சூடு பிடிக்கும் தேர்தல் களம்! சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு? அரசியல் கட்சிகள் தீவிரம்

s

ssமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலைக் கடந்து அக்கட்சிகளின் வெற்றி -தோல்வியை தீர்மானிப்பதில் சாதி அரசியல், மத அரசியல் உள்ளிட்ட சில காரணிகள் முக்கியப் பங்கு வகிக் கின்றன. அத்தகைய காரணிகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது சிறு பான்மையின (முஸ்லீம் -கிறிஸ்தவர் கள்) மக்களின் வாக்குகள்.

அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை குறிவைத்து தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் பல்வேறு காய்களை நகர்த்துவதால் சிறுபான்மையினரின் வாக்குகள் தேர்தல் களத்தில் உற்றுக் கவனிக்கப்படுகின்றன.

இந்த சூழலில், சிறுபான்மையினரின் வாக்குகள் எந்த பக்கம் சாயும்? என்கிற கேள்வியோடு பல்வேறு தரப்புகளில் விவாதித்தோம்.

tb

முஸ்லீம் மக்கள் தமிழகத்தில் சுமார் 7 சதவீதம் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த மக்களுக்காக தேசிய லீக், யூனியன் முஸ்லீம் லீக் என இரண்டு அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. இந்த கட்சிகள் கடந்த காலங்களில், தேசிய லீக் தி.மு.க.வை ஆதரித்தால், மூஸ்லீம் லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்கும். முஸ்லீம் லீக் தி.மு.க.வை ஆதரித்தால் தேசிய லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்கும். இப்படித்தான் இவர்களின் அரசியல் கட்டமைக்கப் பட்டு வந்தன.

பாமர் மசூதி இடிப்புக்குப்பிறகு ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, ஜைனுல்லாபுதீன், பார்க்கர் போன்ற எண்ணற்ற முஸ்லீம் இளைஞர்களை ஒன்றிணைத்து குணங்குடி ஆர்.எம்.அனீபா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை (த.ம.மு.க.) விரிவுபடுத்தினார். அதேசமயம், இந்திய தௌஹீத் ஜமாத், ஃபாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற முஸ்லீம் அமைப்புகளும்

ssமிழகத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலைக் கடந்து அக்கட்சிகளின் வெற்றி -தோல்வியை தீர்மானிப்பதில் சாதி அரசியல், மத அரசியல் உள்ளிட்ட சில காரணிகள் முக்கியப் பங்கு வகிக் கின்றன. அத்தகைய காரணிகளில் மிக முக்கியமானதாக இருக்கிறது சிறு பான்மையின (முஸ்லீம் -கிறிஸ்தவர் கள்) மக்களின் வாக்குகள்.

அதனால், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிறுபான்மையினரின் ஓட்டுகளை குறிவைத்து தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகிய மூன்றும் பல்வேறு காய்களை நகர்த்துவதால் சிறுபான்மையினரின் வாக்குகள் தேர்தல் களத்தில் உற்றுக் கவனிக்கப்படுகின்றன.

இந்த சூழலில், சிறுபான்மையினரின் வாக்குகள் எந்த பக்கம் சாயும்? என்கிற கேள்வியோடு பல்வேறு தரப்புகளில் விவாதித்தோம்.

tb

முஸ்லீம் மக்கள் தமிழகத்தில் சுமார் 7 சதவீதம் இருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இந்த மக்களுக்காக தேசிய லீக், யூனியன் முஸ்லீம் லீக் என இரண்டு அரசியல் கட்சிகள் இருந்து வருகின்றன. இந்த கட்சிகள் கடந்த காலங்களில், தேசிய லீக் தி.மு.க.வை ஆதரித்தால், மூஸ்லீம் லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்கும். முஸ்லீம் லீக் தி.மு.க.வை ஆதரித்தால் தேசிய லீக் அ.தி.மு.க.வை ஆதரிக்கும். இப்படித்தான் இவர்களின் அரசியல் கட்டமைக்கப் பட்டு வந்தன.

பாமர் மசூதி இடிப்புக்குப்பிறகு ஜவாஹிருல்லா, ஹைதர் அலி, ஜைனுல்லாபுதீன், பார்க்கர் போன்ற எண்ணற்ற முஸ்லீம் இளைஞர்களை ஒன்றிணைத்து குணங்குடி ஆர்.எம்.அனீபா, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தை (த.ம.மு.க.) விரிவுபடுத்தினார். அதேசமயம், இந்திய தௌஹீத் ஜமாத், ஃபாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற முஸ்லீம் அமைப்புகளும் வீரியமாயின.

ஒரு கட்டத்தில், அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற நேரடி அரசியலுக்குள் நுழைவதற்காக திட்டமிட்ட த.ம.மு.க. தலைவர்கள், மனிதநேய மக்கள் கட்சியைத் துவக்கினர். இந்த கட்சி முஸ்லீம் மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஃபாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பும் தனது அரசியல் பிரிவாக எஸ்.டி.பி.ஐ. என்ற பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கி நேரடி அரசியலுக்குள் நுழைந்தது.

முஸ்லீம்களின் அடுத்த தலை முறையினர் அமைப்பு ரீதியாக நேரடி அரசியலுக் குள் பங்கேற்றதால், லீக்லிகுகளின் அரசியல் ஆளுமை சரிவை சந்திக்க தொடங்கின. இதில், தேசிய லீக்கை ஒப்பிடும்போது, முஸ்லீம் லீக் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தி.மு.க. கூட்டணியிலேயே நீடித்ததால் தேர்தலின் போது சில சீட்டுகளைப் பெற்று ஜெயித்து ஓரளவுக்கு அரசியலில் தாக்குப் பிடித்துக் கொண்டிருக்கிறது. மற்றபடி ம.ம.க., எஸ்.டி.பி.ஐ. கட்சிகள்தான் முஸ்லீம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

s

தற்போது தி.மு.க. கூட்டணியில் யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை இருக்கின்றன. சிறு பான்மையினரின் வாக்குகளை குறிவைத்தே பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, அ.தி.மு.க. கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியை இணைத்துக் கொண்டு தேர்தலை எதிர்கொண்டு வருகிறார்.

முஸ்லீம்களின் அரசியல் கள ஆய்வாளரான புதுமடம் ஜாஃபர்அலியிடம் விவாதித்தபோது, ”"தி.மு.க. கூட்டணிக்குத்தான் சிறுபான்மையினரின் வாக்குகள் பெரும் பான்மையாக கிடைக்க வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, மதச்சார்பற்ற தன்மையில், 2004-லிருந்தே வலிமையாக இருந்து வருவது தி.மு.க.தான். மேலும், மதவாத சக்திகளை தேசிய அளவில் தீவிரமாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, தி.மு.க. கூட்டணியில் இருப்பதையும், பா.ஜ.க.வை வீழ்த்தும் சக்தி மிகுந்த கூட்டணியாக தி.மு.க.வே இருப்பதையும் சிறுபான்மையினர் உற்றுக் கவனிப்பதால் இந்த கூட்டணிக்குத் தான் அவர்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

தி.மு.க.வை பொறுத்தவரை முஸ்லீம் அமைப்புகளின் ஆதர வைவிட, முஸ்லீம் லீக் போன்ற அரசியல் கட்சி போதுமானது. ஏன்னா…தமிழகம் முழுவதும் லீக்கிற்கு நிர்வாக கட்டமைப்பு இல்லைன்னாலும் முஸ்லீம் மக்களின் ஆதரவை பரவலாக வைத்திருக்கிறது. அதாவது, கேடர்ஸ் இல்லை; ஓட்டுகள் இருக்கிறது. காரணம், ஜமாத்துகளிடம் இப்பவும் ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருக்கிறது முஸ்லீம் லீக். ஜமாத்துகளின் சொல், முஸ்லீம்களுக்கு வேதம். மற்ற அமைப்புகளுக்கோ கட்சிகளுக்கோ நிர்வாக கட்டமைப்பு (கேடர்ஸ்) வலிமையாக இருக்கிறது; ஆனால் வாக்குகள் இருப்பதில்லை.

இது தி.மு.க.வுக்குத் தெரியும். அதனால்தான் லீக்கிற்கு ஒரு சீட்டைக் கொடுத்து அக்கட்சியை கூட்டணியில் வைத்துக்கொள்கிறது. ஒரு சீட்டுக்கு அதிகமாக லீக்கும் எதிர்பார்ப்பதில்லை. அதேசமயம், தி.மு.க.விலுள்ள முஸ்லீம்களுக்கு பெரியளவில் அக்கட்சித் தலைமை முக்கியத்துவம் தருவதில்லை. காரணம், முஸ்லீம் மக்களிடம் சாதிக்பாஷா, ரகுமான்ஹான், ஈ.எம்.அனிஃபா போன்றவர்களுக்கு இருந்த செல்வாக்கு போல தி.மு.க.வில் இப்போது யாருக்குமில்லை என்பது தான். அதற்கேற்ப தி.மு.க.வும், முஸ்லீம்களை தன் கட்சியில் வளர்த்தெடுக்க விரும்பவில்லை.

கோவை குண்டு வெடிப்புக்குப்பிறகு முஸ்லீம்களுக்கு நடந்த கொடுமைகளை ஜெயலலிதா கண்டித்ததாலும், பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்ததாலும் சிறுபான்மையினரின் வாக்குகளை கவர்ந்தார் ஜெயலலிதா. அதனால்தான் 2001 சட்டமன்ற தேர்தலில் அவரால் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. இதை கலைஞர் உணர்ந்ததினால்தான் பா.ஜ.க.வை உதறிவிட்டு, 2004-ல் காங்கிரசை சேர்த்துக்கொண்டு மதச்சார்பற்ற கூட்டணியை உருவாக்கினார். அன்றைக்கு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40-லும் வெற்றி பெற்றது தி.மு.க. கூட்டணி.

இந்த நிலையில், 2014-ல் நடந்த ஒரு தேர்தலை தவிர மற்ற தேர்தல்களில் காங்கிரசை உள்ளடக்கிய தி.மு.க. கூட்டணி அப்படியே தொடர்ந்தாலும், சமீப காலமாக முஸ்லீம் களுக்குரிய அங்கீகாரம் தி.மு.க.வில் இருப்பதில்லை. பெரும்பான்மை இந்துக்களின் ஆதரவை இழந்துவிடக்கூடாது என்பதால் இத்தகைய அரசியலை கையாள்கிறது தி.மு.க. இதனால் முஸ்லீம்களின் இன்றைய தலைமுறையான இளைஞர்கள், நாம் தமிழர் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளில் இணைவது அதிகரித்து வருகிறது.

அதேசமயம், தேசிய அளவில் முஸ்லீம்களுக் கான பாதுகாப்பு அச்சம் பா.ஜ.க. ஒன்றிய அரசால் இருப்பதால், இந்திய அளவில் ஒரு அரசியல் மாற்றம் வேண்டும் என மத சிறுபான்மையினர் கருதுகிறார்கள். இந்த தாக்கம் பெரியஅளவில் இருக்கிறது. இதனை புரிந்துகொண்டதால்தான், பா.ஜ.க. உறவை உதறினார் எடப்பாடி பழனிச்சாமி. இது, முஸ்லீம்களுக்கு தெரியும் என்பதால், அ.தி.மு.க.வை விட, காங்கிரஸ் இருக்கும் தி.மு.க. கூட்டணிதான் பாதுகாப்பானது என்றும், மாற்றுக் கட்சிகளுக்குப் போடும் வாக்குகள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தாது என்றும் முஸ்லீம்கள் உணர்கிறார்கள். ஆக, முஸ்லீம் வாக்குகள் அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி என சற்று பிரிந்தாலும் பெரும்பான்மை ஆதரவு தி.மு.க. கூட்டணிக்கே கிடைக்கும்''’என்கிறார் மிக அழுத்தமாக.

த.மு.மு.க.வின் நிறுவனரும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினருமான குணங்குடி ஆர்.எம். அனீபாவிடம் பேசியபோது, மதச்சார்பற்ற தன்மையை உயர்த்திப் பிடிப்பதில் முஸ்லீம்கள் எப்போதும் பின்தங்கியதில்லை. அந்த வகையில் மதச்சார்பற்ற கூட்டணியான தி.மு.க. கூட்டணியைத் தான் ஆதரித்தே வந்தனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததால், அ.தி.மு.க. கட்சியிலிருந்த முஸ்லீம் வாக்குகளும் தி.மு.க. கூட்டணிக்குத்தான் கடந்த 2 தேர்தல்களிலும் விழுந்தது. தற்போது, பா.ஜ.க. கூட்டணியை விட்டு அ.தி.மு.க. வெளியேறிவிட்டதாலும், இனி எந்த காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என உறுதி தந்திருப்பதாலும் அ.தி.மு.க.வில் உள்ள முஸ்லீம்கள் இந்தமுறை அ.தி.மு.க.வுக்கு ஓட்டுப்போட வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல, தி.மு.க.விலுள்ள முஸ்லீம்களும், நடுநிலையான முஸ்லீம்களும் தி.மு.க. கூட்டணியைத்தான் ஆதரிப்பார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மேலும், மனிதநேய மக்கள் கட்சி தி.மு.க. கூட்டணியில் இருப்பதும், எங்கள் தொண்டர்களின் களப்பணியும் தி.மு.க.வுக்கே முஸ்லீம்களின் அதிகப்படியான வாக்குகளைப் பெற்றுத்தரும். அதனால், முஸ்லீம்களின் பெரும்பான்மை வாக்குகள் தி.மு.க. கூட்டணிக்கு இருப்பதால் தமிழகத்தில் 39 இடங்களையும் தி.மு.க. கூட்டணி வெல்வதற்கு முஸ்லீம்களின் வாக்குகள் முக்கியமானதாக இருக்கும்’என்கிறார்'' உறுதியாக.

சிறுபான்மை வாக்குகள் இந்த தேர்தலில் சிதறுவதற்கே வாய்ப்புகள் அதிகம் இருக்கும் நிலையில், தி.மு.க. கூட்டணிக்குத்தான் அம்மக்களின் பெரும்பான்மை ஆதரவு இருப்பதாக களத்திலிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

nkn100424
இதையும் படியுங்கள்
Subscribe