திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள் முப்பதுக்கும் மேல் இயங்கிவருகின்றன. இந்த விடுதிகளில் தங்கியுள்ள பெண்களைக் குறிவைத்து டிப்டாப் ஆசாமிகள் ஏமாற்றுவ தாகவும், பல பெண்களின் வாழ்க்கை கேள்விக்குறியாவதாகவும் புகார்கள் வருகின்றன.

tt

இங்குள்ள தனியார் விடுதியில் தங்கி பணியாற்றும் இளம்பெண் கிருத்திகா, சமீபத்தில் திருச்சி செய்தியாளர் மன்றத்தில் தன்னுடைய வழக்கறிஞர் அமல் ஆண்டனியுடன் வந்து பேட்டியளித்தார். அவரை நேரில் சந்தித்து பேசியபோது, தான் ஏமாற்றப்பட்டதை எடுத்துரைத்தார். ஒரு பிரபல கார் சர்வீஸ் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றிவரும் கிருத்திகாவுக்கு கடந்த 2023, நவம்பரில் இன்ஸ்டாகிராம் மூலம் ஸ்ரீபொன்னை யன் என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் நட்பு காதலாக மாறியதால் அடிக்கடி இருவரும் வெளியே செல்வதோடு, ஸ்ரீபொன்னையன், கிருத்திகாவை உறையூர் பகுதியிலுள்ள ரவுண்டு ஹவுஸ் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பிற்கும், பெரிய ஹோட்டல்களுக்கும் அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். அப்படி ஒருமுறை ரவுண்டு ஹவுஸ் குடியிருப்புக்கு அழைத்துச் செல்லும்போது அங்குள்ள மேலாளர், கிருத்திகாவிடம் அவருடைய அடையாள அட்டையைக் கேட்டுள்ளார். இவரும் தன்னுடைய ஆதார் அட்டை நகலை கொடுத்துள்ளார். அப்போது அந்த மேலாளர், "இதற்கு முன்பு பொன்னைய னுடன் வந்தவர்கள் யாரும் அடையாள அட்டையைக் கொடுத்ததில்லை. உன்னைப் பார்ப்பதற்கு பாவமாக இருக்கிறது. நீ ஏமாறாமல் சுதாரித்துக்கொள்'' என்று அறிவுறுத்தியிருக்கிறார்.

இந்நிலையில், பொன்னையனோடான தொடர்பால் கிருத்திகா கர்ப்பமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியான கிருத்திகா, பொன்னையனிடம் தன்னைத் திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு அவரோ, கருவைக் கலைத்தால்தான் தன்னுடைய வீட்டில் திருமணத்திற்கு சம்மதிப்பார்கள் என்று கூறியுள்ளார். கருவைக் கலைப்பதற்காக மருந்து விற்பனைப் பிரதிநிதியாக இருக்கும் தனது நண்பர் பிரபுவிடம் பொன்னையன் கேட்க, அவரோ, தாராநல்லூரிலுள்ள ராணி என்ற மருத்துவரிடம் சென்று தன்னுடைய பெயரைக் கூறினால் போதும், அவர் புரிந்துகொள்வாரென்று சொல்லியிருக் கிறார். மேலும் அவர் கருக்கலைப்புக்கான மாத்திரைகளையும் கொடுத்துள்ளார். பொன்னையனின் ஆசை வார்த்தைகளை நம்பி கருவைக் கலைக்க முயன்றவருக்கு, ஓரிரு நாட்களில் அவர் சாப்பிட்ட மாத்திரைகளால் தானாகவே கருக்கலைந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர்.

Advertisment

tr

அதன்பின்பு ஸ்ரீபொன்னையன் கிருத்திகாவிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார். சந்தேகமடைந்த கிருத்திகா, செல்போனில் பொன்னையனை பலமுறை தொடர்புகொண்டு கேட்டபோதும் திருமணத்துக்கு சம்மதிக்காமல் போனை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கிருத்திகா, விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன்பின்னர் முற்றிலுமாக பொன்னையன் அவரை ஒதுக்கிய தால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தவர், கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி, ரிஜிஸ்டர் தபால் மூலம் கோட்டை காவல் நிலையத் திற்கும், திருச்சி மாநகர போலீஸுக்கும் புகாரளித்துள்ளார். அதில் எந்தவித நட வடிக்கையும் எடுக்கப்படாமல், வழக்கை சமரசம் செய்ய அனைத்து மகளிர் காவல் நிலையம் முயன்றுள்ளது. இதையடுத்து, மீண்டும் புகார் மனுவை திருச்சி மாநகரக் காவல்துறை ஆணையரிடம் கொடுத்தபின், அந்த வழக்கை ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

அந்த வழக்கை விசாரிக்கும் ஆய்வாளர் சரஸ்வதியிடம் பேசுகையில், "கிருத்திகா கொடுத்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. சம்பந்தப்பட்ட நபர் மலேசியாவில் இருப்பதாகக் கூறுகிறார்கள். அவருடைய செல்போன் ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது. அவருடைய செல்போன் பயன்பாட்டிற்கு வந்தால் நிச்சயம் அவரை கைது செய்வோம்'' என்று தெரிவித்தார். கிருத்திகாவிற்கு கருக்கலைப்பு மாத்திரை கொடுத்த விற்பனைப் பிரதிநிதி பிரபுவை விசாரித்தபோது, "என்னிடம் உதவி கேட்கும் அனைவருக்கும் உதவியிருக்கிறேன். அதே போல்தான் இதிலும் உதவியிருப்பேன். நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேல் போன்கால்கள் வருகின்றன. எனவே நீங்கள் சொல்லும் கிருத்திகா ஞாபகத்தில் இல்லை. எனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை'' என்று இணைப்பைத் துண்டித்தார்.

Advertisment

இந்நிலையில் ஸ்ரீபொன்னையன் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு அளிக்க, அவரது மனுவை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். தற்போது தலைமறைவாக இருக்கும் நிலையில், இங்கு நடப்பவற்றைத் தன்னுடைய நண்பர்கள் மூலமாக அறிந்துகொள்கிறார். இந்த வழக்கில் பொன்னையன் தன்னுடைய அரசியல் பின்புலத்தைப் பயன்படுத்தி தப்பிப்பதற்காக, வேறு நபர்கள்மூலம் கிருத்திகாவின் பெற்றோருக்கு மிரட்டல்கள் விடுப்பதாகத் தெரிகிறது. இவ்வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும் மிரட்டல் விடுத்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கை விசாரிக்கும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் சரஸ்வதி, அவரை கைது செய்வதில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும், காவல்துறை ஆணையர் காமினியும் இந்த வழக்கில் தீவிரம் காட்டுவதோடு, அவரைப் பிடிப்பதற்கான நடவடிக்கையினை எடுத்துவருகிறார்.

இவ்வழக்கில் கிருத்திகாவிற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் என்பதோடு, தனியார் விடுதிகளில் தங்கிப் பணியாற்றும் பெண்கள், தங்களை ஏமாற்றும் ஆண்களின் வலைகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டுமென்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.