, மதுரை விமான நிலையம் அருகிலுள்ள வலையங்குளம் பகுதியில் ம.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. நீண்ட இடைவெளிக்கு பிறகு வைகோவின் பேச்சை கேட்க அவரது தொண்டர்கள் ஆவலுடன் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்திருந் தனர். சரியாக 4.30 மணிக்கு அரங்குக்கு வந்த வைகோ, மாநாட்டு கொடியை ஏற்றிவைத்தார். பின்னர் மேடை ஏறியதும் தொண்டர்களைப் பார்த்து உற்சாகப்படுத்தி விட்டு இருக்கையில் அமர்ந்தார். ம.தி.மு.க. தலைவர்கள் ஒவ்வொருவராக அவரவர்க்கான தலைப்பில் பேசியமர்ந்தனர். மற்ற தலைவர்கள் பேசும்போதே துரை வைகோவை பேசச்சொல்லி தொண்டர்கள் கூச்சலிட, அடுத்ததாக தொண்டர்களின் கைத்தட்டல்களால் அரங்கம் அதிர பேசத் தொடங்கினார் துரை.

vv

தனது பேச்சில் எடுத்ததுமே சனாதனத்துக்கு எதிராக வாளைச் சுழற்றினார். "சனாதன கலாச்சாரம் குலக்கல்வித் திட்டத்தை ஊக்குவிக்கிறது. சனாதன தர்மம், பெண் விடுதலைக்கு எதிரானது. குழந்தை திருமணத்தை வற்புறுத்தியது. பெண்கள் உடன்கட்டை ஏற வேண்டும் என்றது. பெண்கள் மானத்தை காக்க மேலாடை அணியக்கூடாது என்றது. இதைத்தான் பெரியார், அண்ணா மற்றும் 100 ஆண்டுகளாக திராவிட இயக்கங்கள் எதிர்க்கின்றன.

மிஸ்டர் அண்ணாமலை, முகலாயர் களால், பிரிட்டிஷ்காரர்களின் கிறிஸ்தவ அமைப்புகளால் செய்ய முடியாததை திராவிட அரசியல் செய்து காட்டியது. 50 ஆண்டுகளுக்கு முன்பாக சனாதனத்தின் முதுகெலும்பு முறிக்கப்பட்டது. அதற்கு காரணம் அம்பேத்கரும், அண்ணாவும், பெரியாரும் தான். சனாதனத்தை வேரோடு அறுப்பது அனைவரின் கடமை. என்ன எதிர்ப்பு வந்தாலும் சனாதனத்திற்கு எதிராக திராவிட இயக்கங்கள் நிற்கும்'' என்றவர், "இரண்டு பிறவியில் கொடுக்க வேண்டிய உழைப்பை தலைவர் வைகோ ஒரு பிறவியில் கொடுத்துள்ளார். இந்த மாநாடு வெற்றி அடைந்துள்ளது. இன்று இரவு தலைவர் நிம்மதியாக உறங்குவார். தலைவரின் சுமையைக் குறைக்க அரசிய லுக்கு வந்தவன் நான் இல்லை, உங்களால் இழுத்து வரப்பட்டவன் நான். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு. அப்போது இயக்கத்தை கலைக்க முற்பட்டவர்களை களையெடுத்தவன் நான். அரசியல் ஆசை எனக்கில்லை. அதனால் தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. யூதாஸை மன்னித்த இயேசுநாதரின் உள்ளத்தை பெற்றவர் வைகோ. மத்திய மந்திரி பதவிக்காக இரண்டு மணி நேரம் அத்வானி பேசினார். அதை மறுத்தவர். இந்த இயக்கத்தின் முதன்மை நிலைய செயலாளர் பதவி தேவையில்லை. அடிப்படைத் தொண்டனாக இருக்கிறேன், அது போதும்'' என்று உணர்ச்சி பொங்கப் பேசினார் துரை வைகோ.

vaiko

மாநாட்டில் இறுதியாக பேசிய வைகோ, "மகிழ்ச்சி அலைகள் இங்கே, கடல் எங்கே?!'' என்றதும் கூட்டத்தில் "தலைவா!' என்ற கோஷம் ஒலித்துக் கொண்டேயிருக்க, கண் கலங்கிய வைகோ, "எனக்கு உடம்புக்கு முன்புமாதிரி இல்லை. கொரோனா காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டேன். எனக்கு எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம். ஆனால் எதைக் கண்டும் அஞ்சமாட்டேன். இந்த திராவிட இயக்கம் என் மக்களை என்றென்றும் காக்கும். திராவிட இயக்கத்திற்கு எதிராக சூழ்ச்சி வலைகள் பின்னப்படுகின்றன. அவை அனைத்தும் பிய்த்து எறியப்படும். இந்தியா கூட்டணி வெற்றிவாகை சூடும் நாள் வெகுவிரைவில் நடக்கும்'' என்றவர், தன் பழைய நினைவுகளை பகிரத் தொடங்கினார்.

vv

"காங்கிரஸ் குடும்பத்திலிருந்து வந்தவன் நான். காமராஜர் முதல்வராக இருந்தபோது எங்கள் வீட்டில் வந்து தங்கினார். அப்போது அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பின்னர் ஒரு கல்லூரி நிகழ்வில் 15,000 மாணவர் கள் திரண்டிருந்தார்கள். அப்போது காமராஜர் வந்திருந்தார். அங்கு நான் பேசினேன். மறுநாள் காங்கிரஸில் சேர ஒருவர் என்னை அழைக்க வந்தார். ஆனால் நான் தி.மு.க.வில் சேர்ந்துவிட்டேன் என்று சொன்னேன். மதுரை மக்களே, நீங்கள் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று சொன்னால் அது வைகோவால்தான். முல்லை பெரியாறுக்காக 3 முறை நடைபயணம் மேற் கொண்டேன். இதுவரை 7000 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். இதுவரை எந்த நட்சத்திர விடுதியிலும் தங்கிய தில்லை. மத ஒற்றுமைக்காக கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக 1200 கிலோமீட்டர் பயணித்தேன். நியூட்ரினோ திட்டத்தைத் தடுக்க வழக்கு தொடுத்தேன். அதைப்போல தான் ஸ்டெர்லைட்டை எதிர்த்து உண்ணா விரதம் இருந்தேன். நடைபயணம் மேற் கொண்டேன். சென்னை விமான நிலையத்தில் ஒரு வெளியூர்க்காரர் நின்றுகொண்டிருந்தார். நான் இடம் கொடுத்தேன். உங்களைப் போன்றவர்கள் முதல்வராக இருக்கவேண்டும் என்று சொன்னார். யார் அவர் என்று சிந்தித்தேன். பின்னர் ஒரு கார்டை குடுத்தார். அதில் ஸ்டெர்லைட் நிர்வாகி என்று தெரிந்தது.

அட்டர்னி ஜெனரல் தாயகத்தில் என்னை சந்தித்தார். போராட வேண்டாம் என்று சொன்னார். ஆனால் அவரை வெளியே போகச் சொல்லிவிட்டேன். இப்போதும் நியூட்ரினோ கொண்டுவர வாய்ப்புள்ளது. மேகதாது திட்டத்தை எதிர்த்து 12 ஆண்டுகளுக்கு முன்பே போராடினேன். தஞ்சையில் ஊர் ஊராக சென்று மேகதாது குறித்து பேசினேன். எந்த இடத்திலும் நான் கொடி கட்டவில்லை. பிரபாகரன் என்னை நேசித்தார். அவர் அறையில் என் புகைப்படம் இருப்பதாக ஒருவர் சொன்னார். ஒருமுறை கடுமையான யுத்தத்தின்போது நான் வருகிறேன் என்று சொன்னதுக்கு பிரபாகரன் வரவேண்டாம் என்று சொல்லி அனுப்பினார். 23 நாட்கள் அவருடன் தங்கியிருந்தேன். அவர் என்னை போகச் சொன்னார். ஆனால் நான் போக மாட்டேன் என்று சொன்னேன். அதன்பின்பு கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், வைகோவின் துணிச்சலுக்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சாகலாம் என்று எழுதி யிருந்தது. அதன்பின்பு பிரபாகரன் மகன் பாலசந்திரன் இறந்துவிட்டார் என்று தெரிந்ததும், எனது அம்மா உண்ணாவிரதம் இருந்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டது. மதுவை ஒழிப்பதற்கான போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து எனது தாயார் இறந்துபோனார். என் தம்பி சிறை சென்றுள்ளார்.

vv

நான் பேச நினைப்பது எப்படி என் மகனுக்குத் தெரியும் என்று எனக்கு தெரியவில்லை. கலைஞருக்கு இருமுறை ஆபத்து வந்தது. நான்தான் காப்பாற்றினேன். கலைஞர் சொல்வார், "நான் நினைப்பதை நீ பேசுகிறாய்' என்று. அதேபோல நான் பேச நினைப்பதையெல்லாம் என் மகன் பேசினான். 3 ஆண்டுகள் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, வைகோ எங்கெல்லாம் செல்வானோ, அங்கெல்லாம் துரை.வைகோ சென்றான். பதவிக்காக என் மகன் இல்லை என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்ததைப் போலவே பதவி ஆசை இல்லை என்று என் மகன் சொன்னான். அதுபோதும்... இந்த வைகோவைப்போல் எந்த பதவிக்கும் ஆசைப்படாதது மிகப்பெருமையாக இருக்கிறது'' என்று சொல்லும்போது கண்கலங்க, தொண்டர்கள், "தலைவா நாங்கள் உயிர் உள்ளவரை உங்களோடு இருப்போம்' என்று கத்த, கண் கலங்கியவாறு தன் உரையை முடித்துக் கொண்டார் வைகோ.

vv

கள்ளக்குறிச்சியிலிருந்து மாநாட்டுக்கு வந்திருந்த லட்சுமிகாந்தன் நம்மிடம், "நான் ம.தி.மு.க. மாநாட்டிற்காக வந்துள்ளேன். தலைவரை இந்த நிலைமையில் பார்க்க மனசுக்கு கஷ்டமாக இருக்கு. எப்படியெல்லாம் கர்ஜித்த சிங்கம் இவர். இன்றும் நன்றாகத்தான் பேசினார். இருந்தாலும் அவரது உடல்நிலை முன்பு மாதிரி இல்லை. ஆனாலும் அடுத்த தலைவராக துரை உருவாகிவிட்டார். முதலில் வேண்டாம் என்று இருந்தவரை எல்லோரும் ஒன்று சேர்ந்து தீர்மானம் போட்டு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வைத்தோம். இப்போது இங்கு அவர் பேசியபோது, புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்பது தெரிந்தது. இன்னும் வீரியமாக திராவிடக் கொள்கையை எடுத்துகொண்டு பாய்கிறது துரையின் பேச்சு. வைகோவை விஞ்சி நிற்கும் என்பதில் ஐயமில்லை. இதுபோதும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளை இன்னும் 100 வருடங்களுக்கு எடுத்துச் செல்லும் ம.தி.மு.க. எனவே மிகுந்த மனநிறைவோடு செல்கிறேன்'' என்றார் நெகிழ்ச்சியோடு!.

nkn200923
இதையும் படியுங்கள்
Subscribe